அன்பின் நீளமே வாழ்வின் நீளம்...
அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம் .... அன்பே சிவம் படத்திற்காக வைரமுத்து எழுதிய வரிகள். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். ஆனால் நான் இதை உணர கிட்டத்தட்ட 35 வருடங்கள் தேவைப் பட்டது. எனக்கென சில கோட்பாடுகள் இது தான் சரி மற்றவை அனைத்தும் தவறு என்ற கண்ணோட்டத்தோடு வாழ்ந்தவன். பல பேரை அதில் காயப்படுத்தி இருக்கிறேன், அதை தான் வெற்றி என்று நினைத்து கொக்கரித்தும் இருக்கிறேன். மனசு பக்குவ பட வயசுதான் காரணாமா..? இல்லை அனுபவம் தான் காரணமா..? எனக்கு தெரிந்த வரையில் அனுபவங்களின் தேடல், அதற்கு வயதும் பக்குவமும் தேவை. ரொம்ப கொழப்பமா இருக்கா..? நாம் சில சமயங்களில் ஒரு பொருளை அடிக்கடி பார்ப்போம் ஆனால் அதன் தேவை இல்லாததால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். திடீரென்று அதன் தேவை வரும் பொழுது சட்டென்று நம் நினைவிற்கு அது வந்து தொலைக்காது பல சிரமத்திற்குப் பிறகு அதை கண்டு கொள்வோம். அதைப் போலவே சில அனுபவங்கள் நம்மை ஏற்கனவே கடந்திருந்தாலும் நமது மனதுக்கு அது பரிட்சயம் இல்லாததாகவே தோன்றும், ஆனால் அதுவே துன்பமோ,பிரிவோ நம்மை வாட்டும் பொது நமக்கு பக்கத்தில் வந்து விடும். எவ்வளவு துன்பத்தை தாண்டி வருகிறோமோ அவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறோம் எனக் கொள்க. இந்த உலகில் எதுவும் தீர்மானமான ஒன்றல்ல இதை புரிந்து கொண்டாலே.. அன்பின் நீளமே வாழ்வின் நீளம் என்பதை நாம் அறிந்து கொள்ள ஏதுவானதாக இருக்கும்.