Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

நட்பு




வாழ்க்கை நாணயத்தின் பூ பகுதி
சாதி, மதம்,பேதம்  மறுத்த ஒரு பிரிவு
வானவில் தொலைத்த வண்ணம்
இதழ்,முத்தம் இவற்றைவிட நெருக்கமானது
சோக மேகங்கள் சூழும் போது இன்ப மழை தூவும் இனிய தட்ப வெப்பம்
உறவுப் பூக்களில் உதிரம் உதிர்த்த உதிரா  பூ


Read more...

எனக்கு பிடித்த இயற்கை



முகத்தில் கரி பூசி முழு நிலவு போட்டு வைத்த இரவு...
பூமியை முத்தமிட்டு அந்த ஈரத்திலேயே முகம் பார்க்கும் மாலை சூரியன்...
வான வில்லுக்கு சாயம் பூசிய வண்ணமில்லா மழைத்துளிகள்...
உருவமில்லாத,வண்ணமில்லாத ஆனால் அழகான தென்றல்...
நகம் கடிக்காத, நாணப்பட தெரியாத ஆனால் மென்மையான பூக்கள்...
மாமிசம் தின்று தாவரம் செரிக்கும் இந்த மண்...
தலை எழுத்தில்லாத மலைகள்..
நிலவு கண்டு மகிழ்ச்சியிலும், அதை காணமல் கோபத்திலும் ஆர்பரிக்கும் அலைகள்...
செயற்கை சாதியில் பிறந்து இயற்கை சாதியில் மணம் முடித்த மழலை சிரிப்பு...
இயற்கை இவை தீண்டா மனித மனங்கள் இல்லை...


Read more...

ஒரு மரணம் ஒரு ஜனனம்

நீரின் மரணம் - கரு மேகங்களின் ஜனனம்...

கரு மேகங்களின் மரணம் - மழையின் ஜனனம்.

மழையின் மரணம் - நதியின் ஜனனம்.

நதியின் மரணம் - கடலின் ஜனனம்.

கடலின் மரணம் - கரையின் ஜனனம்.

கரையின் மரணம் - நீரின் ஜனனம்.
எனவே வாழ்க்கையில இழப்பதும் பெறுவதும் ஒன்றுமில்லை.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP