சிவப்பு நிறத்தில் ஒரு சிந்தனை
Read more...
தோன்றியவை,தூண்டியவை,வேண்டியவை...
கொஞ்ச நாளைக்கு முன்னால ராஜரிஷி-ங்குற படம் பார்த்தேன். அதுல விசுவாமித்திரன் எப்படி முனிவரானர்..? ஒரு நாட்டின் அரசனாக இருந்த விசுவாமித்திரன் (அரசராக இருக்கும் பொழுது அவர் பெயர் என்ன என்பதை நான் மறந்துட்டேன்), தனது நாடு அண்டை நாடுகளுடன் போர் புரிந்து வெற்றி மேல் வெற்றி குவிப்பதை கண்டு பெறும் மகிழ்ச்சி கொள்கிறார். அரசவையில் ஒரு நாள் தனது மகிழ்ச்சியை தனது அரசவை சகாக்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வழக்கு வருகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான தேரில் வந்த பொருள்களை சில கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுகிறார்கள் அவர்களை காவலர்கள் பிடித்து வந்து அரசர் முன் நிப்பாட்டுகின்றனர். அரசருக்கு ஆச்சர்யம் என் நாட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன், என் நாட்டில் திருட்டா..? அதுவும் மன்னருக்கு வந்த உணவுகளை திருட முற்பட்டிருக்கிறார்களே..? அப்படின்னு ஆச்சர்யம். அமைச்சரிடம் விளக்கம் கேட்கிறான் அரசன், அமைச்சர் சொல்கிறார் நாம் தொடர்ந்து போர் மேற்கொண்டிருந்ததால் மக்கள் விவசாயம் பக்கம் கவனம் செலுத்தமுடியவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. உணவு பஞ்சம் நாட்டில் தலை விரித்து ஆடுகிறது. அரசர் கேட்கிறார் அப்ப இந்த உணவு ..? "இது வஷிஷ்டர் என்ற முனிவரின் ஆசிரமத்திலிருந்து வருகிறது" என்று அமைச்சர் விளக்குகிறார். "நாடே பஞ்சத்தில் இருக்கும்போது அந்த முனிவரிடம் மட்டும் எப்படி..? " என்று அரசர் வினவ, மீண்டும் அமைச்சர் விளக்குகிறார் "அரசே அவரிடம் காமதேனு என்று ஒரு பசு இருக்கிறது, அது கேட்டவை எல்லாம் தரக்கூடியது. அதன் மூலமாகத்தான் இந்த உணவை வரவழைத்து நீங்கள் பசி ஆற வேண்டும் என்று அனுப்பி வைத்துள்ளார். " என்று. அரசன் உடனே அந்த முனிவரின் ஆசிரமம் நோக்கி விரைகிறான், "நீங்கள் எனக்கு உணவு கொடுத்தது போலவே அந்த காமதேனுவை கொண்டு என்நாட்டு மக்களுக்கும் கொடுத்து அவர்கள் பசியார வேண்டும்" என்று கேட்டு கொள்கிறான். முனிவர் அதற்கு மறுப்பு தெரிவப்பதுடன் அது நாட்டை ஆளும் அரசரின் கடமை என்றும் எடுத்துரைக்கிறார். அரசன் கோபம் கொள்கிறான் படை வீரர்களை அனுப்பி அந்த காமதேனு பசுவை பிடிக்க ஏற்பாடு செய்கிறான், ஆனால் முழு படையும் தோற்றுவிடுகிறது. அந்த பசுவை எப்படி பெறுவது என்ற கேள்வியில் அதை மிகப்பெரிய தவம் மேற்கொள்வதன் மூலமாக பெற முடியும் என்று அறிந்து தவம் மேற்கொள்கிறான். அந்த தவத்தின் வாயிலாக தனது நாட்டு மக்களின் பசியை தீர்க்கிறார்.
நீங்கள் சமீப காலமாக பங்கு சந்தையை உற்று நோக்கினால் அது உயர்ந்து கொண்டேதான் போகிறது ஆனால் ஆட்குறைப்பும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. பங்கு சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மைய புள்ளியாக பார்க்கப்படும் பட்சத்தில், வேலையிழப்பு நடக்கும் போது எப்படி பங்கு சந்தை உயரும்..? இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது, பங்கு சந்தை, பெரிய பெரிய பண முதலைகள் பணத்தை பங்கு போட்டுக்கொள்ளும் சந்தை, அதில் மற்றவர்களுக்கு தொடர்பில்லை. அதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. எனவே இதை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிடுவது என்பது ஏமாற்று வேலை. நேற்று CNN தொலைகாட்சியில் ஒரு செய்தி, வெள்ளை மாளிகை, WALL STREET -இ எச்சரித்துள்ளதாக. ஏன்னா அங்கு நடந்து வரும் குளறு படிகள். அதாவது நட்டத்தில் இயங்குவதாக கூறி அரசாங்கத்திடம் நிதியுதவி பெற்ற நிறுவனங்கள், இன்று பணத்தை திரும்ப அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு பதிலாக அந்தந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (C.E.O) தங்களது சம்பளத்தை உயர்த்தி கொள்வது, ஊழியர்களுக்கு அதிகபடியான போனஸ் கொடுப்பது என்று தங்களை வளர்த்து கொண்டுள்ளது.
சரி இதற்கும் முதலில் சொன்ன விசுவாமித்திரன் கதைக்கும் என்ன சம்மந்தம், அந்த கதையை பார்த்தீர்களேயானால் தனது நாட்டு மக்கள் பசியால் தவிப்பதை பொறுக்க முடியாமல் தனது பதவியையே துறந்து, துறவறம் பூண்ட மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. விசுவாமித்திரன் காலத்திலேயே தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் சிந்தனை எல்லாம் வந்தாச்சு. ஆனால் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கால மன்னர்களோ பணக்காரர்களின் கல்லா நிரம்பவும், தங்களையும் அவர்களில் ஒன்றாக இணைத்துக்கொள்ளும் முயற்சியையுமே சிரமேற்கொண்டு செய்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் நலிந்த நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை நிதிஉதவியாக கொடுத்தது எல்லாம். அமெரிக்கா மட்டுமல்ல முதலாளித்துவ சிந்தனைகள் கொண்ட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் அடித்தட்டு மக்களையும் நடுத்தர மக்களையும் காப்பாற்றுவதற்கு வழி பார்க்க வேண்டும். இது கம்யூனிச சிந்தனையோ இல்லையோ தெரியாது ஆனால் எக்காரணம் கொண்டும் சமுதாயத்தின் ஒரு தட்டு மக்களின் வளர்ச்சிக்கு மட்டும் துணை போவது என்பது மற்ற மக்களின் ஒட்டு மொத்த கோபமும் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் மேல் திரும்புவதற்கு வழி வகுக்கும்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சேர நுழைவுத் தேர்வில் பங்கேற்க 12ம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தற்போது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை 80 முதல் 85 சதவீதமாக உயர்த்த மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 2011-வது கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று அத் துறையின் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மேற்கண்ட செய்தியை இன்றைய செய்திகளில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ரொம்ப நாளா எனக்குள் ஒரு கேள்வி இருந்துகிட்டே இருக்கு. சமீபத்தில் PROJECT MANAGEMENT குறித்த ஒரு தேர்வு எழுதினேன் நான் 63% மதிப்பெண் பெற்றேன். ஆனால் நான் தேர்வில் பாஸாகவில்லை என கூறிவிட்டார்கள். விசாரித்த பொழுதுதான் தெரிந்து கொண்டேன் அதற்கு 80% மதிப்பெண்கள் தான் குறைந்த பட்ச தகுதி என்று. பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு கல்வி எட்டா கனியாக இருந்த பொழுது அது கிடைக்க போராடியவர்களை நமக்கு தெரியும், அதன் மூலம் கல்வி பயன் அடைந்தவர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வியாப்பித்திருக்கிருகிறார்கள். இது பாராட்ட பட வேண்டிய ஒன்று. தொழில் நிமித்தமாக தான் சார்ந்திருக்கும் சிறிய ஊரில் ஒருவன் சாதரண கல்விநிலயத்தில் கல்வி கற்க நேர்ந்தால் அவனை மேலே கொண்டுவரவும் ஒரு சட்டம் போடப்பட்டு அவனுக்கிருந்த தடைகல்லும் நீக்கப்பட்டது. ஆனால் என்னை போல 60% மதிப்பெண் எடுப்பவர்களுக்கு என்னதான் கதி..? எங்களால் எல்லாம் உயர் பதவிகளை அடையவே முடியாதா..? அப்படிங்கிற கேள்வி என் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் நீயும் 80% மதிப்பெண் வாங்க வேண்டியது தானே..? அப்படிங்கிற கேள்வி வரும்,சரி நாங்க முயன்றோம் முடியவில்லை ஆனால் அதற்காக அந்த வாய்ப்பு என்னை போன்றோருக்கு முற்றிலுமாக மறுக்க படுவது என்பது என்ன நியாயம்..? இது இன்னொரு வகையில் அடிமைகளை தோற்றுவிக்கும் வழிதானே.? இப்படியே போனால் வருங்காலத்தில் 80% வாங்கியவர்கள்தான் வாழலாம், மற்றவர்கள் எல்லாம்...?! என்ற நிலை கூட வரலாம். அது
எப்படின்னு கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம் ஒரு வளமான பொருளாதாரம் என்பது அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களது அடிப்படை தேவைகளை குறைந்த அளவு பணம் செலவு பண்ணினாலே கிடைக்கும் படி இருக்க வேண்டும் அப்பொழுது தானே அந்த நாடு நல்ல வளமான பொருளாதாரத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதை விடுத்து ஒரு வேளை சோற்றுக்கே சில ஆயிரங்களை செலவு பண்ணும் படி இருந்தால் அது எப்படி நல்ல பொருளாதாரம் ஆக முடியும்..?
அப்புறம் கல்வியும், மதிப்பெண்ணும் மதிக்கப்படமால் போவதற்கே வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான திட்டங்களுக்காக அவசர சட்டம் போட்டுபவர்கள் வருங்காலத்தில் அது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.
"பாரதியும் சாதீயும்" -- பற்றி நண்பர் ஒருவர் சரியான தகவல்களை நான் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், பாரதி சாதி பற்றுள்ளவர் தான் என்றும் சற்று விரிவாகவே கூறியிருந்தார் (படிக்காதவர்கள் "பாரதியும் சாதீயும்" தலைப்பின் கீழ் வந்துள்ள கமெண்ட்ஸ் பகுதியை பார்க்கவும்).
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதன் முதலில் நாம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டால் எப்படி அதற்கு செயல்படனும்னு நமக்கு ஒரு கணம் தோன்றாது. கிட்டத்தட்ட அப்படி நிகழ்ந்ததுதான் பாரதியை பற்றிய அந்த கட்டுரை படித்த பொழுது ஏற்பட்டது. அதை எழுதியவர் பெயர் வே.மதிமாறன் , இவர் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார் என்று அவரது ஒளி (வீடியோ) காட்சி பார்த்த பொழுது தெரிந்து கொண்டேன். அவரது வலைத்தளத்திற்குரிய முகவரியை நான் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை அதற்காகத்தான் இவ்வளவு காலம் எடுத்து கொள்ள வேண்டியதாயிற்று. நிச்சயம் வரும் காலங்களில் அந்த வலைப்பதிவை கடந்து வர நேரிட்டால் உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். அதனால் இதற்கு மேலும் காலம் கடத்த வேண்டாம் என்று இந்த பதிவை இடுகிறேன்.
பாரதியாரின் பல பாடல்கள் சாதி ஒற்றுமையை சுட்டிக்காட்டியுள்ளது. இது நமக்கும் தெரியும், உதராணத்திற்கு சிலவை இங்கே..
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதியராயினரும் ஒன்றே - அன்றி
வேறு குலத் தினராயினும் ஒன்றே
ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்போர் அன்றோ
--இந்த வரிகள் "வந்தே மாதரம் என்போம்.." எனத்தொடங்கும் பாடலில் வரும் சரணம். "ஈனப் பறையர்களேனும்" -- என்று சொன்னதன் மூலம் தன்னுடைய பார்ப்பன குல அறிவை காட்டிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. தயவு செய்து அடுத்த வரியையும் பாருங்கள் அவர்கள் அனைவரும் என்நாட்டு மக்கள் என்று அவர் உரிமையுடன் கூறுவதை. முதல் வரியில் கண்டது தவறென்றால் இரண்டாவது வரியில் உள்ள உரிமையையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்..?
கடவுளை கூட "அவனே" என்று விளித்தல் நாம் பல பக்தி பாடல்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் கண்டதே. இது ஒரு வித உரிமை தான். பாரதி இங்கே சொன்னதும் அப்படித்தான், ஏன் பாரதியே பராசக்தியை அப்படி விளிப்பதை "காணி நிலம் வேண்டும் ... " பாடலில் காணலாம்.
இன்னொரு குற்றச்சாட்டாக "சிந்து நதியின் இசை நிலவினிலே.." எனத் தொடங்கும் பாடலில், "காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான், காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்..." 'காசி', 'காஞ்சி' இரண்டையும் இணைத்து பேசியதும் அவரது சாதி பற்றை விளக்குவதாக வே. மதிமாறன் சொல்லி இருந்தார். நான் இதை இப்படித்தான் பார்க்கிறேன், காசியிலிருந்து பேசும் புலவர்கள், காஞ்சியில் உள்ள சாமியாரிடம் தானே பேசுவார்கள் .. பின்ன ஈரோட்டில் உள்ள கவுன்சிலர் கூடவா பேசுவர் ...? ஒரு கவிஞன் என்பவன் எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் அல்லவா..? இதில் என்ன குறை...? ஏன் சிதம்பரம் அல்லது திருத்தணியை சொல்ல வேண்டியதுதானே..? அப்படின்னு இன்னொரு கேள்வியும் கேட்கலாம்...? காசியில் உள்ள "கா"வும் காஞ்சியில் உள்ள "கா" வும் தானே ஒரு எதுகை மோனைக்கு கூட சொல்லி இருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது..?
இதை எல்லாம் விட மிகப் பெரிய உண்மை, பாரதி தன்னை 'பகுத்தறிவாளி' என்று என்றாவது சொன்னாரா..? ஆரம்பம் முதல் கொண்டே அவர் 'காளியையும்' , 'சர்வேசரனையும்' ,'எமனை எட்டி உதைப்பேன்' என்று தானே சொல்லி வருகிறார் . அவர் இந்து கடவுளை துனைக்கழைத்தால் என்ன குற்றம்...? அவர் காசியையும், காஞ்சியையும் இணைப்பதில் தவறோ, வியப்போ இல்லையே..?
அப்புறம் இன்னொரு குற்றச்சாட்டு வர்ணாசிரமத்தை ஆதரித்தார் பாரதியார் என்பது. "வேதமறிந்தவன் பார்ப்பான்.." என்றார் சரி, ஆனால் தயவு செய்து அதற்கு கீழ் வரும் வரியையும் பாருங்கள் "தொண்டரென் றோர் வகுப்பில்லை .." என்று சொல்லி யாரும் அடிமை என்று இல்லை என்று சொல்கிறாரே..? அதை எப்படி எடுத்துக்கொள்வது..? அதே பாடலில் "சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தனில் செழித்திடும் வையம் ..." என்று சொல்கிறாரே அதை எப்படி எடுத்துக் கொள்வது..? பூனை பாட்டில் கூட வேறு வேறு வண்ணங்களில் இருந்தாலும் யாரும் ஓர் குலம் என்று சொல்கிறாரே அதில் என்ன சாதி பாகு பாடுகளை சொன்னார் பாரதி என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இன்னும் ஒரு படி மேலே போயி, எல்லா மதத்தினரும் ஒன்றே என்று சொல்கிறார். இப்படி அவர் மதநல்லிணக்கம், சாதி ஒற்றுமை என்ற விஷயங்களை தன் கவிதை நெடுக பதிய வைத்தே சென்றுள்ளார் .
அப்புறம் பாரதியின் போதை அடிமை பற்றி சொன்னார்கள், அதை பற்றிய தகுந்த விஷயங்கள் வலையில் கிடைக்க வில்லை, விளக்கமாக சொல்லும் புத்தகமும் கையில் இல்லை எனவே அதை பற்றி தெரிந்த வுடன், விளக்கமாக சொல்கிறேன்.
இறுதியாக ஒரு விஷயம்...பாரதியின் சில வரிகள் சொல்லி இருப்பதை மட்டும் பார்க்காமல், முழு பாடலையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது தெளிவாக விளங்கும். சம காலத்தில் எல்லாரும் விமர்சனத்திற்குள்ளாவது என்பது இயல்பு ஆனால் அந்த தனிப்பட்ட நபரின் மறைவுக்கு பின் வரும் சந்ததிகள் அவரது விமர்சனங்களை புறம் தள்ளி, அவரது பெருமைகளை எடுத்துரைப்பது அவரது விமர்சனத்தை மறைக்கும் எண்ணம் அல்ல. அவரது வாழ்க்கையின் அடி நாதமாக அமைந்த உயரிய கொள்கைகளுக்கு கொடுக்கும் மரியாதை. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொண்டாலும் மகிழ்வே.
பாரதியை தீண்டாத தீ சாதி."தமிழ் போதும் இந்தியா வேண்டாம்" என்ற கோஷம் வலையில் மிக பிரசித்தம். நான் சொன்னது இன்டர்நெட் வலையை நீங்க பாட்டுக்கும் பழக்க தோஷத்துல மீனவர் வலைனு நினைச்சுக்காதீங்க. ஆனா அதிலிருந்து ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு வலைப்பதிவில் பார்த்தேன் "இந்தியா ஆசியோடு தமிழர்களை கொல்லும் சிங்கள அரசு" - என்ற தலைப்பை பார்த்தவுடன் எனககு ஒன்று தோன்றியது. அப்படி தமிழர்களை கொல்ல ஏன் இந்திய அரசு முயல வேண்டும்..? அப்படின்னு கேட்டா இப்படி சொல்லலாம் "இந்த தி.மு.க தொந்தரவு தாங்க முடியலை, அப்படி அவுங்களை அடக்கனும்ணா என்ன பண்ணலாம், அவுங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களை கொடுமை படுத்தலாம். சரி அதை நாமலே செய்தால் நல்லா இருக்காது. அதுனால சிங்களவங்ககிட்ட சொல்லி பண்ண சொல்லலாம் (!!!???)" அப்படின்னு இந்திய அரசாங்கம் அதாவது காங்கிரஸ் கட்சி நினைத்திருக்கலாம். இல்லன்னா "என் புருஷனை கொன்னது தமிழ் பேசும் விடுதலைப்புலிகள்தான் அதனால் தமிழ் பேசும் தமிழர்களை கொல்லலாம் " என்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருக்கலாம்.
என்னங்க ரொம்ப குழப்பமா இருக்கா, எனக்கும் இப்படிதாங்க இருக்குது. தமிழர்களுக்கு சரியான முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது ஓரளவு உண்மைதான் அதற்காக தமிழர்களை (தமிழ்நாட்டில் வாழும்) கொன்று (அதிலும் குறிப்பாக மீனவர்களை) காங்கிரஸ், வாழும் என்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அப்படியே காங்கிரஸ் செய்தாலும் அதற்காக காங்கிரசை தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டுமே தவிர, இந்தியாவை துண்டாட நினைப்பது அபத்தத்திலும் அபத்தம். தமிழர்களுக்கான உரிமையை ஜனநாயக ரீதியிலேயே போராடி பெற்று விடும் அளவிற்கு தான் நிலைமை உள்ளது. இதை ஏன் சில துண்டாடும் சக்திகள் அதிக அளவில் ஊதி பெரிசாக்கி விடுகின்றன என்று தெரியவில்லை. எனககு தெரிந்த ஒருவர் தனது கணவனை பறிகொடுத்த சோகத்தில், தெருவில் போகும் தன் கணவர் வயதொத்தவர்களை எல்லாம் காட்டி "இவரெல்லாம் உயிரோடிருக்கிறார் என் கணவர் இறந்து விட்டாரே " என்று வருத்தப்படுவார்(!!!??). இத்தனைக்கும் இவரது கணவர் எழுபது வயதுக்கு மேல் கடந்து நோய்வாய் பட்டுதான் இறந்தார். இதிலிருக்கும் நியாயம் தான் இப்பொழுது நீலி கண்ணீர் வடிப்பவர்களின் பக்கம் இருக்கும் நியாயமும்.
இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களிலும் இந்த துண்டாடும் சக்திகள் தங்களது நாக்கினை நுழைக்க தவறுவதில்லை. குறிப்பாக சீன அரசின் ஊடுருவலை பற்றி விவாதிக்கும் பொது கூட இந்தியாவிற்கு இது தேவை தான், இதை விட கொடுமையான விஷயங்கள் நடந்தால் கூட நான் சந்தோஷ படுவேன் , என்ற தொனியில் கூட பதிவுகள் வலையில் இடப்படுகின்றன. உஷாராக இருக்க வேண்டிய நேரம்.
மத்திய அரசு தாமதமாக செயல் படுகிறது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எல்லாம் காரணம் வைத்து இவ்வாறு பேசுவது, சரியான முறையாக தெரியவில்லை. துண்டாடுவது என்பது மற்றவர்களுக்கு எப்படியோ அதற்கு பலியாகி விடாமல் இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.
செப்டம்பர்-18 தேதியில் வெளிவந்த INDIA IN NEWYORK என்ற பத்திரிகையில் வந்த ஒரு பேட்டி தான் இந்த கட்டுரையின் சாராம்சம். நாட்டமை படத்தில் வர்ற மாதிரி (வேற உதாரணமே உனக்கு தெரியலையான்னு நீங்க சொல்றது கேட்குது, அடுத்த முறை நிச்சயம் வேற நல்ல உதாரணமா சொல்றேன்) இந்த பேட்டியில் "குற்றவாளிகள்" என்று சுட்டிகட்டப்படும் கும்பலில் நானும் இருப்பதால் என்னுடைய "சாட்சி(!?)" இங்கே செல்லுபடி ஆகாது, இருப்பினும் இது பலருக்கும் பொருந்துவதால், நீங்களே நீதிபதியாகி தீர்ப்பு சொல்லிக்கொள்ளுங்கள். சரி இதோ அந்த பேட்டி.
Norman Matloff, (Professor of Computer Science in University of California). என்பவரை பி.ராஜேந்திரன் என்பவர் கண்டது இந்த பேட்டி. நோர்மன் முழுக்க முழுக்க H1-B விசாவை ஒழிக்க வேண்டும் அல்லது இப்பொழுதுள்ள நடைமுறையை மாற்றவேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்க கூடியவர். இவரது மனைவி சீனாவை சேர்ந்தவர், இவரது தந்தை லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மனதில் கொண்டு கீழ் வரும் பேட்டியை படியுங்கள்.
கேள்வி: நீங்கள் அடிக்கடி H1-B விசாக்களை சரியானவை அல்ல என்று கூறுவது ஏன்?
பதில்: நான் இந்த H1-B அறவே வேண்டாம் என்று சொல்லவே இல்லை.
கேள்வி: சரி அதில் உள்ள குறைபாடுகள் தான் என்ன, மேலும் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் அதை பற்றி பேசுவது ஏன்..?
பதில்: நான் எந்த காலகட்டத்திலும் சொல்லுவேன் இது நல்ல முறை அல்ல, இதில் ஏமாற்றுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று. சரி இந்த விசாவை அறிமுகபடுத்தியதன் நோக்கம் தான் என்ன..? மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே பணிக்கு அமர்த்துவதுதான். ஆனால் இப்பொழுது இது எதற்கு பயன்படுத்தபடுகிறது? குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை பணி அமர்த்து வதற்கான ஒரு வழியாக போயி விட்டது. இது முற்றிலும் ஒரு சட்ட மீறலாகாவே நான் கருதுகிறேன். நான் இன்னும் சொல்கிறேன் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே கொண்டுவர செய்வதை வரவேற்கிறேன்.
கேள்வி: சரி மிகச்சிறந்த அப்படி என்றால் உங்கள் அளவு கோல் என்ன..?
பதில்: இங்கே கிரீன் கார்டு விஷயத்தில் EB-1(Employment Based). அப்படி என்று ஒரு பிரிவு இருக்கிறது அதில் பின் பற்றப்படும் நடை முறைகள், H1-B விசாவிற்கான நடை முறைகள் போல் அல்ல. குறைந்த பட்சம் அந்த விதிமுறைகளை H1-B விசாவிற்கும் கொண்டுவரவேண்டும்.
கேள்வி:இதற்கு பேசாமல் நேரடியா EB-1 கிரீன் கார்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா..?
பதில்: நிச்சயமா. என்ன இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னா ஒரு h1-b விசா பெற்றவர் வேலை நீக்கம் செய்யப் படுகிறார் என்றால் அவர் பத்து நாட்களுக்குள் நாட்டை விட்டு (எனககு தெரிந்து இது பத்து அல்ல முப்பது நாட்கள்) வெளியேற வேண்டும். அதாவது அதற்குள் வேலை கிடைக்காத பட்சத்தில். ஆனால் இங்கே நடை முறை என்ன. யாருமே வெளியேறுவதில்லை. மேலும் அமெரிக்கர்களுக்கு வேறு நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மீது கோபம் வருகிறது. மேலும் இப்பொழுதெல்லாம் அமெரிக்காவின் மீதிருந்த அந்த கவர்ச்சி குறைய ஆரம்பித்து விட்டது. சீனர்கள் அவர்கள் நாடே அமெரிக்காவை விட மேலானது என்ற எண்ணம் சமீப காலமாக மேலோங்கி விட்டது. எனவே அவர்களில் சிலர் தங்களது நாட்டை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டார்கள் அதே மாதிரியான ஒரு சூழல் இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது.
கேள்வி: H1-B விசா பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஏற்கனவே பெற்றவர்கள் வர மறுக்கின்றனர். அப்படி இருந்தும் இந்த விஷயம் அவ்வளவு முக்கியமானதாக கருதுகிறீர்களா...?
பதில்: பின்ன, முக்கியம்தான். இங்கிருக்கும் H1-B விசா பெற்றவர்களால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் இடம் குறைகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
கேள்வி: அதே மாதிரி நீங்கள் வயது ஒரு முக்கியமான அம்சமாக சொல்கிறீர்கள். அதாவது 30 அல்லது 40 வயதில் உள்ள H1-B விசாக்காரர்கள் தேவை இல்லை என்பது போல் சொல்லி இருந்தீர்களே...?
பதில்: ஆமாம் 35 வயதானவர்கள் பெரும்பாலும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்கள் தொழில் நுட்ப ரீதியாக தங்களை வளர்த்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் துறையை பொறுத்தவரையில் வயது முக்கியம் அதுவும் 35 இ தொட்டவர்கள் வயதானவர்களாகவே கருதப்படுகிறார்கள். இங்கே தேவை இளைய தலை முறையினர் மட்டுமே.
இப்படியாக செல்கிறது இந்த பேட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
© Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009
Back to TOP