Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

ஏன் எமெர்ஜென்சி..?



கேள்வி: ''நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பின்பு நாட் டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற் றத்தைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர் கள் தீவிரமாக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எங்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தாங்கள் முன்னதாகவே கொண்டுவந் திருக்கக் கூடாதா?'' (கேள்வி கேட்டவர் பெயர் திருமதி ராஜகுமாரி சேஷாத்ரி)


பதில்: ''கொண்டு வந்திருக்க லாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா எதிர்க் கட்சிகளும், பெரும்பான்மை யான பத்திரிகைகளும் கட்டுப் பாடின்மையை மறைமுகமாக ஆதரித்து வந்தன. அரசாங்கம் எந்தத் திட்டத்தைச் சொன் னாலும் அதைக் கேலி செய்வ திலும், அதற்குத் தவறான உள் நோக்கம் கற்பிப்பதிலுமே ஈடு பட்டிருந்தன. அதனால் மக்க ளும் அவற்றைச் செயல்படுத்து வதில் அக்கறை காட்டவில்லை. நெருக்கடி நிலைப் பிரகடனத் துக்குப் பின் புதிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இது போதாது. ஒழுக்கம், கட் டுப்பாடு போன்ற அருங்குணங் களை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இன்னொருவர் நம் மீது திணிக்கும் நிலை ஏற்படக்கூடாது. இந்தக் கட்டுப் பாடும் ஒழுக்கமும் இல்லாவிட் டால் இந்தப் பெரிய தேசத்தில் நாம் எதையும் சாதிக்க முடி யாது. ஒழுக்கத்தில் சில வகை உண்டு. ஒன்று, சமுதாய ஒழுக் கம்! அதாவது, நம் வேலை களைத் திறமையாகவும், உரிய சமயத்திலும் செய்வது, நாம் வசிக்கும் பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பது... இப்படிப்பட்ட புற ஒழுக்கங்கள். இவற் றால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும்; அதன் பெருமையும் சிறந்தோங்கியிருக்கும். அதே போல் தனி மனித ஒழுக்கம்! இப்படி உடல் சுகாதாரம் முதல் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கட்டுப்பாட்டை யும் ஒழுக்கத்தையும் நாம் கடைப்பிடிக்காவிட்டால், பல வித தொல்லைகளை அனுப விக்க நேரிடும். நாம் ஒழுக்க மான வாழ்வு நடத்தினால்தான், அதிக திறமையுள்ளவர்களாகவும் திருப்தி உள்ளவர்களாகவும் வாழ முடியும்!''
(பதில் சொன்னவர் அன்றைய பிரதமமந்திரி திருமதி.இந்திராகாந்தி)
 
எமெர்ஜென்சி என்பது ஏதோ சுய கட்டுப்பாட்டையும்,தனி மனித ஒழுக்கத்தையும் கற்பிக்க வந்ததை போல சொல்லப்படும் மறைந்த இந்திராகாந்தியின் பதிலில் தெரிவதெல்லாம் செய்த தவறை மறைக்க செய்யும் செயலே. இதை விட பெரிய கொடுமை இந்த கேள்வியை கேட்ட அந்த பெண்மணி  அந்த கொடூர காலத்தை புகழ்வதுதான். ஒருவேளை எமெர்ஜென்சியை கண்டு ரசித்தவராக கூட இருக்கலாம். அந்த பெண்மணியை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பிரதமமந்திரியாக இருந்த இந்திராகாந்தியை பேட்டி எடுக்க அனுப்பியதாம் விகடன். குறைந்த பட்சம் இந்தமாதிரியான சென்சிடிவான பிரச்சனைகளுக்கான விடயத்தை அவர் தொடாமலாவது பார்த்துகொண்டிருந்திருக்கலாம் விகடன் போன்ற பெரிய பத்திரிகைகள். உங்களுக்கு எமெர்ஜென்சி எதற்காக இந்திரா காந்தியால் அமுல் படுத்தப்பட்டது தெரியுமா..?
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ல் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு விரோதமாக தேர்தல் முறைகேடுகளில் இந்திராகாந்தி ஈடுபட்டதால் அவருடைய தேர்தல் (1971 ஆம் ஆண்டு நடந்த) தேர்வு செல்லாது" என்று தீர்ப்பளித்தது.  அத்துடன் இந்திரா காந்தி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டது, உச்சநீதிமன்றம் மேல் முறையீட்ட ஏற்க மறுத்தாலோ, இல்லை இந்திராகாந்தி மேல்முறையீடு செய்யவில்லை என்றாலோ தான் இந்த தீர்ப்பு நடைமுறை படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு முழுமையான தடை விதிக்கவில்லை. இதுவே நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமானது. இந்திராகாந்தி 1971 தேர்தலில் செய்த தவறு என்ன..? அப்பொழுது பிரதமமந்திரியின் தனி செயலராக பணியாற்றிய யஷ்பால் கபூர் என்பவரை தேர்தல் முகவராக இந்திராகாந்தி நியமித்ததுதான் தவறு என்று இந்திராகாந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நாராயன் வழக்கு தொடர்ந்தார். யஷ்பால் கபூர் தன்னுடைய அரசாங்க பதவியை ராஜினாமா செயாமலேயே தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். அதாவது ஜனவரி 7 ஆம் தேதி தேர்தல் முகவராக பணியேற்றார், ஜனவரி 13 ஆம் தேதி அன்று தான் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த ஆறு நாள் கால இடைவெளிதான் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்த காரணமானது என்றால் நம்ப முடிகிறதா..?
இந்திரா நினைவு நாளில் சரித்திர புகழ் வாய்ந்த அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட காரணத்தையும் நினைவுகூர்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


Read more...

ராகு-கேது பெயர்ச்சி உண்மை


இன்னைக்கு ராகு-கேது பெயர்ச்சின்னு சொன்னாங்க அப்பவெல்லாம் நான் பெரிசா நம்பலை. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு அந்த நம்பிக்கை வந்திடுச்சு. நீங்க இதுக்கு முன்னாடி எப்பவாது ஜெயலலிதா தன்னுடைய கட்சி கூட்டத்தில் மற்றவர்கள் உட்காந்திருக்க தான் எழுந்து நின்று பேசி இருக்கிறாரா..? நேத்து நடந்த கூட்டத்துல பேசி இருக்காரே, அப்ப ராகு-கேது பெயர்ச்சி வந்துடுச்சுன்னுதானே அர்த்தம்.
(படம்: தினமலர்)


Read more...

ராமதாசு ஒரு சீரியஸ் பீசு..!

இலங்கைத் தமிழர்களை ராஜபக்சே கொன்று குவித்த ரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


 இந்த பேச்சை பேசியவர் வேறு யாருமல்ல பா.ம.க தலைவர் ராமதாசு அவர்கள்தான். ராமதாஸ் என்னதான் கூட்டணி மாறி அவ்வப்பொழுது காமெடி செய்தாலும் , அவருடைய எல்லா பேச்சுகளையும் காமெடி என்று எடுத்துக்கொள்ளமுடியுமா..? அவர் சரியா  சொல்றப்ப  ஏத்துக்கத்தானே வேணும்.  "யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கை குலுக்குவானா..?" ரொம்பவும் யோசிக்க வேண்டிய விடயம். நான் நியூயார்க்கில்  ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது 

ஒரு சக ஊழியருடன் காரில் பயணம் செய்ய நேர்ந்தது. அவர் யூத இனத்தை சேர்ந்த ஒரு பெண். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நாங்கள் பயணம் செய்த அந்த கார் லெக்சஸ் (LEXUS) ரக கார் என்பதை தெரிந்து கொண்டேன். அடுத்து நான் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "இந்த ரக கார்கள் ஜெர்மனில் தானே தயாரிக்கப்படுகிறது.." என்று கேட்டேன். சட்டென்று முகம் மாறிய அவர் "இல்லை இல்லை இது ஜப்பானில் தயாரிக்கப்படும் கார். இது ஜெர்மனியில் தயாரித்தால் இந்த காரை நான் பயன்படுத்தவே மாட்டேன்" என்றார்.  இது நடந்தது 2005 ல், இதை தவறென்றும் சொல்ல முடியாது. ஏன்னா அதன்  வலியும் வேதனையும் அவர்களுக்கு தானே தெரியும். அந்தவிதத்தில் ராமதாஸ் சொன்ன உதாரணம் ரொம்பவும் சரியாக சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (அப்பாடா "ராமதாசு ஒரு காமெடி பீசு" எழுதினப்ப ஒருத்தரு ஆட்டோ வர வாழுத்துக்கள்-ன்னு சொல்லி இருந்தாரு அதை இப்ப சரி கட்டியாச்சுன்னு நினைக்கிறேன்..ஹும் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.).


Read more...

நல்லது நடக்கணும்


ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதாகரமாக வெடித்து தற்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராஜாவின் அலுவலகங்களில் நடந்த அதிரடி சிபிஐ சோதனையால் திமுக வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

இருப்பினும் முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் ராஜா மீது நடவடிக்கை எடுக்கு ஆயத்தம் நடந்து வருவதாக பேசப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராஜா மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியின் கருத்தை அறிய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி என்பதாலும், தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குக் காரணகர்த்தா என்பதாலும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்லையாம்.
அதேசமயம், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து காங்கிரஸ் மீதும், மன்மோகன் சிங் அரசு மீதும், மத்திய அமைச்சர் ராஜா விவகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டிப் பேசுவதால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதை கருணாநிதியும் விரும்ப மாட்டார் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதாம்.இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் ராஜா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மற்றும் பிரதமர் தயாராகி விட்டனர். அதற்கு முன்பு கருணாநிதியிடமிருந்து ஒரு வார்த்தைக்காக காங்கிரஸ் காத்திருக்கிறது என்பதே என்று காங்கிரஸ் தரப்பில் கூறுகிறார்கள்.விரைவில் முதல்வர் கருணாநிதி யின் தூதர் ஒருவர் சோனியா காந்தியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜா மீது நடவடிக்கை பாயலாம் என்றும் பேசப்படுகிறது.மக்களவை குளிர் காலக் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில் ராஜா விவகாரத்தால் தங்களுக்கு சி்க்கலை வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்கிறார்கள்.அதே நேரத்தில் ராஜாவை பதவியிலிருந்து திரும்பப் பெற்றால் ஊழலை ஒப்புக் கொண்டது போலாகிவிடுமே என திமுக அஞ்சுகிறது.இதனால் திமுக ஆழ்ந்த அமைதி காக்க, அதைப் பார்த்து காங்கிரசின் கோபம் அதிமாகிக் கொண்டுள்ளது. ராஜா நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியாது என்றே தெரிகிறது.

மேற்கண்ட அந்த செய்தி இன்றைக்கு தட்ஸ்தமிழ் இணையதளத்தில் வந்த செய்தி.  இரண்டு நாளைக்கு முன் நம் "எண்ணங்களில்" தோன்றியதை பிரதிபலிக்கும் விதமாக இன்று வந்துள்ள இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பாக கடைசி வரிகள் நமது எண்ணத்தை முற்றிலுமாக ஒத்து போவதாகவே கருதுகிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி.


Read more...

அதிகார கரங்கள் ஒரு ஆபத்து

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக யாரேனும் புகார் தெரிவித்திருக்கலாம். அதன்பேரில்தான், தொலை தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. அதற்காக என் மீது குற்றம் சொல்ல முடியாது. சி.பி.ஐ.,சோதனை என்பது வழக்கமான ஒன்றுதான். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தொடர்பான அனைத்து முடிவுகளும் டிராய் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையிலும், பிரதமருடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட்டன.



மேற்கண்ட செய்தி மத்திய அமைச்சர் ஆ.ராசா  குறித்து சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மிகப் பெரியதாக ஆக்கப்பட்டு, தேர்தல் சூட்டில் ஆறியும் போனது. கிட்டத்தட்ட 65,000 கோடி ரூபாய் ஊழல் இதில் நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. (இந்த ஒரு துறையிலேயே 65,000 கோடி ஊழல் செய்ய முடியும்னா..?  ஹுஸ் அப்பா கண்ண கட்டுதே). இது குறித்த தி.மு.கவின் செயல்பாடுகளோ நம்மை வியக்க வைக்கிறது. ஒருத்தனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய பிறகும் அவன் தன்னை அந்த வீட்டின் விருந்தாளியாகவே பாவித்துக்கொள்வது என்ன நாகரீகம் என்று தெரியவில்லை. காங்கிரஸ் இந்த காரணத்திற்காகவே ஆ.ராசாவிற்கு மத்திய மந்திரி பதவி தர இந்த முறை தயங்கியதாகவும் ஆனால் தி.மு.க வின் நெருக்குதலாலேயே இந்த பதவியை அதுவும் முன்பு வகித்த அதே துறையை கேட்டு பெற்றது தி.மு.க. இவ்வளவு நடந்த பிறகும் ஆ.ராசா தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று வெளிப்படையாக சொல்கிறார். இவை எல்லாம் தி.மு.க வின் தலைமை அறியாமல் வரப்போவதில்லை. இவ்வளவு நடந்த பிறகும் இவரை யார் மந்திரி பதவியை தொடர செய்வது..? எவ்வளவோ பதவிகளை பெற்ற, இழந்த தி.மு.க போன்ற கட்சிகளே பதவி சுகத்தை இழக்க தயாரில்லாததை கண்டு அதிர்ச்சியே ஏற்படுகிறது. இப்பொழுது நடக்கும் இந்த சம்பவத்திற்கெல்லாம், வாய் மூடி மௌனியாக தி.மு.க இருப்பது அந்த கட்சிக்கே ஆபத்தாய் முடியும். இதை பழுத்த அரசியல் அனுபவம் உள்ள கருணாநிதியும் உணர்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதையும் மீறி இந்த மாதிரியான விடயங்கள் நடப்பது எதனால்..? சில பத்திரிகைகள் சொல்வதைப்போல தி.மு.க வின் அதிகார மையம் கைகள் மாறி இருக்கலாமோ என்ற அச்சம் தோன்றுகிறது. அது என்ன "கைகள்"..? ஆம் அது ஒரு கைக்கு போக வில்லை, குறைந்த பட்சம் மூன்று கைகளிலாவாது அது இருக்க வேண்டும். அவைகள் எவை என்று உங்களுக்கே தெரியும். அதிகாரம் ஒரு கையில் இருப்பதுதான் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், இந்தியாவிலேயே ஜனநாயகமாக செயல் படும் ஒரே கட்சி என தன்னை கூறிக்கொள்ளும் தி.மு.க விற்கும்  நல்லது.


Read more...

ராமதாசு ஒரு காமெடி பீசு..!


வடிவேலு ஒரு படத்தில் தனது நண்பர்களை சற்று தொலைவில் நிற்க வைத்து விட்டு 'பலம்' வாய்ந்த எதிரியை சந்திக்க போவார், அங்கு அவர் எதிரியுடன் பேசும் போது அவருக்கு சாதகமான விஷயங்களை சத்தமாக தன் நண்பர்களுக்கு கேட்கும் படியாகவும், மற்றதை மெதுவாகவும் சொல்லி பேசுவார். அது தான் தோன்றியது பா.ம.க நிறுவனர் ராமதாசின் இன்றைய அறிக்கையை பார்க்கும் போது. அதே சிந்தனையோடு கீழ் காணும் அறிக்கையை படியுங்கள், அடைப்பு குறிக்குள் உள்ள விஷயங்கள் ராமதாஸ் மனசாட்சி வடிவேலு பாணியில் பேசி இருப்பதன் பதிவு..

"தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பாமக அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது."

(தைரிய மிருந்தா எங்களை போல எல்லோரும் கூட்டணியை விட்டு வெளில வாங்க..அப்பத்தானே யார் கூடவவாது நாங்க கூட்டணி சேர முடியும். அப்படி ஒத்துக்குங்க உங்க யாருக்கும் எங்களை போல் தைரியம் இல்லைன்னு..!)

ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.

(சுயமரியாதை ... இந்த ஒரு வார்த்தை மட்டும் இல்லன்னா நம்ம கதியை நினைச்சு பார்க்கவே பயமா இருக்கே. )

ஆனால் முதல்வர் கருணாநிதி யை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்கவே முடியாது..

(காசு கேட்டா கொடுக்குறாங்களா ...? எப்ப பாரு கொடநாடு போறேன் கொக்குநாடு போறேன்னு போய்டுறாங்க. )

அப்போது எங்களது கொள்கையோடு திமுகவின் கொள்கை ஒத்துப் போனதால் அதிமுகவை விட்டு விலகி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு திமுக தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.

(பாத்துக்குங்க நாங்க 'சுயமரியாதை' காரவுங்க நாங்களா அதிமுக கூட்டணிக்கு போகலை தி.மு.க தான் தள்ளி விட்டது... சு ..அப்பா இப்பவே கண்ணை கட்டுதே)

இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3வது அணியை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

(திடீர்ன்னு ஒரு நிருபர் தெளிவா ஒரு முடிவை சொல்லுங்க அப்படின்னு கேட்டவுடன் டென்ஷன் ஆகி... "யாராது ராஸ்கல் கட்சி நடத்துறது என்ன அவ்வளவு சுளுவா..? நானே ஒன்னும் புரியாமத்தானே பேசிக்கிட்டு இருக்கேன்.சும்மா சும்மா. இனிமே யாரையும் பிரஸ் மீட்டுக்கு கூப்பிட போறதில்லை." )


Read more...

உச்சநீதிமன்றமும், வருத்தப்படாத வாலிபர் சங்கமும்


என்னத்தை சொல்றது...? நம்ம நாட்டின் மிகவும் பலம் வாய்ந்த உச்ச நீதி மன்றத்தை அவமதிப்பது சில மாநில அரசுகளாலே நடத்தப்படுவது வாடிக்கை ஆகி விட்டது. எனக்கு விவரம் தெரிந்து, ஒரு முறை கர்நாடக அரசு காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கியதாக கூறி அந்த தீர்ப்பை அமுல் படுத்த மறுத்தது (அது இன்றைய வரை அப்படியேதான் இருக்கிறது என்று நினைக்கிறேன்). இத்தனைக்கும் இங்கு வேறு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்து விட்டது, இன்னும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்த மாதிரி தெரியவில்லை. இதற்கிடையில் தற்பொழுது உத்திர பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் மாயாவதி தலைமையிலான அரசு, அந்த அரசின் சார்பிலே , அரசின் செலவிலே வைக்கப்படும் மாயாவதி மற்றும் கன்ஷிராம் சிலைகளை அகற்றவும் இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது எனவும் கூறி ஒரு தீர்ப்பை சில மாதங்களுக்கு முன் வழங்கியது. இதை உதாசீன படுத்தியது மாயாவதி தலைமையிலான அரசு. இன்னும் ஒரு படி மேல் போய் தங்களது கட்சி தலைவர்களுக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க செய்த முயற்சி உச்ச நீதி மன்றத்தை மேலும் கோபமுற செய்திருக்கிறது. இதற்கான கண்டனங்களை மாயாவதியின் சார்பில் ஆஜரான வக்கீலிடம் தெரிவித்திருக்கிறது.

இப்படி சொல்வதெல்லாம் வேலைக்காகாது, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த தற்காகவே சம்மந்த பட்ட ஆட்சியை கலைத்து விட்டால் என்ன..? இதற்காக ஒரு அவசர சட்டமே கூட போடலாம். இது என்ன வருத்தப் படாத வாலிபர் சங்கம் நிறைவேற்றிய கைப்புள்ள தீர்ப்பா..? அலட்சிய படுத்துவதற்குநாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தது உச்ச நீதிமன்றம் தான் அதன் பேச்சே மதிக்கப்பட வில்லை என்றால் எப்படி..? உச்ச நீதிமன்றத்தின் மதிப்பை மக்களிடம் நீடிக்கவும் இது வழி செய்யும் என்றே நம்பலாம்.


Read more...

முரண்பாடுகளும்.. சமன்பாடுகளும்..

சமீபத்தில் நடந்த கலைஞர் பற்றிய ஒரு கருத்தரங்கத்தை தொலைக்காட்சி வழி பார்க்க நேர்ந்தது. வழக்கம் போல் அவரவர் தங்களது ஜால்ரா வேலையை செவ்வனே செய்த மாதிரி தான் தோன்றியது. கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களும் கலந்தாய்வு செய்யப்பட தலைப்பும்...
கலைஞருக்கு அண்ணா விருது கிடைக்க காரணம்..
பேச்சு ஆற்றலே -- ஜெகத்ரட்சகன் (மத்திய அமைச்சர் )
பகுத்தறிவே -- ஆ.ராசா(மத்திய அமைச்சர்)
ஏழையின் சிரிப்பில் இறைவனை(!?) கண்டவர் -- பொன்முடி (தமிழக அமைச்சர்)
அரசியல் நாகரீகம் -- சுப.வீரபாண்டியன்
எழுத்தாற்றல் -- வைரமுத்து
நடுவராக -- கவிஞர் வாலி
சிறப்பு விருந்தினர் - ரஜினிகாந்த்
ஆ.ராசா பேசிய தலைப்பில் பகுத்தறிவிற்கும் நாத்திகத்திற்கும் வேறுபாடு இருப்பதாக சொன்னார். ஆனால் கடைசியில் இரண்டும் ஒன்று என்பது போலவே பேசிவிட்டு அமர்ந்தார். அது சரி அப்படிப்பட்ட பகுத்தறிவாளர் எப்படி ஏழையின் சிரிப்பில் "இறைவனை" காணமுடியும் ? நமக்கெதுக்கு வம்பு அப்புறம் இதுக்கொரு கவியரங்கமோ வழக்காடு மன்றமோ நடக்கும். வருடந்தோறும் இமயமலை சென்றுவரும் ரஜினிகாந்த் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார்..? அது சரி "அதிகார மைய" அழைப்பை எப்படி அவரால் தட்ட முடியும். எந்திரன் வேறு தாயாராகி கொண்டிருக்கிறது.
இந்த முரண்பாடு முடிச்சுகளில் சிலவை இங்கே
1. வைரமுத்து பேசும் போது சொன்னார் "கிணறு வெட்ட பூதம்" என்று ஒரு பழமொழி சொல்வார்கள், அதில் 'பூதம்' என்பது பேயையோ பூதத்தையோ குறிப்பன அல்ல என்றும். கிணறு வெட்டும் போது "குவியும் மண்" ஐம்பூதங்களில் முதல் பூதம் என்றும், கிணறு வெட்டும் போது தோன்றும் "வாயு" இரண்டாம் பூதம் என்றும், கிணறு வெட்டியவுடன் வரும் "நீர்" மூன்றாம் பூதம் என்றும், அந்த நீரில் தெரியும் "வானம்" நான்காம் பூதம் என்றும், தோண்டப்படும் "நிலம்" ஐந்தாம் பூதம் என்றும் சொன்னார். இதில் அவர் நாத்திகத்தையும் இணைத்து பேசினார். புரியுது, புரியுது நீங்க கேட்பீங்க இந்த ஐம்பூதங்களை சொன்னதே ஆன்மிகம் தான்னு?
இதுல குறிப்பிட்டு சொல்றது என்னன்னா "ரஜினிகாந்த் அவர்களே நன்றாக கவனியுங்கள் இதை" அப்படின்னு சொல்லிட்டு இதை சொன்னார் வைரமுத்து. ரஜினியால் என்னத்தை சொல்லமுடியும்..?
2. அதே வைரமுத்து திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் போது சொன்னார் தனது ஐந்து புலன்களையும் அடக்க தெரிந்த ஒருவனது வாழ்க்கை ஏழேழு ஜென்மத்திற்கும் பாது காப்பதாக இருக்கும் என்ற பொருள் பட வந்த திருக்குறளுக்கான விளக்கத்தில் கலைஞர் தனது விளக்க உரையில் "தனது வாழ் நாள் " முழுமைக்கும் என்று சொல்லி இருப்பார், என்று சொன்னார். அப்படி என்றால் ஒரு மனிதனின் வாழ்நாள் ஏழேழு பிறப்பும் என்று கொள்ளலாமா...? அப்படி சொன்னாலே அவர் பகுத்தறிவு "நெறி"இலிருந்து விலகியதாகிவிடுமே ...?
இதற்கு முன்பு ஒரு இடுகையில் சோ திருக்குறளையும் இந்து மதத்தையும் தொடர்பு படுத்தி சொல்லும் போது இதே திருக்குறளை தான் சொல்வார். அதை மீண்டும் ஒரு முறை பாருங்கள். வைரமுத்து பாணியில் சொல்வதென்றால் "திருக்குறளுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள நெருக்கம் தூரம் குறைந்தது, திருக்குறளுக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள நெருக்கம் துவாரம் கொண்டது".

முரண்பாடுகள் மட்டும் நம் கண்ணுக்கு தெரியவில்லை அதில் சில சங்கதிகளும் இருந்தன அவை...
.....> "நம்மை பிரித்தாளும் 'சதி"க்கு கால் முளைத்து தான் 'சாதி' ஆனது " என்று கலைஞர் எழுதிஇருந்ததாக சொன்னார் வைரமுத்து. கலைஞரின் மொழி ஆளுமைக்கு இதுவும் ஒரு உதாரணம்.
......>"கலைஞர் சிறையிலிருந்து சட்டசபைக்கு திரும்ப வருகிறார் அப்பொழுது காங்கிரசை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் கேட்டார் "மாமியார் வீடு எப்படி இருந்தது..?" கலைஞர் பதிலாக "உங்க வீடு நன்றாகவே இருந்தது" என்று" ஜெகத்ரட்சகன் சொன்னது. இதுவும் கலைஞரின் சமயோசித திறனுக்கு இதுவும் ஒரு சான்று.
.......>"உலக உவமைகளில் கலைஞரின் உவமை ஒப்பிட முடியாதது. என்னுடைய சுயநலத்திலும் பொதுநலம கலந்திருக்கிறது என்பதை சொல்ல "அழுக்கை தின்று மீன் எப்படி தடாகத்தை சுத்தப் படுத்துகிறதோ" என்ற உவமை." இதை எழுதிய போது கலைஞர்களுக்கு 23-வயதுதானாம். அறிவியல் ரீதியாகவும் இதில் உண்மை உண்டு அதே போல் உவமையும் சால பொருந்துகிறது. கலைஞரின் சொல்வன்மைக்கு இதுவும் ஒரு சான்று.


Read more...

யாருக்காக ஜனநாயகம்..?

அமெரிக்காவில் தற்பொழுது ஒரு தலை போகிற பிரச்சனையாக பார்க்கப்படுகிற ஒன்று, மக்களுக்கான மருத்துவ காப்பீட்டை அரசாங்கமே நடத்த விருப்பது குறித்துதான். இதன் பலனாக குறைந்த கட்டணத்தில் மருத்துவ காப்பீட்டை மக்கள் பெற முடியும், மேலும் தற்பொழுது உள்ள தனியார் மருத்துவ காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை களைய முடியும் என்றும் அரசாங்கம் உறுதி அளிக்கிறது.
மக்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றால், குறைந்த கட்டணத்தில் கொடுப்பதென்றால் அது கடைசியில் தங்கள் தலையிலயோ அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் தலையிலயோ "கூடுதல் வரியாக" தான் விழும் என்ற அச்சத்தின் காரணமாகவும், மேலும் அரசாங்கம் பல விஷயங்களில் இப்படித்தான் கையிலெடுத்து தோல்வி அடைந்திருக்கிறது என்றும், வாதிடுகிறார்கள்.
சரி அரசாங்கம் குறைந்தவிலையில் கொடுப்பதால் அது ஏழைகளுக்கு சாதகமாத்தானே அமையும் என்று நானும் மேலெழுந்த வாரியாக நினைத்தேன், ஆனால் இது சம்மந்தமாக இன்று (08/11) நடந்த ஒரு கருத்தரங்கு ஒன்றில் மக்கள் எடுத்து வைத்த வாதங்கள் எனது எண்ணத்தை மறுபரீசிலனை செய்ய வைத்தது. அதற்கு முன் கருத்தரங்கு எப்படி நடந்தது என்பதை பார்க்கும் பொழுது சந்தேகமே இல்லாமல் ஜனநாயகம் அமெரிக்காவில் நன்கு வேரூன்றி இருக்கிறது என்பதை பறைசாற்றுவதாகவே இருந்தது. நான் பார்த்தது பென்சில்வானியா மாகாணத்தின் செனட்டர் (நம்மூர் எம்.பி) ஆர்ளேன் ஸ்பெக்டர், தனது மாகாண மக்களுக்கு அமுல் படுத்தப்போகிற இந்த திட்டத்தை பற்றிய ஒரு கலந்தாய்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் அதன் நேரடி ஒளிபரப்பை தான். ஸ்பெக்டர் அவர்களுக்கு என்பது வயது, இந்த வயதிலும் அவர் நிதானமாகவும் பொறுப்பாகவும் பதில் அளித்த விதத்தை வைத்துதான் அமெரிக்காவின் ஜனநாயகம் பற்றிய நன்மதிப்பை தோற்றுவித்தது. இதே மாதிரி நம்மூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களோ இது மாதிரி ஒரு சட்டம் அமுல் படுத்துவதற்கு முன் அவர்களது தொகுதி பொது மக்களுடன் ஒரு கலந்தாய்வு செய்தால் எப்படி இருக்கும்..?
இது நம்மை போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டை நமது ஜனங்களும் அறிந்து கொள்ள உதவுமே, மேலும் காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுறது, இல்லை ஓட்டே போடாமல் டிவி பார்த்துகிட்டு வீட்ல உட்காந்து இருக்கிறது, சட்டம் என்னவென்று புரியாமலே அதை பயன்படுத்த நினைப்பவர்களும் நிச்சயம் அவர்களது தவறை புரிந்து கொள்ள உதவும். நிச்சயம் நாம் இதை நடத்தலாம், ஏன்னா அமெரிக்காவிடமிருந்து டிஸ்கொதெஃ, பிசா, பௌலிங், அடுக்கு சினிமா கொட்டகைகள், மால் என எல்லாவற்றையும் இறக்குமதி செய்யும் நம் நாட்டில் ஏன் இந்த மாதிரி ஜனநாயகத்துக்கு தேவையான (ஆரோக்கியமான) விஷயங்களை இறக்குமதி செய்யக்கூடாது..? அல்லது முடியாது ...? ஜனநாயகம் யாருக்கானது ..மக்களுக்கானது தானே அவுங்களுக்கு தேவையானதை ஏன் அரசாங்கமே முன்னின்று "இறக்குமதி" செய்யக்கூடாது...?


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 4

சென்ற மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்-ல் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது எனக்கு பக்கத்தில் அருகில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பயணம் செய்தார். படிப்பதற்காக ஒரு வரலாற்று புத்தகத்தை நான் எடுத்தவுடன் அவர் மிகவும் பிரகாசமானார். அது என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருந்தார், நானும் பதிலுக்கு விசாரித்த பொழுதுதான் தெரிந்தது அவர் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்று. அவர் பெயர் ராம.சுப்புராம் திருமயம் தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது நம்ம நாட்டுல மட்டும் ஏன் ஒரு சாதாரண குடிமகனுக்கு நியாயமான அரசாங்க வேலைகள் எதுவும் கையூட்டு இல்லாமல் நடப்பதில்லையே என்று கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் "முதல்ல உங்கள மாதிரி கேள்வி கேக்குறவுங்க எல்லாம் அரசியலுக்கு வரணும். அரசியல்ல இருக்குறவுங்களுக்கும் குடும்பம் இருக்குதுல்ல அவுங்க வருமானத்துக்கு அரசியலை நம்பாமல் இருக்கணும், உங்களை மாதிரி ஆளுங்க வெளி நாட்டில் சம்பாதிக்கும் போதே தங்களது குடும்பத்திற்கு தேவையானவற்றை சேர்த்து விடுவீர்கள், அதனால் உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அரசியலை ஒரு தொழிலாக பார்க்காமல், சேவைக்கான ஒரு களமாக கருதி செயல்படுவீர்கள் அப்பொழுது நீங்கள் எதிர் பார்க்கிற மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறும்..." என்றார். கூடுதல் தகவலாக அவர் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சிங்கபூரில் வேலை பார்த்ததாகவும் அதனால் அவர் குடும்பம் வருமானத்திற்கு அரசியலை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார். ஒரு கணம் யோசித்து பார்த்தால் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதிலும் ஒரு குறை சொல்ல முடியும், ஏழையின் பிரச்சனைகளை அவர்களில் ஒருவராலேயே புரிந்து கொள்ள முடியும் என்றும் வாதிடலாம். அரசியலை சேவைக்குரிய தளமாக மாற்ற இன்னும் பல வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம் சொல்லப்போனால் பல தலைமுறை தங்களது வாழ்நாளை பலியிட வேண்டி வரலாம், இதற்கு பேசாமல் அரசியலை ஒரு தொழிலாகவே அங்கீகரித்து விட்டால் என்ன..? எப்படி விப்ரோ, இன்போசிஸ் போன்ற கம்பனிகள் இருக்கிறதோ அது மாதிரி தி.மு.க,அதிமுக என இரண்டு நிறுவனங்கள். ஒரு நிறுவனம் எப்படி தனது பங்குகளை வெளியிடும் முன்பு தனது நிறுவனத்தின் குறைகளையும் நிறைகளையும் வெளியிடுகிறதோ அது போல தேர்தல் என்று ஒன்று வரும் பொழுது அந்தந்த கட்சிகளின் நிறை குறைகளை வெளியிடலாம். பொதுவாக வெகு சிலரே தன் மேல் உள்ள குற்றத்தை ஒத்துக்கொள்வதில்லை, அதுபோல்தான் ஒரு நிறுவனமோ அல்லது கட்சியோ இருக்கப்போகிறது, ஒரு நிறுவனம் வெளியிடும் குறைகளை சரி பார்க்க ஒரு தணிக்கை துறை இருக்கிறதோ அது மாதிரி ஏன் தேர்தல் ஆணையமோ இல்லை வேறு ஒரு தணிக்கை துறையோ செயல்படலாம். இப்படியெல்லாம் இருந்தால்தான் கார்ப்பரேட் காலத்தில் ஜனித்த வருங்கால தலைமுறைக்கு அரசியல் (கட்சிகளின்) மீதான நம்பிக்கை இருக்கும்.



பின் குறிப்பு: ஒரு அரசியல் வாதி இப்பொழுதுள்ள வசதி காலத்தில் முடிந்த அளவு தொடர் வண்டியில் எல்லாம் பிரயாணம் செய்வது என்பது நிச்சயம் ஆச்சர்யமான ஒரு விஷயம் தான்.


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 3

ரொம்ப நாளாச்சு இந்த பகுதிக்கு வந்து ஆனால் திரும்ப வருவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது. முதல் கட்ட வாக்கு பதிவு நடந்து முடிந்து விட்டது. வழக்கம் போல் கூட்டணி தாவல்கள், கடைசி நேர உடன்பாடுகள், பேரங்கள் எல்லாம் கன ஜோராக நடைபெற்று வருகிறது. சில பத்திரிக்கைகள் இதுதான் முதல் முறை என்பது போல் எழுதி வருவது அதை விட பெரிய கொடுமை. சரி இதை தடுக்க என்னதான் வழி...? பேசாமல் அரசியல் என்பதை சேவை என்ற வளையத்திலிருந்து வெளியிலெடுத்து வியாபாரம் என்ற வட்டத்திற்குள் அடைக்க வேண்டும். தயவு செய்து கோப படாமல் சிந்தித்து பாருங்கள் இது உண்மையென புரியும். இப்பொழுது என்ன நடக்கிறது "அரசியல் சேவை" என்ற பெயரில் "அரசியல் வியாபாரம்" தானே நடக்கிறது. சரி இதை எப்படி அங்கீகரிக்கப்பட்ட வியாபாரம் ஆக்க வேண்டும் ..?
பா.மா.க என்ற கட்சி என்ன பண்ணிக் கொண்டிருக்கிறது ஒரு முறை தி.மு.க ஆதரவு அடுத்த தேர்தலுக்கு அண்ணா.தி.மு.க என்று மாறி மாறி இந்த கொள்கை அரசியல் கோட்பாட்டு அரசியல் என்பதெல்லாம் வெறும் வெட்டி பேச்சு என்பதை நிரூபித்து விட்டது இதை எந்த சட்டமாவது தடுக்க முனைந்ததா..? இல்லை மக்களான நாம்தான் அந்த கட்சியை மண்ணை கவ்வ வைத்து ஒதுக்கி விட்டோமா..? இல்லை. அதாவது மவுன புரட்சி என்பதை போல மவுன அங்கீகாரம் கொடுத்து விட்டோம் எதற்கு அரசியல் வியாபாரத்திற்கு தான். அதை பேசாமல் சொல்லிவிட்டே செய்யலாமே. உதாரணமாக பா.ம. க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் இந்த இந்த நல திட்டங்களை அமுல் படுத்துவோம் என்றும் அப்படி அமுல் படுத்தப்படும் திட்டங்களுக்கு இவ்வளவு சதவீதம் உதவி தொகையாக (கமிஷனாக ) பெற்றுக்கொள்ளப்படும். அறிமுகபடுத்தப்படும் நல திட்டங்களின் தேவைகளுக்கேற்ப நாமும் அந்த கட்சிக்கு வாக்களிக்கலாம். உதாரணமாக கூவம் சுத்தப்படுத்தப்படும் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்றும், அதன் மொத்த தொகையில் 10% தொகை பா.ம.க கட்சிக்கு வந்து சேரும் என்றும் கொள்ளலாம். சரி அப்படி வந்து சேரும் தொகை எப்படி கண்காணிக்க படும் என்று கேட்டால், கட்சிகளுக்கென்று துவக்கப் படும் அந்த வங்கி கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் அது தினசரிகள் மூலமாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ மக்களுக்கு தெரிவிக்கப்படும். கேட்பதற்கு சிரிப்பா இருக்கா..? ஆனால் இது நடக்காது என்றோ முடியாது என்றோ எனக்கு தோன்றவில்லை. தற்பொழுது நடைமுறையில் உள்ள தகவலறியும் சட்டம் போலவும், வியாபாரம் எனப்படும் பொழுது பங்கு சந்தையை உள்ளே இழுக்க முடியாமல் இருக்க முடியவில்லை, எப்படி பொது இடத்தில் பங்கு சந்தையின் விவரங்கள் வெளியிடப் படுகிறதோ அது போல கட்சியின் வங்கி கணக்கை ஏன் காட்டக்கூடாது..? அதே போல் கூவம் சுத்தப்படுத்தும் திட்டத்தை மூன்று மாதத்தில் முடிக்காமல் போவதற்கு என்னென்ன தடை கற்கள் இருக்கிறதென்பதை, ஒரு பங்கை வெளியிடும் அன்று அந்த பங்கை வெளியிடும் நிறுவனம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதால் உள்ள எதிர்மறையான விஷயங்களையும் பட்டியலிட்டு சொல்லுவதைப் போல் ஏன் சொல்ல முடியாது. அது மட்டுமில்லாமல் ஒரு திறந்த நிர்வாகம் நடை பெறுவது அந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் என்றே தோன்றுகிறது. இது பா.ம.க வுக்கு மட்டுமல்ல காங்கிரஸ்,பா.ஜ.க என அனைவருக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து இது அடுத்த தலை முறைக்கான அரசியலுக்கு ஒரு ஆதாரமாக இல்லாவிட்டாலும் ஆரம்பமாகவாது இருக்கும் என்று நம்புகிறேன்.


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 2

அடுத்த தலைமுறைக்கான அரசியலில் தமிழ் நாட்டில் நடக்கும் விஷயங்களை விவாதித்த இந்த வேளையிலேயே அமெரிக்காவில் நடந்த சமீபத்திய தேர்தலில் பாரக் ஒபாமாவிற்கு கிடைத்த வெற்றி எண்ணங்களின் பயணத் திசை சரி என்றே உணர்த்துகிறது. நாம் வசிக்கும் இந்த 2008 மாவது ஆண்டில் நிறவெறி என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக யாரவது கருதுவீர்களேயானால் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் அதுதான் உண்மை. FOX NEWS என்னும் செய்தி தொலைக்காட்சியில் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான மாலை பொழுதில் ஒளிபரப்பான அனைத்து விவாத நிகழ்ச்சிகளிலும் பட்டவர்த்தனமாக தெரிந்ததை பார்த்தவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். ஒபாமாவிற்கு வெற்றி என்ற செய்தி கிடைக்க கிடைக்க FOX NEWS தன்னுடைய விவாதங்களை இப்படியாக முன் வைத்தது, அதாவது O Rellly Factor என்னும் நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தும் O'Rellly "நான் பார்த்த ஒரு தொலைக்காட்சியில் ஒரு கறுப்பர் இனத்தை சேர்ந்த நிருபர் ஒபாமா வெற்றியை கண்ணீருடன் விவரித்ததை பார்த்து அதிர்ந்து போனேன் என்ன கொடுமை அது, ஒரு நிருபர் எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் ? இது அவர் இந்த தொழிலுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இதையெல்லாம் சொன்னால் ஏதோ வயசானவன் புலம்புகிறான் என்று சொல்வார்கள் மேலும் இதை எல்லாம் பார்ப்பதற்கு பேசாமல் செத்து விடலாம்னு தோன்றுகிறது " . குறித்து கொள்ளுங்கள் இதை சொன்ன அவர் ஒரு வெள்ளைக்காரர். அதே FOX NEWS தொலைக்காட்சியில் அடுத்ததாய் வந்த மற்றுமொரு நிகழ்ச்சியான Hannity's America யில் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் சொல்கிறார் "நான் குடியரசு கட்சிக்குத்தான் வாக்களித்தேன், அதனால் நான் இப்பொழுது வருத்தப்படவும் இல்லை." இப்படி சொன்னவரும் ஒரு வெள்ளைக்காரர் தான். ஓபாமா வெற்றி பெற்றதற்காக அழுத ஓர் கறுப்பின நிருபருக்காக "செத்து விடலாம்னு" நினைத்த O'Rellly இந்த நிகழ்வு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை..? சரி அவர் மறுநாள் நிகழ்ச்சியிலாவது சொல்லுவார் என்று எதிர் பார்த்து ஏமாந்துதான் மிச்சம். சரி இந்த நிகழ்வை உங்களால் ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணத் தோன்றுகிறதா..? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னால், அந்த நியதி ஏன் பல நூறு ஆண்டுகளாக அடிமைகளாகவே வளர்க்கப்பட்டு இன்று தேசத்தின் ஏன் இந்த உலகத்தின் உயர்ந்த பதவியை அடைந்த தன் இனத்தை சேர்ந்தவருக்காக கண்ணீர் விட்டதை ஏன் "செத்து விடலாம்னு" தோணுகிற அளவிற்கு எடுத்துக்கொண்ட நண்பர் O'Rellly-க்கு சொல்ல கூடாது ? அமெரிக்காவில் இன்றும் கறுப்பின மக்கள் பல விதங்களிலும் ஒதுக்கபடுகிறார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே சாட்சி. சரி விஷயத்திற்கு வருவோம், ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை பல விதங்களிலும் முன்னேற்றுவதே ஒரு நல்ல அரசியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டிற்கு அழகு. இலங்கை தமிழருக்கான உண்ணா நோன்பில் பேசிய நடிகர் கமல் சொன்னதை போல "உரிமைகள் மறுக்க படும் வேளையில் தீவிரவாதம் பிறக்கும்". அது மனித இனத்திற்கு நல்லதல்ல.


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 1

இந்த கட்சி ஊழல் கட்சி அதனால் அந்த கட்சிக்கு ஒட்டு போடலாம், அப்புறம் அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு அந்த கட்சியே மேல் என்ற எண்ணம் தோன்றி அந்த கட்சிக்கே மீண்டும் வாக்களிப்பது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் வாக்காளர் எண்ண ஓட்டம் இப்படியாகத்தான் இருக்கிறது.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கைகளை முன்னிறுத்தியே தேர்தலில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற வேண்டும். ஆனால் இப்பொழுது அதுவா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..? சரி அப்படியே கொள்கைகளை மட்டுமே வைத்து ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியுமா..? அவ்வளவு ஏன் கொள்கைகளை மட்டுமே மூலதனமாக கொண்ட கட்சிகள் மக்கள் மத்தியில் எப்படி செல்வாக்கு பெற்றிருக்கிறது ..? பத்தோடு பதினொன்றாக தானே இருக்க முடிகிறது. சரி அப்படி பத்தோடு பதினொன்றாக இருந்தால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ..? அவர்கள் பொழைப்பு ஓட்ட வேண்டாமா..? இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டின் தற்பொழுதைய அரசியல் நிலவரத்தோடு ஒப்பிட்டு சொன்னால் நமக்கு தெளிவுற விளங்கும்.
திராவிடர் கழகம் என்றொரு கட்சி அது ஆரம்பித்த பொழுது இந்த கட்சி தேர்தலில் நின்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாது என்று சொல்லியது, அந்த கட்சி கொண்ட கொள்கைக்காக இன்று வரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாமல் தனியாகத்தான் நிற்கிறது ஆனால் ஒரு துணையுடன், அதாவது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் காலைப் பற்றி பொழப்பு நடத்தும் அவலம் தான் இருக்கும்.
இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சி ஆரம்பித்து, தாய் கட்சியின் கொள்கைக்கு எதிராக அதாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே முழு முயற்சியாக கொண்டு அந்த இலக்கை அடைந்தது. ஆனால் அது பிரபலமாவதற்கு காரணமான காங்கிரஸ் எதிர்ப்பு, தனி தமிழ் நாடு கோஷம் போன்றவை என்ன ஆனது ...? கொள்கைகளை காற்றில் விட்டால்தான் ஆட்சி அதிகாரத்தை கை பற்ற முடியும் என்பதற்கு இந்த கட்சியே மிகச்சிறந்த சான்று.
சரி இந்த கழக அரசியல் தான் இப்படி என்றால் தேசிய கட்சி காங்கிரஸ் என்ன கொள்கையோடவா வாழ்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க என்றால் அடுத்த தேர்தலில் தி.மு.க இதை ஒரு சூத்திரக் (formula) கணக்காகவே கொண்டுள்ளது . இங்கேயும் ஒரு கொள்கை கொலை தான் நடக்கிறது.
பா.ஜ.க கேட்கவே வேண்டாம் சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டே கொல்லைப் புறம் அமெரிக்காவிற்கு நேச கரம் நீட்டும் சாதுர்யம். என்று இங்கேயும் ஒரு வித கொள்கை கொலை தான் நடக்கிறது .
ம.தி.மு.க மற்றும் பா.ம.க பற்றி கேட்கவே வேண்டாம். ம.தி.மு.க இந்த பாரளுமன்ற தேர்தலில் எங்களுக்கு பதவி வேண்டாம் என்று சொல்லி விட்டு அதே மாதிரி பதவியேற்கவில்லை அப்பாடா ஒரு கொள்கை சிங்கம் கிடைச்கிட்டாருடா அப்படின்னு நினைத்த தமிழக மக்களுக்கு கொடுத்தார்கள் இப்படி, விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்துக் கொண்டு அதை அதி தீவிரமாக எதிர்க்கிற அ.தி. மு. க -வுடன் கூட்டணி வைத்து கொண்டது கொள்கை சிங்கம், எதற்காக ..? கொண்ட கொள்கைக்காகவா ..?
பா.ம.க இது ஒரு குறிப்பிட்ட சாதிக்காக ஆரம்பித்த கட்சியாக இருந்தாலும் சற்றே கொள்கை சிகரமாக தன்னை காட்டிக்கொண்டது இந்த கட்சி. தீவிர மது ஒழிப்பு பிரச்சாரம், தனது தொலைக்காட்சியில் திரை படங்கள் சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளை ஒழித்து அதனால் வருமானம் இல்லையென்ற போதும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத கட்சி போல் காண்பித்தாலும், சறுக்கியது தன் மகனுக்கு மத்திய அமைச்சரவை பதவியை கொல்லைப் புற வழியாக வாங்கியது மட்டுமல்ல எந்த காலத்திலும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் கட்சியில் எந்த பதவிக்கும் வர மாட்டார்கள் என்று மக்கள் மத்தியில் அறிவித்து அதையும் கொல்லைப் புறத்திலே விட்டு வந்த கொள்கை குன்று , ஆமாம் சிகரம் தேய்ந்து குன்று ஆகியுள்ளது ...


Read more...

சிரிக்கத் தெரிந்த மனமே...

"தமிழகத்தை இருள் சூழ்ந்துள்ளதால் வருகிற சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் அவரவர் வீட்டில் விளக்கேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் .." - சொன்னவர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா
இப்படியே பேசிக்கிட்டே இருங்க நேத்து கட்சி ஆரம்பித்த சரத்குமார், விஜயகாந்த் எல்லாம் கருணாநிதியை சமாளிக்க அவுங்களா நிறைய தயார் பண்ணி பேசிக்கிட்டு இருக்காங்க நீங்க ஜோசியரைப் பார்த்து உங்க "குடும்பத்து"க்கு எது நல்லதோ அதை செய்யச் சொல்லி தொண்டர்களை கேட்டுக்குங்க. கட்சி விளங்கிடும். போங்க போய் வேற ஏதாவது நல்லதா எழுதி கொடுக்க சொல்லி அதை வெளியிடுங்க, எங்களுக்கெல்லாம் வேற வேலை இருக்குது....


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP