Showing posts with label காமெடி பீசுகள். Show all posts
Showing posts with label காமெடி பீசுகள். Show all posts

கமெண்ட் கற்கண்டுகள் -- 5


எந்திரனுக்கு பிறகு நடிப்புக்கு ரஜினி குட்-பை
>> ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க. அடுத்த படத்துக்கு கதை தயார் ஆகிற வரையிலும் இதுதான் கதை.

வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது.
>>எப்படி நாங்களெல்லாம் ஆடி காத்துலயே அவுள் சாபிட்ரவங்க. எங்க கிட்டயேவா ..?

சி.பி.ஐ ரெய்ட் வழக்கமான ஒன்றுதான். (மத்திய அமைச்சர் ஆ.ராசா)
>>காங்கிரசுக்கு எங்க மீது கோபம் வரும் பொழுது அவுங்க எங்க ஆபிஸ்ல ரெய்ட் விடுவதும். எங்களுக்கு அவுங்க மீது கோபம் வர்றப்ப தமிழ்நாட்டுல போராட்டம் பண்ணுவதும் வழக்கமான ஒண்ணுதான். இதை நாங்க ஒரு விளையாட்டவே வச்சிருக்கோம். மத்தபடி ஒண்ணுமில்லை.

பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கப் போகிறோம் என்று அழைப்பு இல்லாததால் தான் அந்தக் குழுவில் இடம் பெறவில்லை. (திருமாவளவன்)
>> ஐ ஆச தோச அப்பள வடை. நீங்க சந்திப்பின் போது பிரதமரையும் சோனியாவையும் ஆதரிப்பீங்க. வெளில வந்து அவுங்க செய்யுறது எல்லாம் சரியில்லைனு சொல்லிவீங்க. இது கூட எங்களுக்கு தெரியாதா..?

என் மனைவி தமிழச்சி, எனவே நான் பாதி தமிழன், நான் தமிழர்களுக்கு துரோகம் செய்வேனா..? (மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ்)
>>பாஸ் நீங்க ரொம்ப லேட். இங்க முழு தமிழர்களே தமிழர்களுக்கு துரோகம் செய்வதை மக்கள் உணர ஆராம்பிச்சுட்டாங்க. இப்ப வந்து...போயி பிள்ளைங்களை படிக்கவைங்க.

நம்ப தமிழர்களுக்கு ரசனை குறைவு. (தங்கர்பச்சான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில்).
>>கரீட்டா சொன்னீங்க. அதுல (தமிழர்) நீங்களும் ஒருத்தருங்கிரத மறந்துராதீங்க.

முல்லை பெரியாறு அணை விஷயத்தில் மத்திய அரசு கருணாநிதியை ஏமாற்றி விட்டது. எனவே மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும். (ஜெயலலிதா)
>>ஹி ஹி ஸ்கூல் போற குழந்தைக்கு கூட தெரியும் நீங்க ஏன் இதை சொல்றீங்கன்னு. ஆமாம் உங்களுக்கு இவ்வளவு மொக்கையா அறிக்கை எழுதி தரவங்க யாருங்க...?




    


Read more...

என்ன பண்றாங்க..? எப்படி சம்பாதிக்கிறாங்க..?


 இந்த மாசம் வீட்டு வாடகைக்கு என்ன பண்றது அப்படின்னு நினைக்கிற குடும்ப தலைவன் இருக்கிறான். இந்த மாசம் காலேஜ் பீஸ் எப்படி கட்டப்போறோம்னு நினைக்கிற மாணவ மாணவிகள் இருக்கிறார்கள். வாழ்நாள்ல ஒரே ஒரு சொந்த வீடு கட்டிபுட மாட்டோமா அப்படின்னு நினைக்கிற சாதரண அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இது மாதிரி எல்லாம் கவலை எதுவும் இல்லாமல் அதே சமயம் புகழுக்கும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் வாழ்கையை ஒட்டி கொண்டிருக்கும் ஆசாமிகளை பற்றி நாம் என்றாவது யோசித்திருக்கோமா..? அப்படி யோசித்த போது சில பிரபலங்கள் நம் எண்ணங்களில் தோன்றினர். தயவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை நாம் நக்கலடிப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பணம்
 இப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுகிட்டா நம்ம நடுத்தர மக்களும் அதை பாலோ பண்ண வசதியா இருக்கும்ல. அதுக்காகத்தான்,

அன்றாடம்  நீங்கள் காலையில எழுந்திருச்சு நியூஸ் பேப்பர்-ஐ புரட்டினால் உங்கள் கண்ணில் அடிக்கடி "சுப்பிரமணிய சாமி" அப்படிங்கிற பேரு அடிக்கடி தோன்றும். இல்லை இல்லை நான் அந்த பழனி மலை "சுப்பிரமணி சாமியை" சொல்லல. அரசியல்வாதி சுப்பிரமணியசாமியை தான் சொல்லுறேன். திடீர்ன்னு ஒரு அரசியல் கட்சியை எதிர்க்கிறார். திடீர்ன்னு அவுங்களையே ஆதரிக்கிறார்.  ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுறார். கட்சி ஒன்றையும் நடத்துறார், ஆனா அப்படி இருந்தும் பெரிய வருமானம் இருக்கிறமாதிரி தெரியலை. இவரு வெளிநாட்டுல எங்கேயோ பேராசிரியரா வேலை பார்ப்பதாக சொன்னார்கள், இவருக்கு எப்படியும் ஒரு அறுபது வயதாவது இருக்கும் அப்படி பார்த்தா இவர் இந்நேரம் அந்த பேராசிரியர் தொழிலிருந்து ஓய்வு பெற்று இருக்க வேண்டும். அப்படி பார்த்தாலும் பென்ஷன் வருமே..? அது போதுமா ஒரு கட்சி நடத்த, அவ்வப்பொழுது அறிக்கை விட..? எல்லா தேர்கல்களிலும் போட்டியிட இந்த வருமானம் போதுமா..? வேற என்னதான் பண்ணுறார்  தொழிலுக்கு..? 

இது மட்டுமா திடீர் திடீர்ன்னு வெளிநாட்டு பயணம் போறார். அங்குள்ள அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்தேன்னு சொல்லுறார். இவரு என்னதான் பண்றார்...?  ஒரே குழப்பமா இருக்கு, இப்படி குறைஞ்ச வருமானத்துல ஒரு அரசியல் வாதியாவோ அல்லது பிரபலமாவோ இருக்க முடியும்னா அப்புறம் ஏன் மக்கள் மேலே சொன்ன சின்ன சின்ன கனவுகளுக்காக ஏங்கி கிடக்கனும்.?  உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் (சிரிக்க மட்டும்) -- 4

அரசுப் பணி அதிகமாக அழுத்தும் நேரங்களில், 'கலைஞர்' டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியைப் பார்த்து தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வாராம் முதல்வர் கருணாநிதி. குறிப்பாக நடுவர்கள், நடனமாடுபவர்கள் அணியும் காஸ்ட்யூம்கள் பற்றியும் இடையிடையே ரசனையோடு யோசனைகள் தருவாராம். 'கலைஞர்' என்றால் சும்மாவா!
>> இந்த லட்சணத்துல  கட்சிகள் எல்லாம் டி.வி ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆமாம் நாட்டுல மும்மாரி மழை பொழிஞ்சு மக்கள் எல்லாம் சந்தோசமா இருக்காங்க அப்புறம் மானாட மயிலாட பார்த்தால் என்ன இல்லை மானே ஆடி பார்த்தால் என்ன ..?


செய்தி-2
அந்த ஆவேசக் கூட்டத்துக்கு எத்தனையோ பேர் வற்புறுத்தி அழைத்தும், 'தல' 'தள' நடிகர்கள் செல்லவில்லை. 'எங்களை இந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டு வந்ததே மீடியாக்கள்தான். அவங்களுக்கு எதிரா வேகப்பட்டு பேசுகிற இடத்தில் நாங்கள் இருப்பது வீண் சங்கடம்' என்று சொல்லிவிட்டார்களாம்.
>> இதுக்கு பேசாம அஜீத், விஜய் அப்படின்னு போட வேண்டியது தானே. பொது ஜனங்களாகிய எங்களை நீங்க குறைச்சு எடை போட்டுட்டிங்கன்னு நினைக்கிறோம். இன்னும் கஷ்டமா ஏதாவது சொல்லுங்க கண்டுபுடிச்சு காட்டுறோம். எங்க அறிவை வளரவிட மாட்டிங்க போல. 
செய்தி-3
பேர் சொல்ல மாட்டேன்... ஊர் மட்டும் சொல்வேன். குறித்துக் கொள்ளும். தமிழகத்தின் முக்கிய வாரிசுப் பிரமுகர் ஒருவர் அண்மைக்காலமாக வெளிநாட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் இங்கிலாந்து டாக்டர் ஒருவர் அவசரமாகக் கடந்த வாரம் சென்னைக்கு வந்தார். நடுநிசியில் வந்த அவரை வரவேற்க அந்த வாரிசு தன்னந்தனியாக ஏர்போர்ட்டுக்குப் போயிருக்கிறார். டாக்டரை தனது காரில் ஏற்றிக்கொண்டு பிரபலமான மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து அதிகாலையில் தன்னுடைய வீட்டுக்கும் டாக்டரை கூட்டிப் போயிருக்கிறார். கொஞ்சநாளைக்கு இங்கிலாந்து டாக்டர் இங்கேயே தங்கியிருந்து, சில மருத்துவ அட்வைஸ்கள் வழங்குவாராம்! வாரிசின் பயணங்களில் அந்த டாக்டரையும் பார்க்கலாம் போலிருக்கு.
>> போனதுக்கு போட்ட கமெண்டை பாருங்க. ஸ்டாலினை தானே சொல்றீங்க. திருந்துங்க. 

அழகிரி தனது பாதங்களை டெல்லியில் பதித்துவிட்டார். இனி "அட்டாக் பாண்டிகளும்'' "பாம் ரங்கநாதன்களும்'' அழகிரியின் அமைச்சர் மாளிகையிலிருந்தே தங்களுடைய நடவடிக்கைகளை துவங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

(ஜெயலலிதா அறிக்கை)

>> அவுரு டெல்லில பாதம் பதிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு இப்ப வந்து.., சரி உங்க காலண்டர்ல இப்ப மாசம் என்ன 2009 மே மாசமா..?
 எனக்கு புடவையே கட்டத் தெரியாதா என சிலர் கேட்பதாக சொல்கிறார்கள். எனக்கு நல்லா புடைவை கட்டத் தெரியும். அப்படி கட்டினா ரொம்ப ரொம்ப கவர்ச்சியா தெரிவேன். அதைப் பார்த்து 'மச்சான்ஸ்' எல்லாம் கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க கெட்டுப்போகாம தடுக்கத்தான் நான் புடவை கட்டறதில்லை.

(சொன்னவர் நடிகை நமீதா)
  >> இந்த மாதிரியான சமூக அக்கறை கொண்டவங்கலையா இந்த பத்திரிக்கை உலகம் இப்படியெல்லாம் பேசுது .? என்ன கொடுமை இது...?


Read more...

படிச்சு கிழிச்சது

 ஒரு அதிகாரியின் அறையில் ஆபாச பட சி.டி. கேசட்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டது. சி.டி.களை கைதிகளுக்கு போட்டு காண்பிப்பதற்காக 4 கலர் டி.வி செட்டுகள் கைதிகளின் அறைகளின் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. ஆபாச படம் பார்ப்பதற்கு கைதிகளிடம் தனி கட்டணம் வசூலிக்கப்படுமாம். சோதனை நடந்த அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. சிறை டாக்டர் கூட பீடி, சிகரெட்டுகள் விற்பார் போலும். அவரிடமும் அவை கைப்பற்றப்பட்டன.

>> நாசமா போச்சு. அவுங்க (நிஜ)   புழல் சிறையில் இருக்குறாங்களா இல்லை "நிழல்" சிறையில் இருக்குறாங்களா..?    
 
முன்னாள் அமைச்சர் கக்கன் விட்டு சென்ற பணிகளை நான் தொடருவேன் (அழகிரி)
>>நீங்க வேற அந்த ஆளு பேரை கேட்டுட்டு நம்ம கட்சியை சேர்ந்தவர்ன்னு நினைச்சீங்களா அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருங்க.

சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களை வாங்குவதற்காக, வி.ஏ.ஓ., லட்சுமி நரசிம்மன் என்பவரை அணுகியுள்ளார். சிட்டா வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என லட்சுமி நசிம்மன் வற்புறுத்தினார். தன்னால் முதற்கட்டமாக 10 ஆயிரம் மட்டுமே தரஇயலும் என கூறிய பழனிச்சாமி, அதை பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து தருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்த பழனிச்சாமி, அவர்களின் ஆலோசனையின் படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லட்சுமி நரசிம்மனிடம் அளித்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக லட்சுமி நரசிம்மனை கைது செய்தனர்.
>>அப்படி போடுங்க, போயும் போயும் 50000 தான் லஞ்சமா கேட்கனுமா இந்த ஆளை புடிச்சு உள்ளர போட்டது சரிதாங்க. இந்தியாவின் பொருளாதாரமே தெரியாம இருக்காரே..?

நலிந்த சினிமாவை தலைநிமிர செய்த நீங்கள். உங்களுக்கு பட்டம் கொடுப்பது தவறா? அப்படியென்றால் அந்த தவறை நாங்கள் செய்து கொண்டே இருப்போம்.

எங்கள் கஷ்டங்களை தெரிந்தவர்கள் நீங்கள். இப்போது கூட உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். சினிமா தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நீங்கள் இடம் ஒதுக்கி தர வேண்டும். எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும் (வி.சி. குகநாதன்)
 .>>  நீங்க கடைசியா சொன்னது ரொம்ப கரீட். இந்த மாதிரி கோரிக்கை வைக்கிறவுங்க கேவலம் ஒரு விருது கூட கொடுக்கலைன்னா எப்படி ...? அதுக்கு ஏன் மத்தவங்களை குறை சொல்றீங்க..?

ஒரு நாள் என்னை வீட்டுக்கு அழைக்கிறீர்கள். நீ பத்மஸ்ரீ என்றீர்கள். சரி ஐயா என்றேன். பிறகு மீண்டும் அழைக்கிறீர்கள். நீ கலைஞானி என்கிறீர்கள். இப்படி படிப்படியாக எனக்கு என் உழைப்புக்கு மார்க் போடும் வாத்தியாராக இருந்து இருக்கிறீர்கள். (கமல்ஹாசன்)
>> ஓஹோ இப்படித்தான் பத்மஸ்ரீ விருது கொடுக்குறாங்களா..? புரிஞ்சு போச்சு.
 
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் கழகத்தின் 38ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். (ஜெயலலிதா)
>>தலைமை கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்கள் அப்படின்னு சொல்லி இருக்கிங்களே..? லண்டன்,நியூயார்க்,ரியோடி ஜெனிரோ இந்த இடங்கள் தானே. ஏன்னா எத்தனை நாளு தான் இந்த சென்னை,புது டெல்லி அப்படின்னு குண்டு சட்டிக்குள்ளே குதிரையை ஓட்டுறது.?


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் -- 3 (சிரிக்க மட்டும்)

செய்தி: நயன்தாரா பிரபுதேவா விரைவில் திருமணம் ..?
கமெண்ட்: பிரபுதேவா உன் பையன் இறந்து ஒரு வருடம் கூட ஆகலை. அதற்குள் உனக்கு இன்னொருத்தி கேக்குதா. ஒழுங்காக பொண்டாடியுடன் குடும்பம் நடத்து. இல்லையென்றால் அந்த அல்லா உன்னை மன்னிக்க மாட்டார்.
(இந்த கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட்)
இதுல அல்லா என்கிருந்துரா வெந்தார்.?....சம்பந்தமில்லாம அந்த ஆளை இழுக்கிறே.

செய்தி:குத்து பாடல்களை விட, நல்ல பாடல்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசை. குத்து பாட்டும் தேவைதான். நான் கூட, ''கட்டிப்புடி...கட்டிப்புடிடா'' பாடலை எழுதியிருக்கிறேன். பத்து பாடல்களில், ஒரு பாட்டு குத்து பாட்டாக இருந்தால், பரவாயில்லை. பத்துமே குத்து பாட்டாக இருந்தால், அவை வெத்துப்பாட்டாகி விடும் என்றார் வைரமுத்து.

கமெண்ட்:ஆம்மாங்கோ.. நீங்க சொல்ற மாதிரி எல்லாரும் குத்து பாட்டு எழுதறத விட்டுட்டு முதல்வருக்கு வாழ்த்து பா எழுதுங்கோ. கல்லா ஆவது கட்டலாம்.

செய்தி: சரத்குமார் நடித்து வெளிவரவுள்ள "ஜக்குபாய்" படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில்.
கமெண்ட்:இதுக்கு முன்னால ஏதோ ஒரு வருசத்தையே தலைப்பா வச்சி ஒரு படம் எடுத்தார்....ஆங்... 1977 தானே அது. அது release ஆச்சா இல்லையா?
(இதற்கு பதில் கமெண்ட்)
ஆச்சு ஆனா ஆகல...!

செய்தி:தமிழக மாவட்டங்களில் உள்ள வாழ்நிலை நிலவரம் மற்றும் வர்த்தகம், தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கமெண்ட்:உடனே டிவி நிறுவனங்களிடையே ஒரு ஆய்வு நடத்தி இந்த பிரபஞ்சத்திலேயே சிறந்த டிவி நிறுவனமாக கலைஞர் டிவி-க்கு முதல் ஸ்தானமும் அப்படியே கையோடு ஜெயா டிவிக்கு கடைசி ஸ்தானமும் கொடுத்து ஒரு அறிக்கை விட்டு விடுங்கள்.அய்யா இன்கிலாந்துகாரர்களே முட்டாள் நம்பர்-1 என்ற பட்டத்தையும் தமிழனுக்கு தந்துவிடுங்கள்.எனென்றால் இங்கேதான் முதலமைச்சர்கல் கூட டிவி ஸ்தாபனம் நடத்தி மக்களுக்கு கூத்து, தமாஷ் எல்லாம் காட்டிகொண்டிருக்கிறார்கள்.


Read more...

கொஞ்சம் இளைப்பாற...(சிரிக்க மட்டும்)

இதை பார்த்தும் சிரிப்பு வரலையா...? நீங்க நிச்சயம் ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரை பார்ப்பது நல்லது.






Read more...

கமெண்ட் கற்கண்டுகள் -- 2 (கண்டிப்பா சிரிக்க மட்டும்)

செய்தி: மார்ட்டினா நவரத்தினலோவா தனது தோழியை மணக்கிறார்.
கமெண்ட்: டேய் என்னங்கடா ... உங்க பிரச்சனை .... சும்மா இருக்க மாட்டீங்களாடா ....
செய்தி: சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் "சிங்கம்".
கமெண்ட்:Ivan Singama... ஏன்டா ungaluku எல்லாம் arive illaya. Allaku osarathula irukira ivana singamnu solringa.. Actor Director T.P. Gajendran ivana vida osarama iruparu. Ivan singamna, avaru என்ன ஒட்டகமா?
செய்தி:தனுஷ் நடிக்கும் புதியபடம் "மாப்பிள்ளை" இந்த படம் ரஜினியின் "மாப்பிள்ளை" படத்தின் ரீமேக்.
கமெண்ட்:ப்ளீஸ் நடிக்காதே. உன்னக்கு மணி வேண்டுமானால் பொய் பிச்சை எடு. தாங்க முடியலே உன் படமெல்லாம். யோசிச்சு பாரு. தமிழ் நாட்டு மக்கள் நலன் கருதி நடிப்பை விட்டுவிடு. டி கடை வைத்து பிழைத்து கொள்.
செய்தி: பாரதிராஜா மகன் மனோஜ் புதிதாக படம் இயக்க இருக்கிறார்.
கமெண்ட்:திரைக்கு பின்னாடி என்ன வேணா செய்துக்கோ. அப்பா மாதிரி கேமரா முன்னாடி வந்து எங்கள பயம் காட்டாத. சொல்ல முடியாது, எவனாவது கிறுக்கன் உனக்கும் இயக்குனர் சிகரம் II பட்டம் கொடுத்தாலும் கொடுப்பான். கிறுக்கு தமிழன எதுவும் சொல்ல முடியாது. அது சரி, உங்க அப்பாக்கு புலி பென்ஷன் நின்னு போச்சா? பாவம்.
செய்தி:அடுத்த படத்தில் இயக்கம் மட்டுமே நடிப்பு இல்லை -- சேரன் முடிவு.
கமெண்ட்:பதிவு செய்தவர்: பொறுமை
நடிச்சி உயிரை வாங்குவதை விட நடிக்காமலே மற்றவரை வாழ வைப்பது மேல் ....! மவனே ஏன் ஏன் ஏன் ...இப்படி ?


Read more...

புல் லாட்ஜ் போட்டு யோசிப்பவர்கள்

திருத்தணி முருகன் கோவில் உண்டியலுக்குள் ஈரத் துண்டை உள்ளே விட்டு அதில் ஒட்டிவரும் நோட்டுக்களை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 5 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.ஆந்திர மாநிலம் சந்திரகிரி பெத்தபேட், பிடிஐ காலனியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் ஜெமினிகணேசன் (32). இவர் பல நாட்களாக திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் நூதனமான முறையில் பணத்தை திருடி வந்துள்ளார். அவர் கோயிலில் யாரும் இல்லாத சமயத்தில் உண்டியலுக்குள் ஈரத்துண்டை போடுவார். பின்னர் அதில் ஒட்டி வரும் பணத்தை எடுத்து கொண்டு போய்விடுவார். தினமும் இப்படி பல முறை செய்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார்.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப கடந்த 17.2.2009ம் அன்று அவர் வழக்கம் போல் துண்டை நனைத்து பணத்தை எடுத்து கொண்டிருந்த போது கோவில் இணை ஆணையராக இருந்த தனபாலிடம் கையும், களவுமாக மாட்டினார்.இதையடுத்து அவர் திருத்தணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிவு செய்து ஜெமினி கணேசனை செய்து சிறையில் அடைத்தார்.தற்போது வழக்கு திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முத்துக்குமாரி முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி ஜெமினி கணேசனுக்கு 5 மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூம் போட்டு இல்லை புல் லாட்ஜ் போட்டு யோசிப்பாங்க போல. குற்றத்தில் ஈடு பட்ட அவரது பெயரை பாருங்கள்..ஒரே சிப்பு தான் (வடிவேலு பாணியில்) வருது போங்க.


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் (சிரிப்பதற்கு மட்டும்)

இன்டர்நெட்டில் ஒரு விஷயம் படிக்கும் போது மறக்காமல் அதன் கீழே வரும் வாசகர் கமெண்ட் பகுதியையும் படிக்க தவறுவதில்லை, உண்மைலேயே அவ்வளவு நகைச்சுவை உணர்வு நம் மக்களுக்கு. தயவு செய்து இதை அந்த கண்ணோட்டத்தில் மட்டும் பாருங்கள். உங்களுக்கும் அது கற்கண்டாய் இனிக்கும். (உஸ்.. அப்பா இந்த தலைப்புக்கான காரணத்தை சொல்லும்போதே கண்ணைக்கட்டுதே...)
செய்தி: "தைரியமிருந்தால் மதுரையில் வந்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும் இந்த விஜயகாந்த் " என்று மு.க. அழகிரி பேச்சு.
கமெண்ட்: அடங்கோப்பன் மவனே .. இதே தொகுதியில உன் அப்பன் கூட உன்ன எதிர்த்து ஜெயிக்கிறது கஷ்டம்னு எங்களுக்கு தெரியும் ... ஏன் நீ போயி ஆண்டிப்பட்டி ல நின்னு ஜெயிக்க வேண்டியது தானே ... உனக்கே ஓவரா இல்ல ... மக்களை மெரட்டி வோட்டு வாங்குற நாய்க்கு நக்கல பாரு .. ஏகத்த் தளத்த பாரு ... நாயே நாயே ..
செய்தி: மோகன்லால் ஆதவன் பட ஒலித்தட்டை வெளியிடுகிறார்.
கமெண்ட்: ஒரு சாதாரண கிளெர்க் வேலைக்கு ஆயிரம் தகுதி கேக்குறாங்க... ஹீரோ என்றால் ஆஜானுபாகுவா இருக்கணும்.. ஆனா அஞ்சடி இருக்கிற இவனை எல்லாம் ஹீரோ ஆக்கி நம்மளை கொன்னு எடுக்க கிளம்பி இருக்காங்க... வேற வழி.... பார்த்து தலையில் அடிச்சுகிட வேண்டியது தான்.
செய்தி: அழகிரியை வாழ்த்தி பேசினார் வைரமுத்து.
கமெண்ட்:அப்பாவை ஜால்ரா அடிச்சி ஒரு வழி ஆகியாச்சு. இப்ப புள்ளைங்க காலம். அடிடா ராசா அடி. எத்தனை கோடிகளுக்கு வழியோ.. அதெல்லாம் இருக்கட்டும்... உங்க வீடு அம்மணி எழுதி உங்க பேர்ல வெளியிடதல்லாம் சொல்லவே இல்ல!
செய்தி:நடிகை ஸ்ரீதேவிகாவுக்கும் மும்பையைச் சேர்ந்த பைலட்டான ராமச்சந்திரனுக்கும் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
கமெண்ட்:போன வேகத்தில் காவ்யா மாதவன் திரும்பி வந்ததுபோல் நீயும் திரும்பாமல் கை பிடித்த கணவனோடு கட்டையில் போகும்வரை சேர்ந்து வாழ்வதே சிறந்தது வாழ்த்துகள்! (நம்ம கமெண்ட்: ராசா இது வாழ்த்தா இல்லை சாபமா..)
செய்தி: கடலில் விழுந்த முமைத் கான் நீச்சலடித்து தப்பினார்!
கமெண்ட்: எப்பா! நல்ல வேலை நீச்சல் தெரிந்ததால் நீந்தி படகில் வந்து எங்கள் வயதில் பாலை வார்த்தார்.


Read more...

வசனங்களில் வாழ்க்கை ....

சில வசனங்கள் திரையிலிருந்து நீண்டு நம் வாழ்க்கையையும் தொட்டு தொடர்ந்து வருவதுண்டு. அதிலும் குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களில் நம்மை போன்ற நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு வடிகால்கள் உண்டு. நாம் சில விடயங்களை இப்படி எடுத்துக்கொள்ள வில்லை என்றால் வாழ்க்கை வறண்ட பாலையாக மாறி விடும் அபாயம் உண்டு. நீங்க இதுவரை அப்படி நினைக்க வாய்ப்பில்லை என்றால், இந்த கட்டுரை அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு...


காட்சி-1: நீங்கள் காலை 9.05 -க்கு அலுவலகத்தில் நுழையும் போது உங்கள் மேலாளர் ஏன் ஐந்து நிமிடம் தாமதம் என்று கேட்கும் போது...
வசனம்: அப்பாடா இப்பவே கண்ணை கட்டுதே....
காட்சி-2: நீங்கள் உங்கள் அலுவலக நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் அலுவலக மேலதிகாரி அழைக்கும் போது ...
வசனம்: பாஸ் இவங்க இப்படித்தான் .. இவங்களுக்கு வேற வேலையே இல்லை. ஏதாவது இடைஞ்சல் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க இதுக்கெல்லாம் பயந்தா நாம "தொழில்" பாக்க முடியுங்களா...

காட்சி-3: நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்தவுடன் உங்களது பழைய நிறுவனத்தைப் பற்றி சொல்லும் போது ...
வசனம்: அது கம்பெனி இதெல்லாம் ஒரு கம்பெனின்னு இங்கெல்லாம் ஹும் எப்படித்தான் வேலை பார்க்கிறீங்களோ..

காட்சி-4:உங்கள் அணியில் உள்ளவர்கள் உங்கள் மேலாளரைப் பற்றி குறை சொல்லிவிட்டு உங்களிடம் அதை பற்றி கருத்து கேட்கும் போது...
வசனம்: (மனசுக்குள்) ஆஹா வளைய விரிக்கிரானே வம்புக் கிழுக்கிரானே....

காட்சி-5: நீங்கள் உங்கள் மேலாளரை பற்றி குறை சொல்லும் போது ஒரு நபர் மட்டும் அதை "வெகுவாக" ஆதரித்துப் பேசினால் ....
வசனம்: ஒருவேளை இவன் "அவனா" இருப்பானோ..?

காட்சி-6: நீங்கள் செய்யாத தவறுக்காக உங்கள் மேலாளர் உங்களை வறுத்தெடுக்கும் போது ...
வசனம்: எப்படித்தான் நம்மளை கண்டுபுடிக்கிராங்கன்னே தெரியலையே...

காட்சி-7: நீங்கள் அந்த தவறை செய்யவில்லை என்பதை அவரே உணர்ந்து உங்களிடம் சொல்லும் போது .....
வசனம்: நல்லா கிளப்புறாங்கடா பீதிய...

காட்சி-8: நீங்கள் உங்கள் சக அலுவலரிடம் பேசும் போது நான் நிச்சயமா இந்த கேள்வியை அடுத்த கூட்டத்தில் (மீட்டிங்கில்) கேட்க போறேன் என்று சொன்னதும் அதை "மிகவும்" ஆமோதிக்கும் விதமாக சொல்லும் நபரை பார்த்து ...
வசனம்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரண களம் ஆக்கிட்டாங்கப்பா...

இது மாதிரி இன்னும் பல சூழல்கள் உள்ளன அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம். உங்கள் மனத்தில் தோன்றிய இந்த மாதிரியான வசனங்கள் இருந்தால் எனக்கும் தெரியப் படுத்துங்கள் நானும் பயன்படுத்திக் கொள்கிறேன்.


Read more...

சிரிக்கத் தெரிந்த மனமே...

"தமிழகத்தை இருள் சூழ்ந்துள்ளதால் வருகிற சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் அவரவர் வீட்டில் விளக்கேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் .." - சொன்னவர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா
இப்படியே பேசிக்கிட்டே இருங்க நேத்து கட்சி ஆரம்பித்த சரத்குமார், விஜயகாந்த் எல்லாம் கருணாநிதியை சமாளிக்க அவுங்களா நிறைய தயார் பண்ணி பேசிக்கிட்டு இருக்காங்க நீங்க ஜோசியரைப் பார்த்து உங்க "குடும்பத்து"க்கு எது நல்லதோ அதை செய்யச் சொல்லி தொண்டர்களை கேட்டுக்குங்க. கட்சி விளங்கிடும். போங்க போய் வேற ஏதாவது நல்லதா எழுதி கொடுக்க சொல்லி அதை வெளியிடுங்க, எங்களுக்கெல்லாம் வேற வேலை இருக்குது....


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP