வாழ்க்கை படம் -- முள்ளும் மலரும்

சில திரை படங்கள் வெறும் படங்களாக மட்டுமின்றி மனித வாழ்க்கைக்கான பாடங்களாகவும் இருப்பதுண்டு. அதை விடவும் மேலே போய் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே, அதாவது அதுவும் ஒரு வாழ்க்கையாகவே ஆகி போவதுமுண்டு. அப்படி வாழ்க்கையான படங்களில் முள்ளும் மலரும் முதன்மையானது.
இந்த படத்தை பற்றி நான் இதுவரை கேட்டிராத , படித்திராத சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
--- கதாநாயகன் காளி சிவப்பு சிந்தனை கொண்டவர் என்பதை காண்பிப்பதற்காக காட்டப்படும் ஆரம்ப காட்சியில் சிவப்பு வண்ணம் கொண்ட காரை காண்பிப்பது.
--- படத்தின் முக்கிய கதா பாத்திரங்களான காளியும் அவரது தங்கை வள்ளியையும் காண்பிக்கும் போதுவரும் பின்னணி இசை, அவர்களுக்கு இடையே அவ்வப்பொழுது நிகழும் பாச பரிவர்த்தனைகளின் போதும் ஒலிப்பது எவ்வளவோ விஷயங்களை சொல்லி விடும் அதிசயம், பின்னணி இசையின் முக்கியத்துவத்தை தமிழ் திரையுலகம் உணர ஆரம்பித்த பொழுது என்பதுகளின் ஆரம்பம் தான் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக காளி தன்னுடைய நண்பர்களிடம் தான் தனது தங்கையை சரி வர கவனிக்காதவன் என்று தன்னைப் பற்றி தனது மேலதிகாரியிடம் போட்டுக் கொடுத்ததால்தான் தன்னுடன் வேலை பார்த்தவரை அடிக்க நேர்ந்தது என்பதை விவரிக்கும் போது அதை மறைந்திருந்து கேட்கும் தங்கை முகத்தை க்ளோசப்பில் காண்பிக்கும் பொழுது எழுப்பப்படும் பின்னணி அவளும் அதை புரிந்து கொண்டுவிட்டால் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
--- காளி தனது தங்கையை தனது மேலதிகாரிக்கு கட்டித்தர சம்மதிக்கும் அந்த வேளையிலும் மற்ற படங்களில் இருப்பதைப் போல் அல்லாமால் "எனக்கு உங்களை பிடிக்காது ஆனால் என் தங்கைக்கு உங்களை பிடித்திருப்பதால் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்.." என்று சொல்வது, தங்கைக்காக சம்மதித்திருந்தாலும் அவரைப்பற்றிய தனது எண்ணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை சொல்வது, அது சாதாரண திரை கதா பாத்திரமல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது.
--- இவ்வளவு அருமையாக நடிக்கக் கூடிய அந்த ரஜினி எப்பொழுது திரும்பவும் இந்த தமிழ் திரையுலகிற்கு கிடைப்பார்..?
--- கிட்டத்தட்ட 50 முறையாவது இந்த படத்தை முழுதாக பார்த்திருக்கிறேன், இத்தனை முறையில் ஒரு முறை கூட சலிப்பே ஏற்படாது இருப்பது யாரால் .. சிறந்த முறையில் இயக்கிய மகேந்திரனலா...? மிக சிறந்த முறையில் நடித்த ரஜினி,ஷோபா மற்றும் சரத்பாபுவினாலா ..? மிக சிறந்த ஒளிப்பதிவை தந்த பாலுமகேந்திராவினாலா ..? மிக சிறந்த பாடல்கள் மட்டுமில்லாது மிக சிறந்த இசை வழங்கிய இளையராஜாவினாலா ..? இப்படி எல்லோரும் தங்களது பங்கினை மிகச்சிறந்த முறையில் வழங்கியதால்தான். ஆம் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சியே. அப்படி அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய எந்த படமும் மேலே சொன்ன மாதிரி நம் வாழ்க்கை படம் ஆகியே தீரும்.


Read more...

அம்மன் பெயரும் ... தமிழ் பெயரும்

நேற்று நடந்த கலைஞர் பேத்தி திருமணத்தில் பேசிய கலைஞர் , தன்னுடைய பேத்திக்கு பூங்குழலி என்று பெயர் வைக்க காரணம் அவரது சொந்த ஊரான திருக்குவளையில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் வண்டமரும் பூங்குழலி என்னும் அம்மனின் பெயர் ஞாமபகத்திற்கு வந்ததாகவும் அதனாலேயே அந்த பெயரை வைத்ததாகவும் கூறினார். அதில் குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் ...
1. கலைஞர் அம்மன் பெயர் என்பதால் அந்த பெயரை தான் வைக்கவில்லை என்பதாகவும் அதில் உள்ள தமிழ் வளமையின் காரணமாகவே வைத்ததாகவே சொன்னது. அவருக்கு ஏன் அம்மன் பெயர் ஞாமபகத்திற்கு வந்தது என்று நமக்கு கேட்க தோன்றினாலும் அவர் உண்மையை சொன்னதற்காக நாம் மனதார பாராட்டலாம்.
2. ஒரு முறை ஒரு விழாவில் பேசும் போது "கடவுளை நான் நினைக்கிறேனோ இல்லையோ கடவுள் வாழும் வண்ணம் என் மனதை தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும். " அப்படின்னு சொன்னார். அது போல தமிழ் வாழ்கிறதோ இல்லை சமஸ்கிருதம் வாழ்கிறதோ எந்த பெயரிலோ கடவுளின் பெயரை சொல்பவருக்கும் பலன் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது அந்த விதத்தில் கலைஞரும் பலன் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


Read more...

A WEDENSDAY -- ஒரு பார்வை

ஒருவழியா வார கடைசியும் முடிவுக்கு வந்தது.. இந்த வாரம் A WEDNESDAY என்ற ஹிந்தி திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது (உபயம்: டி.வி.டி). மிகவும் நல்ல படம் தயவு செய்து தேடி கண்டுபிடிச்சு பாருங்க. ஒரு பொது ஜனத்தின் சமுதாய கோபம் தான் இந்த படம். கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் மணி நேரம் மட்டுமே ஓடிய இந்த படத்தில் குறைகள் இருந்தாலும் படத்தை பாராட்ட ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதால் அவை மட்டும் இங்கே ...
1. படத்தில் பாடல்களே இல்லை. எனவே படத்தின் ஓட்டம் எங்குமே தடை படாமல் நம்மால் நிம்மதியாக ரசிக்க முடிகிறது.
2. உலக தரத்தில் ஒரு படம் என்று தாராளமாக இந்த படத்தை சொல்லலாம். அனைவரின் இயல்பு மீறாத நடிப்பும். குறிப்பாக படத்தின் முதன்மை கதா பாத்திரத்தில் நடித்துள்ள ஓம்புரி மற்றும் அனுபம்கேர் நடிப்பு. கதை சொல்லும் விதமும் பாத்திரங்களின் படைப்பும் நிச்சயம் இந்திய சினிமாவிற்கும் நான் இதுவரை பார்த்த ஹாலிவுட் படங்களிலும் மிகவும் புதுமையான ஒன்று.
3. பிரமாண்டம் என்ற பெயரில் தயாரிப்பாளரின் சொத்தை புடுங்காத, அதே சமயத்தில் ஒரு நொடி கூட நிக்காமல் ஓடும் பரபரப்பான திரைக்கதை அமைத்திருந்த விதமும் மிகவும் பாராட்டுக்குரியது.
4. படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் மிகவும் கவனத்திற்குரிய வகையிலும் அதே சமயம் கேட்பவர்களின் நெஞ்சில் சரக்கென பாயும் விதம் அமைத்திருக்கிருக்கிறார்கள். குறிப்பாக "... அந்த நபரின் பெயரை நான் சொல்ல மாட்டேன் ஏனெனில் அவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அதை வைத்து நீங்கள் யூகிக்க நான் விட மாட்டேன்.. " என்று அந்த போலீஸ் ஆபிசர் பேசும் வசனம்.
5. இயக்கம் அற்புதம் சில விஷயங்களை மிகவும் நுணுக்கமாக கையாண்டுள்ளதால் ஆளுயர மாலையே போடலாம். குறிப்பாக தீவிரவாதிகளை விடுவிக்கும் படையில் (இரண்டே நபர்தான் அனுமதி) ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் உள்ளதாக என்பது புறப்படும் முன் அந்த இந்து அதிகாரியிடம் மட்டும் அனுபம் கேர் (காவல் துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள) அழைத்து "எல்லாம் முடிந்தவுடன் போன் பண்ணு.. " என்று சொல்வதும் அதற்கு முன்னர் வரும் காட்சிகளில் அந்த முஸ்லீம் அதிகாரியை மிகவும் கோபக் காரராக காண்பிப்பதும் இந்து அதிகாரியை சற்றே முதிர்ந்த மன நிலையுடன் காண்பிப்பது என பல விஷயங்களை நாமே யூகிக்க விட்டிருக்கிறார் இயக்குனர்.

6. படத்தை ஒன்னே முக்கால் மணி நேரத்திலேயே முடித்திருப்பது.

குறிப்பு: இந்த படத்தின் கதையை நீங்கள் படம் பார்க்கும் பொழுது புதிதாக (Fresh) உணரும் விதமாக படத்தின் கதையை பற்றி விரிவாக விவரிக்கவில்லை.


Read more...

இசை பிதாமகன் இளையராஜா

தேவர் மகன் படத்தில் ஒரு வசனம் வரும் "எது நடக்க கூடாதுன்னு நினைச்சோனோஅதுதான் இங்கே நடக்குது ..." அப்படின்னு தன்னால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தைப் பற்றி சொல்வார். அது போல் இளையராஜாவிற்கு எது நடக்க கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்தே விட்டது. வருத்தத்திற்கு உரியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது.
இந்த வாரம் குமுதம் இதழில் ஒ பக்கங்கள் என்ற தலைப்பில் எழுதி வரும் ஞானி சொல்லிய விஷயங்கள் விவரம் புரிந்த அனைவருக்கும் புரிந்திருக்கும். அவர் சொன்னது இதுதான் "ரஹ்மானின் புகழும் சாதனை களும் வளர வளர, அவருடைய தன்னடக்கம் மேலும் மேலும் அதிகமாகின. `நான்' என்ற அகந்தை அவரை ஆட்கொள்ளவே இல்லை. ஆழமான இறைப் பற்றும் ஆன்மிகப்பிடிப்பும் இருந்தபோதும், ரஹ்மான் சாமியார் வேடம் போடவில்லை. தன் பக்தியையே தன் வியாபார பிம்பமாக ஆக்கி தத்துவ உளறல்களைப் பரப்பிக் கொண்டிருக்கவில்லை. என்னை விட்டால் வேறு யார் இங்கே உண்டு, நானே மன்னன், மன்னனுக்கு மன்னன், நானே கடவுள் என்றெல்லாம் பாடலாசிரியர்களுக்கு தன்னைப் பற்றிய பல்லவியைக் கொடுத்து பாட்டு போட்டுக் கொள்ளவில்லை.வளர வளர, ரஹ்மானிடம் இருந்த ஈகோ, சுய அகங்காரம் தேய்ந்துகொண்டே போய் தாமரை இலைத் தண்ணீர் போன்ற மனப் பக்குவத்தை அவரிடம் ஏற்படுத்தியிருப்பதுதான் பிரமிப்புக்குரியதாக இருக்கிறது. ரஹ்மானை விட திறமைசாலிகள் இருந்திருக்கிறார்கள்;இருக்கிறார்கள்; இன்னும் வருங்காலங்களில் வருவார்கள். திறமையோடு, ஆன்றவிந்தடங்கிய மனமும் இருப்பவர்கள்தான் அபூர்வம்.அப்படிப்பட்ட மனம் ரஹ்மானுக்கு இருப்பதால்தான் ரஹ்மானுக்கு இதர இசைக் கலைஞர்கள் பற்றிய எந்த காழ்ப்புணர்ச்சியும் கசப்புணர்ச்சியும் இல்லை. தன் முதல் படத்தின் ஆல்பத்திலேயே, தனக்காக வாசித்த புல்லாங்குழல், டிரம்ஸ், கிடார் கலைஞர்கள் பெயர்களையும் அச்சிடச் செய்த முதல் இசையமைப் பாளர் அவர்தான். இப்படி சக கலைஞர்களுக்குரிய அங்கீகாரத்தை அவருக்கு முன் யாரும் தரவில்லை. அவர் தொடங்கியபின், மற்றவர்களும் செய்தாகவேண்டிய அவசியம் வந்தது." ஞானி இளையராஜாவை பேர் குறிப்பிடாமல் தாக்குவது அனைவரும் அறிந்ததே,
ஞானிக்கு சில கேள்விகள் அவருக்கு மட்டுமல்ல அவருடைய கருத்துக்களை மனதளவில் அங்கீகரிக்கும் நண்பர்களுக்கும் சேர்த்துத்தான் ...
கேள்வி-1: ரஹ்மான் தன்னுடைய பக்தியை வியாபரமாக்கவில்லை என்று நீங்கள் சொல்வது குறித்து.. ஆமாம் இளையராஜா எந்த கோவிலில் அமர்ந்து குறி சொன்னார்..? இல்லை அவரை பார்க்க மக்கள் இருமுடி கட்டிக்கொண்டு போனார்களா..? சரி அப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர் மாதிரி rahmaan தன்னை காட்டிக்கொள்ளவில்லையா..? ரஹ்மான் இதே குமுதம் இதழுக்கு ஒரு முறை அளித்த நேர்காணலில் தான் எந்த மசூதி சென்று தொழுகை நடத்துவார் என்றும் அங்கு உள்ள ஒரு சாமியார் பற்றியும் குறிப்பிட்டுருந்தார் அது விளம்பரம் இல்லையா..? அது சரி என்றால் ராஜா தான் திருவாண்ணாமலை செல்வதையும் இல்லை வேறு சில கோவில்களுக்கும் செல்வது போல் காட்டியது எப்படி விளம்பரமும் வியாபாரமும் ஆகும் ..? அது மட்டுமல்ல ரஹ்மான் மெக்கா சென்று வந்ததை எல்லா வார பத்திரிக்கைகளுமே அவரது புகை படம் உட்பட அவரது நேர்காணலுடன் வெளியிட்டது விளம்பரம் இல்லையா ..?
கேள்வி - 2: ரஹ்மான் தன்னை என்றும் வியாபர முன்னிலை படுத்திக் கொண்டதில்லை என்று எதை வைத்து சொல்கிறார் ஞானி அவர்கள்..? ரஹ்மானுக்கு கட்-அவுட் வைத்ததை பார்த்ததில்லையா..? சில நாட்களுக்கு முன் வெளிவந்த சக்கரக்கட்டி என்ற படத்திற்கு ரஹ்மான் கட்-அவுட் வைத்தார்களே .. அந்த படத்தின் எல்லா பத்திரிகை விளம்பரத்தில் கூட ரஹ்மான் படம் மட்டுமே இடம் பெற்றிருந்ததை பார்க்கவில்லையா ..? ஒரு பிரபலமான பத்திரிகையில் எழுதுபவர் இதை கூடவா கவனிக்காமல் எழுதுவார் அதையும் இந்த பத்திரிகை எப்படி அனுமதித்தது..?
கேள்வி-3: வாதியக்காரார்களின் பெயரை யாரும் போட்டதில்லை ரஹ்மான் தான் போட்டதாக சொல்கிறார். தயவு செய்து புன்னகை மன்னன் ஒலிப்பேழையை பாருங்கள் அதில் யார் வாசித்தார்கள் என்று போடப்பட்டிருக்கும். புன்னகை மன்னன் படம் ரஹ்மான் தனி இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்பே வந்த படம் மேலும் அந்த படத்தில் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்ததையும் நண்பர் ஞானி அவர்களுக்கு விளக்க விழைகிறோம்.
கேள்வி-4: தன்னடக்கம் பற்றி நீங்கள் பேசலாமா ஞானி அவர்களே. உங்களுடைய ஒவ்வொரு வார ஒ பக்கங்களின் முடிவில் நீங்கள் ஏன் "இந்த வார குட்டு" என்ற பகுதியை வைத்துள்ளீர்கள்..? அன்பாக சொல்ல வேண்டியது தானே அடக்கத்தை அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுக்கும் நீங்கள் ஏன் அதை முதலில் கற்றுக்கொள்ள கூடாது ...?
கேள்வி-5: ஒருவரின் அடக்கத்திற்கு தான் "சிறந்த இசை அமைப்பாளர் " விருது கொடுக்குறாங்களா ..? நன்றி ஞானி அவர்களே நான் கூட சிறந்த இசை வழங்குபவர்களுக்குத்தான் கொடுக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.

இந்திய இசையின் பிதாமகன் இளையராஜா அதற்காக அவரை (வார்த்தை) அம்பு படுக்கையில் படுக்க வைப்பது துளி கூட நியாயம் இல்லை.


Read more...

தலைக்கனமா ..? தன்னம்பிக்கையா ...?

ஒரு வழியா இந்த வாரம் ரஹ்மான் பாராட்டு விழா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பற்றி நான் பேசி கொண்டிருக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார் இளையராஜா எல்லா விஷயத்திலும் சரிதான் ஆனால் அவர் கொஞ்சம் தலைகனம் பிடித்தவர் போல் தெரிகிறார் என்றார். பாலச்சந்தர் படத்தில் வருவது போல் ஒரு காட்சி என் கண் முன் தோன்றி மறைந்தது "ஆமாம் அவர் அப்படி இருப்பதனால் உனக்கென்ன அவர் நல்ல இசை தருகிறாரா இல்லையா என்று தான் நாம் பார்க்க வேண்டும் ." என்று கூறுவது போல். இதை பலமுறை சம்மந்த பட்டவரிடம் கூறி விட்டதால் பொறுமையுடன் சரி இந்த பாராட்டு விழாவின் மேடையில் அமர்ந்திருக்கும் மிகப்பெரிய இசை ஜாம்பவான் என்று அனைவராலும் பாராட்டப்படும் பாலமுரளிகிருஷ்ணா என்ன பண்ணினார் தெரியுமா பல வருடங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு கச்சேரியில் சரியான முறையில் தன்னுடையை பாடல்கள் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை என்ற காரணத்தால் இனிமேல் இந்த ஆந்திராவில் கச்சேரியே பண்ண மாட்டேன் என்று சபதம் செய்து அதை ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்தான் முடித்தார். அதே போல் எனக்கு ஒரு நேரடி அனுபவம் இருந்தது ஜேசுதாஸ் அவர்கள் 1998 வருடம் சென்னை ஐயப்பன் கோவிலில் (அண்ணா நகரில் உள்ள) ஒரு கச்சேரி அதில் அவர் முழு கர்நாடக ஆலாபனைகளை பாடி வந்ததால் ஒரே சல சலப்பு அவர் சொன்னார் இப்ப நீங்க கத்துறதை நிறுத்தாவிடில் கச்சேரியை நிறுத்தி விட்டு நான் போய்கிட்டே இருப்பேன் . மக்கள் சற்றே உணர்ச்சி வசப்பட்டவர்களாய் எங்களுக்கு அந்த ஐயப்பன் பாடலை பாடுங்கள் என்று கேட்டனர் அவர் சொன்னார் முடியாது இந்த ஆலாபனைகள் இன்னும் சில பாடி விட்டுதான் மற்ற பக்தி பாடல்களை பாடுவேன் என்று.

மேற்சொன்ன இரு சம்பவங்களும் சம்மந்த பட்டவர்களின் தலைகனமாகவோ அல்லது கலை கர்வமாகவோ பார்க்கப்படுவதில்லை. அதே மாதிரி என்னுடன் பேசிக் கொண்டிருந்த நபரும் அதையே வழி மொழிந்தார். ஆனால் அதே மாதிரி இளையராஜா பேசியதை கர்வம் என்று வாதிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு தெரிஞ்சு பாலமுரளிகிருஷ்னாவோ ஜேசுதாஸ் அவர்களோ அப்படி பண்ணியதாக நான் அடிக்கடி பத்திரிக்கைகளிலோ மற்ற ஊடகங்களிலோ பார்த்ததில்லை அதனால் அப்படி தோன்றவில்லை என்று. இதில் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நான் தெளிவு பெறவும் அது உதவும்.

அப்புறம் வலைதளத்தில் கண்ட ஒரு விஷயத்தை கீழே கொடுத்துள்ளேன் இதை பற்றி நாம் அப்புறம் பேசலாம் ..

See these inspirations of ARR and Ilayaraja:http://www.youtube.com/watch?v=1qRnMOe2F4s&feature=relatedhttp://www.youtube.com/watch?v=531WthsZaBY&feature=relatedhttp://www.youtube.com/watch?v=sYXtNqgL4xE&feature=relatedhttp://www.youtube.com/watch?v=1nHyuwKK01I&feature=relatedhttp://www.youtube.com/watch?v=CDjdJ3T0qJM&feature=related


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP