வெற்றியும் தோல்வியும் வாழ்வின் தொடர்கதை

நீங்கள் முதலும் கடைசியுமாகச் சந்தித்த தோல்வி?
'கடைசியான தோல்வி' என்று எதுவும் கிடையாது. கடைசி மூச்சு வரை தோல்விகளும் கூடவே வரும். தோல்வியில் வீழ்ந்தவுடன் அப்படியே கிடக்காமல், உதறிக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்பவன்தான் வீரன். ஆகவேதான், ஒருவன் தோல்வியிலிருந்து மெள்ளச் சுதாரித்து எழுந்து நிற்கும்போது, எல்லோரும் கை தட்டுகிறார்கள். துவளாமல் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருங்கள். மிகப் பெரிய வெற்றி உங்களை நோக்கி வந்துகொண்டு இருக்கலாம்!

--மதன் கேள்வி-பதில் பகுதியில் வந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் தொடர்கதை. இதை தான் நா.முத்துக்குமார் இப்படி சொல்கிறார் .." போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை..."


Read more...

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் !?

"....அவரவர் போட்ட டெல்லிக்கணக்கு களை முடிந்த வரை ஈடுகொடுத்து, நிரவிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. ஒத்துழைக்காத காங்கிரஸூடன் போராடிய சோர்விலிருந்து மீள்வ தற்காக அவர் காத்திருப்பது தன் 86-வது பிறந்த நாளுக்கு. அன்றைய தினத்தை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடத் தன் தொண்டர்களை அவர் அனுமதிக்கிறாரோ இல்லையோ... ஸ்டாலின் ஆதரவாளர்கள் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். காரணம், அன்று அவர்கள் எதிர்பார்ப்பது ஸ்டாலி னுக்குத் துணை முதல்வர் பதவியை!.."

நாம் இப்போது பிளாஷ் நியூஸ் ஆக பார்ப்பதை ஒரு பத்திரிகை மேற்கண்டவாறு நான்கைந்து நாட்களுக்கு முன்னமே கொடுத்து விட்டது. புலி வரும் கதை போலாகி விடும் என்று எதிர்பார்த்த ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கடைசியில் வந்தே விட்டது. ஸ்டாலின் கட்சிக்காக உழைத்தவர் தான் அதனால் அவருக்கு முழு தகுதியும் உள்ளது என்பதை தினசரி தி.மு.கவை திட்டாமல் உறங்கப் போகாத சோ வே வக்காலத்து வாங்குவதையும், ஸ்டாலின் போல வேற யாருமே தி.மு.க வில் உழைக்க வில்லையா..? என்று எதிர் பாட்டும் கேட்கிறது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்டிருக்கிறது துணை முதல்வர் பதவி. இது எந்த அளவுக்கு நன்மை பயக்கப் போகிறது என்று பார்த்தால், ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மேலும் இது வருங் காலங்களில் பெரிய பெரிய பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்றே தோன்றுகிறது. அதிகார பகிர்வு மூலம் தனது குடும்பத்தை வேண்டுமானால் கலைஞர் சமாதானப் படுத்தி இருக்கலாம். ஆனால் தமிழக அரசியலை அடுத்த மோசமான கட்டத்திற்கு இட்டு சென்ற பெயரை தட்டி சென்றுள்ளார் கலைஞர்.


Read more...

மந்திரி பதவி படும் பாடு ....

நாம் கீழே தந்திருப்பது ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி. தமிழகத்தின் மத்திய மந்திரிகள் எப்படி தேர்ந்தெடுக்க படுகிறார்கள் என்று பாருங்கள்.. கொடுமை. காதாலா காதலா படத்தில் ஒரு கமல் ஒரு வசனம் பேசுவார் "...கடவுள் இருக்குன்னு சொல்றவனை கூட நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள்னு சொல்றவனை நம்பவே கூடாதுன்னு...". தனது கட்சியை போல ஒரு ஜனநாயக கட்சியை பார்க்கவே முடியாதுன்னு சொல்ற தி.மு.க வில் ....

இதோ அந்த காட்சி .. மன்னிக்கவும் கட்டுரை ..

''டெல்லியிலிருந்து முதல்வர் உள்ளிட்டவர்கள் வந்ததுமே கட்சியின் செயற்குழு கூடும் என்று ஆவ லோடு கட்சியினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல்வரின் வீட்டில் 'மந்திரி ரேஸில்' இருந்தவர்களை மட்டும் அழைத்து மாறி மாறி
விவாதம் நடந்தது. முதலில் தயாநிதி தரப்பினரை அழைத்துப் பேசினார் கலைஞர். கட்சியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரே, 'தயாநிதி மாறனுக்குப் பதவி கொடுக்கக் கூடாது' என்று தன்னிடம் மறைமுகமாகச் சொல்லிவருவதை டப்பெனப் போட்டு உடைத்த அவர், 'இந்தத் தடவை இல்லாட்டிதான் என்னப்பா?...' என்றாராம். தயாநிதி மாறன் உடனே ஏதும் சொல்லாமல், 'சரி' என்று தலை யாட்டியபடி நிற்க, கட்சியின் வெற்றிக்காக தயாநிதி தரப்பு பட்ட கஷ்டங்களை மற்ற சிலர் எடுத்து வைத்து தீவிரமாக வாதாடினார்களாம். தொகுதிவாரியாக செலவு விவரங்களையும் கலைஞரிடம் கொடுத்த தயாநிதி தரப்பு, 'கடந்த முறை அமைச்சராக இருந்த போது தயாநிதியால் எள்ளளவும் கெட்ட பெயர் ஏற்படவில்லை. இருந்தும், எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வராவிட்டால், தயாநிதிக்குப் பதவி வேண்டாம்!' என்று அவர்கள் வருத்தத்தோடு சொன் னார்களாம்.
'முடிந்த மட்டும் தயாவுக்கு கேபினெட் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்... நம்பிக்கை வையுங்கள்!' என்று சொல்லி அவர்களை அனுப்பியிருக்கிறார் கலைஞர். மாறன் பிரதர்ஸ் மலர்ந்த முகத்துடன் வீட்டைவிட்டு வெளியே வர, அவர்களுக்கு எதிராக தூபம் போடும் புள்ளிகள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்!'' என்று சொன்ன அந்த முக்கியஸ்தர்கள்... மேற்கொண்டு நடந்த காட்சிகளையும் ஸீன் பை ஸீனாகச் சொல்லத் தொடங்கினார்கள்..

இது தான் ஹைலைட் ...
''மகள் கனிமொழியையும் ராசாத்தி அம்மாளையும் அழைத்துப் பேசியபோது, 'மூன்று கேபினெட் பதவிகள் எப்படியும் வாங்கிவிட முடியும்' என்பதை உறுதியாகச் சொன்னதோடு, 'அந்த மூன்றில் யாருக்கெல்லாம் இடம்' என்று சொன்னாராம். 'நீ என்னம்மா நினைக் கிறே?' என்றும் கேட்டாராம். ராசாத்தி அம்மாள், 'வேண்டியவங்க வேண்டாதவங்களுக்குக் கொடுக்கிறது ஒருபக்கம் இருந்தாலும், கனிக்கும் இந்த முறை பதவி கட்டாயம் தரணும்...' என்று வேண்டினாராம். அதற்குள் அப்பாவின் தவிப்பு பொறுக்காமல் கண் கலங்கிய கனிமொழி, அடுத்தடுத்த சந்திப்புகளிலும் தனக்கு இடம் கிடைக்காதபடி வலுவான கரங்கள் காய் நகர்த்துவதை உணர்ந்து, 'உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதையே செய்யுங்க...' என்று ஒரு கட்டத்தில் ஒதுங்கிவிட்டாராம். ராசாத்தி அம்மாள் இதை ஜீரணிக்க முடியாமல் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
அழகிரியைப் பொறுத்தவரை கேபினெட் அந்தஸ்துக் கான பரிசீலனையில் முதல் ரவுண்டின்போது தான் இல்லை என்பதே பெரும் ஷாக்காக இருந்தது. அதோடு 'மந்திரியாகத்தான் திரும்பிவருவேன்' என்று தன் மதுரைக் கண்மணிகளிடம் உற்சாகமாகச் சொல்லிவிட்டு வந்த நிலையில், மே 23ம் தேதி 'முதல் தவணை பதவியேற்பிலும்' தான் பங்கேற்க முடியாமல் போனதில் ஏக அப்செட்தான். பதவியேற்பு ஒத்திப்போன கோபமும் அவருக்கு சேர்ந்து கொண்டது. 'அடைந்தால் கேபினெட் பதவி... இல்லையேல் அதிரடிப் பாய்ச்சல்' என்பதே அவருடைய அணுகு முறையாக இருந்தது. டெல்லியில் தந்தையிடம் கர்ஜித்தது போலவே சென்னையிலும், 'மொழிப் புலமையெல்லாம் வைத்துதான் மந்திரி பதவி என்பது அர்த்தமில்லாத பேச்சு. வேண்டுமானால் நான் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் மதுரையில் யாரை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக் கிறேன். அதேநேரம், தமிழகத்தில் மறுபடி சட்டமன்றத் தேர்தல் வரட்டும். காங்கிரஸ் உதவியில்லாமல் நீங்கள் இங்கே தமிழ்நாட்டில் ஆள்கிற அளவுக்கு ஜெயித்துக் கொடுக்கிறேன். கட்சியிலும் அரசிலும் பெரிய பொறுப்பைக் கொடுங்கள்' என்று மறுபடி அவர் சீறினாராம்!'' .


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு (!) பெண் உண்டுன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்ப புரிஞ்சுது. பேசாம ஆண்கள் ஏன் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் நிற்கக்கூடாது, ஏன்னா பின்னால் நிற்பவருக்குதான் பவர் அதிகம் போலவே..





Read more...

ஒரு மரணம் ஒரு ஜனனம்

நீரின் மரணம் - கரு மேகங்களின் ஜனனம்...

கரு மேகங்களின் மரணம் - மழையின் ஜனனம்.

மழையின் மரணம் - நதியின் ஜனனம்.

நதியின் மரணம் - கடலின் ஜனனம்.

கடலின் மரணம் - கரையின் ஜனனம்.

கரையின் மரணம் - நீரின் ஜனனம்.
எனவே வாழ்க்கையில இழப்பதும் பெறுவதும் ஒன்றுமில்லை.


Read more...

வால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்


ராஜாவின் பேச்சு சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறை அல்ல ஆனால் இந்த முறை நடந்திருக்கும் தோற்றம் ராஜாவை பற்றிய தோற்றத்தை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது. ராஜா சமீபத்தில் நடந்த வால்மீகி பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது இது தான் (ஒரு இணையதளத்தில் வந்த ஒளிஒலி காட்சியை பார்த்த பிறகு இதை எழுதுகிறேன்
இயக்குனர் மிஷ்கின் பேசும் பொழுது ".. இப்பொழுதுள்ள உதவி இயக்குனர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் ஒரு படமாவது தயவு செய்து ராஜா சாருடன் பண்ணுங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை ஒரு முழுமை பெறும். நான் அவருடன் படம் பண்ணும் பொழுது பலரும் என்னை பயமுறுத்தினார்கள், அவர் சீனியர் நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் கேட்க மாட்டார். நம்புங்கள் அவர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் என்னை கலந்தாலோசித்த பிறகே பண்ணினார்..." இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், " சினிமா விழாக்களில் நான் அதிகமாகப் பங்கேற்பதில்லை. அதற்கு காரணம், ஒன்று தன்னைப் பற்றி அதிகம் புகழ்ந்துபேச வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டும். பெரும்பாலும் உண்மையைப் பேச முடிவதில்லை.
மேடைகளில் பேசும் பலரும் மனதார வாழ்த்துவதில்லை. சரி, ஏதோ நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான் வாழ்த்துகிறார்கள். உண்மை இல்லாத இடங்களைத் தவிர்ப்பதற்காகவே விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன். விகடன் நிறுவனத்துக்காக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன்.
ஒரு புதிய இயக்குநரின் படத்தில் பணியாற்றுவது குறித்து பலரும் பேசினார்கள். நான் ஏற்கெனவே பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், இளைஞர்கள் பலரும் வளர்ந்த பின், 'இமேஜ்' என்ற வளையத்துக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டாலே இப்போதுள்ள இயக்குநர்களை இமேஜ் ஆட்டிப்படைக்கிறது. வெற்றிப் படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். ஆனால் நல்ல படத்தைத் தருவதுதான் முக்கியம். பணத்தை மட்டுமே தருகிற வெற்றி முக்கியமல்ல.திறமையுள்ள புதுமுக இளைஞர்களை ஊக்குவிப்பதுதான் என் லட்சியம். நான் இப்போதுள்ள நிலைக்குக் காரணம் அன்று பஞ்சுஅருணாசலம் என்னை ஊக்குவித்து வாய்ப்பளித்ததுதான். அதனால்தான் ஷங்கரின் உதவியாளர் அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அவருடைய திறமைக்காக இசையமைத்தேன்.
வெற்றி என்றால் அர்த்தம் என்ன? வெற்றி பற்றி நாம் பேசக்கூடாது. ஓடுகிறவன், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடினால்தான் வெற்றி. நதியைப்போல, காற்றைப்போல, வானத்தைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.சப்தஸ்வரங்கள்தான் எனக்கு உறவினர்கள். வேறு யாரும் கிடையாது. இங்கே டைரக்டர் மிஷ்கின் பேசும்போது, உதவி இயக்குனர்கள் எல்லோரும் இயக்குனராகும்போது, ஒரு படத்திலாவது என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்.
இந்த மேடையில், எனக்கு உள்ள ஒரே மீடியேட்டர் மிஷ்கின்தான். எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார். எனக்கு யாரும் தேவையில்லை. நான் ராகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் என்னை, "இங்கேயே கிடடா நாயே" என்று சொல்லிவிட்டான். அந்த சப்தஸ்வரங்களுடனே நான் கிடக்கிறேன். அங்கிருந்து நான் வெளியே வரவே மாட்டேன்,'' என்றார் இளையராஜா.

இங்கே இளையராஜா சொன்னதை நான் இப்படித்தான் பார்க்கிறேன் .. "எனக்காக இங்கே பரிந்து பேச மிஷ்கின் மட்டும் தான் இருக்கிறார். அதுவும் தேவை இல்லை ஏனெனில், நான் ராகங்கள் கூடவே வாழ்ந்து கொண்டிருப்பேன். ஒருவர் வேலை கொடுத்துதான் நான் இசையை தொட வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை அது கூடவே வாழவேண்டும் என்பது இறைவன் எனககு இட்ட கட்டளை அதன் படி நான் வாழ்கிறேன்".

இங்கே எல்லாமே வியாபாரமாகி போய்விட்டதே என்ற வருத்தம் ராஜாவை ரொம்பவே வாட்டி விட்டது என்றே தோன்றுகிறது. தன்னை அறிமுகப் படுத்திய பஞ்சு அருணாச்சலத்திற்கு இன்றைய தேதி வரை இலவசமாகவும், தனது பால்ய கால நண்பரான சங்கிலிமுருகன் படத்திற்கு மிக சிறப்பான பாடல்களை தருவதுடன் தொடர்ந்து அவர் படங்களுக்கு கால்ஷீட் தருவது, பாலு மகேந்திரா,கமலகாசன் போன்றவர்களின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது, போன்றவை வியாபாரத்தையும் மீறி ராஜா எதிர்பார்க்கும் அந்த ஆதரவு அவர்களிடம் இருந்து கிடைப்பதானால்தான். இதை அனைவரும் அறிவர், ராஜா அதை மிஷ்கின் இடத்திலும் எதிர் பார்த்து ஏமாற்றத்தின் மூலமும் அப்படி பேசியிருக்கலாம்.

இது எல்லாத்தையும் விட முக்கியம் வால்மீகி பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருப்பது தான். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. குறிப்பாக "கூட வருவியா ..." நம்மையும் இசையின் கூடவே இழுத்துக்கொண்டு போவதை நீங்களும் உணர்வீர்கள்.

இதை போன்ற இசை தருகிற ராஜா போன்றவர்களை தயவு செய்து சின்ன சின்ன காரணங்களை காட்டி ஒதுக்காதீர்கள் அது நம்மை போன்றவர்களுக்கு தான் பேரிழப்பு..(நம்மை என்று நான் சொல்வது தமிழர்களை மட்டுமல்ல .. இசை ரசனை கொண்ட அனைவரையும் தான்.)


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP