கமெண்ட் கற்கண்டுகள் -- 2 (கண்டிப்பா சிரிக்க மட்டும்)

செய்தி: மார்ட்டினா நவரத்தினலோவா தனது தோழியை மணக்கிறார்.
கமெண்ட்: டேய் என்னங்கடா ... உங்க பிரச்சனை .... சும்மா இருக்க மாட்டீங்களாடா ....
செய்தி: சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் "சிங்கம்".
கமெண்ட்:Ivan Singama... ஏன்டா ungaluku எல்லாம் arive illaya. Allaku osarathula irukira ivana singamnu solringa.. Actor Director T.P. Gajendran ivana vida osarama iruparu. Ivan singamna, avaru என்ன ஒட்டகமா?
செய்தி:தனுஷ் நடிக்கும் புதியபடம் "மாப்பிள்ளை" இந்த படம் ரஜினியின் "மாப்பிள்ளை" படத்தின் ரீமேக்.
கமெண்ட்:ப்ளீஸ் நடிக்காதே. உன்னக்கு மணி வேண்டுமானால் பொய் பிச்சை எடு. தாங்க முடியலே உன் படமெல்லாம். யோசிச்சு பாரு. தமிழ் நாட்டு மக்கள் நலன் கருதி நடிப்பை விட்டுவிடு. டி கடை வைத்து பிழைத்து கொள்.
செய்தி: பாரதிராஜா மகன் மனோஜ் புதிதாக படம் இயக்க இருக்கிறார்.
கமெண்ட்:திரைக்கு பின்னாடி என்ன வேணா செய்துக்கோ. அப்பா மாதிரி கேமரா முன்னாடி வந்து எங்கள பயம் காட்டாத. சொல்ல முடியாது, எவனாவது கிறுக்கன் உனக்கும் இயக்குனர் சிகரம் II பட்டம் கொடுத்தாலும் கொடுப்பான். கிறுக்கு தமிழன எதுவும் சொல்ல முடியாது. அது சரி, உங்க அப்பாக்கு புலி பென்ஷன் நின்னு போச்சா? பாவம்.
செய்தி:அடுத்த படத்தில் இயக்கம் மட்டுமே நடிப்பு இல்லை -- சேரன் முடிவு.
கமெண்ட்:பதிவு செய்தவர்: பொறுமை
நடிச்சி உயிரை வாங்குவதை விட நடிக்காமலே மற்றவரை வாழ வைப்பது மேல் ....! மவனே ஏன் ஏன் ஏன் ...இப்படி ?


Read more...

இதை என்னன்னு சொல்றது...

'புகையிலை இல்லா புது உலகம் படைப்போம்' என்கிறது சுகாதார அமைச்சகம். ஆனால், தான் தினமும் எண்பது சிகரெட் புகைப்பதை சாதனை என்கிறார் 77 வயதான ஸ்டீபன் துரைராஜ். நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கி றதாம் இவருடைய இந்த சா(வே)தனை!
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த இவர், தன்னுடைய புகைக்கும் சாதனைக்காக(?) ஏகப்பட்ட பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை சந்தித்தோம். சிகரெட்டும் கையுமாக நம்மை எதிர்கொண்டவர், ''மதுரை மெடிக்கல் காலேஜ்ல லேப் டெக்னீஷியனா வேலை பாத்தப்ப, ஓவரா சாக்லேட் சாப்பிடு வேன். அதைப் பாத்த நண்பர்கள், 'என்னப்பா... சின்னப்புள்ளத்தனமா சாக்லேட் தின்னுகிட்டு... சும்மா ஸ்டைலா சிகரெட்டை ஊதிப் பழகு'ன்னாங்க. அப்ப ஆரம்பிச் சதுதான்... இந்தப் பழக்கம். இப்ப வரைக்கும் விடமுடியலை!
1981-ம் வருஷம் சென்னையில நடந்த புகைபிடிக்கும் போட்டியில அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள்லருந்து சுமார் நானூறுக்கும் மேற்பட்டவங்க கலந்துகிட்டாங்க. அதுல கலந்துகிட்டு, 'ஒன் ஹவர்'ல எண்பது சிகரெட்ஸை ஊதித் தள்ளி 'ஃபர்ஸ்ட் பிரைஸ்' வாங்குனேன். அதுக்காக, எம்.ஜி.ஆர். எனக்குத் தங்கப் பதக்கம்கூட கொடுத்து 'புரட்சிவீரன்(?)'னு பட்டம் கிடைச்சது. அப்புறமா டெல்லியில நடந்த போட்டியிலும் முதலிடத்தைப் பிடிச்சு, பிரதமர் இந்திரா காந்தி கையால பரிசு வாங்கினப்ப, 'புகைமன்னன்' பட்டம் கிடைச்சது...'' என்று அடுக்கிக்கொண்டே போன ஸ்டீபனை இடைமறித்த அவர் மனைவி பொன்னம்மாள்,
''இவரு இப்படி சிகரெட்டை ஊதித் தள்ளுறது எனக்கு பயமாத்தான் இருக்கு. ஆனா, இவரை பரிசோதிச்ச ஆந்திரா வைத்தியர் ஒருத்தரு, 'உடம்பு முழுக்க பாய்ஸனாகி மனுஷன் இரும்பு மனுஷனாயிட்டாரு. இப்ப இவருக்கு எந்த நோயும் இல்லை'னு சொல்லி இவருக்குத் தைரியமூட்டி விட்டுட்டாரே, என்ன பண்ணட்டும்?'' என்றார்.
இது குறித்து இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை மருத்துவரான டாக்டர் எம்.கே.கிரிதர்பாபுவிடம் கேட்டபோது, ''அதிகமா சிக ரெட் குடிச்சாலும், அவருடைய உடல்நிலை சீரா இருக்குன்னா, அதுக்குக் காரணம் அவரோட 'ஜெனட்டிக்'காதான் இருக்கும். அத னால, ஸ்டீபனை மத்தவங்க யாரும் முன்மாதிரியா எடுத்துக்கக் கூடாது. புகைப் பழக்கத்தால் ஸ்டீபனுக்கு ஏதாவதொரு பாதிப்பு நிச்சயம் இருக்கும். அது இப்போதைக்கு வெளியில் தெரியாமல் இருக்கலாமே ஒழிய, பாதிப்பே இல்லைன்னு சொல்லமுடியாது!'' என்றார்.


Read more...

அட இங்க பார்றா...

''அடக்கடவுளே' என்று சொல்லவைத்த செய்தி..?''
''சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி. 'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான். 1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம். 1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின. 2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை. 2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி. 2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர். இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'
இதை எல்லாம் படித்ததும் மனதில் தோன்றியது. கமலைத் தீர்க்கத்தரிசி என்று சொல்வதா... அல்லது அவர் படம் வெளியானதும் நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதா? இந்தச் செய்தியைக் கமல் படித்தால், 'அடக் கடவுளே' என்று சொல்வாரோ!''
- வீரவிஜயன், மன்னார்குடி.
-விகடனின் நானே கேள்வி-நானே பதில் என்ற தலைப்பில் வந்த கேள்வி பதில் இது.


Read more...

அமெரிக்காவில் அவமானம்..ஒரு தொடர்கதை..?

சமீபத்தில் அமெரிக்கா வந்த நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்கா குடியேற்றத்துறை, பல நெருக்குதலை கொடுத்ததாகவும் அது பெருத்த அவமானம் என்றும் ஷாருக்கானும், இந்திய அரசாங்கமும் புலம்பி இருப்பது, நமக்கு பல ஆச்சர்யங்களை தந்தது. குறிப்பாக டெல்லி முதல்வர் திருமதி.ஷீலா தீக்சித், "அமெரிக்கர்கள் இந்தியா வரும்பொழுது இது மாதிரி அவமானப்படுத்தினால்தான் இதன் முழு வீரியமும் அவர்களுக்கு தெரிய வரும்.." என்று பேசி இருப்பது நமக்கு சில ஆச்சர்யமான கேள்விகளை கேட்க தூண்டுகிறது.
ஆச்சர்யம்-1: இதற்கு முன், முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாமுக்கு, கிட்டத்தட்ட இதே மாதிரியான சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், அரசாங்கம் இந்த அளவுக்கு அக்கறை காட்டியதா...?
ஆச்சர்யம்-2: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை என்ற காரணத்தினாலும், இது அந்த நாட்டிற்குரிய சட்டதிட்டம் அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை எனவும் கூறியது அவரது உண்மை அறியும் அறிவை காட்டுகிறதா..? இல்லை ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் தன்மானம் அவருக்கில்லையா...?
ஆச்சர்யம்-3: இதற்கு முன் தமிழ் நடிகர் கமலஹாசனுக்கும் இதே மாதிரியான ஒரு சூழல் ஏற்பட்ட பொழுது அப்போதைய மத்திய, மாநில அரசுகளும் இதே மாதிரியான பரபரப்பையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தியதா...? இல்லை என்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே அந்த தகுதி இருப்பதாக ஹிந்திய மன்னிக்கவும் இந்திய அரசாங்கம் கருதுகிறதா...?
ஆச்சர்யம்-4: முஸ்லிம்களின் மீதான இந்த தீவிரவாத இமேஜ்-ஐ நீக்க அவர்கள் என்ன பண்ணவேண்டும்...? குறைந்த பட்சம் இந்திய முஸ்லீம்கள் என்ன பண்ண வேண்டும்..?



Read more...

பிரபாகரன் செய்தது சரியா...?

பிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு `வார் ஹீரோ' என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள `மடு' தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் `அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல' என்று சொன்னார். ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது, பேச்சுவார்த்தையை நம்பாதது, கடைசிகட்டச் சண்டை என்று தெரிந்தும் அங்கேயே இருந்தது சரியானதல்ல என்றே நான் சொல்லுவேன்.''

பிரபாகரனை பற்றி, நிமல்கா ஃபெர்னாண்டோ! சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார்.

நமது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது பிரபாகரனை பற்றிய இவரது கண்ணோட்டம். குறிப்பாக கடைசிவரிகள்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP