பதிவுலகம் சார்பில் ஷங்கருக்கு நன்றி


ஷங்கர் இயக்கம் படங்கள் குறித்து எனக்கு எப்பவுமே மாற்று கருத்து உண்டு. ஆனால் அவர் தயாரிக்கும் படங்கள் குறித்து எப்பவுமே ஒரு நல்ல பார்வை உண்டு. அவரின் சமீபத்திய வெளியீடான "ஈரம்" இன்னும் பார்க்கவில்லை (ஆமாம் இன்டர்நெட்டில் இல்லாம் படம் பார்க்காம இருந்தா எப்படி பார்க்க முடியும். குறைந்த பட்சம் DVD வர்ற வரைக்கும் காத்திருப்பது என்னுடைய வழக்கம். அந்த DVD ம் இன்னும் வரவில்லை). ஆனால் இந்த படம் பெருவாரியாக பாராட்டப்பட்டாலும் பொருளாதார ரீதியாகவும் நன்றாக போய் கொண்டிருப்பதாக இணையத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் படித்தேன் மகிழ்ந்தேன். இந்த படம் எப்படி வித்தியாசமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தததோ அதே  மாதிரி அந்த படத்தின் விளம்பரங்களிலும் ஷங்கர் கவனம் செலுத்துவது ரொம்பவும் நல்ல விஷயம். அதிலும் இன்று வந்த விளம்பரம் ஆர்குட் இணையதளத்தில் "ஈரம்" படம் பற்றி நடை பெறும் விவாதத்தை குறிப்பிட்டு வந்துள்ளது வலைப்பதிவுகளுக்கும் அதில் வரும் சினிமா விமர்சனங்களுக்கும் திரை உலகில் ஓரளவாவது  முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஷங்கர் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் செய்யும் பொழுது பதிவுலகம் மீதான பார்வையை மற்ற தயாரிப்பாளர்கள் திருப்புவதற்கும்  ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதை ஒரு பதிவராக பார்க்கும் பொழுது ஷங்கருக்கு நன்றி சொல்லவே தோன்றுகிறது.


Read more...

ஏன் எமெர்ஜென்சி..?



கேள்வி: ''நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பின்பு நாட் டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற் றத்தைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர் கள் தீவிரமாக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எங்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தாங்கள் முன்னதாகவே கொண்டுவந் திருக்கக் கூடாதா?'' (கேள்வி கேட்டவர் பெயர் திருமதி ராஜகுமாரி சேஷாத்ரி)


பதில்: ''கொண்டு வந்திருக்க லாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா எதிர்க் கட்சிகளும், பெரும்பான்மை யான பத்திரிகைகளும் கட்டுப் பாடின்மையை மறைமுகமாக ஆதரித்து வந்தன. அரசாங்கம் எந்தத் திட்டத்தைச் சொன் னாலும் அதைக் கேலி செய்வ திலும், அதற்குத் தவறான உள் நோக்கம் கற்பிப்பதிலுமே ஈடு பட்டிருந்தன. அதனால் மக்க ளும் அவற்றைச் செயல்படுத்து வதில் அக்கறை காட்டவில்லை. நெருக்கடி நிலைப் பிரகடனத் துக்குப் பின் புதிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இது போதாது. ஒழுக்கம், கட் டுப்பாடு போன்ற அருங்குணங் களை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இன்னொருவர் நம் மீது திணிக்கும் நிலை ஏற்படக்கூடாது. இந்தக் கட்டுப் பாடும் ஒழுக்கமும் இல்லாவிட் டால் இந்தப் பெரிய தேசத்தில் நாம் எதையும் சாதிக்க முடி யாது. ஒழுக்கத்தில் சில வகை உண்டு. ஒன்று, சமுதாய ஒழுக் கம்! அதாவது, நம் வேலை களைத் திறமையாகவும், உரிய சமயத்திலும் செய்வது, நாம் வசிக்கும் பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பது... இப்படிப்பட்ட புற ஒழுக்கங்கள். இவற் றால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும்; அதன் பெருமையும் சிறந்தோங்கியிருக்கும். அதே போல் தனி மனித ஒழுக்கம்! இப்படி உடல் சுகாதாரம் முதல் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கட்டுப்பாட்டை யும் ஒழுக்கத்தையும் நாம் கடைப்பிடிக்காவிட்டால், பல வித தொல்லைகளை அனுப விக்க நேரிடும். நாம் ஒழுக்க மான வாழ்வு நடத்தினால்தான், அதிக திறமையுள்ளவர்களாகவும் திருப்தி உள்ளவர்களாகவும் வாழ முடியும்!''
(பதில் சொன்னவர் அன்றைய பிரதமமந்திரி திருமதி.இந்திராகாந்தி)
 
எமெர்ஜென்சி என்பது ஏதோ சுய கட்டுப்பாட்டையும்,தனி மனித ஒழுக்கத்தையும் கற்பிக்க வந்ததை போல சொல்லப்படும் மறைந்த இந்திராகாந்தியின் பதிலில் தெரிவதெல்லாம் செய்த தவறை மறைக்க செய்யும் செயலே. இதை விட பெரிய கொடுமை இந்த கேள்வியை கேட்ட அந்த பெண்மணி  அந்த கொடூர காலத்தை புகழ்வதுதான். ஒருவேளை எமெர்ஜென்சியை கண்டு ரசித்தவராக கூட இருக்கலாம். அந்த பெண்மணியை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பிரதமமந்திரியாக இருந்த இந்திராகாந்தியை பேட்டி எடுக்க அனுப்பியதாம் விகடன். குறைந்த பட்சம் இந்தமாதிரியான சென்சிடிவான பிரச்சனைகளுக்கான விடயத்தை அவர் தொடாமலாவது பார்த்துகொண்டிருந்திருக்கலாம் விகடன் போன்ற பெரிய பத்திரிகைகள். உங்களுக்கு எமெர்ஜென்சி எதற்காக இந்திரா காந்தியால் அமுல் படுத்தப்பட்டது தெரியுமா..?
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ல் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு விரோதமாக தேர்தல் முறைகேடுகளில் இந்திராகாந்தி ஈடுபட்டதால் அவருடைய தேர்தல் (1971 ஆம் ஆண்டு நடந்த) தேர்வு செல்லாது" என்று தீர்ப்பளித்தது.  அத்துடன் இந்திரா காந்தி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டது, உச்சநீதிமன்றம் மேல் முறையீட்ட ஏற்க மறுத்தாலோ, இல்லை இந்திராகாந்தி மேல்முறையீடு செய்யவில்லை என்றாலோ தான் இந்த தீர்ப்பு நடைமுறை படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு முழுமையான தடை விதிக்கவில்லை. இதுவே நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமானது. இந்திராகாந்தி 1971 தேர்தலில் செய்த தவறு என்ன..? அப்பொழுது பிரதமமந்திரியின் தனி செயலராக பணியாற்றிய யஷ்பால் கபூர் என்பவரை தேர்தல் முகவராக இந்திராகாந்தி நியமித்ததுதான் தவறு என்று இந்திராகாந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நாராயன் வழக்கு தொடர்ந்தார். யஷ்பால் கபூர் தன்னுடைய அரசாங்க பதவியை ராஜினாமா செயாமலேயே தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். அதாவது ஜனவரி 7 ஆம் தேதி தேர்தல் முகவராக பணியேற்றார், ஜனவரி 13 ஆம் தேதி அன்று தான் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த ஆறு நாள் கால இடைவெளிதான் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்த காரணமானது என்றால் நம்ப முடிகிறதா..?
இந்திரா நினைவு நாளில் சரித்திர புகழ் வாய்ந்த அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட காரணத்தையும் நினைவுகூர்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


Read more...

மனிதம் வளர்ப்போம்



. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரிச்மொன்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக  சீரழித்துள்ளது. இதை இன்னும் ஒரு பத்து பேர் பார்த்திருக்கிருகிறார்கள் ஆனால் யாருமே போலீசை கூப்பிடவில்லை. அத்துடன் இந்த "பார்வையாளர்கள்" அந்த கொடூரத்தை படம் பிடித்துள்ளார்கள். எங்கே போனது மனிதாபிமானம்..? குற்றம் செய்பவர்களை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களுக்குதான் தண்டனை அதிகம் என்று சட்டம் சொல்லுகிறது (அமெரிக்க சட்டமும் இதை சொல்லுதான்னு தெரியலை). அப்படி பார்த்தால் இந்த பதினைந்து பேரும் மிகப் பெரிய தண்டனைக்குரியவர்கள். இது குறித்து சமீபத்தில் C.N.N டி.வியில் வந்த ஒரு கலந்தரையாடல் நிகழ்ச்சி (LARRY KING LIVE), பல விஷயங்களை அலசியது. அதில் குறிப்பாக தீபக் சோப்ரா என்பவர் சொன்ன விஷயம், இது போன்ற கொடூர மனிதர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் வளர்க்கப்படும் சூழலில் இது போன்ற கொடூர விஷயங்கள் மிகவும் சாதரணமாகவும் அன்றாட நிகழ்வுகளாகவும் ஆகிப்போவது தான். வன்முறை அவர்கள் வாழ்கையின் ஒரு அங்கம், எனவே இதை அவர்கள் சாதரண நிகழ்வுகளிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மனித மூளையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. இவற்றை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை அதனால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.
1. Limibic Brain
2. Reptalian Brain
3. Cardical Brain
இதில் Limbic Brain என்பது மனிதனின் உணர்வு சம்மந்தபட்டவைகளை தீர்மானிப்பவை. இந்த பகுதி பாதிக்கப்பட்டாலோ அல்லது பழுதடைந்தாலோ சமூகத்திற்கெதிரான சிந்தனைகளும்,அடுத்தவர்களின் நலனை பற்றி அக்கறை கொள்ளாத மன நிலையும் ஏற்படும். இதை சரி பண்ணி கொள்வதற்காகத்தான் ஆன்மிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களை குழந்தை பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும் அதாவது நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது அது நாம் தவறு செய்யும் போது தண்டிக்கும். என்றெல்லாம் விளக்கி சொல்லவேண்டும். சிறுவயதிலிருந்தே தியானம் போன்றவற்றை கற்று கொடுத்தலின் மூலமாக அவர்கள் மூளையின் Limbic பகுதி பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளலாம். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Daniel Amen என்ற உளவியாளர் (Psychiatrist) சொல்கிறார், மூளையின் முன் பகுதியில் தான் நல்லது கெட்டதை பகுத்தறியும் தன்மை உள்ளதாகவும் அதை குடியின் மூலமாகவும், போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதன் மூலமாகவும் இழக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் படத்தில் வரும் வாலி பாடலை போல "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.." . குழந்தைகளுக்கு மனிதத்தை போதிப்போம் மனிதம் வளர்ப்போம்.


Read more...

ராகு-கேது பெயர்ச்சி உண்மை


இன்னைக்கு ராகு-கேது பெயர்ச்சின்னு சொன்னாங்க அப்பவெல்லாம் நான் பெரிசா நம்பலை. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு அந்த நம்பிக்கை வந்திடுச்சு. நீங்க இதுக்கு முன்னாடி எப்பவாது ஜெயலலிதா தன்னுடைய கட்சி கூட்டத்தில் மற்றவர்கள் உட்காந்திருக்க தான் எழுந்து நின்று பேசி இருக்கிறாரா..? நேத்து நடந்த கூட்டத்துல பேசி இருக்காரே, அப்ப ராகு-கேது பெயர்ச்சி வந்துடுச்சுன்னுதானே அர்த்தம்.
(படம்: தினமலர்)


Read more...

ராமதாசு ஒரு சீரியஸ் பீசு..!

இலங்கைத் தமிழர்களை ராஜபக்சே கொன்று குவித்த ரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


 இந்த பேச்சை பேசியவர் வேறு யாருமல்ல பா.ம.க தலைவர் ராமதாசு அவர்கள்தான். ராமதாஸ் என்னதான் கூட்டணி மாறி அவ்வப்பொழுது காமெடி செய்தாலும் , அவருடைய எல்லா பேச்சுகளையும் காமெடி என்று எடுத்துக்கொள்ளமுடியுமா..? அவர் சரியா  சொல்றப்ப  ஏத்துக்கத்தானே வேணும்.  "யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கை குலுக்குவானா..?" ரொம்பவும் யோசிக்க வேண்டிய விடயம். நான் நியூயார்க்கில்  ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது 

ஒரு சக ஊழியருடன் காரில் பயணம் செய்ய நேர்ந்தது. அவர் யூத இனத்தை சேர்ந்த ஒரு பெண். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நாங்கள் பயணம் செய்த அந்த கார் லெக்சஸ் (LEXUS) ரக கார் என்பதை தெரிந்து கொண்டேன். அடுத்து நான் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "இந்த ரக கார்கள் ஜெர்மனில் தானே தயாரிக்கப்படுகிறது.." என்று கேட்டேன். சட்டென்று முகம் மாறிய அவர் "இல்லை இல்லை இது ஜப்பானில் தயாரிக்கப்படும் கார். இது ஜெர்மனியில் தயாரித்தால் இந்த காரை நான் பயன்படுத்தவே மாட்டேன்" என்றார்.  இது நடந்தது 2005 ல், இதை தவறென்றும் சொல்ல முடியாது. ஏன்னா அதன்  வலியும் வேதனையும் அவர்களுக்கு தானே தெரியும். அந்தவிதத்தில் ராமதாஸ் சொன்ன உதாரணம் ரொம்பவும் சரியாக சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (அப்பாடா "ராமதாசு ஒரு காமெடி பீசு" எழுதினப்ப ஒருத்தரு ஆட்டோ வர வாழுத்துக்கள்-ன்னு சொல்லி இருந்தாரு அதை இப்ப சரி கட்டியாச்சுன்னு நினைக்கிறேன்..ஹும் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.).


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP