அம்மன் பெயரும் ... தமிழ் பெயரும்

நேற்று நடந்த கலைஞர் பேத்தி திருமணத்தில் பேசிய கலைஞர் , தன்னுடைய பேத்திக்கு பூங்குழலி என்று பெயர் வைக்க காரணம் அவரது சொந்த ஊரான திருக்குவளையில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் வண்டமரும் பூங்குழலி என்னும் அம்மனின் பெயர் ஞாமபகத்திற்கு வந்ததாகவும் அதனாலேயே அந்த பெயரை வைத்ததாகவும் கூறினார். அதில் குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் ...
1. கலைஞர் அம்மன் பெயர் என்பதால் அந்த பெயரை தான் வைக்கவில்லை என்பதாகவும் அதில் உள்ள தமிழ் வளமையின் காரணமாகவே வைத்ததாகவே சொன்னது. அவருக்கு ஏன் அம்மன் பெயர் ஞாமபகத்திற்கு வந்தது என்று நமக்கு கேட்க தோன்றினாலும் அவர் உண்மையை சொன்னதற்காக நாம் மனதார பாராட்டலாம்.
2. ஒரு முறை ஒரு விழாவில் பேசும் போது "கடவுளை நான் நினைக்கிறேனோ இல்லையோ கடவுள் வாழும் வண்ணம் என் மனதை தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும். " அப்படின்னு சொன்னார். அது போல தமிழ் வாழ்கிறதோ இல்லை சமஸ்கிருதம் வாழ்கிறதோ எந்த பெயரிலோ கடவுளின் பெயரை சொல்பவருக்கும் பலன் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது அந்த விதத்தில் கலைஞரும் பலன் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP