இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரு நேர்மையான பார்வை

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்ன வழி இருக்கிறது?
இன உணர்வு என்பது அடிப்படையானது. ரத்தத்தில் ஓடுகிற விஷயம் இது. நாளைய வரலாற்றில் 'தமிழர்களுக்கு மட்டும் அது அவ்வளவாகக் கிடையாது' என்று எழுதப்பட்டால், அது எவ்வளவு கேவலம்! தமிழர்கள் அங்கே பேராபத்தில், மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக் கிறார்கள். அவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, நாம் மார்பில் அடித்துக்கொண்டு புலம்புவது பெட்டைத்தனம். சுவரில்லாத கிணற்றில் குழந்தை விழுந்து செத்த பிறகு, அழுதுவிட்டுச் சுவர் எழுப்புவதை நாம் ரொம்ப காலமாகச் செய்து வருகிறோம். உலகில், எந்த நாட்டிலும் தமிழனை யாரும் துன்புறுத் தக் கூடாது என்கிற நிலைமையை உருவாக்கி, நாம் கம்பீரமாக நிற்க வேண்டாமா? ஆகவே, உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். யுத்தம் என்பது முடிவான தீர்ப்பை எப்போதுமே தந்ததுஇல்லை. இதை பிரபாகரன் புரிந்துகொண்டு, தமிழ் மக்களுக்காக, பேச்சுவார்த்தைகளுக் காக அமர வேண்டும். அதற்காக சிங்கள அரசையும் இந்தியா வற்பு றுத்தி உட்காரவைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்கால தமிழ்ச் சமுதாயம் நம் எவரையும் மன்னிக்காது!

மதன் கேள்வி-பதில் பகுதியில் இந்த வாரம் வந்த ஒரு கேள்விக்கான மதனின் பதில் இது. மதனின் இந்த பதிலை வழி மொழிகிறேன் இல்லை முழு மொழிகிறேன்.


Read more...

நாடகம் விடும் வேளைதான் உட்சகாட்சி நடக்குதம்மா..

தலைப்பை படித்தவுடனே நீங்கள் நாம் எதை பற்றி பேசப் போகிறோம் என்று யூகித்திருந்தால் நீங்கள் பெரிய ஆள்தான் என்று உங்களுக்கு நீங்களே ஒரு தட்டு தட்டிக் கொள்ளுங்கள்.
இலங்கை தமிழர் படுகொலைக்காக தமிழக முதல்வர் இருந்த உண்ணாவிரத நோன்பினை பற்றித்தான் சொல்ல போகிறோம். அந்த நாடகத்தினை மன்னிக்கவும் அந்த உண்ணா நோன்பினை சன் தொலைகாட்சி இணைப்பு பெற்றவர்கள் அனைவரும் கண்டிருக்கலாம். பார்க்கத்தவரியவர்களுக்காக நாம் கண்ட சில காட்சிகள்...
1. மண்டபம் மாதிரி இருந்த ஒரு திறந்த அரங்கத்தில் தான் இது நடைபெற்றது (அண்ணா நினைவிடம்) . முதல் சிறிது நேரம் அமர்ந்திருந்த கலைஞர் சிறிது நேரத்தில் படுத்து விட்டார். கால் மாட்டில் மனைவி தாயாளு அம்மாளும், தலை மாட்டில் துணைவி ராஜாத்தியம்மாளும் அமர்ந்திருக்க.
2. பிரிவுக்கு முன் இருந்தது போலவே இப்போதும் இருப்பதாக தயாநிதி காட்டிக் கொண்டார். சன் தொலைக்காட்சியின் ஒளிபதிவாலருக்கு இடம் பிடித்து கொடுத்ததாகட்டும், தாயாளு அம்மாவின் காதில் அடிக்கடி சில விஷயங்கள் சொல்லி செல்ல தட்டு வாங்குவதிலாகட்டும், வந்த விருந்தினர்களை கவனிப்பதிலாகட்டும் இப்படி எல்லாவற்றிலும். (சும்மாவா ..!!!)
3. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உண்ணாவிரதத்தினை கைவிடுமாறு கோஷம் போட்டுக்கொண்டே இருந்தது உட்ச பச்ச காமெடி. (நீங்கள் வேண்டும் நீங்கள் வேண்டும் தயவு செய்து உண்ணா விரதத்தை கைவிடுங்கள் என்ற கோஷம் மட்டும் காதில் விழுந்தது).
4. சில அமைச்சர்களின் பாட்டை நினைத்தால்தான் இன்னும் பாவமாக இருந்தது இவ்வளவு சொத்து சேர்த்த பிறகும் (கஷ்ட்டப்பட்டு) . அவர்கள் ஒரு சேரில் கூட அமர்த்தப்படாமல் நின்று கொண்டே இருந்ததைப் பார்க்க.
5. தயாநிதியும் கனிமொழியும் அக்னி நட்சத்திர கார்த்திக் பிரபு ரேஞ்சுக்கு அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள்.
6. "இவர் குடும்பத்துக்கு செய்வார் நாங்க பார்த்துக்கிட்டே இருக்கனுமா..?" என்று பேசி கட்சியிலிருந்து விலகிய நடிகர் ராதா ரவி எல்லா குடும்ப உறுப்பினர்களுடனும் மரியாதையாக பணிந்து பேசி தன்பங்கை சரி வர செய்தார்.
7. கூடியிருந்த மக்களை விட அதிக எண்ணிக்கையில் காமிராக்கள் இருந்தது நாடகத்தின் வெற்றியை உறுதி செய்ய இயக்குனர் (?!!) மிகவும் பாடு பட்டிருந்தது தெரிந்தது.
8. கலைஞர் போன்ற பழுத்த அரசியல்வாதிகளே இந்த மாதிரியான நாடக அரங்கேற்றத்தை இத்தனை முறை செய்வார்கள் என்றால் வருங்கால தமிழக அரசியலை நினைத்தாலே பயமாக இருக்கிறது. (விடிவு காலமே வாராதான்னு ).
9. இந்த உண்ணாவிரதம்தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதென்றால் ஏன் இதை முன்னமே செய்யவில்லை ...? (ஒரு வேலை தமிழக உளவுத்துறை அவ்வளவு மெதுவாக செயல்படுகிறதா...?)
10. இதெல்லாம் போதும்டான்னு சொல்லி ஸ்டாலின் தனது ஆதாரவாளர்களுடன் தனியாக அமர்ந்திருந்தது, இயக்குனரின் கவனக்குறைவோ (!?). (அதான் தயாநிதி இருக்காரேன்னு நினைச்சிருக்கலாம்..!)
11. மன்னராட்சி இன்னும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது உற்றார் உறவினர்கள் மேடை வீற்றிருப்பாய் பார்க்கும் பொழுது .
(கலைஞர் சொன்ன "பாலைவன ரோஜாக்கள்" மாதிரி "மக்களாட்சியில் ஒரு மன்னரோ"!!)
12. கலைஞர் இந்த வயதான காலத்திலும் தன்னை வருத்திக் கொண்டதை தவிர குறிப்பிடும்படி இந்த நாடகத்தில் ஒன்றும் இல்லை.

சன் டிவி டாப் டென் பாணியில் சொல்வதென்றால் "உண்ணா நோன்பு -- உப்பில்லாமல் சப்பில்லாமல்".


Read more...

இலங்கை பிரச்சனையும்... அனுமார் வாலும்.

1983-- என்று நினைக்கிறேன் எங்கள் வீட்டிற்கும் எதிர் வீட்டில் உள்ளவர் இலங்கை சென்றார். அப்பொழுதெல்லாம் வெளிநாடு சென்றாலே பணம் சம்பாதிப்பதற்காகத்தான் செல்வர் என்பது எனது எண்ணமாய் இருந்து வந்தது. அது ஓரளவு உண்மையும் கூட. அப்படி சென்று திரும்புவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று பார்ப்பது ஒரு வழக்கம், அப்பதானே சாக்கலேட் , பிஸ்கட் எல்லாம் கிடைக்கும் (எப்படி..!). அப்படி அவரை பார்க்க சென்றிருந்த போது அவர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது, "கொழும்பு மிகவும் சுத்தமா தண்ணீர் போட்டு துடைத்து வைத்தது போல இருக்கும். உயர்ந்த கட்டிடங்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட வாகன விதி முறைகள் என்று பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது. மேலும் நம்ம ஊர் ரெண்டு ரூபாய் அந்த ஊர் ஒரு ரூபாய்க்கு சமம்.." அப்படின்னு சொன்னார். இப்படி அறிமுகமான இலங்கையில் அடுத்த சில மாதங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விட பட்டதாக சொல்லி எங்க பள்ளி கூடத்தில் திரைப்படம் காண்பித்தார்கள். அதை காப்பாற்ற இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் செயல் பட்டு வருவதாகவும் அதன் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் ஒன்று எங்கள் ஊரில் முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமிழ் பேசினாலும் விநோதமாகவே இருந்தது அந்த மொழி, அப்புறம் தான் தெரிந்தது அதுதான் சுத்த தமிழ் என்று. ஆனால் காலம் ஒருண்டோடினாலும் அங்கு நடக்கும் விடயங்கள் எதுவும் மாறவில்லை. இலங்கேஸ்வரனை எதிர்க்க சென்ற அனுமன் தனக்கு சபையில் மரியாதை செய்யப்படாதது கண்டு தனது வால் மூலம் இருக்கை ஏற்படுத்திக்கொண்டார் என்று இராமாயணம் சொல்கிறது. அந்த வாலை போலவே வளர்ந்து கொண்டே போவது நாம் சார்ந்த தமிழ் சமுதாயத்துக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த உலகத்திற்கும் நல்லதில்லை.

இந்தியா ஏன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை, ஆட்சியிலிருக்கும் நடுவண் அரசு காங்கிரஸ் அதன் முக்கியமான தலைவரான ராஜிவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் என்ற எண்ணமும் ஒரு காரணம். விடுதலை புலிகளை ஆதரிப்பவர்களை கேட்டால் அது ஒரு தவறு அதை மறந்து விடுங்கள் என்று சுலபமாக சொல்வதுண்டு. அதே மாதிரி ஏன் விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை மன்னித்திருக்க கூடாது அவர் தவறு செய்யிதிருக்கிற பட்சத்தில் என்று காங்கிரசும் ஒரு கேள்வி எழுப்பலாம். வன்முறைக்கு வன்முறை தீரவில்லை என்ற தீர்வினை மட்டுமே இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக தரமுடியும். இதை உணர்ந்து இலங்கை அரசும் அதன் வன்முறை போக்கை கை விடுத்து பேச்சு வார்த்தைக்கு உடன் படவேண்டும். அமெரிக்க நாடுகளும், ஐரோப்பா நாடுகளும் இந்த பிரச்சனையில் தலையிடுவது இலங்கை அரசின் வன்முறை போக்கை கை விடுக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அதை விடுத்து படையை அனுப்புவது போர் புரிவது என்று மீண்டும் இன்னொரு பிரச்சனைக்கு விதையாவதை விட, அமைதி பேச்சின் மூலம் விடை கண்டு உலகில் நடை பெரும் இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பிரச்னையை முன்னுதராமாக ஆக்கலாம்.


Read more...

அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 3

ரொம்ப நாளாச்சு இந்த பகுதிக்கு வந்து ஆனால் திரும்ப வருவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது. முதல் கட்ட வாக்கு பதிவு நடந்து முடிந்து விட்டது. வழக்கம் போல் கூட்டணி தாவல்கள், கடைசி நேர உடன்பாடுகள், பேரங்கள் எல்லாம் கன ஜோராக நடைபெற்று வருகிறது. சில பத்திரிக்கைகள் இதுதான் முதல் முறை என்பது போல் எழுதி வருவது அதை விட பெரிய கொடுமை. சரி இதை தடுக்க என்னதான் வழி...? பேசாமல் அரசியல் என்பதை சேவை என்ற வளையத்திலிருந்து வெளியிலெடுத்து வியாபாரம் என்ற வட்டத்திற்குள் அடைக்க வேண்டும். தயவு செய்து கோப படாமல் சிந்தித்து பாருங்கள் இது உண்மையென புரியும். இப்பொழுது என்ன நடக்கிறது "அரசியல் சேவை" என்ற பெயரில் "அரசியல் வியாபாரம்" தானே நடக்கிறது. சரி இதை எப்படி அங்கீகரிக்கப்பட்ட வியாபாரம் ஆக்க வேண்டும் ..?
பா.மா.க என்ற கட்சி என்ன பண்ணிக் கொண்டிருக்கிறது ஒரு முறை தி.மு.க ஆதரவு அடுத்த தேர்தலுக்கு அண்ணா.தி.மு.க என்று மாறி மாறி இந்த கொள்கை அரசியல் கோட்பாட்டு அரசியல் என்பதெல்லாம் வெறும் வெட்டி பேச்சு என்பதை நிரூபித்து விட்டது இதை எந்த சட்டமாவது தடுக்க முனைந்ததா..? இல்லை மக்களான நாம்தான் அந்த கட்சியை மண்ணை கவ்வ வைத்து ஒதுக்கி விட்டோமா..? இல்லை. அதாவது மவுன புரட்சி என்பதை போல மவுன அங்கீகாரம் கொடுத்து விட்டோம் எதற்கு அரசியல் வியாபாரத்திற்கு தான். அதை பேசாமல் சொல்லிவிட்டே செய்யலாமே. உதாரணமாக பா.ம. க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் இந்த இந்த நல திட்டங்களை அமுல் படுத்துவோம் என்றும் அப்படி அமுல் படுத்தப்படும் திட்டங்களுக்கு இவ்வளவு சதவீதம் உதவி தொகையாக (கமிஷனாக ) பெற்றுக்கொள்ளப்படும். அறிமுகபடுத்தப்படும் நல திட்டங்களின் தேவைகளுக்கேற்ப நாமும் அந்த கட்சிக்கு வாக்களிக்கலாம். உதாரணமாக கூவம் சுத்தப்படுத்தப்படும் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்றும், அதன் மொத்த தொகையில் 10% தொகை பா.ம.க கட்சிக்கு வந்து சேரும் என்றும் கொள்ளலாம். சரி அப்படி வந்து சேரும் தொகை எப்படி கண்காணிக்க படும் என்று கேட்டால், கட்சிகளுக்கென்று துவக்கப் படும் அந்த வங்கி கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் அது தினசரிகள் மூலமாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ மக்களுக்கு தெரிவிக்கப்படும். கேட்பதற்கு சிரிப்பா இருக்கா..? ஆனால் இது நடக்காது என்றோ முடியாது என்றோ எனக்கு தோன்றவில்லை. தற்பொழுது நடைமுறையில் உள்ள தகவலறியும் சட்டம் போலவும், வியாபாரம் எனப்படும் பொழுது பங்கு சந்தையை உள்ளே இழுக்க முடியாமல் இருக்க முடியவில்லை, எப்படி பொது இடத்தில் பங்கு சந்தையின் விவரங்கள் வெளியிடப் படுகிறதோ அது போல கட்சியின் வங்கி கணக்கை ஏன் காட்டக்கூடாது..? அதே போல் கூவம் சுத்தப்படுத்தும் திட்டத்தை மூன்று மாதத்தில் முடிக்காமல் போவதற்கு என்னென்ன தடை கற்கள் இருக்கிறதென்பதை, ஒரு பங்கை வெளியிடும் அன்று அந்த பங்கை வெளியிடும் நிறுவனம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதால் உள்ள எதிர்மறையான விஷயங்களையும் பட்டியலிட்டு சொல்லுவதைப் போல் ஏன் சொல்ல முடியாது. அது மட்டுமில்லாமல் ஒரு திறந்த நிர்வாகம் நடை பெறுவது அந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் என்றே தோன்றுகிறது. இது பா.ம.க வுக்கு மட்டுமல்ல காங்கிரஸ்,பா.ஜ.க என அனைவருக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து இது அடுத்த தலை முறைக்கான அரசியலுக்கு ஒரு ஆதாரமாக இல்லாவிட்டாலும் ஆரம்பமாகவாது இருக்கும் என்று நம்புகிறேன்.


Read more...

பூ -- ஒரு பார்வை

ரொம்ப நாளாக இந்த படத்தை பார்க்க காத்திருந்தேன். இந்த படம் நாஞ்சில் நாடன் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. வெகு நாட்களாவே தமிழ் திரை உலகம் நாவல்களை தழுவி எடுக்க வேண்டும் என்ற கோஷம் ஆங்காங்கே கேட்பதுண்டு எனக்கு தெரிந்து சமீபத்தில் வந்த சொல்ல மறந்த கதை (நாஞ்சில் நாடன்--எழுதியது) தங்கர்பச்சான் இயக்கியது, அதே மாதிரி தங்கர்பச்சான் எழுதிய சிறு கதையை ஒன்பது ரூபாய் நோட்டு அவரே இயக்கினார், இந்த படங்கள் பெரிய அளவில் வசூலை வாரி குவிக்கவில்லை என்றாலும், நல்ல படங்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். இந்த பூ-வும் அதற்கு விதிவிலக்கல்ல.
தன் சொந்த மாமன் மகன் மேல் காதல் கொள்ளும் ஒரு கிராமத்து பெண் தன்னுடைய காதலுக்காக காதலையே துறப்பதுதான் கதை சுருக்கமாக சொல்ல முடியும். தன் மாமன் மகனை ஒவ்வொரு அங்குலமாக காதலிக்கும் மாரி (கதாநாயகியின் பெயர்) கிட்டத்தட்ட அதே அளவு காதலை அவள் மாமனிடமிருந்தும் பெற காரணமாக அவனின் கல்லூரி தோழியே காரணமாக இருப்பது இந்த படம் ஒரு எதார்த்த படம் என்பதை உணர்த்துகிறது. எனக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக படுவது கதாநாயகனின் அப்பாவாக வரும் பேனாக்காரர் தான். மாட்டு வண்டி ஒட்டி பிழைக்கும் அவர் தன்னை யாரும் "வண்டிக்காரன்" என்று அழைப்பதை தடுப்பதற்காகவும், தான் வண்டி ஒட்டி பிழைத்தாலும் தனக்கு எழுத படிக்க தெரியும் என்பதை காட்டிக்கொள்ளும் விதமாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது, தன்னை வண்டிக்காரன் என்று குறிப்பிட்டதற்காக அவருடன் சண்டை போட்டுக்கொண்டு செல்வதாகட்டும், தன் மகன் என்ஜினியர் படிப்பு படித்தவுடன் முப்பத்தைந்தாயிரம் சம்பாதிப்பானா என்று கேட்கும் தனது முதலாளிக்கு "இல்லைங்கையா கூடவே கிடைக்கும்னு சொல்ராங்கயா.." என்று சொல்வதாகட்டும், இல்லை ஒரு மெக்கானிக் எஞ்சினியர் படிப்பு படித்தவனுக்கு ஒரு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் வரையே ஆரம்ப கால சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்தவுடன் நொறுங்கி போவதாகட்டும், தன் முதலாளி மகளை கட்டினால் தனது குடும்பத்தின் வறுமை தீரும் என்று எண்ணி தனது தங்கை மகளை தனது மகனுக்கு கல்யாணம் பண்ணாமல் விடுகிறார். இதன் விளைவாக குடும்பத்தில் யாரும் நிம்மதி இன்றி தவிப்பதும், இதற்கெல்லாம் தான் தான் காரணம் என்று அறிந்தவுடன் பூவின் காலில் விழுவதாகட்டும் எல்லா காட்சிகளுமே அவரை சுற்றியே நடப்பது அவரையே படத்தின் பிரதான கதா பாத்திரமாக காட்டுகிறது.
எந்த படமும் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப் பட்டால் அந்த படம் நிச்சயம் மக்களை சென்றடையும் என்று நம்புகிறேன். இந்த படத்தைப் பற்றி அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நான் எங்குமே படித்ததில்லை. இது கூட இந்த படத்தின் தோல்வி காரணிகளில் ஒன்றாய் இருக்கலாம். குறைந்த பட்சம் தலைப்பையாவது மாற்றி இருந்திருக்கலாம் இப்படி.....
"தன்மான தகப்பன்" அல்லது "பேனாக்காரர்" .


Read more...

வசனங்களில் வாழ்க்கை ....

சில வசனங்கள் திரையிலிருந்து நீண்டு நம் வாழ்க்கையையும் தொட்டு தொடர்ந்து வருவதுண்டு. அதிலும் குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களில் நம்மை போன்ற நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு வடிகால்கள் உண்டு. நாம் சில விடயங்களை இப்படி எடுத்துக்கொள்ள வில்லை என்றால் வாழ்க்கை வறண்ட பாலையாக மாறி விடும் அபாயம் உண்டு. நீங்க இதுவரை அப்படி நினைக்க வாய்ப்பில்லை என்றால், இந்த கட்டுரை அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு...


காட்சி-1: நீங்கள் காலை 9.05 -க்கு அலுவலகத்தில் நுழையும் போது உங்கள் மேலாளர் ஏன் ஐந்து நிமிடம் தாமதம் என்று கேட்கும் போது...
வசனம்: அப்பாடா இப்பவே கண்ணை கட்டுதே....
காட்சி-2: நீங்கள் உங்கள் அலுவலக நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் அலுவலக மேலதிகாரி அழைக்கும் போது ...
வசனம்: பாஸ் இவங்க இப்படித்தான் .. இவங்களுக்கு வேற வேலையே இல்லை. ஏதாவது இடைஞ்சல் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க இதுக்கெல்லாம் பயந்தா நாம "தொழில்" பாக்க முடியுங்களா...

காட்சி-3: நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்தவுடன் உங்களது பழைய நிறுவனத்தைப் பற்றி சொல்லும் போது ...
வசனம்: அது கம்பெனி இதெல்லாம் ஒரு கம்பெனின்னு இங்கெல்லாம் ஹும் எப்படித்தான் வேலை பார்க்கிறீங்களோ..

காட்சி-4:உங்கள் அணியில் உள்ளவர்கள் உங்கள் மேலாளரைப் பற்றி குறை சொல்லிவிட்டு உங்களிடம் அதை பற்றி கருத்து கேட்கும் போது...
வசனம்: (மனசுக்குள்) ஆஹா வளைய விரிக்கிரானே வம்புக் கிழுக்கிரானே....

காட்சி-5: நீங்கள் உங்கள் மேலாளரை பற்றி குறை சொல்லும் போது ஒரு நபர் மட்டும் அதை "வெகுவாக" ஆதரித்துப் பேசினால் ....
வசனம்: ஒருவேளை இவன் "அவனா" இருப்பானோ..?

காட்சி-6: நீங்கள் செய்யாத தவறுக்காக உங்கள் மேலாளர் உங்களை வறுத்தெடுக்கும் போது ...
வசனம்: எப்படித்தான் நம்மளை கண்டுபுடிக்கிராங்கன்னே தெரியலையே...

காட்சி-7: நீங்கள் அந்த தவறை செய்யவில்லை என்பதை அவரே உணர்ந்து உங்களிடம் சொல்லும் போது .....
வசனம்: நல்லா கிளப்புறாங்கடா பீதிய...

காட்சி-8: நீங்கள் உங்கள் சக அலுவலரிடம் பேசும் போது நான் நிச்சயமா இந்த கேள்வியை அடுத்த கூட்டத்தில் (மீட்டிங்கில்) கேட்க போறேன் என்று சொன்னதும் அதை "மிகவும்" ஆமோதிக்கும் விதமாக சொல்லும் நபரை பார்த்து ...
வசனம்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரண களம் ஆக்கிட்டாங்கப்பா...

இது மாதிரி இன்னும் பல சூழல்கள் உள்ளன அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம். உங்கள் மனத்தில் தோன்றிய இந்த மாதிரியான வசனங்கள் இருந்தால் எனக்கும் தெரியப் படுத்துங்கள் நானும் பயன்படுத்திக் கொள்கிறேன்.


Read more...

ஒத்துக்குறேன் இப்ப ஒத்துக்குறேன்

இந்த வசனம் வடிவேலு வின்னர் படத்துல சொல்லுவார். சிரிக்கத் தெரியாதவர்களையும் சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவை காட்சி. சமீபத்தில் எனக்கு இப்படி நடந்த ஒரு விஷயம்...
சில நாட்களுக்கு முன் அலுவலகத்தில் நடந்த ஒரு பிரச்சனை காரணமாக மனம் குழம்பி இருந்த நான் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் நமக்கு நண்பராவார், அவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை கூறினேன், அதாவது எனக்கு நடந்த அலுவலக பிரச்சனையில் சம்மந்த பட்டவர் ஒரு பிரச்னையை பெரிதாக்க மேலதிகாரியிடம் முறையிட்டு விட்டார் என்று சொன்னேன். அவர் என்னுடைய நட்சத்திரம் ராசி எல்லாம் கேட்டார் நானும் சொன்னேன் அதை கேட்டு விட்டு அவர் சொன்னார் நானும் அதே நட்சத்திரம், அதே ராசி தான் என்று மகிழ்வுடன் கூறினார். மேலும் இந்த ராசி காரர்களுக்கு இப்பொழுது நேரம் சரி இல்லையென்றும் கொஞ்சம் படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.
அந்த சமயம் பார்த்து அந்த கோவிலின் மேலதிகாரி அவரிடம் வந்து எங்களுக்கு பின்னால் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் அர்ச்சனைக்காக காத்திருப்பதாகவும் உடனே அதை செய்யுமாறும் கூறி சென்றார். அந்த நண்பரும் அந்த அர்ச்சனையை முடித்து வருவதாக கூறினார். அந்த வேலையை முடித்து விட்டு வந்தார், அங்கே வந்தவுடன் சொன்னது இப்பவாது நம்புறியா இந்த ராசி உடையவர்களை எப்படி பாடாய் படுத்துதுன்னு. அந்த ஆளு இவ்வளவு நேரமும் உன் பின்னாடிதான் நின்னான் ஏதாவது சொன்னனா நேரா போயி மேலாளர் கிட்ட சொல்லிபுட்டான் இப்படித்தான்..என்று சொன்னார். எனக்கோ அந்த கலக்கத்திலும் மனசு விட்டு சிரிக்கிற மாதிரி இருந்தது.
இப்ப புரியுதா ஏன் வடிவேலு வசனத்தை சொன்னேன்னு.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP