இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரு நேர்மையான பார்வை

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்ன வழி இருக்கிறது?
இன உணர்வு என்பது அடிப்படையானது. ரத்தத்தில் ஓடுகிற விஷயம் இது. நாளைய வரலாற்றில் 'தமிழர்களுக்கு மட்டும் அது அவ்வளவாகக் கிடையாது' என்று எழுதப்பட்டால், அது எவ்வளவு கேவலம்! தமிழர்கள் அங்கே பேராபத்தில், மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக் கிறார்கள். அவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, நாம் மார்பில் அடித்துக்கொண்டு புலம்புவது பெட்டைத்தனம். சுவரில்லாத கிணற்றில் குழந்தை விழுந்து செத்த பிறகு, அழுதுவிட்டுச் சுவர் எழுப்புவதை நாம் ரொம்ப காலமாகச் செய்து வருகிறோம். உலகில், எந்த நாட்டிலும் தமிழனை யாரும் துன்புறுத் தக் கூடாது என்கிற நிலைமையை உருவாக்கி, நாம் கம்பீரமாக நிற்க வேண்டாமா? ஆகவே, உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். யுத்தம் என்பது முடிவான தீர்ப்பை எப்போதுமே தந்ததுஇல்லை. இதை பிரபாகரன் புரிந்துகொண்டு, தமிழ் மக்களுக்காக, பேச்சுவார்த்தைகளுக் காக அமர வேண்டும். அதற்காக சிங்கள அரசையும் இந்தியா வற்பு றுத்தி உட்காரவைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்கால தமிழ்ச் சமுதாயம் நம் எவரையும் மன்னிக்காது!

மதன் கேள்வி-பதில் பகுதியில் இந்த வாரம் வந்த ஒரு கேள்விக்கான மதனின் பதில் இது. மதனின் இந்த பதிலை வழி மொழிகிறேன் இல்லை முழு மொழிகிறேன்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP