சமரச நாயகன் -- திருநாவுக்கரசர்



 நாம எப்படியாவது பணம் சம்பாரிச்சு பெரிய ஆளா ஆயிட மாட்டமா...? என்று வான் பார்க்கும் நம்மை போன்ற சராசரி ஆட்கள் நமது அன்றாட வாழ்க்கையில் செய்து கொள்ளும் சமரசங்களை எப்பவாது எண்ணிப்பார்ப்பதுண்டா..? சரி அதுக்கும் திருநாவுக்கரசுக்கும் என்ன சம்மந்தம்..? அப்படின்னு நீங்க கேட்கலாம். சமரசங்களுக்கும் திருநாவுக்கரசருக்கும் நிறையவே தொடர்புண்டு.
அவர் ஏன் சமரசம் செய்து கொண்டார் குறித்து இரு வேறு கருத்துக்கள் உண்டு. பதவிக்காக...?  ஒன்று, மற்றொன்று தொழிலை நடத்தனுமே அப்படின்னு. ஆனா நான் என்ன நினைக்கிறேன்னா வேற வழி இல்லையோன்னு.
எனக்கு பிடித்த அரசியல் வாதிகளில் திருநாவுக்கரசரும் ஒருவர். இல்லை முதன் முதலா ஒரு அரசியல்வாதியா நான் ரசித்தவரும் ஆதரித்தவரும் திருநாவுக்கரசர் தான். அப்போவெல்லாம் எங்க ஊரு பேரு பத்திரிக்கையில வந்துச்சுன்னா அது திருநாவுக்கரசர் சம்மந்தப் பட்ட செய்தியாகத்தான் இருக்கும். விவரம் அவ்வளவாக தெரியாத காலத்திலும் திருநாவுக்கரசர் எனக்கு ஹீரோவாக தெரிந்தார் ஓரளவு விவரம் தெரிந்த இந்த காலத்திலும் அவர்  ஹீரோவாகவே தெரிகிறார். காரணம் இன்றைய தேதி வரை அவர் ஒரு ஸ்திரமான  அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் அவரை ஒரு "கட்சி மாறி" என்றே பாலாராலும் பார்க்கும் படி செய்யும். ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் எடுத்த எவ்வளவு பெரிய முடிவுகளை, நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறோம் அது மாதிரி ஒரு அரசியல்வாதியாக நிறையவே சமரசங்களை பலரும் செய்வது இயற்கை தான். மற்றவர்களில் இருந்து திருநாவுக்கரசர் எப்படி வேறுபடுகிறார் என்றால் தனது தொகுதியான அறந்தாங்கியில் அவர் தான் இன்றும் வெற்றி பெறுகிறார், இல்லை அவர் சார்பாக நிற்பவர் வெற்றி பெறுகிறார். அது அந்த தொகுதி மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அபிமானத்தை தெளிவாக காண்பிக்கிறது. ஒரு நல்ல அரசியலவாதி அதைத்தானே மக்களிடமிருந்து பெற  வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த சின்னத்தில் நின்றாலும், எந்த கட்சியின் சார்பில் நின்றாலும் அவர் தானே வெற்றி பெறுகிறார். அதானால் தான் ஒரு சாதாரண மனிதனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள செய்துகொள்ளும் சமரசங்களை திருநாவுக்கரசரின் அரசியல் சமரசங்களோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.
70-களில் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆரின் ஆட்சி முழுமைக்குமே தொடர்ந்து பதவி வகித்து வந்திருக்கிறார்.
 முதல் வெற்றியை அடைந்த உடனேயே துணை சபாநாயகராக ஆக்கப்பட்டவர். தொடர்ந்து வந்த தேர்தல் வெற்றிகளிலும் அவர் பல துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவு திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்வின் வளமான பகுதியின் மறைவாகவே பார்க்கப்படுகிறது இல்லை கடந்த கால வரலாறு சொல்கிறது. அதற்கு பிறகுதான் அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக பார்க்கும் அளவிற்கு மாற்றியது என்று எனக்கு தோன்றுகிறது. எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்த போதிலும் சரியான அரசியல் அனுபவமோ முன்னேற்பாடுகளோ இல்லாத ஜானகியை ஆதரிக்க ஒரு அ.தி.மு.க வெறியரான  திருநாவுக்கரசரால் முடியவில்லை. மேலும் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு அறிமுகப்படுத்திய ஜெயலலிதாவை ஆதரிக்கிறார். இன்று கூட, அதாவது திருநாவுக்கரசர் பேரை கேட்டாலே ஜெயலலிதா அலறும் இன்றைய சூழலில் கூட சொல்கிறார், "ஜெயலலிதாவிற்கு கூட்டம் சேர்க்கும் வலு இருக்கிறது. அது இப்பொழுது மட்டுமல்ல அவர் அரசியலுக்கு வந்த போதே இருந்தது." என்று பகிரங்கமாக ஒப்பு கொள்கிறார். இந்த மாதிரி எனக்கு தெரிந்த எந்த அரசியல் வாதியும் தனக்கு எதிர் களத்தில் உள்ளவர்களின் பிளஸ் விஷயங்களை ஒத்துக்கொள்வதில்லை. இதை திருநாவுக்கரசர் கலைஞருக்கு எதிரான களத்தில் இருந்த போது கூட பழுத்த அனுபவமும் பல பெரிய அரசியல் தலைவர்களுடன் அரசியல் நடத்திய அனுபவம் கொண்ட கலைஞர் எப்படி இந்த மாதிரியான முடிவுகளை எடுக்க ஒத்துக்கொண்டார் என்று கேட்டிருக்கிறார். அவர் பேட்டியில் சொன்னமாதிரி அந்த காலகட்டத்தில் ஒரு அதிமுக காரன் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கலந்து கொண்டார் என்றால் அது திருநாவுக்கரசர் கல்யாணமாகத்தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு எதிர் வரிசையில் இருப்பவர் கூடவும் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வைத்துக்கொள்வதுடன் அவர்களை தகுந்த இடத்தில் பாராட்ட தயங்குவதும் இல்லை. இதெல்லாம் அவரை சாதாரண அரசியல்வாதியாக பார்க்க அனுமதிக்க மறுக்கின்ற காரணங்கள்.
எம்.ஜி.ஆர் இறந்தவுடன் வந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுகிறது, அதிமுக இரண்டாக நின்ற போதிலும் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 26 இடங்கள் கிடைக்கிறது. இந்த வெற்றியில் பிரச்சாரத்தில் பெரும்பங்கு வகித்தது திருநாவுக்கரசர்தான்.  ஆனால் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் நடந்த ஒரு விரும்பத்தாகத  (!?) ஒரு செயலுக்கு பிறகு யாரை அதிமுகவின் சட்டசபை தலைவராக யாரை போடுவது என்ற சூழலில் திருநாவுக்கரசருக்குத்தான் வாய்ப்பு என அனைவரும் நினைத்திருக்கும் போது அதை வலுகட்டாயமாக மறுத்து அவரை விட அரசியல் அனுபவம் குறைந்த ஒருவருக்கு பதவி கொடுக்கப் படுகிறது. இது வெளிப்படையாக ஜெயலலிதா திருநாவுக்கரசர் மேல் வைத்திருந்த சந்தேகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதிமுகவிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்கிறார். அதுவும் ஜெயலலிதாவிற்கு கட்சியின் சின்னத்தையும் கொடியையும் வாங்கி கொடுத்து விட்டு.
அடுத்த தேர்தலில் (1990 என்று நினைக்கிறேன்) தன் கட்சியை தி.மு.கவுடன் கூட்டணி வைக்க செய்து போட்டியிடுகிறார், ராஜீவ் காந்தி கொலையானதால் தி.மு.க ஒரே ஒரு இடம் அதுவும் அந்த கட்சியில் தலைவர் கருணாநிதி மட்டும் வெற்றி பெறுகிறார். ஆனால் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று திருநாவுக்கரசரும்,கே.கே.எஸ்.ஆரும். ஆனான பட்ட திமுகவிற்கு ஒரு இடம் ஆனால் அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட , அதுவம் புது சின்னத்தில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவிற்கு இரண்டு இடம். திருநாவுக்கரசரின் அடுத்தகட்ட அரசியல் வாழ்கையை துவக்க விடாமல் செய்ய எண்ணிய ஜெயலலிதா, கே.கே.எஸ் ஆரை அ.தி.மு.க வில் இணைத்து திருநாவுக்கரசரை தனியாளாக்குகிறார். அடுத்த தேர்தல் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம், ஆட்சியில் குளறுபடி என தடுமாறிய போது, திருநாவுக்கரசருக்கு அழைப்பு போகிறது. இந்த முறையாவது வெற்றி கூட்டணியில் சேர்ந்து விடலாம் என்று பயணிக்க ஆரம்பித்த திருநாவுக்கரசருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், ஜெயலலிதாவே தோற்ற போதும், கட்சி மாறி என்று பார்க்கப்பட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெறுகிறார். இந்த முறை வேறு வழியே இல்லை திருநாவுக்கரசர் அதிமுக சட்டசபை தலைவராகிறார். ஆனால் இந்த முறை கருணாநிதி கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவை எதிரணியில் இருந்து தாக்கி பேசிய திருநாவுக்கரசரின் வார்த்தைகளை பிரயோகித்து அவரை கட்சியில் இருந்து துரத்த கோடு போடுகிறார். அதை ரோடாக்குகிறார் ஜெயலலிதா. மீண்டும் தனி கட்சி ஆரம்பிக்கிறார். இந்த முறை நடந்த துரத்தலை திருநாவுக்கரசர் இப்பொழுது இப்படி நினைவு கூறுகிறார் ..."நானே பல முறை ஜெயலலிதாவிடம் கூறி இருக்கிறேன். நீங்கள் தான் முதலில் உங்களுக்கு அடுத்து யார் வருவார்கள் என்பதில் வேண்டுமானால் சிறு சிறு உரசல்கள் இருக்காலாமே தவிர. உங்களை தலைவி பொறுப்பிலிருந்து தள்ளி விட்டுவிட்டு நான் அந்த அடத்தை அடைய முயற்சி செய்யவே இல்லை. அது போக ஒரு தலைவி என்பவருக்கு தன்னை பற்றிய ஒரு நம்பிக்கை மற்றவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் இதெல்லாம் அவசியம் தேவை ஆனால் ஜெயலலிதாவிற்கு அது இன்றைய தேதி வரை இல்லாமல் இருப்பது தொண்டர்களின்  துரதிஷ்ட்டம் தான்.இருந்தும் அவர் தலைவியாகவே நீடிப்பது அவரது அதிர்ஷ்டம்."  இந்த
 கால கட்டத்தில் கருணாநிதி பகிரங்கமாக திருநாவுக்கரசருக்கு தி.மு.கவில் சேர அழைப்பு விடுக்கிறார் சட்ட சபையிலேயே, ஆனால் திருநாவுக்கரசர் அதை ஏற்கவில்லை. மற்ற கட்சிமாறிகள் மாதிரி இருந்திருந்தால் நிச்சயம் அதை ஏற்று அப்பவே போய் இருப்பார். அடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு (இப்போ புதுக்கோட்டை ஒரு மக்களவை தொகுதி அல்ல) மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வந்த பொழுது ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு போது வேட்பாளரை நிப்பாட்டலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நினைத்து திருநாவுக்கரசர் பெயரை முன்மொழிகின்றன கருணாநிதிக்கோ, மாறனுக்கோ அதில் துளியும் விருப்பம் இல்லை காரணம் திருநாவுக்கரசர் கட்சிக்கு கூப்பிட்டும் வரலையே அப்புறம் விடுவாங்களா..? இது சம்மந்தமாக அப்பொழுது நடைபெற்ற ஒரு நிகழ்வை திருநாவுக்கரசர் இப்படி நினைவு கூறுகிறார், முரசொலி மாறன் இது பற்றி குறிப்பிடும் போது "நாங்கள் இரண்டாவது இடம் வந்தாலும் பராவாயில்லை. உங்களை ஆதரிக்க முடியாது." அப்படின்னு சொல்லியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் திருநாவுக்கரசர் நின்ற பொழுது தி.மு.க தனது பங்குக்கு அவரது ஓட்டுக்களை பிரித்து, அதாவது முரசொலி மாறன் சொன்ன மாதிரி, அதிமுக வெற்றி பெற வழிவகுத்து கொடுத்தார்கள். திமுக, பாஜக இவற்றுடன் எம்.ஜி.ஆர் அண்ணா திமுகவும் கூட்டணி வைத்து போட்டியிட்ட மக்களவை தேர்தலில் வென்று டெல்லி சென்ற பொழுது திருநாவுக்கரசருக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்றே பத்திரிக்கைகள் எழுதின கருணாநிதி-மாறன் இந்த முறையும் சாதுர்யமாக விளையாடி அனைத்து மந்திரி பதவிகளையும் தங்களது கட்சிக்கே பெற்றுக்கொண்டதுடன், திருநாவுக்கரசர் மாதிரியே ஒரு ஆளாக ஜெயித்து சென்ற வாழப்பாடி ராமமூர்த்திக்கு வாங்கி கொடுத்து திருநாவுக்கரசரை இந்த முறையும் கை கழுவி னார்கள். இது சம்மந்தமாக வாஜ்பாயுடன் பேசிய பொழுதுதான் அவர் பேசாமல் நீங்கள் எங்க கட்சிக்கே வந்துடுங்க அப்படின்னு சொல்லிருக்கிறார். அதை நம்பி அந்த கட்சிக்கு போனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக வுடன் கூட்டணி கண்டது பாஜக. இப்போ ஜெயலலிதா முறை "யாருக்கு வேணுமினாலும் சீட் கொடுங்க ஆனா திருநாவுக்கரசருக்கு மட்டும் கொடுக்காதீங்க" அப்படின்னு சொல்லி தேர்தலை சந்தித்து ஒரு சீட் கூட வாங்காமல் தோற்று ஒரு புதிய சரித்திரத்தை எழுதியது அதிமுக - பாஜக கூட்டணி.
இப்படி அங்க போனால் அவன் உதைப்பான் இங்க வந்தால் இவன் ஒதைப்பான் அப்படின்னு தான் திருநாவுக்கரசரின் அரசியல் வாழ்க்கை கருணாநிதி - ஜெயலலிதா கூட்டணியால் பந்தாடப்பட்டது.   வேறு வேறு சின்னங்களில் போட்டி, தான் நிற்கவைத்த ஆளை கூட மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், இவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சியின் செயல்பாடுகளால் இவரின் வெற்றியை பாதிப்பு தடுக்க முடியவில்லை, இப்படியாக ஒரு தொகுதியை தன் கைவசம் கொள்ள தெரிந்தவரை ஒரு நல்ல தலைவராக வளரவிடாமல் செய்த பெருமை திமுக அதிமுக பாஜக என அனைவருக்குமே சேரும். இந்த முறை காங்கிரஸ் என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்.  திருநாவுக்கரசரின் இன்றைய நிலைமையை பார்க்கும் போது,  கமல் குணாவில் ஒரு வசனம் சொல்வார் "எங்க அப்பா மட்டும் எங்க அம்மாவை விட்டுட்டு ஓடாமல் இருந்திருந்தால் எங்க அம்மா இந்த தொழிலுக்கு வந்திருக்க மாட்டாங்க.." அப்படின்னு. அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
(குமுதம்.காம் இணையதளத்தில் வந்துள்ள திருநாவுக்கரசரின்  பேட்டியை பாருங்கள்)


Read more...

சிவப்பு நிறத்தில் ஒரு சிந்தனை


இந்த தலைமுறையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவரும் எனக்கு பிடித்தவருமான இயக்குனர் ஜனநாதன் அவர்களின் பேட்டியை இணையதளம் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. இதில் அவர் சொன்னார் "என்னை சினிமாவை நோக்கி நகர் செய்தது மார்க்சிய சிந்தனைகளே". சந்தேகமே இல்லாமல் என்னை கவர்ந்த படங்களில் "அன்பே சிவம்" முதலிடத்தில் இருக்கும். இப்படி என் எண்ணங்களில் சிவப்பு சாயம் பூசப்பட்டது நான் வேலைக்கு வந்த பிறகு தான். அதற்கு முன்பு அம்மாவும்,அப்பாவும் ஒருசராசரி அரசாங்க ஊழியர்கள் எனவே
அவ்வப்பொழுது என்னால் தொழிலாளர் உரிமை,கோரிக்கை என சிலவற்றை காதால் கேட்டிருக்கிறேன். அவற்றை உணர எனக்கு பல ஆண்டுகள் ஆனது. என்ன இருந்தாலும் நாமலே முன்னின்று குத்தை வாங்கும் போதுதானே அதன் வலி தெரிகிறது. சமீபத்தில் தான் 2007 ல் வெளிவந்த "கற்றது தமிழ்" படத்தின் மதன்ஸ் திரை பார்வை என்ற நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. அதில் அந்த படத்தின் இயக்குனர் ராம்  சொல்வார்,"மென் பொருள் துறையில் உள்ளவர்களை பார்த்தால்
பாவமாகத்தான் இருக்கிறது. ஏன்னா அவர்களின்  வாழ்கை முறை, பத்து பேர்களை கணக்கில் காண்பித்துவிட்டு மூன்று பேர்களை மட்டுமே வைத்து தொழில் நடத்துவார்கள், நிறுவனத்தின் முதலாளி என்னவோ பத்து பேரின் சம்பளத்தையும் பெற்று கொள்வார் ஆனால் மூன்று பேர்கள் பத்து பேர்களின் வேலையை செய்ய நேரிடுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பணி சுமை. இது மட்டுமின்றி இவர்களுக்கு வேலையில் நிலவும் ஒரு நிலையாமை இதனால் ஏற்படும் ஒரு வித மன இறுக்கம். இது போக இவர்கள் நிறுவனத்தில்  யாரையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டால் இவர்கள் வேறு எங்கு வேலைக்கு போனாலும் அங்கு முன்பு வேலை செய்த நிறுவனத்திலிருந்து சரியானபடி இவர்களை பற்றி அறிக்கை தர மாட்டார்கள்.மற்றபடி எனக்கு மென் பொருள்  துறையில் வேலை செய்பவர்கள் எந்த வித காழ்புணர்ச்சியும் கிடையாது. " என்றெல்லாம் சொன்னார்.
நானும் இந்த துறையில் கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாக வேலை செய்பவன் என்ற முறையில் ஒன்றை சொல்ல முடியும். இயக்குனர் ராம் சொன்னதில் 80% உண்மை இருக்கிறது. இந்த துறை உலக மயமாக்கலின் முகமாவே பார்க்கப்படுகிறது. ஆனால் நான் இதை முதலாளித்துவ சித்தாந்தங்களின் முகமாவே பார்க்கிறேன். இன்னும் இந்த துறையில் தொழிற் சங்கங்கள் நுழைய முடியாமல் இருப்பதே இதற்கான சான்று. காரணம் என்னன்னு பார்த்தால் வேறு ஒண்ணுமில்லை இந்த துறையில் பெரும்பாலான வேலைகளை தருவது அமெரிக்கா அது பின்பற்றுவது  முதலாளித்துவம். இங்கே இருந்தாலும்  என்னால் முதலாளித்துவ சித்தாந்தங்களை ஏற்றுகொள்ள முடிவதில்லை. சரி அப்ப உனக்கு கம்யூனிசம் தான் பிடிக்கும், அப்படின்னு முடிவு பண்ணிடாதிங்க. மக்களாட்சியை விட சிறந்த ஆட்சி முறை இந்த உலகில் இல்லைன்னு மிக தீவிரமாக நம்பும் சராசரி ஆளு தான்.
பள்ளி கூடம் படிக்கிற காலத்துல எப்படா இந்த பரீட்சை எல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கிறதுன்னு தோணும். வேலைக்கு போயிட்டா நிம்மதியா இருக்கலாம் அப்படின்னு நினைக்க தோணும். ஆனா வேலைக்கு வந்த பிறகு தான் தெரிந்தது பேசாம சின்ன பையனா பள்ளிக்கு போற காலத்திலேயே இருந்திருக்கலாமோன்னு. அது மாதிரி முதலாளித்துவத்தை ஆதாரமாக கொண்டு செயல்படும் அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்த பிறகு "சிவப்பு சிந்தனை" அதிகமாகியது. ஏன் எனது முதலாளிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் அதற்காக அவரை அலட்சியமோ அவமானமோ செய்யனும்னு சொல்ல வரலை. அவரும் ஒரு மனிதர் தான். ஆனா இங்கே நடப்பது என்ன தெரியுமா..? முதலாளிகள் கூட இவ்வளவு மரியாதையை எதிர்பார்க்க மாட்டார். ஆனால் ஒரு குழு தலைவன் (TEAM LEADER) எதிர் பார்க்கும் மரியாதையை யாராலும் கொடுக்க முடியாது. அதாவது அவனை பார்த்து பயப்படனும் ஆனா அதை அவன் நேரடியா உணரக்கூடாது. என்ன அவன் ஒரு வேலை இவன் நம்மளை காக்கா புடிக்கிரான்னு நினைச்சுற கூடாது.  நாம நினைக்கிற விஷயங்களை அவனிடம் சுதந்திரமா சொல்ல கூட முடியாது. அவன் சொல்றதை கேட்டு அதை வரி மாறாமல் செயல் படுத்தனும், சுருக்கமா சொல்லனும்னா ஒரு ராணுவ வீரனை போல.  வேலைபளு அல்லது மனஅழுத்தம் ஏன் இந்த துறையில் இருப்பவர்களுக்கு  வருதுன்னா இந்த மாதிரியான மேல் அதிகாரிகளின் மிரட்டலினால்தான். அவனை கேட்டால் அவனுக்கு மேல் உள்ள அதிகாரியை சொல்லுவான் அவன் அவனுக்கு மேல் உள்ளவன் இப்படியே போயி அது அந்த நிறுவனத்தின் முதலாளியில் முடியும். அர்ஜுன் "முதல்வன்" படத்துல சொல்ற மாதிரி "Hey everybody man"   என்பது போலதான் சொல்ல தோணும். இங்கே என்ன கடைசியா ஒரு முதலாளி அல்லது முதலாளிகள் குழு சந்தோசாமா இருக்கணும்.  கீழே இருக்குறவன் எப்படி நாசமா போனாலும் பரவாயில்லை. இன்னொரு விஷயம் தெரியுமா எவ்வளவு வேலை செஞ்சாலும் திருப்தியடையாத மாதிரியே தன்னை காமிச்சுகிரவந்தான் நல்ல தலைவன் அப்படின்னு சில வெறி பிடிச்ச தலைவர்கள் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். இதை எதிர்த்து கேட்டால் என்ன நடக்கும்னு நான் சொல்ல தேவையில்லைன்னு நினைக்கிறேன். சரி வேற தொழிலை பாருன்னா.. நான் அதுக்குதானே படிச்சிருக்கேன், அந்த வேலையைதானே பார்க்க முடியும்...? கீழே வேலை செய்யும் தொழிலாளியும் தன்னை போலவே ஒரு மனித பிறவிதானே அப்படின்னு எண்ணி பார்க்க சொல்லக்கூடாது இதை சொன்னா உனக்கு ஏன் இந்த சிவப்பு (கம்யூனிச) சிந்தனைன்னு என் சக ஊழியர்களே சொல்ல கேட்டிருக்கிறேன். அப்ப யோசிச்சதுதான் இந்த கட்டுரை பிறக்க காரணம். இது ஒரு வகைல தவறு என்பது போல தோன்றலாம். எனக்கு தெரியல. ஆனா இப்போதைக்கு, இந்தநொடிக்கு நான் "சிவப்பு சிந்தனை" கொண்டவனகா த்தான் சிலருக்கு தோன்றுகிறேன்.  அதுக்காக நம்ம ஊர்ல இருக்குற கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கிற ஆளு நானில்லை. "அன்பே சிவம்" படத்தில் கமல் சொல்வதைபோல கம்யூனிசமும் ஒரு வகை உணர்வுதான். அதை உணர்ந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.
எல்லாருக்கும்
 எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை விட எல்லாருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அவசியம். இதில் நிறமோ,இனமோ மொழியோ, ஏனைய பிரிவினைகளோ காரணமாக இருத்தல் கூடாது. இதை நிறைய வகைகளில் ஒத்து போவது சிவப்பு சிந்தனைகளே.


Read more...

பிடிச்ச பத்து பிடிக்காத பத்து (தொடர் இடுகை)

இத்தொடரை எழுத அழைத்த பிருந்தாவனம் கோபிக்கு நன்றிகள் பல !!

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.



எனக்கு எல்லாத் துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களைப் பிடிக்கும்/பிடிக்காது என்பதால் ஒன்றோடு நிறுத்திக் கொள்ளாமல் எல்லோரையும் குறிப்பிட்டுள்ளேன்.



கவிஞர்
பிடித்தவர் – கலைஞர், நா.முத்துக்குமார், வைரமுத்து (கடவுள் பாதி)
 பிடிக்காதவர்- வைரமுத்து (மிருகம் பாதி)

மலர்கள்
 பிடித்தது - ரோஜா,மல்லிகை, தாமரை
பிடிக்காதது- தாழம்பூ

 இயக்குனர்
பிடித்தவர்- மகேந்திரன்,  அமீர்,பாலா, மணி (பிடிச்ச பாதி)
 பிடிக்காதவர்- ஷங்கர், பேரரசு, ரத்னம் (பிடிக்காத பாதி)

அரசியல்வாதி
பிடித்தவர்- கலைஞர் (வேற வழி இல்லை)
பிடிக்காதவர்- ஜெயலலிதா, ராமதாஸ்

விளையாட்டு
பிடித்தது - கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்தாட்டம்
பிடிக்காதது - அமெரிக்கன் புட்பால், பேஸ் பால்


நடிகை
பிடித்தவர் - வேண்டாம் வலிக்கும்
பிடிக்காதவர் -  அழுதுருவேன்

நடிகர்
பிடித்தவர்- கமல், ரஜினி
பிடிக்காதவர்- கமல், ரஜினியை தவிர மீதம் உள்ள முன்னணி(!?) நடிகர்கள் அனைவரும்.

பேச்சாளர்
பிடித்தவர்-  சாலமன் பாப்பையா
பிடிக்காதவர் - சு  .கி. சிவம்

எழுத்தாளர்
பிடித்தவர்- ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலகுமாரன்,சுஜாதா,
பிடிக்காதவர்- ஞாநி

இசையமைப்பாளர்
பிடித்தவர் -  இளையராஜா,யுவன்,ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்- ஹாரிஸ் ஜெயராஜ்

Nallor-vattam


Read more...

வெல்லத்தான் நினைக்கிறேன் -- பா (ஹிந்தி)



இந்த படத்தின் டிரைலேர் பார்த்தேன். ஆஹா அற்புதம் ஒரு ரசிகனாக இந்த படம் வெற்றி பெறவேண்டும் என்று இந்த படத்தின் அவுட்லைனை படித்தவுடனேயே  நினைத்தேன், அதாவது அபிஷேக்பச்சனின் மகனாக அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று கேள்வி பட்டவுடனேயே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதெல்லாம் போக, இளையராஜாவின் இசை இந்த டிரைலரை பாருங்க (ஆடியோ உடன்) சும்மா பின்னி இருக்கிறார் ராஜா. இந்த இசை நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான் (அது ஒரு கனா காலம் பாடல்) . ரொம்ப நாளா நம்ம மக்கள் ஒரு விஷயம் சொல்லுவாங்க (ராஜா இசையை புரிந்தவர்கள் அல்ல) தமிழர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் ராஜா அப்படின்னு, ராஜாவின் பாடலை ஹிந்தி பேசும் மக்களும் கேட்டு ரசிக்கலாம் என்ன சரியான முறையில் அது அங்கே கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால் இதை ஒரு கடமையாகவே எடுத்துக்கொண்டு செயல்படும் பால்கி (இவர் தான் இந்த படத்தின் இயக்குனர்), அவர்கள் "ராஜாவின் இசையை இந்தியாவின் ஒரு பகுதிதான் (தெற்கு பகுதி) கேட்டிருக்கிறது இன்னொரு பகுதியும் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஏற்கனவே போட்ட பல பாடல்களின் மெட்டுகளை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார். இவருடையை முதல் படமான சீனிகம் (CHEENIKUM) பாடல்கள் மிகப் பெரிய ஹிட் என்பதை ஹிந்தி நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த முறையும் அது நடக்கும் என்றே தோன்றுகிறது. இந்த படத்தில் ராஜாவின் "சங்கத்தில் பாடாத.." மெட்டு  ஹிந்தியில் பாட போகிறது. இந்த படத்தின் டிரைலேர் பாருங்க அப்புறம் சொல்லுங்க ...


Read more...

நட்பு




வாழ்க்கை நாணயத்தின் பூ பகுதி
சாதி, மதம்,பேதம்  மறுத்த ஒரு பிரிவு
வானவில் தொலைத்த வண்ணம்
இதழ்,முத்தம் இவற்றைவிட நெருக்கமானது
சோக மேகங்கள் சூழும் போது இன்ப மழை தூவும் இனிய தட்ப வெப்பம்
உறவுப் பூக்களில் உதிரம் உதிர்த்த உதிரா  பூ


Read more...

உன்னைப்போல் ஒருவன் --- ஒரு பார்வை



ஒரு வழியா அந்த DVD  கடைக்காரர்  உன்னைப்போல் ஒருவன் DVD ஐ இந்த வாரம்தான் கொடுத்தார்.பொதுவா கமல் படங்களை நான் திரை அரங்கில்தான் பார்ப்பது ஆனால் இந்த முறை அப்படி செய்ய முடியவில்லை. (காரணம் இன்னொரு தனி பதிவில்)  நான் "THEWEDNESDAY" படத்தை கமல் எடுக்கப்போகிறார் என்பதைஅறியும் முன்னரே பார்த்தது.
இந்த படத்தை பற்றி அடிச்சு துவைச்சு நார் நாரா கிழிச்சு வலைப்பதிவில் தொங்க விட்டாச்சு, இனிமே நான் இதுல புதுசா சொல்ல ஏதுமில்லை போல தான் தோன்றுகிறது. ஆனால் அந்த கிழிசலை எல்லாம் கொஞ்சம் சேர்த்துவைத்து தைக்கலாம்னு நினைக்கிறேன்.
ஆனா அதுக்கு முன்னாடி கை வலிக்க குலுக்கலும், வாய் வலிக்க பாராட்டுகளும் மோகன் லாலுக்கு. கமலை சர்வசாதாரணமாக ஓரம் கட்டியிருக்கிறார் இந்த நடிப்பு புலி.
கிழிசல் (குற்றச்சாட்டு) --1 : "THE WEDNESDAY" மாதிரி இந்த படம் இல்லை.
ஒட்டு (நம்ம பதில்) -- 1: ஆமாம் இல்லை தான் ஏன்னா அந்த படத்தில் நடிச்சவங்க இந்த படத்தில் நடிக்கலை(எப்படி). பொதுவா நம்ம ஊர்ல இந்த படத்தை நான் ENGLISH லையே பார்த்துட்டேன் அது மாதிரி இல்லன்னு நிறையப்பேர் நிறைய தடவை சொல்லி கேட்டிருக்கிறேன். பாதிப்பு இல்லாத படைப்பு எதுதாங்க..? எல்லாமே இந்த உலகத்துல அப்படி தோன்றியது தான். நாம உட்பட. இங்கே எப்படி செய்திருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். நம்ம ஊர்ல ஒரு பாலத்தை இங்க நியூயார்க்-ல உள்ள ஒரு பாலத்தோட ஒப்பீட்டு சொல்லலாமா..? இருந்தாலும் நம்ம ஊருக்கு அது தனியா நன்மை சேர்க்குதுதானே? கமல் சொல்ற மாதிரி சொல்லனும்னா "வால்மீகி - ராமாயணம், கம்பர்-ராமாயணம் எது சிறந்தது..?" ரெண்டுமே நல்லது  இல்லைன்னு சொன்னா அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா அவன் எடுத்தா நல்லா இருக்கும் நாம எடுத்தா இப்படித்தான், அப்படின்னு நம்மை நாமே குறை பட்டுக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அதுவும் நல்லா இருந்துச்சு இதுவும் நல்லா இருந்துச்சு.
கிழிசல் -- 2:  கமல் ஒரு நாத்திகவாதி அதுனால தான் வேணுமின்னே ஒரு ஹிந்து தீவிரவாதிய காட்டியிருக்கிறார். ஒரிஜினல் அது மாதிரி காட்டவில்லை.
ஒட்டு -- 2: ஹிந்து தீவிரவாதம் மெல்ல மெல்ல வளர்ந்து வருவதை சுட்டி காட்டுவதாக ஏன் அதை எடுத்துக்கொள்ளகூடாது. இப்ப உள்ள கருத்து சுதந்திர உலகில் காந்தியை,பாரதியை எல்லாம்  கூட மதவாதியா பார்க்கும் கொடுமை நடக்கும் போது இந்த மாதிரி குற்றச்சாட்டை கமல் பெருசா எடுத்துக்க வேணாமின்னு நினைக்கிறேன். இது கருத்து சுதந்திரத்தின்(!?) ஒரு பகுதி.
கிழிசல் -- 3: கமல் ஒரு ஹிந்து வெறியர், அதாவது மனசளவில், அதனாலத்தான் முஸ்லீம்  மட்டும் தீவிரவாதம் செய்வது போல் காட்டியுள்ளார்.
ஒட்டு -- 3: அப்ப முன்னாடி சொன்ன கிழிசல் பொய்யா..? சரிங்க கமலை விடுங்க ஒரிஜினல் "THE WEDNESDAY" படத்துல அப்படித்தானே காண்பிச்சாங்க அதுல நஸ்ரூதின்ஷா என்ற ஒரு முஸ்லீம் தானே நடித்திருந்தார்...? ஏன் அந்த படத்தை குறை சொல்லல..? சரிங்க அவ்வளவு ஏன் ஒரு முஸ்லீம் போலீஸ் ஆபிசர் தானே தீவிரவாதிகளை மிக சரியாக கையாளுவதை போல காண்பிக்கிறார்..? விஜயகாந்த் படத்துல கூடத்தான் காண்பிச்சாங்க இது மாதிரி அப்பவெல்லாம் இந்த மாதிரியான விமர்சனம் வரலையே..? வடிவேலு சொல்ற மாதிரி  ஒரு பத்து பேரு மூத்தற சந்துக்குள்ள வைத்து அடி அடின்னு அடிச்சுட்டு இன்னொரு வண்டில ஏத்தி அங்க உள்ள முட்டு சந்துல வச்சு அடி அடின்னு அடிச்சுட்டு, இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் நல்லவன்டா பேசாம விட்டுருவோம் அப்படின்னு கமலை விட்டாதான் உண்டு போல. இதுக்கு மேல இதுல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
கிழிசல் -- 3: ஒரு பொண்ணு சிகரட் குடிக்கிற மாதிரி காண்பிக்கிறது எல்லாம் ஓவர்.
ஒட்டு -- 3: ஏன் சென்னைல சாப்ட்வேர் ல, மல்டி நேஷனல் பேங்க் ல வேலை செய்யுற இடத்துல உள்ள புகை பிடிக்கும் இடத்தை போயி பார்த்ததில்லையா..? யாரை காட்டி இருக்கிறார் ஒரு தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபர் பெண்ணை தானே அப்படி காண்பிக்கிறார். கிராமத்தில் உள்ள குப்பம்மாவும்,சுப்பம்மாவும் புகை பிடிக்கிற மாதிரியா காண்பித்துள்ளார்..? உங்களுக்கெல்லாம் ஒரு புள்ளிவிவரம் தெரியுமா உலகில் அதிகம் புகை பிடிக்கும் பெண்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இருப்பது மூன்றாமிடத்தில். இதுல எது ஓவர்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

நிறைகள்: குத்து பாட்டு இல்லாமை, ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லாமை, காட்சி அமைப்புகளில் நிதானம் தெரிந்தாலும், காட்சி ஓட்டத்தில் அது தெரியாமல் இருத்தல், முக்கியமா படத்துல காமெராவும்,இசையும் தேவையான அளவே தங்களின் பங்களிப்பை செய்திருப்பதே பெரிய பிளஸ்.

குறைகள்: வேக வேகமாக அதுவும் ஆங்கிலத்தில் பேசப்படும் வசனங்கள் நமக்கு ஒத்து வருமா..? "நம்ம பய மெதுவாத்தான் வருவான்.." அப்படின்னு வசனம் எழுதுனவர் படத்துலையே இப்படியான்னுதான் கேட்க தோணுது. "ஒன்ன மாதிரியான ஆளுகிட்ட எல்லாம் முதலமைச்சர் பேசுவாரா..?" அப்படின்னு மோகன்லால் கேட்டதும் "என்கிட்டே ஒட்டு கேட்டு வர்றப்ப அப்படி எதுவும் சொல்லலியேன்னு.." கமல் சொல்வதும், நல்லாத்தான் இருக்குது ஆனா எல்லா படங்களுக்கும் சென்சார் அனுமதிக்குமா..? இல்லை தற்போதைய அரசுதான் அனுமதிக்குமா..? கூந்தல் உள்ளவ முடிஞ்சுக்குறா அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.


Read more...

காட்சிகளில் கவிதை -- ஒரு பாடல் பார்வை

 பாலுமகேந்திரா "காமிரா கவிஞர்" என்று சொல்லப்படுபவர். இந்த காட்சியை பாருங்கள் அந்த பாராட்டுதலுக்கு அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்று தெரிந்துகொள்வீர்கள் . இந்த பாடலில் வைரமுத்துவின் சொல்லாட்சியும் அற்புதம். பொதுவாக இந்த மாதிரியான தத்துவ பாடலில் "எல்லாமே பொய்.. ஏன் வாழவேண்டும்" என்றெல்லாம் தொனிக்க பாடல் எழுதுவார்கள். ஆனால் இந்த பாடலில் இறுதியில் "பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.." என்று வாழ்வதற்கு அச்சாரமாயுள்ள உழைப்பை பேணும் படி சொல்வது மிகவும் அருமை. இந்த பாடலை காட்சி படுத்திய விதத்தை பாருங்கள் எந்தெந்த வரிகளுக்கு எந்த மாதிரியான காட்சியமைப்பு என்பதோடு அந்த லைட்டிங் அமைப்புகளும் மனதை இந்த பாடலோடு ஒன்றச்செய்து விடுகின்றன. இன்னொருமுறை பாருங்க வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.


Read more...

அட ஆமாம் இல்லை


"அட இதுதான் இதுல மேட்டரா..?" "அட இது எப்படி நமக்கு தோணாமல் போயிற்று..?" "அட இதுல இப்படி ஒரு ஆச்சர்யம் இருக்கா..?"  இப்படி நம்மை கேட்க வைத்த
 சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கலாம். நம்மில் ஏற்படும் பெரிய பெரிய மாற்றங்களுக்கு, நல்ல சிந்தனைகளுக்கு  அன்றாடம் நாம் சந்திக்கும் சாதரண  மனிதர்களின் ஒரு சொல் கூட காரணமாக இருக்கலாம்.      சில விடயங்கள் நாம்  எதிர்பார்க்காத அல்லது மிகவும் பரிச்சயமில்லாத  ஒருவர் மூலமாக நம்மை வந்தடையும் ஆனால் அதைத்தான் நாம் வாழ்கை முழுமைக்கும் பயன்படுத்துவோம். சில பேர் சொல்வதை போல "சத்தியசோதனை" படித்தேன் சத்தியம் தவறாமல் நடக்க கற்றுக்கொண்டேன் அப்படின்னு என்னால சொல்ல முடியல. ஏன் நீங்க கூட அப்படித்தான்னு நான் நினைக்கிறேன். ஒரு சில விடயங்களை ஒரு சிலர் சொல்வதால் மட்டுமே அது நமக்கு பிடித்துபோகிறது. ஆனால் பெரும்பாலான விடயங்கள் நமக்கு பிடித்து போவதற்கு அதை சொல்லும் நபரை விட சொல்லப்படும் காலமும் நேரமும் முக்கியம் அப்படின்னு நான் நினைக்கிறேன்.அது வரலாற்று  உண்மையாக இருந்தாலும் கூட.
ஒரு நண்பரை, நண்பரின் உறவினர் என்று கூட சொல்லலாம், அவர் பெயர் கோபி. அவருடன் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது காரில் ஒரு தத்துவ பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது. திடீரென்று அவர் கேட்டார் "பெரும்பாலனவர்களுக்கு ஏன் தத்துவ பாட்டு பிடிக்குது தெரியுமா..?" அப்படின்னு "தெரியலையே" அவர் சொன்னார் "நம்மில் பெரும்பாலனவர்கள் நிச்சயம் தத்துவ பாடலில் அடிக்கடி வரும் தோல்வி,துரோகம்,ஏமாற்றம் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம் அதனால்தான் அது பிடிக்கிறது". என்றார். நான் அப்படியே ஒரு கணம் உறைந்தே போனேன். அட ஆமாம் இல்லை  என்று தோன்றியது. இதுல மிகப்பெரிய உண்மை இருக்குது. எந்த ஒரு சிறு நிகழ்வும் நம்மை பாதிக்கிறது என்றால் அது நம்மை கடந்து போனதாக இருக்கும் இல்லை நம்மை கடக்க கூடாது என நம் மனம் எண்ணியதாக இருக்கும். அதில் ஒளிந்திருப்பது ஒரு சுயபட்சாதாபமோ அல்லது சுயநலமோ தான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பாட்டு கேட்டு வருகிறேன், இது நமக்கு தோணலையே. அப்படின்னு அவர் சொன்னதும் தோணியது. என்னை விட வயதில் பத்து வயது சின்னவர்தான் என்றாலும் அவர் சொன்னதை நான் பல சந்தர்பங்களில் நினைப்பதுண்டு. அவரையும் தான்.
அமெரிக்க கனவில் மிதந்து கொண்டே அலுவலகம் போன நாட்களில் அங்கு கூட வேலை பார்க்கும் நண்பர் சேதுசரவணன் என்பவர் கேட்டார். "நாம எல்லாம் ஏன் அமெரிக்கா போயி அங்க வெள்ளைகாரனுக்கு உழைச்சு கொட்டுறதை பெருமையா நினைக்கிறோம்னா, அதுக்கு காரணம் நம்ம உடம்புல ஓடுற அடிமை ரத்தம்தான்" அப்படின்னு சொன்னார். இதை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்தது அது இப்படி நீ அப்படி சொல்லலாம்னு சொன்னேன் சண்டை போட்டேன். ஆனா அமெரிக்கா வந்த பிறகும், அமெரிக்காவிலிருந்து இந்தியா போய் வரும்போதும், எனக்கு கிடைத்த அனுபவங்கள் அவர் சொன்னது உண்மைதான் என உணரவைத்தன. இங்கு நான் பார்க்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஒரு அமெரிக்கன் நண்பர் இருக்கிறார் என்று சொல்வதையே பெருமையாக கருதுகின்றனர்.  (இங்கு நான் அமெரிக்கன் என்று குறிப்பிடுவது அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்களை. ஆமாம் வெள்ளையர்கள் ஒன்றும் இந்த அமெரிக்க நிலத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல இங்கிருந்து செவ்விந்தியர்களை வெள்ளைக்காரன் பாணில சொல்றதுன்னா நேடிவ்  அமெரிக்கன்ஸ், அவுங்களை எல்லாம் துரத்திட்டு ஆக்கிரமிச்ச பகுதிதான் இது).  அதாவது வெள்ளைக்காரர்கள் மன ரீதியாக நம்மை மாற்றியமைத்ததுதான் இதற்கான காரணம். நம்ம பாட்டன், முப்பாட்டன் மட்டுமல்ல நமக்கும் அதே உணர்வு இருக்குன்னா அதன் வீரியம் புரிகிறது.  அட ஆமாம் இல்லை ன்னு நானும் அதை சந்திக்க நேர்ந்த பொழுதுதான் தோன்றியது.  "அப்ப நாம காலா காலத்துக்கு அடிமைகளாக வாழ்ந்து இந்த மண்ணுக்கு உரமாக வேண்டியது தானா..?" அப்படிங்குற ஆயிரத்தில் ஒருவன் வசனத்தை அவருக்கிட்ட கேட்டப்ப அவரு சொன்னது "நாம வெள்ளைகார வுங்கலால மட்டுமல்ல பல வேற்று தேசத்து நாட்டவர்களால் படையெடுக்கப்பட்டு ஆளப் பட்டிருக்கிறோம். எனவே அது அவ்வளவு சீக்கிரமா நம்ம உடம்புல(மனசுல) இருந்து போகாது, ஆனா நாம கொடுக்கிற நல்ல சூழலால நம்ம குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் இந்த மாதிரியான அடிமை புத்தியிலிருந்து விடுபட நிறைய வாய்ப்பிருக்குது. இது எனக்கு எங்க சிதம்பரம் காலேஜ் பேராசிரியர் ஒருவர் சொன்னார்". இவ்வாறாக நண்பர் சொன்னதை நான் பலமுறை உணர்ந்ததோடு மட்டுமல்ல வெள்ளைக் காரர்களுக்கென்று கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும், அதாவது எதிரிலிருப்பவன் வெள்ளைக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்கப்படும் முக்கியத்துவம், குறைத்துக்கொண்டுள்ளேன். அப்ப நீ சுத்தமா அதை போக்கலையா அப்படின்னு கேட்டா நண்பர் சொன்னதுதான் "அவ்வளவு சீக்கிரம் இந்த அடிமை புத்தி போகுமா..?"
இது மட்டுமில்ல இன்னும் பல விடயங்கள்  நம்மை சும்மா அப்படி கடந்து போகிறவர் கூட சொல்லிவிட்டு போயிருக்கிறார், அவற்றை அப்பப்ப உங்ககிட்ட சொல்றேன்.


Read more...

பதிவுலகம் சார்பில் ஷங்கருக்கு நன்றி


ஷங்கர் இயக்கம் படங்கள் குறித்து எனக்கு எப்பவுமே மாற்று கருத்து உண்டு. ஆனால் அவர் தயாரிக்கும் படங்கள் குறித்து எப்பவுமே ஒரு நல்ல பார்வை உண்டு. அவரின் சமீபத்திய வெளியீடான "ஈரம்" இன்னும் பார்க்கவில்லை (ஆமாம் இன்டர்நெட்டில் இல்லாம் படம் பார்க்காம இருந்தா எப்படி பார்க்க முடியும். குறைந்த பட்சம் DVD வர்ற வரைக்கும் காத்திருப்பது என்னுடைய வழக்கம். அந்த DVD ம் இன்னும் வரவில்லை). ஆனால் இந்த படம் பெருவாரியாக பாராட்டப்பட்டாலும் பொருளாதார ரீதியாகவும் நன்றாக போய் கொண்டிருப்பதாக இணையத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் படித்தேன் மகிழ்ந்தேன். இந்த படம் எப்படி வித்தியாசமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தததோ அதே  மாதிரி அந்த படத்தின் விளம்பரங்களிலும் ஷங்கர் கவனம் செலுத்துவது ரொம்பவும் நல்ல விஷயம். அதிலும் இன்று வந்த விளம்பரம் ஆர்குட் இணையதளத்தில் "ஈரம்" படம் பற்றி நடை பெறும் விவாதத்தை குறிப்பிட்டு வந்துள்ளது வலைப்பதிவுகளுக்கும் அதில் வரும் சினிமா விமர்சனங்களுக்கும் திரை உலகில் ஓரளவாவது  முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஷங்கர் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் செய்யும் பொழுது பதிவுலகம் மீதான பார்வையை மற்ற தயாரிப்பாளர்கள் திருப்புவதற்கும்  ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதை ஒரு பதிவராக பார்க்கும் பொழுது ஷங்கருக்கு நன்றி சொல்லவே தோன்றுகிறது.


Read more...

ஏன் எமெர்ஜென்சி..?



கேள்வி: ''நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பின்பு நாட் டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற் றத்தைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர் கள் தீவிரமாக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எங்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தாங்கள் முன்னதாகவே கொண்டுவந் திருக்கக் கூடாதா?'' (கேள்வி கேட்டவர் பெயர் திருமதி ராஜகுமாரி சேஷாத்ரி)


பதில்: ''கொண்டு வந்திருக்க லாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா எதிர்க் கட்சிகளும், பெரும்பான்மை யான பத்திரிகைகளும் கட்டுப் பாடின்மையை மறைமுகமாக ஆதரித்து வந்தன. அரசாங்கம் எந்தத் திட்டத்தைச் சொன் னாலும் அதைக் கேலி செய்வ திலும், அதற்குத் தவறான உள் நோக்கம் கற்பிப்பதிலுமே ஈடு பட்டிருந்தன. அதனால் மக்க ளும் அவற்றைச் செயல்படுத்து வதில் அக்கறை காட்டவில்லை. நெருக்கடி நிலைப் பிரகடனத் துக்குப் பின் புதிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இது போதாது. ஒழுக்கம், கட் டுப்பாடு போன்ற அருங்குணங் களை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இன்னொருவர் நம் மீது திணிக்கும் நிலை ஏற்படக்கூடாது. இந்தக் கட்டுப் பாடும் ஒழுக்கமும் இல்லாவிட் டால் இந்தப் பெரிய தேசத்தில் நாம் எதையும் சாதிக்க முடி யாது. ஒழுக்கத்தில் சில வகை உண்டு. ஒன்று, சமுதாய ஒழுக் கம்! அதாவது, நம் வேலை களைத் திறமையாகவும், உரிய சமயத்திலும் செய்வது, நாம் வசிக்கும் பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பது... இப்படிப்பட்ட புற ஒழுக்கங்கள். இவற் றால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும்; அதன் பெருமையும் சிறந்தோங்கியிருக்கும். அதே போல் தனி மனித ஒழுக்கம்! இப்படி உடல் சுகாதாரம் முதல் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கட்டுப்பாட்டை யும் ஒழுக்கத்தையும் நாம் கடைப்பிடிக்காவிட்டால், பல வித தொல்லைகளை அனுப விக்க நேரிடும். நாம் ஒழுக்க மான வாழ்வு நடத்தினால்தான், அதிக திறமையுள்ளவர்களாகவும் திருப்தி உள்ளவர்களாகவும் வாழ முடியும்!''
(பதில் சொன்னவர் அன்றைய பிரதமமந்திரி திருமதி.இந்திராகாந்தி)
 
எமெர்ஜென்சி என்பது ஏதோ சுய கட்டுப்பாட்டையும்,தனி மனித ஒழுக்கத்தையும் கற்பிக்க வந்ததை போல சொல்லப்படும் மறைந்த இந்திராகாந்தியின் பதிலில் தெரிவதெல்லாம் செய்த தவறை மறைக்க செய்யும் செயலே. இதை விட பெரிய கொடுமை இந்த கேள்வியை கேட்ட அந்த பெண்மணி  அந்த கொடூர காலத்தை புகழ்வதுதான். ஒருவேளை எமெர்ஜென்சியை கண்டு ரசித்தவராக கூட இருக்கலாம். அந்த பெண்மணியை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பிரதமமந்திரியாக இருந்த இந்திராகாந்தியை பேட்டி எடுக்க அனுப்பியதாம் விகடன். குறைந்த பட்சம் இந்தமாதிரியான சென்சிடிவான பிரச்சனைகளுக்கான விடயத்தை அவர் தொடாமலாவது பார்த்துகொண்டிருந்திருக்கலாம் விகடன் போன்ற பெரிய பத்திரிகைகள். உங்களுக்கு எமெர்ஜென்சி எதற்காக இந்திரா காந்தியால் அமுல் படுத்தப்பட்டது தெரியுமா..?
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ல் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு விரோதமாக தேர்தல் முறைகேடுகளில் இந்திராகாந்தி ஈடுபட்டதால் அவருடைய தேர்தல் (1971 ஆம் ஆண்டு நடந்த) தேர்வு செல்லாது" என்று தீர்ப்பளித்தது.  அத்துடன் இந்திரா காந்தி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டது, உச்சநீதிமன்றம் மேல் முறையீட்ட ஏற்க மறுத்தாலோ, இல்லை இந்திராகாந்தி மேல்முறையீடு செய்யவில்லை என்றாலோ தான் இந்த தீர்ப்பு நடைமுறை படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு முழுமையான தடை விதிக்கவில்லை. இதுவே நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமானது. இந்திராகாந்தி 1971 தேர்தலில் செய்த தவறு என்ன..? அப்பொழுது பிரதமமந்திரியின் தனி செயலராக பணியாற்றிய யஷ்பால் கபூர் என்பவரை தேர்தல் முகவராக இந்திராகாந்தி நியமித்ததுதான் தவறு என்று இந்திராகாந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நாராயன் வழக்கு தொடர்ந்தார். யஷ்பால் கபூர் தன்னுடைய அரசாங்க பதவியை ராஜினாமா செயாமலேயே தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். அதாவது ஜனவரி 7 ஆம் தேதி தேர்தல் முகவராக பணியேற்றார், ஜனவரி 13 ஆம் தேதி அன்று தான் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த ஆறு நாள் கால இடைவெளிதான் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்த காரணமானது என்றால் நம்ப முடிகிறதா..?
இந்திரா நினைவு நாளில் சரித்திர புகழ் வாய்ந்த அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட காரணத்தையும் நினைவுகூர்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


Read more...

மனிதம் வளர்ப்போம்



. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரிச்மொன்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக  சீரழித்துள்ளது. இதை இன்னும் ஒரு பத்து பேர் பார்த்திருக்கிருகிறார்கள் ஆனால் யாருமே போலீசை கூப்பிடவில்லை. அத்துடன் இந்த "பார்வையாளர்கள்" அந்த கொடூரத்தை படம் பிடித்துள்ளார்கள். எங்கே போனது மனிதாபிமானம்..? குற்றம் செய்பவர்களை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களுக்குதான் தண்டனை அதிகம் என்று சட்டம் சொல்லுகிறது (அமெரிக்க சட்டமும் இதை சொல்லுதான்னு தெரியலை). அப்படி பார்த்தால் இந்த பதினைந்து பேரும் மிகப் பெரிய தண்டனைக்குரியவர்கள். இது குறித்து சமீபத்தில் C.N.N டி.வியில் வந்த ஒரு கலந்தரையாடல் நிகழ்ச்சி (LARRY KING LIVE), பல விஷயங்களை அலசியது. அதில் குறிப்பாக தீபக் சோப்ரா என்பவர் சொன்ன விஷயம், இது போன்ற கொடூர மனிதர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் வளர்க்கப்படும் சூழலில் இது போன்ற கொடூர விஷயங்கள் மிகவும் சாதரணமாகவும் அன்றாட நிகழ்வுகளாகவும் ஆகிப்போவது தான். வன்முறை அவர்கள் வாழ்கையின் ஒரு அங்கம், எனவே இதை அவர்கள் சாதரண நிகழ்வுகளிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மனித மூளையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. இவற்றை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை அதனால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.
1. Limibic Brain
2. Reptalian Brain
3. Cardical Brain
இதில் Limbic Brain என்பது மனிதனின் உணர்வு சம்மந்தபட்டவைகளை தீர்மானிப்பவை. இந்த பகுதி பாதிக்கப்பட்டாலோ அல்லது பழுதடைந்தாலோ சமூகத்திற்கெதிரான சிந்தனைகளும்,அடுத்தவர்களின் நலனை பற்றி அக்கறை கொள்ளாத மன நிலையும் ஏற்படும். இதை சரி பண்ணி கொள்வதற்காகத்தான் ஆன்மிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களை குழந்தை பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும் அதாவது நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது அது நாம் தவறு செய்யும் போது தண்டிக்கும். என்றெல்லாம் விளக்கி சொல்லவேண்டும். சிறுவயதிலிருந்தே தியானம் போன்றவற்றை கற்று கொடுத்தலின் மூலமாக அவர்கள் மூளையின் Limbic பகுதி பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளலாம். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Daniel Amen என்ற உளவியாளர் (Psychiatrist) சொல்கிறார், மூளையின் முன் பகுதியில் தான் நல்லது கெட்டதை பகுத்தறியும் தன்மை உள்ளதாகவும் அதை குடியின் மூலமாகவும், போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதன் மூலமாகவும் இழக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் படத்தில் வரும் வாலி பாடலை போல "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.." . குழந்தைகளுக்கு மனிதத்தை போதிப்போம் மனிதம் வளர்ப்போம்.


Read more...

ராகு-கேது பெயர்ச்சி உண்மை


இன்னைக்கு ராகு-கேது பெயர்ச்சின்னு சொன்னாங்க அப்பவெல்லாம் நான் பெரிசா நம்பலை. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு அந்த நம்பிக்கை வந்திடுச்சு. நீங்க இதுக்கு முன்னாடி எப்பவாது ஜெயலலிதா தன்னுடைய கட்சி கூட்டத்தில் மற்றவர்கள் உட்காந்திருக்க தான் எழுந்து நின்று பேசி இருக்கிறாரா..? நேத்து நடந்த கூட்டத்துல பேசி இருக்காரே, அப்ப ராகு-கேது பெயர்ச்சி வந்துடுச்சுன்னுதானே அர்த்தம்.
(படம்: தினமலர்)


Read more...

ராமதாசு ஒரு சீரியஸ் பீசு..!

இலங்கைத் தமிழர்களை ராஜபக்சே கொன்று குவித்த ரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


 இந்த பேச்சை பேசியவர் வேறு யாருமல்ல பா.ம.க தலைவர் ராமதாசு அவர்கள்தான். ராமதாஸ் என்னதான் கூட்டணி மாறி அவ்வப்பொழுது காமெடி செய்தாலும் , அவருடைய எல்லா பேச்சுகளையும் காமெடி என்று எடுத்துக்கொள்ளமுடியுமா..? அவர் சரியா  சொல்றப்ப  ஏத்துக்கத்தானே வேணும்.  "யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கை குலுக்குவானா..?" ரொம்பவும் யோசிக்க வேண்டிய விடயம். நான் நியூயார்க்கில்  ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது 

ஒரு சக ஊழியருடன் காரில் பயணம் செய்ய நேர்ந்தது. அவர் யூத இனத்தை சேர்ந்த ஒரு பெண். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நாங்கள் பயணம் செய்த அந்த கார் லெக்சஸ் (LEXUS) ரக கார் என்பதை தெரிந்து கொண்டேன். அடுத்து நான் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "இந்த ரக கார்கள் ஜெர்மனில் தானே தயாரிக்கப்படுகிறது.." என்று கேட்டேன். சட்டென்று முகம் மாறிய அவர் "இல்லை இல்லை இது ஜப்பானில் தயாரிக்கப்படும் கார். இது ஜெர்மனியில் தயாரித்தால் இந்த காரை நான் பயன்படுத்தவே மாட்டேன்" என்றார்.  இது நடந்தது 2005 ல், இதை தவறென்றும் சொல்ல முடியாது. ஏன்னா அதன்  வலியும் வேதனையும் அவர்களுக்கு தானே தெரியும். அந்தவிதத்தில் ராமதாஸ் சொன்ன உதாரணம் ரொம்பவும் சரியாக சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (அப்பாடா "ராமதாசு ஒரு காமெடி பீசு" எழுதினப்ப ஒருத்தரு ஆட்டோ வர வாழுத்துக்கள்-ன்னு சொல்லி இருந்தாரு அதை இப்ப சரி கட்டியாச்சுன்னு நினைக்கிறேன்..ஹும் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.).


Read more...

நல்லது நடக்கணும்


ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதாகரமாக வெடித்து தற்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராஜாவின் அலுவலகங்களில் நடந்த அதிரடி சிபிஐ சோதனையால் திமுக வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

இருப்பினும் முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் ராஜா மீது நடவடிக்கை எடுக்கு ஆயத்தம் நடந்து வருவதாக பேசப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராஜா மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியின் கருத்தை அறிய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி என்பதாலும், தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குக் காரணகர்த்தா என்பதாலும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்லையாம்.
அதேசமயம், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து காங்கிரஸ் மீதும், மன்மோகன் சிங் அரசு மீதும், மத்திய அமைச்சர் ராஜா விவகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டிப் பேசுவதால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதை கருணாநிதியும் விரும்ப மாட்டார் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதாம்.இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் ராஜா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மற்றும் பிரதமர் தயாராகி விட்டனர். அதற்கு முன்பு கருணாநிதியிடமிருந்து ஒரு வார்த்தைக்காக காங்கிரஸ் காத்திருக்கிறது என்பதே என்று காங்கிரஸ் தரப்பில் கூறுகிறார்கள்.விரைவில் முதல்வர் கருணாநிதி யின் தூதர் ஒருவர் சோனியா காந்தியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜா மீது நடவடிக்கை பாயலாம் என்றும் பேசப்படுகிறது.மக்களவை குளிர் காலக் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில் ராஜா விவகாரத்தால் தங்களுக்கு சி்க்கலை வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்கிறார்கள்.அதே நேரத்தில் ராஜாவை பதவியிலிருந்து திரும்பப் பெற்றால் ஊழலை ஒப்புக் கொண்டது போலாகிவிடுமே என திமுக அஞ்சுகிறது.இதனால் திமுக ஆழ்ந்த அமைதி காக்க, அதைப் பார்த்து காங்கிரசின் கோபம் அதிமாகிக் கொண்டுள்ளது. ராஜா நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியாது என்றே தெரிகிறது.

மேற்கண்ட அந்த செய்தி இன்றைக்கு தட்ஸ்தமிழ் இணையதளத்தில் வந்த செய்தி.  இரண்டு நாளைக்கு முன் நம் "எண்ணங்களில்" தோன்றியதை பிரதிபலிக்கும் விதமாக இன்று வந்துள்ள இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பாக கடைசி வரிகள் நமது எண்ணத்தை முற்றிலுமாக ஒத்து போவதாகவே கருதுகிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி.


Read more...

ஆணியே புடுங்கவேணாம்


அனில்அம்பானிக்கும், முக்கேஷ்அம்பானிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக நிலை ஏற்படாததால்  அன்றைய தினம் இந்திய பங்கு சந்தை வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தாக நான் சில தினங்களுக்கு முன் செய்தி படித்தேன்.  ஆனால் கிட்டத்தட்ட அதே நாளில் அமெரிக்காவில் ஒரு அறிக்கை வெளியடப்படுகிறது அதில் ஒருநாளைக்கு சராசரியாக 7000 பேர் வேலை இழப்பதாக. ஆனால் அன்றைய அமெரிக்க பங்கு சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது. அது அமெரிக்கா, இது இந்தியா அப்படின்னு கைப்புள்ள மாதிரி நீங்கள் சொல்லலாம். ஆனால் இங்கு நிகழ்பவை எல்லாம் காமெடியா தெரியலை, ரொம்ப சீரியசான ஒரு கொள்ளை சட்ட பூர்வமாக அரங்கேறுதொன்னு தோணுது.
பங்கு சந்தை கிட்டத்தட்ட நம்ம சுதந்திரம் வாங்குற காலத்திலிருந்தே இருந்து வருவதாக அறிகிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் பங்குசந்தையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்ததான்னு தெரியலை. ஏன்னா என்னை பொறுத்தவரை பங்கு சந்தை என்பது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதற்கான ஒரு அமைப்பு. சரி அது பாட்டுக்கும் அது வேலைய  பண்ணட்டும் எனக்கென்ன அப்படின்னு நடுத்தர மக்களோ, அன்றாடம் தான் சம்பாதிப்பதை ஒரு சிறு சேமிப்பாக்க வங்கி கணக்கு தொடங்கும் சாதரண மக்களோ இருக்க முடியாது. இதன் வளர்ச்சிக்கு முழுதாக துணைபோவதுதான் உலக தாரளமயமாக்களின் குறிக்கோள் அல்லது செயல்பாடு. சாதாரண குடிமகன் ஒருவன் தான் பங்குசந்தையின் நிழல் படியாமல் தனது வாழ் நாளை கடத்த நினைத்தால் அது  இன்றைய சூழலில் நடக்காத காரியம்.
தெரிந்தோ தெரியாமலோ  ஒவ்வொருவரின் பாக்கெட் பங்குசந்தையால் திருடப்படுவதை எல்லோரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.  ஒருவன் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையில் வைக்கப்படும் பணம் போய் சேருமிடம் பங்குச்சந்தை.இப்படி எப்படி பார்த்தாலும் பணம் போய் சேருமிடம் பங்குசந்தைதான்.  சமீப காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு பங்கு சந்தைகளின் குறீயீட்டு எண் குறைவதை கொண்டே கணக்கிட பட்டது. இந்த சூதாட்டத்தில் கை தேர்ந்தவர்களே பணத்தை பெற முடியும்.  அப்படி பட்ட பங்கு சந்தை அனில் அம்பானிக்கும் முக்கேஷ் அம்பானிக்கும் ஒரு சண்டைன்னா தன்னை சுருக்கி கொள்ளுமாம் ஆனால் அதே பங்கு சந்தைக்கு தனது வேர்வையால் பங்கு சேர்க்கும் சாதாரண மனிதனின் வேலையிழப்பிற்கு செபி மன்னிக்கவும் செவி சாய்க்கதாம். இது எப்படி இருக்கு..? ஒரு நாட்டின் பங்கு சந்தை அந்த நாட்டின் பொருளாதாரத்தின்  முகமாவே பார்க்கப்படுவது. அப்படி இருக்கும் பொழுது நாட்டில் உள்ள குப்பனுக்கும்,சுப்பனுக்கும் ஆதரவா இருக்கனுமில்லையா..? ஆனால் அது இங்க நடப்பதில்லை அதான் இங்கே பிரச்சனையே.
 "எனக்கு தான் கோபம் வராதுங்க்றேன்ல அப்புறம் ஏன்யா அதையே தூண்டுறீங்க..? " அப்படின்னு கைப்புள்ள சொல்ற மாதிரி, நான்தான் பங்குசந்தையே வேனான்கிறேன் அப்புறம் வலுகட்டாயமா PF ங்குற பேர்ல வாங்கி அதை பங்குல போட்டா என்ன அர்த்தம்..? சரி அப்படியே போடட்டும் அப்புறம் ஏன் என்னை போல ஏழாயிரம் பேருக்கு வேலை போறப்ப பங்கு சந்தை கீழே போக மாட்டேங்குது..? மேலே உள்ள பணக்காரர்களுக்கு கீழே உள்ளவன் காசு வேணும், அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. இப்படி நினைக்கிறவங்க திருடனைவிட மோசமானவங்க. இவங்க எங்களுக்காக ஆணியே புடுங்கவேனாம். எங்களை தொந்தரவு பண்ணாம அவுங்க வேலைய பார்த்தா போதும்.  அப்படிங்கறது தான் என்னை போன்றவர்களின் வேண்டுகோள்.


Read more...

அதிகார கரங்கள் ஒரு ஆபத்து

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக யாரேனும் புகார் தெரிவித்திருக்கலாம். அதன்பேரில்தான், தொலை தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. அதற்காக என் மீது குற்றம் சொல்ல முடியாது. சி.பி.ஐ.,சோதனை என்பது வழக்கமான ஒன்றுதான். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தொடர்பான அனைத்து முடிவுகளும் டிராய் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையிலும், பிரதமருடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட்டன.



மேற்கண்ட செய்தி மத்திய அமைச்சர் ஆ.ராசா  குறித்து சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மிகப் பெரியதாக ஆக்கப்பட்டு, தேர்தல் சூட்டில் ஆறியும் போனது. கிட்டத்தட்ட 65,000 கோடி ரூபாய் ஊழல் இதில் நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. (இந்த ஒரு துறையிலேயே 65,000 கோடி ஊழல் செய்ய முடியும்னா..?  ஹுஸ் அப்பா கண்ண கட்டுதே). இது குறித்த தி.மு.கவின் செயல்பாடுகளோ நம்மை வியக்க வைக்கிறது. ஒருத்தனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய பிறகும் அவன் தன்னை அந்த வீட்டின் விருந்தாளியாகவே பாவித்துக்கொள்வது என்ன நாகரீகம் என்று தெரியவில்லை. காங்கிரஸ் இந்த காரணத்திற்காகவே ஆ.ராசாவிற்கு மத்திய மந்திரி பதவி தர இந்த முறை தயங்கியதாகவும் ஆனால் தி.மு.க வின் நெருக்குதலாலேயே இந்த பதவியை அதுவும் முன்பு வகித்த அதே துறையை கேட்டு பெற்றது தி.மு.க. இவ்வளவு நடந்த பிறகும் ஆ.ராசா தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று வெளிப்படையாக சொல்கிறார். இவை எல்லாம் தி.மு.க வின் தலைமை அறியாமல் வரப்போவதில்லை. இவ்வளவு நடந்த பிறகும் இவரை யார் மந்திரி பதவியை தொடர செய்வது..? எவ்வளவோ பதவிகளை பெற்ற, இழந்த தி.மு.க போன்ற கட்சிகளே பதவி சுகத்தை இழக்க தயாரில்லாததை கண்டு அதிர்ச்சியே ஏற்படுகிறது. இப்பொழுது நடக்கும் இந்த சம்பவத்திற்கெல்லாம், வாய் மூடி மௌனியாக தி.மு.க இருப்பது அந்த கட்சிக்கே ஆபத்தாய் முடியும். இதை பழுத்த அரசியல் அனுபவம் உள்ள கருணாநிதியும் உணர்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதையும் மீறி இந்த மாதிரியான விடயங்கள் நடப்பது எதனால்..? சில பத்திரிகைகள் சொல்வதைப்போல தி.மு.க வின் அதிகார மையம் கைகள் மாறி இருக்கலாமோ என்ற அச்சம் தோன்றுகிறது. அது என்ன "கைகள்"..? ஆம் அது ஒரு கைக்கு போக வில்லை, குறைந்த பட்சம் மூன்று கைகளிலாவாது அது இருக்க வேண்டும். அவைகள் எவை என்று உங்களுக்கே தெரியும். அதிகாரம் ஒரு கையில் இருப்பதுதான் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், இந்தியாவிலேயே ஜனநாயகமாக செயல் படும் ஒரே கட்சி என தன்னை கூறிக்கொள்ளும் தி.மு.க விற்கும்  நல்லது.


Read more...

பதிவுலகம் பற்றிய ஒரு பதிவு


சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களின் விமர்சனத்தை அன்றைய தினமே
படித்து தெரிந்து கொள்ள முடிகிறது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூகுள் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது, மனசு சோர்வாக இருக்கும் போது படித்து தெளிந்து கொள்ள என்னை மாதிரியே தவறு செய்து திருத்திக்கொண்ட ஒரு சக நண்பனை பார்க்க முடிகிறது, இவற்றை எல்லாம் எம் தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளமுடிகிறது.  காரணம் தமிழ் வலைபூக்கள் அல்லது வலைப்பதிவுகள். ஒரு தமிழனா பெருமை கொள்ள பல விஷயங்கள் இருந்தாலும், அந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நான் உணர ஆரம்பித்துள்ளேன். எனக்கு தெரிந்து வேறு எந்த இந்திய மொழிகளுக்கும் இவ்வளவு வலைப்பூக்கள் அந்தந்த மொழிகளிலே இருக்கிறதா
என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. அனேகமாக இதற்கான விடையையும் நான் ஒரு தமிழ் வலைப்பூவிலேயே காண்பேன் என்று நம்புகிறேன்.  குடும்ப சண்டை,
சொந்த அனுபவங்கள்,தகவல் தொழில் நுட்பம்,இனப்பிரச்சினை,
சர்வதேசபிரச்சனை,ஜாதகம்,ஆன்மிகம்,பகுத்தறிவு,
இன்னும் எவ்வளவோ, விஷயங்களை அலசும் ஒரு பண்பு அல்லது திறமை நம்ம
தமிழ் மக்களுக்கே உரித்தானதாக நான் உணர்கிறேன். தொலை தொடர்பு துறை வளர்ந்த பிறகு நம் மக்களின் வாழ்க்கை முறையிலேயே ஒரு மாற்றம் தெரிகிறது, தனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், அதன் பாதிப்பை தனது சக மனிதர்களுக்கு உணர்த்தவும் மக்கள் பழகி கொண்டது என்னை பொறுத்தவரை வரவேற்கத்தக்கதே. சிலர் இதை வியாபரமாக்கலாம், சிலர் தங்கள் மீதான கவனத்தை ஒட்டுமொத்த இந்த சமூகமும்  திருப்பவேண்டும் என்ற நோக்கிலும் சொல்லலாம் ஆனால் அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவு. 
பதிவுலகம் நிறைய கதவுகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும்  திறந்துவிட்டுள்ளது. எல்லா விஷயத்திலும் விதிவிலக்குகள் உண்டு, அது மாதிரி ஒன்றிரண்டு தவறான வலைப்பதிவுகள் இருக்கலாம். ஆனால் பல தமிழ் பதிவுகள் சரியான திசையை நோக்கியே சென்று கொண்டிருப்பதாகவே நான் உறுதியாக நம்புகிறேன். 
இந்த மாதிரியான ஒரு  கும்பலில் நானும் ஒருவனாக இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன்.


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் -- 5


எந்திரனுக்கு பிறகு நடிப்புக்கு ரஜினி குட்-பை
>> ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க. அடுத்த படத்துக்கு கதை தயார் ஆகிற வரையிலும் இதுதான் கதை.

வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது.
>>எப்படி நாங்களெல்லாம் ஆடி காத்துலயே அவுள் சாபிட்ரவங்க. எங்க கிட்டயேவா ..?

சி.பி.ஐ ரெய்ட் வழக்கமான ஒன்றுதான். (மத்திய அமைச்சர் ஆ.ராசா)
>>காங்கிரசுக்கு எங்க மீது கோபம் வரும் பொழுது அவுங்க எங்க ஆபிஸ்ல ரெய்ட் விடுவதும். எங்களுக்கு அவுங்க மீது கோபம் வர்றப்ப தமிழ்நாட்டுல போராட்டம் பண்ணுவதும் வழக்கமான ஒண்ணுதான். இதை நாங்க ஒரு விளையாட்டவே வச்சிருக்கோம். மத்தபடி ஒண்ணுமில்லை.

பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கப் போகிறோம் என்று அழைப்பு இல்லாததால் தான் அந்தக் குழுவில் இடம் பெறவில்லை. (திருமாவளவன்)
>> ஐ ஆச தோச அப்பள வடை. நீங்க சந்திப்பின் போது பிரதமரையும் சோனியாவையும் ஆதரிப்பீங்க. வெளில வந்து அவுங்க செய்யுறது எல்லாம் சரியில்லைனு சொல்லிவீங்க. இது கூட எங்களுக்கு தெரியாதா..?

என் மனைவி தமிழச்சி, எனவே நான் பாதி தமிழன், நான் தமிழர்களுக்கு துரோகம் செய்வேனா..? (மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ்)
>>பாஸ் நீங்க ரொம்ப லேட். இங்க முழு தமிழர்களே தமிழர்களுக்கு துரோகம் செய்வதை மக்கள் உணர ஆராம்பிச்சுட்டாங்க. இப்ப வந்து...போயி பிள்ளைங்களை படிக்கவைங்க.

நம்ப தமிழர்களுக்கு ரசனை குறைவு. (தங்கர்பச்சான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில்).
>>கரீட்டா சொன்னீங்க. அதுல (தமிழர்) நீங்களும் ஒருத்தருங்கிரத மறந்துராதீங்க.

முல்லை பெரியாறு அணை விஷயத்தில் மத்திய அரசு கருணாநிதியை ஏமாற்றி விட்டது. எனவே மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும். (ஜெயலலிதா)
>>ஹி ஹி ஸ்கூல் போற குழந்தைக்கு கூட தெரியும் நீங்க ஏன் இதை சொல்றீங்கன்னு. ஆமாம் உங்களுக்கு இவ்வளவு மொக்கையா அறிக்கை எழுதி தரவங்க யாருங்க...?




    


Read more...

பட்டவுடன் தொட்டது -- எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்


 ஒரு எழுத்தாளன் என்பவன் சம்பவங்களை உற்று நோக்குபவனாக இருப்பதோடு அவற்றை சுவை பட தொகுத்து தரவேண்டும். அத்துடன் ஒரு புதுவிஷயமும், சமுதாயத்தின் மீதான தனது பார்வையை பதியும் படியும் செய்பவனாக இருக்க வேண்டும். அவனுடன் இருந்து அந்த சம்பவத்தை பார்த்தவனே இவனது எழுத்துக்கள் மூலமாக அதே சம்பவத்தை புதிதாக காணும் படி செய்பவனே எனக்கு பிடித்த எழுத்தாளன். சமீப காலங்களில் அந்த மாதிரியான எழுத்துக்களை தருபவர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் முதன்மை ஆனவர். அவருடையை எல்லா புத்தகங்களையும் படித்தேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் படித்த எல்லாமே எனக்கு பிடித்தவை. இவர் லிங்குசாமியின் "சண்டகோழி" படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். தற்பொழுது நடிகர் ஆர்யா தயாரிப்பில், இளையராஜா இசையில் வெளிவரவிருக்கும் "படித்துறை" என்ற படத்தில் பாடல் எழுதுவதோடு, வசனமும் கையாளுகிறார். சமீபத்தில் இவர் எழுத்தில் படித்த ஒரு ஜெர்மன் நாட்டு திரை படத்தை பற்றிய பார்வையை படித்தவுடன் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இது "ஆனந்த விகடனி" ல் வந்தது. இது  உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு.

'A boy in the Stripped pyjama' என்ற ஜெர்மானியப் படம் பார்த்தேன். யூதர்களைக் கொல்வதற்கான நாஜி முகாம் ஒன்றுக்கு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் குடும்பம் ஒன்று வருகிறது. ராணுவ அதிகாரிக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான். ராணுவக் குடியிருப்பு என்பதால் வெளியே போய் விளையாட யாரும் இல்லை. தனியே வீட்டில் இருப்பது எரிச்சலூட்டுகிறது.

ஒருநாள் தன் வீட்டின் பின் வாசலைத் திறந்து ஓடுகிறான். தொலைவில் ஒரு முகாம் இருப்பதைக் காண்கிறான். அதில் முள்வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. வேலியின் உள்ளே அவன் வயதில் ஒரு சிறுவன் அகதி உடை அணிந்து அடிபட்டு வீங்கிய முகத்துடன் இருப்பதைக் காண்கிறான். ஜெர்மானியப் பையனுக்கு அது அகதி முகாம் என்று புரியவே இல்லை. அவன் யூத சிறுவனிடம், 'எதற்காக இந்த முகாமைச் சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது, மிருகங்கள் வராமல் தடுக்கவா?' என்று கேட்கிறான். அதற்கு யூத சிறுவன், 'இல்லை, மனிதர்கள் வராமல் தடுக்க' என்று பதில் சொல்கிறான்.
ஜெர்மானியச் சிறுவனுக்கு அது புரியவில்லை. 'இந்த முகாமில் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்கிறான். யூதச் சிறுவன் பதில் சொல்லாமல் போய்விடுகிறான். மறுநாள் ஜெர்மானியச் சிறுவன் வீட்டில் நடக்கும் விருந்துக்கு ஒயின் கிளாஸைச் சுத்தம் செய்ய முகாமில் இருந்து யூதச் சிறுவன் அழைத்து வரப்படுகிறான். அங்கே ஜெர்மானியச் சிறுவன் தந்த கேக்கை யூதச் சிறுவன் தின்னும்போது பிடிபடுகிறான். உடனே, ஜெர்மானியச் சிறுவன் அவனைத் தனக்குத் தெரியாது என்று சொல்லி மாட்டிவிடவே, கேக்கை திருடிச் சாப்பிடுகிறாயா என்று ராணுவ அதிகாரி அடிஅடியென அடிக்கிறார்.
மறுநாள் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனைத் தேடி வருகிறான் ஜெர்மானியச் சிறுவன். யூதச் சிறுவன் கோபம்கொள்ளவில்லை. மாறாக, பிடிபட்டு அகதியாக உள்ளவன் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான் என்று மன்னிக்கிறான். இரண்டு சிறுவர்களுக்குள்ளும் நட்பு உருவாகிறது.
அதன் பிறகு, தன் வீட்டில் இருந்து ரகசியமாக ரொட்டி, கேக் எனத் திருடி வந்து, யூதச் சிறுவனுக்குத் தருகிறான். ஒரே வயது, ஒரே விருப்பம், விளையாட்டுத்தனம்கொண்ட இரண்டு சிறுவர்களில் ஒருவன் அகதியாகவும் மற்றவன் அதிகார வாரிசாகவும் இருப்பதும் எவ்வளவு முரண்பாடு. அகதிச் சிறுவன் அவமானத்தில் குறுகிப்போய் ஒடுங்கி மெலிந்திருப்பது அதிர்ச்சிகொள்ளவைக்கிறது.
இதற்கிடையில், யூத முகாமில் இருப்பவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்படுவதும், இறந்த உடலை மொத்தமாக எரிப்பதுமாக அழித் தொழிப்பு வேகமாக நடைபெறுகிறது. இந்த உண்மை அறிந்த ஜெர்மானிய அதிகாரியின் மனைவி அதிர்ச்சியடைகிறாள். கணவனோடு சண்டையிடுகிறாள். கணவன், 'ஹிட்லரின் கட்டளையை நாங்கள் மீற முடியாது. இது ஒரு தேசச் சேவை' என்கிறான். மனைவி, 'இந்தக் கொடுமையைக் காண என்னால் முடியாது' என்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்ப முடிவு செய்கிறாள்.
ஊருக்குப் புறப்படும் முதல் நாளில் யூதச் சிறுவன் தன் அப்பாவை முகாமில் காணவில்லை என்று சொல்லிக் கவலைப்படுகிறான். அவரைத் தேட தானும் அந்த முகாமில் வருவதாகச் சொல்கிறான் ஜெர்மானியச் சிறுவன். அதன்படி அவனுக்காக அகதி உடை ஒன்றைத் திருடி வந்து தருகிறான் யூதச் சிறுவன்.
இரண்டு சிறுவர்களும் முகாமுக்குள் போகிறார் கள். மனித அவலங்களைக் காண்கிறார்கள். ஹிட்லரின் அவசர ஆணைப்படி முகாமில் இருப்பவர்கள் மொத்தமாகக் கொல்ல அழைத்துப் போகப்படுகிறார்கள். அதில் இரண்டு சிறுவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.
இதனிடையில் தன் மகனைக் காணாமல் தேடி அலைகிறாள் ஜெர்மானியத் தாய். அவனைத் தேடி முகாமுக்கே வருகிறான் தந்தை. ஆனால், யூதர்களை விஷ வாயு செலுத்திக் கொல்வதற்காக அடைத்துவைக்கப்பட்ட சேம்பரில் இரண்டு சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை தெரியவருகிறது. பிள்ளையைக் காப்பாற்ற குடும்பமே போராடுகிறது. ஆனால், விஷ வாயு தாக்கி இரண்டு சிறுவர்களும் செத்துப் போகிறார்கள். இருவரது கைகளும் நட்போடு ஒன்றாகக் கோக்கப் பட்ட நிலையில் இருக்கின்றன. ஜெர்மானிய அதிகாரியின் மனைவி கதறி அழுகிறாள்.
சொந்த உதிரம் பலியாகப் போகும்போது ஏற்படும் தவிப்புப் போராட்டம். ஏன், ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை என்ற ஜெர்மானிய மனச்சாட்சியின் கேள்வியை அந்தப் படம் எழுப்புகிறது. மனித அவலத்தின் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மைப்படுத்தி சொல்லிய அற்புதமான படம்.


Read more...

வெல்லத்தான் நினைக்கிறேன் -- ரேணிகுண்டா





தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களிலேயே "பேராண்மை" க்குத்தான் முதலிடம் என்று அறிந்து மகிழ்வுற்றோம். ஒரு நல்ல படம் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மெச்சுவதாகவே உள்ளது.  நான் இன்னும் "பேராண்மை" பார்க்கவில்லை. பார்த்தபிறகு அது எப்படி நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை பற்றி பேசலாம். எப்படியோ  இந்த படம் வெல்ல வேண்டும் என்ற ("வெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை") நமது எண்ணம் ஈடேறி இருப்பது குறித்து மகிழ்ச்சியே. அந்த நம்பிக்கையோடு...
ரேணிகுண்டா இந்த படத்தை லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.பன்னீர் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். புது முகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் இந்த படத்தை பற்றி வரும் செய்திகளும் இந்த படத்தை ஒரு நம்பிக்கைக்குரிய படமாக காட்டுகிறது. சமீப காலமாக இந்த மாதிரியான புது இயக்குனர்களும் புது முகங்களும் இணைந்து வரும் படங்கள் தரத்திலும் கல்லா கட்டுவதிலும் முதன்மை பெறுவது, தமிழ் பட ரசிகர்களாகிய நமக்கு கிடைக்கும் பெருமை. இந்த படமும்  வெல்ல வாழ்த்துகிறோம்.


Read more...

நிசமாவே நல்லவங்களா இவிங்க..?


"முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்" -- என்ற பழமொழி எந்த விதத்தில் உண்மையோ இல்லையோ தெரியாது, ஆனால் தீவிரவாதம் விஷயத்தில் உண்மையாக நிறைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி போனதை சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கே நடக்கும் அனைத்திற்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இடம் மாறிய தாலிபான்களே. அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "பாகிஸ்தானை கைபற்றியவுடன் எங்கள் முதல் இலக்கு இந்தியாதான்." என்பதாகும். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியாவில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் இயக்கம் "இந்தியாவை தாலிபான்கள் தாக்கினால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்" என்று தெரிவித்திருந்தார்கள். ஒரு வேளை  வடிவேலு காமெடி-ல சொல்ற மாதிரி "இந்தியா எங்கள் சொத்து அதை கொள்ளையடிக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு". என்று சொல்லாமல் சொல்கின்றனரா..?  தெரியவில்லை. ஆனால் நமக்கோ  "எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே" அப்படின்னு கேட்கதான்  தோணுது.


Read more...

தினமலரின் தவறு


மேற்காணும் இந்த படம் "தினமலர்" பத்திரிகையில் இன்று (oct-22-2009)  வெளிவந்தது. இதில் "ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியை" அமெரிக்க தூதர் சந்தித்ததாக போட்டிருக்கிருக்கிறார்கள். நீங்கள் குழம்புவதை போலவே நானும் குழம்பி போனேன், ராஜ சேகர ரெட்டி இறந்து மாதகணக்கில் ஆகிறது இந்த நேரத்தில் எப்படி...? மேலும் படத்தில் இருப்பது தற்போதைய முதல்வர் ரோசையா அவர்களே. இப்படி இவர்கள் தவறு செய்தால் யாரும் கேட்க கூடாது..ஆனால் ....நமக்கெதுக்கு வம்பு.

.


Read more...

விசுவாமித்திரனின் கம்யூனிச சிந்தனை

கொஞ்ச நாளைக்கு முன்னால ராஜரிஷி-ங்குற படம் பார்த்தேன். அதுல விசுவாமித்திரன் எப்படி முனிவரானர்..? ஒரு நாட்டின் அரசனாக இருந்த விசுவாமித்திரன் (அரசராக இருக்கும் பொழுது அவர் பெயர் என்ன என்பதை நான் மறந்துட்டேன்), தனது நாடு அண்டை நாடுகளுடன் போர் புரிந்து வெற்றி மேல் வெற்றி குவிப்பதை கண்டு பெறும் மகிழ்ச்சி கொள்கிறார். அரசவையில் ஒரு நாள் தனது மகிழ்ச்சியை தனது அரசவை சகாக்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வழக்கு வருகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான தேரில் வந்த பொருள்களை சில கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுகிறார்கள் அவர்களை காவலர்கள் பிடித்து வந்து அரசர் முன் நிப்பாட்டுகின்றனர். அரசருக்கு ஆச்சர்யம் என் நாட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன், என் நாட்டில் திருட்டா..? அதுவும் மன்னருக்கு வந்த உணவுகளை திருட முற்பட்டிருக்கிறார்களே..? அப்படின்னு ஆச்சர்யம். அமைச்சரிடம் விளக்கம் கேட்கிறான் அரசன், அமைச்சர் சொல்கிறார் நாம் தொடர்ந்து போர் மேற்கொண்டிருந்ததால் மக்கள் விவசாயம் பக்கம் கவனம் செலுத்தமுடியவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. உணவு பஞ்சம் நாட்டில் தலை விரித்து ஆடுகிறது. அரசர் கேட்கிறார் அப்ப இந்த உணவு ..?  "இது வஷிஷ்டர் என்ற முனிவரின் ஆசிரமத்திலிருந்து வருகிறது" என்று அமைச்சர் விளக்குகிறார். "நாடே பஞ்சத்தில் இருக்கும்போது அந்த முனிவரிடம் மட்டும் எப்படி..? " என்று அரசர் வினவ, மீண்டும் அமைச்சர் விளக்குகிறார் "அரசே அவரிடம் காமதேனு என்று ஒரு பசு இருக்கிறது, அது கேட்டவை எல்லாம் தரக்கூடியது. அதன் மூலமாகத்தான் இந்த உணவை வரவழைத்து நீங்கள் பசி ஆற வேண்டும் என்று அனுப்பி வைத்துள்ளார். " என்று. அரசன் உடனே அந்த முனிவரின் ஆசிரமம் நோக்கி விரைகிறான், "நீங்கள் எனக்கு உணவு கொடுத்தது போலவே அந்த காமதேனுவை கொண்டு என்நாட்டு மக்களுக்கும் கொடுத்து அவர்கள் பசியார வேண்டும்" என்று கேட்டு கொள்கிறான். முனிவர் அதற்கு மறுப்பு தெரிவப்பதுடன் அது நாட்டை ஆளும் அரசரின் கடமை என்றும் எடுத்துரைக்கிறார். அரசன் கோபம் கொள்கிறான் படை வீரர்களை அனுப்பி அந்த காமதேனு பசுவை பிடிக்க ஏற்பாடு செய்கிறான், ஆனால் முழு படையும் தோற்றுவிடுகிறது.  அந்த பசுவை எப்படி பெறுவது என்ற கேள்வியில் அதை மிகப்பெரிய தவம் மேற்கொள்வதன் மூலமாக பெற முடியும் என்று அறிந்து தவம் மேற்கொள்கிறான். அந்த தவத்தின் வாயிலாக தனது நாட்டு மக்களின் பசியை தீர்க்கிறார்.
 நீங்கள் சமீப காலமாக பங்கு சந்தையை உற்று நோக்கினால் அது உயர்ந்து கொண்டேதான் போகிறது ஆனால் ஆட்குறைப்பும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. பங்கு சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மைய புள்ளியாக பார்க்கப்படும் பட்சத்தில், வேலையிழப்பு நடக்கும் போது எப்படி பங்கு சந்தை உயரும்..? இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது, பங்கு சந்தை, பெரிய பெரிய பண முதலைகள் பணத்தை பங்கு போட்டுக்கொள்ளும் சந்தை, அதில் மற்றவர்களுக்கு தொடர்பில்லை. அதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. எனவே இதை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிடுவது என்பது ஏமாற்று வேலை. நேற்று CNN தொலைகாட்சியில் ஒரு செய்தி, வெள்ளை மாளிகை, WALL STREET -இ எச்சரித்துள்ளதாக. ஏன்னா அங்கு நடந்து வரும் குளறு படிகள். அதாவது நட்டத்தில் இயங்குவதாக கூறி அரசாங்கத்திடம் நிதியுதவி பெற்ற நிறுவனங்கள், இன்று பணத்தை திரும்ப அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு பதிலாக அந்தந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (C.E.O) தங்களது சம்பளத்தை உயர்த்தி கொள்வது, ஊழியர்களுக்கு அதிகபடியான போனஸ் கொடுப்பது என்று தங்களை வளர்த்து கொண்டுள்ளது.
சரி இதற்கும் முதலில் சொன்ன விசுவாமித்திரன் கதைக்கும் என்ன சம்மந்தம், அந்த கதையை பார்த்தீர்களேயானால் தனது நாட்டு மக்கள் பசியால் தவிப்பதை பொறுக்க முடியாமல் தனது பதவியையே துறந்து, துறவறம் பூண்ட மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. விசுவாமித்திரன் காலத்திலேயே தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் சிந்தனை எல்லாம் வந்தாச்சு. ஆனால் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கால மன்னர்களோ பணக்காரர்களின் கல்லா நிரம்பவும், தங்களையும் அவர்களில்  ஒன்றாக இணைத்துக்கொள்ளும் முயற்சியையுமே சிரமேற்கொண்டு செய்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் நலிந்த நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை நிதிஉதவியாக கொடுத்தது எல்லாம். அமெரிக்கா மட்டுமல்ல முதலாளித்துவ சிந்தனைகள் கொண்ட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் அடித்தட்டு மக்களையும் நடுத்தர மக்களையும் காப்பாற்றுவதற்கு வழி பார்க்க வேண்டும். இது கம்யூனிச சிந்தனையோ இல்லையோ தெரியாது ஆனால் எக்காரணம் கொண்டும் சமுதாயத்தின் ஒரு தட்டு மக்களின் வளர்ச்சிக்கு மட்டும்  துணை போவது என்பது மற்ற மக்களின் ஒட்டு மொத்த கோபமும் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் மேல் திரும்புவதற்கு வழி வகுக்கும்.


Read more...

இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண் டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம் - இது கதாநாயகன் ரவி (மோகன்).
ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவ னைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்).
- இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.
'முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ' பாடலும், டி.வி-க்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்.பி.பி- யும் இவருக்கு அசைக்க முடி யாத இரு தூண்கள்!)
தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறி முகமாறது - பின்பகுதி விவ காரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!
படத்துலே என்னதான் குறை?
ஹீரோவோட பிளட் கான் சர், 'வாழ்வே மாய'த்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் 'அந்த 7 நாட்கள்' பாதிப்பு!
இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

-பயணங்கள் முடிவதில்லை படத்தின்  "ஆனந்த விகடன்" விமர்சனம் தான் நீங்கள் மேலே பார்த்தது. ஹும்.. என்னத்த சொல்றது....? முடிஞ்சா அப்படியே "கலைஞனை மதிக்காத சமூகமே" படியுங்கள், முன்னாடியே படிச்சிருந்தா அதை ஞாபக படுத்திக்கொள்ளுங்கள். விகடனின் இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை போல.


Read more...

அவசர சட்டமும் அதனால் நிகழப்போகும் விபரீதமும்

நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சேர நுழைவுத் தேர்வில் பங்கேற்க 12ம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தற்போது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை 80 முதல் 85 சதவீதமாக உயர்த்த மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 2011-வது கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று அத் துறையின் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

மேற்கண்ட செய்தியை இன்றைய செய்திகளில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ரொம்ப நாளா எனக்குள் ஒரு கேள்வி இருந்துகிட்டே இருக்கு.  சமீபத்தில் PROJECT MANAGEMENT குறித்த ஒரு தேர்வு எழுதினேன் நான் 63% மதிப்பெண் பெற்றேன். ஆனால் நான் தேர்வில் பாஸாகவில்லை என கூறிவிட்டார்கள். விசாரித்த பொழுதுதான் தெரிந்து கொண்டேன் அதற்கு 80% மதிப்பெண்கள் தான் குறைந்த பட்ச தகுதி என்று.  பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு கல்வி எட்டா கனியாக இருந்த பொழுது அது கிடைக்க போராடியவர்களை நமக்கு தெரியும், அதன் மூலம் கல்வி பயன் அடைந்தவர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வியாப்பித்திருக்கிருகிறார்கள். இது பாராட்ட பட வேண்டிய ஒன்று.  தொழில் நிமித்தமாக தான் சார்ந்திருக்கும் சிறிய ஊரில்  ஒருவன் சாதரண கல்விநிலயத்தில் கல்வி கற்க நேர்ந்தால் அவனை மேலே கொண்டுவரவும் ஒரு சட்டம் போடப்பட்டு அவனுக்கிருந்த தடைகல்லும் நீக்கப்பட்டது. ஆனால் என்னை போல 60% மதிப்பெண் எடுப்பவர்களுக்கு என்னதான் கதி..? எங்களால் எல்லாம் உயர் பதவிகளை அடையவே முடியாதா..?  அப்படிங்கிற கேள்வி என் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் நீயும் 80% மதிப்பெண் வாங்க வேண்டியது தானே..? அப்படிங்கிற கேள்வி வரும்,சரி நாங்க முயன்றோம் முடியவில்லை ஆனால் அதற்காக அந்த வாய்ப்பு என்னை போன்றோருக்கு முற்றிலுமாக மறுக்க படுவது என்பது என்ன நியாயம்..? இது இன்னொரு வகையில் அடிமைகளை தோற்றுவிக்கும் வழிதானே.? இப்படியே போனால் வருங்காலத்தில் 80% வாங்கியவர்கள்தான் வாழலாம், மற்றவர்கள் எல்லாம்...?! என்ற நிலை  கூட வரலாம்.  அது
 எப்படின்னு கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம் ஒரு வளமான பொருளாதாரம் என்பது அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களது அடிப்படை தேவைகளை குறைந்த அளவு பணம் செலவு பண்ணினாலே கிடைக்கும் படி இருக்க வேண்டும் அப்பொழுது தானே அந்த நாடு நல்ல வளமான பொருளாதாரத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதை விடுத்து ஒரு வேளை சோற்றுக்கே சில ஆயிரங்களை செலவு பண்ணும் படி இருந்தால் அது எப்படி நல்ல பொருளாதாரம் ஆக முடியும்..?
அப்புறம்  கல்வியும், மதிப்பெண்ணும் மதிக்கப்படமால் போவதற்கே வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான திட்டங்களுக்காக  அவசர சட்டம் போட்டுபவர்கள் வருங்காலத்தில் அது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.


Read more...

என்ன பண்றாங்க..? எப்படி சம்பாதிக்கிறாங்க..?


 இந்த மாசம் வீட்டு வாடகைக்கு என்ன பண்றது அப்படின்னு நினைக்கிற குடும்ப தலைவன் இருக்கிறான். இந்த மாசம் காலேஜ் பீஸ் எப்படி கட்டப்போறோம்னு நினைக்கிற மாணவ மாணவிகள் இருக்கிறார்கள். வாழ்நாள்ல ஒரே ஒரு சொந்த வீடு கட்டிபுட மாட்டோமா அப்படின்னு நினைக்கிற சாதரண அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இது மாதிரி எல்லாம் கவலை எதுவும் இல்லாமல் அதே சமயம் புகழுக்கும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் வாழ்கையை ஒட்டி கொண்டிருக்கும் ஆசாமிகளை பற்றி நாம் என்றாவது யோசித்திருக்கோமா..? அப்படி யோசித்த போது சில பிரபலங்கள் நம் எண்ணங்களில் தோன்றினர். தயவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை நாம் நக்கலடிப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பணம்
 இப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுகிட்டா நம்ம நடுத்தர மக்களும் அதை பாலோ பண்ண வசதியா இருக்கும்ல. அதுக்காகத்தான்,

அன்றாடம்  நீங்கள் காலையில எழுந்திருச்சு நியூஸ் பேப்பர்-ஐ புரட்டினால் உங்கள் கண்ணில் அடிக்கடி "சுப்பிரமணிய சாமி" அப்படிங்கிற பேரு அடிக்கடி தோன்றும். இல்லை இல்லை நான் அந்த பழனி மலை "சுப்பிரமணி சாமியை" சொல்லல. அரசியல்வாதி சுப்பிரமணியசாமியை தான் சொல்லுறேன். திடீர்ன்னு ஒரு அரசியல் கட்சியை எதிர்க்கிறார். திடீர்ன்னு அவுங்களையே ஆதரிக்கிறார்.  ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுறார். கட்சி ஒன்றையும் நடத்துறார், ஆனா அப்படி இருந்தும் பெரிய வருமானம் இருக்கிறமாதிரி தெரியலை. இவரு வெளிநாட்டுல எங்கேயோ பேராசிரியரா வேலை பார்ப்பதாக சொன்னார்கள், இவருக்கு எப்படியும் ஒரு அறுபது வயதாவது இருக்கும் அப்படி பார்த்தா இவர் இந்நேரம் அந்த பேராசிரியர் தொழிலிருந்து ஓய்வு பெற்று இருக்க வேண்டும். அப்படி பார்த்தாலும் பென்ஷன் வருமே..? அது போதுமா ஒரு கட்சி நடத்த, அவ்வப்பொழுது அறிக்கை விட..? எல்லா தேர்கல்களிலும் போட்டியிட இந்த வருமானம் போதுமா..? வேற என்னதான் பண்ணுறார்  தொழிலுக்கு..? 

இது மட்டுமா திடீர் திடீர்ன்னு வெளிநாட்டு பயணம் போறார். அங்குள்ள அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்தேன்னு சொல்லுறார். இவரு என்னதான் பண்றார்...?  ஒரே குழப்பமா இருக்கு, இப்படி குறைஞ்ச வருமானத்துல ஒரு அரசியல் வாதியாவோ அல்லது பிரபலமாவோ இருக்க முடியும்னா அப்புறம் ஏன் மக்கள் மேலே சொன்ன சின்ன சின்ன கனவுகளுக்காக ஏங்கி கிடக்கனும்.?  உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் (சிரிக்க மட்டும்) -- 4

அரசுப் பணி அதிகமாக அழுத்தும் நேரங்களில், 'கலைஞர்' டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியைப் பார்த்து தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வாராம் முதல்வர் கருணாநிதி. குறிப்பாக நடுவர்கள், நடனமாடுபவர்கள் அணியும் காஸ்ட்யூம்கள் பற்றியும் இடையிடையே ரசனையோடு யோசனைகள் தருவாராம். 'கலைஞர்' என்றால் சும்மாவா!
>> இந்த லட்சணத்துல  கட்சிகள் எல்லாம் டி.வி ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆமாம் நாட்டுல மும்மாரி மழை பொழிஞ்சு மக்கள் எல்லாம் சந்தோசமா இருக்காங்க அப்புறம் மானாட மயிலாட பார்த்தால் என்ன இல்லை மானே ஆடி பார்த்தால் என்ன ..?


செய்தி-2
அந்த ஆவேசக் கூட்டத்துக்கு எத்தனையோ பேர் வற்புறுத்தி அழைத்தும், 'தல' 'தள' நடிகர்கள் செல்லவில்லை. 'எங்களை இந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டு வந்ததே மீடியாக்கள்தான். அவங்களுக்கு எதிரா வேகப்பட்டு பேசுகிற இடத்தில் நாங்கள் இருப்பது வீண் சங்கடம்' என்று சொல்லிவிட்டார்களாம்.
>> இதுக்கு பேசாம அஜீத், விஜய் அப்படின்னு போட வேண்டியது தானே. பொது ஜனங்களாகிய எங்களை நீங்க குறைச்சு எடை போட்டுட்டிங்கன்னு நினைக்கிறோம். இன்னும் கஷ்டமா ஏதாவது சொல்லுங்க கண்டுபுடிச்சு காட்டுறோம். எங்க அறிவை வளரவிட மாட்டிங்க போல. 
செய்தி-3
பேர் சொல்ல மாட்டேன்... ஊர் மட்டும் சொல்வேன். குறித்துக் கொள்ளும். தமிழகத்தின் முக்கிய வாரிசுப் பிரமுகர் ஒருவர் அண்மைக்காலமாக வெளிநாட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் இங்கிலாந்து டாக்டர் ஒருவர் அவசரமாகக் கடந்த வாரம் சென்னைக்கு வந்தார். நடுநிசியில் வந்த அவரை வரவேற்க அந்த வாரிசு தன்னந்தனியாக ஏர்போர்ட்டுக்குப் போயிருக்கிறார். டாக்டரை தனது காரில் ஏற்றிக்கொண்டு பிரபலமான மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து அதிகாலையில் தன்னுடைய வீட்டுக்கும் டாக்டரை கூட்டிப் போயிருக்கிறார். கொஞ்சநாளைக்கு இங்கிலாந்து டாக்டர் இங்கேயே தங்கியிருந்து, சில மருத்துவ அட்வைஸ்கள் வழங்குவாராம்! வாரிசின் பயணங்களில் அந்த டாக்டரையும் பார்க்கலாம் போலிருக்கு.
>> போனதுக்கு போட்ட கமெண்டை பாருங்க. ஸ்டாலினை தானே சொல்றீங்க. திருந்துங்க. 

அழகிரி தனது பாதங்களை டெல்லியில் பதித்துவிட்டார். இனி "அட்டாக் பாண்டிகளும்'' "பாம் ரங்கநாதன்களும்'' அழகிரியின் அமைச்சர் மாளிகையிலிருந்தே தங்களுடைய நடவடிக்கைகளை துவங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

(ஜெயலலிதா அறிக்கை)

>> அவுரு டெல்லில பாதம் பதிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு இப்ப வந்து.., சரி உங்க காலண்டர்ல இப்ப மாசம் என்ன 2009 மே மாசமா..?
 எனக்கு புடவையே கட்டத் தெரியாதா என சிலர் கேட்பதாக சொல்கிறார்கள். எனக்கு நல்லா புடைவை கட்டத் தெரியும். அப்படி கட்டினா ரொம்ப ரொம்ப கவர்ச்சியா தெரிவேன். அதைப் பார்த்து 'மச்சான்ஸ்' எல்லாம் கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க கெட்டுப்போகாம தடுக்கத்தான் நான் புடவை கட்டறதில்லை.

(சொன்னவர் நடிகை நமீதா)
  >> இந்த மாதிரியான சமூக அக்கறை கொண்டவங்கலையா இந்த பத்திரிக்கை உலகம் இப்படியெல்லாம் பேசுது .? என்ன கொடுமை இது...?


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 3


என்னடா "தளபதி" இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தந்திடுச்சென்னு நினைச்சப்ப, நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாக "குணா" பார்க்க போனேன், எப்படியா இருந்தாலும் நம்மாளுதானே இசை. படம் என்னவோ பண்ணுச்சு. ஆனா அதை வெளில சொல்லிக்கலை. இந்த சமயத்துல ரஜினி-ன் அடுத்த படமான "அண்ணாமலை" இளையராஜா இல்லாம எடுக்கபட்டுச்சுன்னு, கேள்வி பட்டு ரொம்பவே நொந்து போயிட்டேன். இந்த முறை ரஜினி பிரிஞ்சதை ஏத்துக்க முடியலை, இந்த படத்தையே பார்க்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அது கூட இளையராஜவிற்காக இல்லைன்னு நான் நம்பினேன். ஏன்னா ரஜினியை அவரது நடிப்புக்காக எத்தனை பேரு ரசித்தார்கள் என்று தெரியாது. ஆனா ரஜினி நட்பிற்கு, தன்னை வளர்த்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர் அப்படிங்குற குணத்தினாலேயே தான் எனக்கு ரஜினியை ரொம்ப பிடிச்சது. அப்படிப்பட்ட ரஜினி ராஜாவுடனான தனது நட்பை துண்டிச்சுக்கிட்டாரே அப்படின்னு நினச்சு மனசு ரொம்ப வெறுத்துடுச்சு அதனாலத்தான் அந்த படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு செஞ்சேன். ஆனா அந்த படம் கூட பாலச்சந்தர் என்ற தனது குருவின் மேல் கொண்ட பக்தியினால பண்றார்னு நம்ப மனம் மறந்தது. அதாவது என்னையும் அறியாமல் ராஜாதான் என் மனசில் ஆழமா பதிஞ்சுட்டார். அப்படிங்கிறதை இந்த விஷயம் நன்கு உணர்த்தியது. சரி இனிமேல் நம் விருப்ப லிஸ்ட்-ல் ரஜினி இல்லை. அடுத்த வாரத்தில் இன்னொரு அடி, அதாவது பாலச்சந்தர் தயாரிக்கும் ஒரு படத்தை மணிரத்தினம் இயக்குவதாகவும் அதற்கு ராஜா இசை இல்லைன்னும் ஒரு செய்தி. என்னடா இது நமக்கு வந்த சோதனை பின்ன சின்ன வயசிலிருந்து முதலிடத்தில் இருந்த ரஜினியையே ஒதுக்கியாச்சு. இப்ப என்னடான்னா விருப்ப இயக்குனரையும் இழக்கணும் போல இருக்கே. அப்போ மணிரத்தினம் பல கல்லூரி மாணவர்களின் விருப்ப இயக்குனர். சாமி கும்பிடுரப்ப எல்லாம் இந்த செய்தி பொய்யா இருக்கணும்னு வேண்ட ஆரம்பிச்சேன். ஆனா நான் சாமியை  சரியா கும்பிடலை போல, என் வேண்டுதல் பலிக்கல. அந்த படத்துக்கான விளம்பரம் வந்துச்சு, அதில் இசை ஏ.ஆர்.ரஹ்மான் அப்படின்னு போட்டிருந்துச்சு. நான் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா ராஜா பார்க்காத ஆளுங்களா..? நிச்சயம் ராஜா ஜெய்ப்பார் அப்படின்னு நான் ஆணித்தனமா நம்புனேன். படம் ரிலீஸ் ஆகி மக்கள் எல்லாம் அந்த படத்தின் பாடலகளை வெகுவாக பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் கூட முதன் முதலாக சண்டை எல்லாம் போட்டேன். எல்லாரும் சொன்னார்கள் இதுல என்ன இருக்கு அன்றைக்கு எப்படி ராஜ பெரிய ஆளா ஆனாரோ அது மாதிரிதான் இதுவும் மேலும் ராஜாவும் சும்மா இல்லை அவரு நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணிட்டார்னு. மனம் நம்ப மறுத்துச்சு, கிட்டத்தட்ட இந்த கால கட்டத்துல தான் நான் முழு பைத்தியமானேன். அது எப்படி இவ்வளவு சாதனைகள் செஞ்ச ஒரு ஆளு ஒரு படத்துலையே கீழே போயிருவார்..? குமுதம் இதழில் "ரோஜா" படத்துக்கான விமர்சனத்துல இசை பற்றி குறிப்பிடும் போது "பாடல்களில் ஒரு புது தொனி தெரிகிறது. (இளையராஜாவிற்கு ஒரு சக்களத்தி)" அப்படின்னு போட்டிருந்தார்கள். ராஜாவிற்கு போட்டியா..? ஹ ஹா..எத்தனை பேரை பார்த்தவர்  ராஜா..? டி.ராஜேந்தர்,சங்கர்-கணேஷ்,பாலபாரதி,தேவா,ரவீந்திரன்,தேவேந்திரன் இப்படி பல பேரை சம காலத்தில் சர்வ சாதரணமாக ஓரம் கட்டியவர். அந்த பட்டியலில் இந்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்று.  ராஜாவை பற்றிய விஷயங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தின் பெயரும் விருப்ப லிஸ்டிலிருந்து தூக்கியாச்சு. "புதிய முகம்" என்று ஒரு படம் அதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அப்படின்னு சொன்னாங்க. அந்த படத்தை பார்த்தேன், அந்த படத்திலும் ஒரு குறை தெரிந்தது. சொல்ல மறந்துட்டனே "ரோஜா" படம் பார்த்த பொழுது எல்லோரும் படத்தையும் இசையையும் சொன்னபொழுது என் மனதில் அந்த படத்தை பற்றி ஆஹா என்றோ ஓஹோ என்றோ தோன்றவில்லை. சொல்லப் போனால் அந்த படத்தின்  பின்னணி இசையில் ஒரு குறையே தென்பட்டது. இதை சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் எனக்கு முழு பைத்தியம் பிடித்ததை உறுதி செய்தார்கள்.
சரி இனிமே நாம என்ன சொன்னாலும் கேட்கவா போறாங்க. இந்த சமயத்துல கூட எனக்கு உதவியது ராஜாவின் பாடல் தான். 'எது வந்தால் என்ன எது போனால் என்ன என்றும் மாறாது வானம் தான்..". வான் போல இளையராஜா இருக்க என்ன கவலை. கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தான் கமலின் "தேவர் மகன்" வெளிவந்தது. எல்லா பாடலும் அருமையா இருந்துச்சு. ஆனா பாருங்க எல்லா ஊடகங்களிலும் விமர்சனங்களிலும் ரொம்ப அருமை பெருமையா எழுதாமல் இதெல்லாம் இளையராஜாவின் கடமை அதாவது இளையராஜாவிற்கு சாதரண விஷயம் என்பது போல. அடுத்து "ஜென்டில் மேன்","காதலன்" அப்படின்னு ஹிட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏற ஆரம்பித்தார். ஆனால் அந்த காலத்திலும் இளையராஜா கொஞ்சம் கூட தரம் குறையாமல் பாடல்களை கொடுத்தார் உதாரணத்திற்கு சிலவை இங்கே "ராஜகுமாரன்","வள்ளி","சிறைச்சாலை","மகாநதி","பிரியங்கா","மகளிர் மட்டும்" இப்படி பல படங்கள் இவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு  எல்லாம் பெரிய அளவில் பேச படவில்லை, ராஜாவின் ரசிகர்களை தவிர. அல்லது இவை அந்த  பாடல்களுக்குரிய தகுதியான இடத்தை பெறவில்லை. இவை எல்லாம் எப்படி நிகழ்ந்தது..? ராஜாவை எல்லாரும் ஒதுக்கிய பொழுது என்னை போன்ற (முழு அல்லது அரை) பைத்தியங்களை எல்லாம் ஒரு தனி தீவில் விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் சென்று விட்டதை போலவே நான் உணர்ந்தேன்.  இதன் பிறகு ராஜா எவ்வளவோ ரொம்ப ரொம்ப சாதரண படங்கள் பண்ணி இருக்கிறார், சில படங்கள் ரிலீஸ் ஆகமலே இருந்திருக்கின்றன (பரணி,பூஞ்சோலை,காதல் சாதி இன்னும் பல)
 ஆனால் எந்த படமானாலும் அந்த படத்தின் ஆடியோ கேசட் அல்லது சி.டி. வாங்குவதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்தேன்.  இன்னும் ஞாபகம் இருக்கிறது அன்று "தேவதை" படத்தின் ஆடியோ ரிலீஸ் என்று. சாப்பிட வைத்திருந்த காசில் ஆடியோ கேசட் வாங்கிவிட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்தே நான் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். இதை நான் பெருமையாக இப்பொழுது கூட நினைத்து பார்க்க முடியவில்லை. மாறாக இது எல்லாம் அதி  அற்புதமான இசையை வழங்கிய ஒரு மகா கலைஞனுக்கு செய்யும் ஒரு கடமையாகவே பார்த்தேன், பார்க்கிறேன். மேற்சொன்ன அந்த  படத்தின் பாடல்களிலும் நான் "இளமை ஊஞ்சலாடுகிறது" -வில் பார்த்த ராஜா தெரிகிறார். எல்லாரும் சொன்னாங்க ராஜா ஹிட் டைரக்டர்களின்  படத்திற்கு இசை அமைப்பதில்லை, அவர் முன்னாடி பண்ண மாதிரி அவர் இசை அமைச்சாலே படங்கள் ஓடணும்னு எதிர்பார்க்க முடியாது, அவரால் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற மாதிரி இசை அமைப்பதில்லை, அவருக்கு தலைகனம் அதிகம், இயக்குனர்கள் சொல்வதை கேட்பதில்லை தனக்கு தோன்றியவற்றை தான் இசை அமைக்கிறார், இப்படி பல குற்றச்சாட்டுகள். நான் எதையும் நம்புவதில்லை, சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் (ஒரு வெறியனா) என்னிடத்தில் நியாயமான பதில்கள் இருக்கு. ஒரு விஷயம் ராஜா 90 களுக்கு பிறகு நல்ல பாடல்களை தருவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு லிஸ்ட்..
பூமணி, ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி,கட்டுமரக்காரன்,பூந்தோட்டம்,அவதாரம்,வீட்ல விசேஷங்க, காக்கை சிறகினிலே,இவன்,HOUSEFULL,காதல் கவிதை,என்னருகே நீ இருந்தால், சக்கரை தேவன்,வியட்நாம் காலனி,பிரியங்கா,ஜூலி கணபதி,காத்திருக்க நேரமில்லை,காதல் சாதி(வெளியாகவில்லை இதுவரை)
இந்த லிஸ்ட் இன்னும் பெரியது, இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள் கேட்டுவிட்டு இந்த பாடல்கள் ஏன் அவை வெளிவந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் போனது என்பதற்கு காரணம் சொல்லுங்கள். பிறகு சொல்கிறேன் இளையராஜா ஏன் ஹிட் இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைப்பதில்லை என்றும், ஏன் தனக்கு தோன்றியவற்றை மட்டும் இசை அமைக்கிறார் என்றும்.   இதோ இன்றைக்கு இந்த அளவு வந்தபிறகும் கூட இளையராஜாவை அந்த இடத்திலிருந்து இறக்க மனசு வரவில்லை, எனக்கு தெரிந்து இறக்கும் வரை இப்படியேதான் இருப்பேன். இதை பிடிவாதம் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏன்னா இன்றைய பழசி ராஜா வரை ராஜாவின் பாடல்களை என்னால் அன்று எப்படி "முரட்டு காளையை" ரசித்தேனோ அதே முழு மனதுடன் ரசிக்க முடிகிறது.
நான் அடித்து சொல்றேன் வருங்காலங்களில்  இளையராஜாவால் இன்னொரு "மௌன ராகம்","சிந்து பைரவி","முதல் மரியாதை" தர முடியும். இதற்கு அவருக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நிச்சயம் உதவுவான்.  இளையராஜாவை இன்று மதிக்காமல் அல்லது அவரது இசையை உதாசீனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராஜா ஒரு இசை பெருங் கடல் அதை நீங்கள் போற்றி புகழ வேண்டாம் எங்களைப் போல், ஆனால் குறைந்த பட்சம் குறை சொல்லாமலாவது இருக்கலாமே. இதை நீங்கள் ராஜாவுக்கு செய்யும் மரியாதையாக கூட நினைக்கவேண்டாம், இசைக்கு செய்யும் மரியாதையாக நினையுங்கள். இசை வேறுபாடுகளை களைய கூடியது, இங்கு வேண்டாமே விரோதம்.   இதை சொன்னால் என்னை கிறுக்கன் என்கிறார்கள்.


Read more...

ஒரு பயணமும் ஒட்டு மொத்த தோல்வியும்.

அனைத்து எம்.பி-க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள்' எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், 'நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம்' என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா?' எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.

சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, 'இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...' என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், 'நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். 'ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே' என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, 'அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.''


--  மேலே நீங்கள் கண்டது சமீபத்திய இலங்கை விஜயம் குறித்த திருமாவளவன் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.  இவர் ஏன் அங்கே போனார்..? ஏன் ராஜபச்சேவை சந்தித்தார்...? அப்படிங்கிற கேள்வி எல்லாம் ஒரு பக்கம்  இருக்கட்டும்.  ஆனால் மேற்கண்ட பதிலிலிருந்து ஒரு விஷயம் விளங்குது,  ராஜபக்ஷே நடந்துகொண்டது மிக மிக மிக (இப்படி எத்தனை மிக வேணுமினாலும் போட்டுக்குங்க) கேவலமான ஒரு செயல். ஒரு அரசு முறை பயணத்தில் வந்தவரிடம் ஒரு நாட்டின் அதிபர் பேசும் பேச்சா இது..? என்ன ஆச்சர்யம் என்றால்  இது பற்றி யாரும் மிகவும் உரத்து குரல் கொடுக்காதது. சரிங்க விடுதலை புலிகளை ஒடுக்கியது உங்களுக்கு பெருமிதம் தருவதாக இருக்கலாம்..ஆனால் அதுக்காக எப்படி நீங்கள் வேறொரு நாட்டு அரசு பிரதிநிதியை இவ்வாறு பேசலாம்...?  கேட்டால் அரசு பிரதிநிதியாய் அவர்கள் செல்லவில்லை அந்ததந்த கட்சிகளின் பிரதிநிதிகளாகவே சென்றார்கள் என்றொரு குரல் கேட்கலாம், சென்றவர்கள் அனைவருமே இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள். இதுவே அவர்களை அரசு பிரதிநிதிகளாக பார்க்க உதவுமே.சரிங்க அதுவும் வேணாம் குறைந்த பட்சம் ஒரு விருந்தாளியிடம் இப்படியா விஷம் கக்குவது..? கொஞ்சம் கூட ஒரு சபை நாகரீகம் அன்றி பேசிய ராஜபக்சேயை அங்கேயே  யாரும் கண்டிக்காமல் நின்றதன் மூலம்  , அவர்கள் நம் நாட்டு மானத்தை எப்படி வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தவிதத்தில் இந்த பயணம் வெற்றியோ ஆனால் இந்த ஒரு விஷயத்தில் ஒட்டுமொத்த தோல்வியையும் தனதாக்கி கொண்டது இந்த பயணம்.


Read more...

பிடித்த கேள்விகள் - பிடித்த பதில்கள்

 எந்த பத்திரிகை ஆனாலும் அதில் வரும் கேள்வி- பதில் பகுதியை படிக்க தவறுவதில்லை அப்படி படித்த கேள்வி-பதில்களில் என்னை கவர்ந்த வற்றை இங்கே தந்துள்ளேன். இவை உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையோடு..

லஞ்சம், மாமூல்... என்னங்க வித்தியாசம்?
சம்பளம் மாதிரி, குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து ஒழுக்கமாக(!) லஞ்சம் கொடுத்து வந்தால் - அதுதான் மாமூல்!

கம்ப ராமாயணம் எழுதிய கம்பரும், அமராவதியின் காதலனான அம்பிகாபதியின் தகப்பனார் கம்பரும் ஒரே நபர்தானா?

அம்பிகாபதி-அமராவதி கதையே ஒரு கதை தான்! கவிச்சக்ரவர்த்தி கம்பர் இருந்தது உண்மை; அவர் ராமாயணம் எழுதியது உண்மை. அவ்வளவே!
(மதன் கேள்வி - பதில்)

கேள்வி : தமிழக அரசு, கலைஞர் சிறந்த கதை வசனகர்த்தா என விருது தருகிறது. அண்ணா விருதை தி.மு.க. கலைஞருக்கு அளிக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?
பதில் : இவற்றை மறுக்கும் பெருந்தன்மை கலைஞருக்கு வேண்டும் என்று தெரிகிறது!
(கல்கண்டு கேள்வி-பதில்)

ஊழல் எதிர்ப்பாளரான சோ, ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?


சோவின் பிரச்சனை ஊழல் அல்ல, உள்ளத்தில் ஊறியிருக்கும் உணர்வு..

சமீபத்தில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தில் நடிகர் விவேக் பத்திரிகை யாளர்களை ஆபாசமாய்த் திட்டிப் பேசினாராமே..?


விவேக் பாவம். சினிமாவில் சீன் காட்டி பார்த்தார், வடிவேலு வின் அமர்க்களத்துக்கு முன் காணாமல் போய்விட்டார். இப் போது மேடையில் சீன் காட்டுகிறார் பரிதாபப் படுவோம்.
(அரசு கேள்வி-பதில்)


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 2

கால்வாசி கிறுக்கனா மாறினாலும் அந்த தலைவர் (ரஜினி) வெறி மனதை தாண்ட மறுத்தது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு இடத்தில் சின்ன வயதில் எந்த சாயமும், அதாவது எந்த ஒரு தமிழ் நடிகரின் ஆதரவாளனாக இல்லாமல் வளருவது என்பது கொஞ்சம் கஷ்டமும் கூட. வளர்ந்து நமக்கு விவரம் தெரிந்த பிறகு வண்ணமில்லாமல் தோன்றலாம் ஆனால் எதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறு வயதில் ஒரு வண்ணம் அவசியம் முன்னமே சொன்னது போல மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவதற்காகவாது அது தேவை பட்டது.
கழுகு என்று ஒரு படம், ஏற்கனவே கூட படிக்கிற பசங்க எல்லாம் பாத்துட்டு "பயமா இருக்குதுன்னு" சொல்லி இருந்தாலும் தலைவருக்காக பார்க்க கிளம்பினேன். படத்தை முழுசா பர்ர்த்ததை விட, கை விரல்களுக்கு நடுவில் பார்த்தது தான் அதிகம். அவ்வளவு பயமா இருந்தது அதுக்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசை என்பதை காலம் தான் சொல்லியது. சங்கிலி முருகன் ஒரு மந்திரவாதியாக நடித்திருப்பார் அவர் முகம் கண்களை விட அந்த காங்கோ வாத்திய கருவியின் பீட்டு நிறைய அதிர்வை தந்தது. கிட்டத்தட்ட
 அதே கால கட்டத்தில் வந்த "குரு" கமல் நடித்த அந்த படம் இலங்கை வானொலியில் அடிக்கடி அந்த "ஆடுங்கள் பாடுங்கள்" பாடலை போட்டு கலக்கி கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தலைவர் விதி அந்த படத்திற்கு போக அனுமதிக்க வில்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்களால்  அந்த படத்திற்கும் வலு  கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டேன். அந்த படத்தில் கமல் குருவாய் தோன்றும் பொழுதெல்லாம் எழுப்பப்படும் இசை அப்படியே நாமளும் குதிரையில் போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. அட என்னடா இப்படி ஒரு இசையை கமல் படத்தில் போட்டுட்டாரே இந்த ஆளு. அப்படின்னு நினைக்கும் பொழுது "தனிக்காட்டு ராஜா" வந்தது எல்லா பாட்டும் சும்மா அப்படி இருந்தது. அப்ப கூட எனக்கு இதெல்லாம் இளையராஜாவிற்கு சாதாரணம் என்பதை  நம்ப மறுத்தேன்.

அப்பொழுதெல்லாம் இளையராஜாவின் பாட்டுக்கள் ஹிட் என்பது எழுதப்படாத ஒரு விதி. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னதைபோல "அதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை விதியாக " மாறிப் போயிருந்தது. "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" , "ப்ரியா"  என படங்கள் வரிசை யாக ஹிட் அடித்த நேரம். கொஞ்சம் கொஞ்ச மாக மனசு இளையராஜாவை நோக்கி நகர்ந்தது. சரி தலைவரையும் விட வேணாம் ராஜாவையும் விட வேணாம் ஏன்னா தலைவர் படங்கள் எல்லாவற்றிற்குமே ராஜாதானே இசை. அதனால் ரஜினி பாதி ராஜா பாதின்னு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியது மனசு. அப்பவெல்லாம் தலைவர் படத்திலேயே பிடிக்காத படம் "ராணுவ வீரன்" ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியலை அல்லது தெரியலை. ஆனா அந்த படத்தில் ஒரு குறை தென் பட்டது. அது ராஜாவின் இசை என்பதை வளர்ந்த பிறகே தெரிந்து கொண்டேன். இந்த காலகட்டத்துக்கு அப்புறம் எனக்கு நினைவில் இருப்பது  "புன்னகை மன்னன்" படத்தின் பாடல்கள் வெளியான புதிதில் அந்த படத்தின் கேசட்டை  நண்பர் ஒருவரிடமிருந்து அவ்வப்பொழுது இரவல் வாங்கி கேட்பது வழக்கம். அதில் போட்டிருக்கும் இளையராஜா படத்துடன் பேசி இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த இசை இவருக்கு சாத்தியமானது. ஒரு பக்கம் "சலங்கை ஒலி" மாதிரியான சாஸ்திரிய இசை,  "முதல் மரியாதை", "மண்வாசனை" போன்ற கிராமத்து பாடல்கள், இன்னொரு பக்கம் "புன்னகை மன்னன்" மாதிரியான மேற்கத்திய இசை. அப்புறம் இசையில் வேற என்னதான் இருக்குது...? எல்லாமே என் வசம் இப்பவாது என்னை முழுமையா நம்புறியா இல்லையா என்றது "புன்னகை மன்னன்" கேசட்டின் மேலிருந்த இளையராஜா. விடுவோமோ..? ஹும் நாங்க எல்லாம் கொள்கை குலவிளக்கு. எங்க கிட்டயேவா. இந்த படங்களில் சம்மந்த பட்டிருந்தவர்களும் என்னுடைய விருப்ப லிஸ்ட்-ல் பிடித்த இயக்குனர்களாக பாரதிராஜாவும்,வைரமுத்துவும்,மணிவண்ணனும் இருந்தார்கள். திடீரென்று ஒரு குமுதம் இதழில் வைரமுத்து இனிமே இளையராஜா கூட பணிபுரிய மாட்டார் என்ற செய்தி படித்து. அட இது என்னடா என்று நினைத்து, வைரமுத்துவை என்னுடைய விருப்ப லிஸ்ட்-இலிருந்து தூக்கி விட்டேன். அப்புறம் பார்த்தா பாரதிராஜாவும் போறார்னு போட்டிருந்துச்சு. ஆனால் அவரை அவ்வளவு சீக்கிரம் தூக்க முடியவில்ல அத்துடன் அப்பொழுதுதான் "வேதம் புதிது" பார்த்தேன். ஆனா இவ்வளவு திறமையான படத்தில் இளையராஜாவிற்கு இடமில்லையே அப்படி என்றால் ....? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்துச்சு "மௌன ராகம்" இளையராஜா அனேகமாக பாரதிராஜாவின் மேலிருந்த கோபத்திலேயே இந்த மாதிரியான படங்களுக்கு ட்யூன் போட்டிருக்க வேண்டும், இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால், இளையராஜா திரை துறையின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரத்துவங்கிய பொழுதில் வந்தது "ஒரு தலை ராகம்" எல்லா பாடல்களும் ஹிட், ராஜாவிற்கு மாற்றா டி.ராஜேந்தர் என்ற விமர்சனம் வந்ததாம், அப்பொழுது தான் அவர் "பயணங்கள் முடிவதில்லை" கொடுத்ததாக ஒரு பத்திரிகையில் படித்தேன். எப்படியோ "மௌன ராகம்", "இதயகோவில்", என வரிசையா ஹிட்.  சரி பாரதிராஜா போனால் என்ன அதான் மணிரத்னம் இருக்காரே, அவரது புதுமையும் மிகவும் பிடித்திருந்தது. வந்தது "நாயகன்" என் மனதில் ரஜினி பாதி ராஜா பாதி என்ற நிலைமை மாறி ராஜா முக்கால், ரஜினி கால் என்ற நிலைமை உருவானது. ரஜினியும் ராஜாவை விட்டுவிட்டு "மனிதன்", "ராஜா சின்ன ரோஜா" போன்ற படங்களை பண்ணினார். ஆனால் அப்பொழுதெல்லாம் ரஜினியை சுத்தமா வெறுக்க முடியவில்லை. "அக்னி நட்சத்திரம்" வந்தது யாரவது அந்த படத்தை பத்தி பேசினாலே அவுங்கதான் எனக்கு நண்பர்கள். "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.." பாடலின் படமாக்கல் மணிரத்தினம் மீதான மரியாதையை  கூட்டி  போயிருந்தது. "பணக்காரன்","மன்னன்" என ரஜினி மீண்டும் இளையராஜாவிற்கு மாறி இருந்ததால் ரஜினியையும் மெய்ண்டைன் பண்ணுவது சுலபமாக இருந்தது. இந்த கட்டத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றம் தான் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று நான் அன்று அறியவில்லை.

மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தலைவர் நடிக்கும் "தளபதி" என்னை அதை பற்றி மட்டுமே சிந்திக்க வைத்தது. சாப்பிடும் போதும் தூங்கும் போதும் "தளபதி" தான். அந்த தீபாவளிக்கு "தளபதி" யுடன் கமலின் "குணா" மற்றும் பாரதிராஜாவின் "நாடோடி தென்றல்"  போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. வழக்கம் போல் "தளபதி" பார்த்தாச்சு ஆனால் ரொம்ப புடிச்ச இயக்குனர் இயக்கி இருந்தும், ரொம்ப புடிச்ச நடிகர் நடித்திருந்தும், அந்த படம் பெரிய அளவு தாக்கத்தை என் மனதில் உண்டு பண்ணவில்லை மாறாக பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ராஜாவின் இசை மட்டும் திருப்தியை இருந்தது. திருப்தின்னா என்ன எதிர்பார்ப்பை பூர்த்தியாவது, "தளபதி" படத்தில் என்னை போன்ற ரசிகர்களுக்கு எல்லா துறையிலும் இருந்தது ஆனால் இசையை தவிர வேறு எதுவும் மனசை ஆக்கிரமிக்கவில்லை. மனசு மீண்டும் சொல்லியது ராஜா யாருடன் இணைந்தாலும் அங்குதான் வெற்றி இருக்கும்னு. ஒருவரை ரசிக்க வெற்றியும் தேவைன்னு நினைத்திருந்த காலகட்டம் அது. ஏன்னா கல்லூரி காலம் அல்லவா..? நிச்சயம் முழு பைத்தியம் (ரசிகன்) ஆன கதை அடுத்த பகுதியில் சொல்லப்படும்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP