ஏன் எமெர்ஜென்சி..?



கேள்வி: ''நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பின்பு நாட் டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற் றத்தைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர் கள் தீவிரமாக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எங்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தாங்கள் முன்னதாகவே கொண்டுவந் திருக்கக் கூடாதா?'' (கேள்வி கேட்டவர் பெயர் திருமதி ராஜகுமாரி சேஷாத்ரி)


பதில்: ''கொண்டு வந்திருக்க லாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா எதிர்க் கட்சிகளும், பெரும்பான்மை யான பத்திரிகைகளும் கட்டுப் பாடின்மையை மறைமுகமாக ஆதரித்து வந்தன. அரசாங்கம் எந்தத் திட்டத்தைச் சொன் னாலும் அதைக் கேலி செய்வ திலும், அதற்குத் தவறான உள் நோக்கம் கற்பிப்பதிலுமே ஈடு பட்டிருந்தன. அதனால் மக்க ளும் அவற்றைச் செயல்படுத்து வதில் அக்கறை காட்டவில்லை. நெருக்கடி நிலைப் பிரகடனத் துக்குப் பின் புதிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இது போதாது. ஒழுக்கம், கட் டுப்பாடு போன்ற அருங்குணங் களை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இன்னொருவர் நம் மீது திணிக்கும் நிலை ஏற்படக்கூடாது. இந்தக் கட்டுப் பாடும் ஒழுக்கமும் இல்லாவிட் டால் இந்தப் பெரிய தேசத்தில் நாம் எதையும் சாதிக்க முடி யாது. ஒழுக்கத்தில் சில வகை உண்டு. ஒன்று, சமுதாய ஒழுக் கம்! அதாவது, நம் வேலை களைத் திறமையாகவும், உரிய சமயத்திலும் செய்வது, நாம் வசிக்கும் பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பது... இப்படிப்பட்ட புற ஒழுக்கங்கள். இவற் றால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும்; அதன் பெருமையும் சிறந்தோங்கியிருக்கும். அதே போல் தனி மனித ஒழுக்கம்! இப்படி உடல் சுகாதாரம் முதல் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கட்டுப்பாட்டை யும் ஒழுக்கத்தையும் நாம் கடைப்பிடிக்காவிட்டால், பல வித தொல்லைகளை அனுப விக்க நேரிடும். நாம் ஒழுக்க மான வாழ்வு நடத்தினால்தான், அதிக திறமையுள்ளவர்களாகவும் திருப்தி உள்ளவர்களாகவும் வாழ முடியும்!''
(பதில் சொன்னவர் அன்றைய பிரதமமந்திரி திருமதி.இந்திராகாந்தி)
 
எமெர்ஜென்சி என்பது ஏதோ சுய கட்டுப்பாட்டையும்,தனி மனித ஒழுக்கத்தையும் கற்பிக்க வந்ததை போல சொல்லப்படும் மறைந்த இந்திராகாந்தியின் பதிலில் தெரிவதெல்லாம் செய்த தவறை மறைக்க செய்யும் செயலே. இதை விட பெரிய கொடுமை இந்த கேள்வியை கேட்ட அந்த பெண்மணி  அந்த கொடூர காலத்தை புகழ்வதுதான். ஒருவேளை எமெர்ஜென்சியை கண்டு ரசித்தவராக கூட இருக்கலாம். அந்த பெண்மணியை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பிரதமமந்திரியாக இருந்த இந்திராகாந்தியை பேட்டி எடுக்க அனுப்பியதாம் விகடன். குறைந்த பட்சம் இந்தமாதிரியான சென்சிடிவான பிரச்சனைகளுக்கான விடயத்தை அவர் தொடாமலாவது பார்த்துகொண்டிருந்திருக்கலாம் விகடன் போன்ற பெரிய பத்திரிகைகள். உங்களுக்கு எமெர்ஜென்சி எதற்காக இந்திரா காந்தியால் அமுல் படுத்தப்பட்டது தெரியுமா..?
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ல் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு விரோதமாக தேர்தல் முறைகேடுகளில் இந்திராகாந்தி ஈடுபட்டதால் அவருடைய தேர்தல் (1971 ஆம் ஆண்டு நடந்த) தேர்வு செல்லாது" என்று தீர்ப்பளித்தது.  அத்துடன் இந்திரா காந்தி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டது, உச்சநீதிமன்றம் மேல் முறையீட்ட ஏற்க மறுத்தாலோ, இல்லை இந்திராகாந்தி மேல்முறையீடு செய்யவில்லை என்றாலோ தான் இந்த தீர்ப்பு நடைமுறை படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு முழுமையான தடை விதிக்கவில்லை. இதுவே நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமானது. இந்திராகாந்தி 1971 தேர்தலில் செய்த தவறு என்ன..? அப்பொழுது பிரதமமந்திரியின் தனி செயலராக பணியாற்றிய யஷ்பால் கபூர் என்பவரை தேர்தல் முகவராக இந்திராகாந்தி நியமித்ததுதான் தவறு என்று இந்திராகாந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நாராயன் வழக்கு தொடர்ந்தார். யஷ்பால் கபூர் தன்னுடைய அரசாங்க பதவியை ராஜினாமா செயாமலேயே தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். அதாவது ஜனவரி 7 ஆம் தேதி தேர்தல் முகவராக பணியேற்றார், ஜனவரி 13 ஆம் தேதி அன்று தான் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த ஆறு நாள் கால இடைவெளிதான் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்த காரணமானது என்றால் நம்ப முடிகிறதா..?
இந்திரா நினைவு நாளில் சரித்திர புகழ் வாய்ந்த அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட காரணத்தையும் நினைவுகூர்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP