வெற்றியும் தோல்வியும் வாழ்வின் தொடர்கதை

நீங்கள் முதலும் கடைசியுமாகச் சந்தித்த தோல்வி?
'கடைசியான தோல்வி' என்று எதுவும் கிடையாது. கடைசி மூச்சு வரை தோல்விகளும் கூடவே வரும். தோல்வியில் வீழ்ந்தவுடன் அப்படியே கிடக்காமல், உதறிக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்பவன்தான் வீரன். ஆகவேதான், ஒருவன் தோல்வியிலிருந்து மெள்ளச் சுதாரித்து எழுந்து நிற்கும்போது, எல்லோரும் கை தட்டுகிறார்கள். துவளாமல் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருங்கள். மிகப் பெரிய வெற்றி உங்களை நோக்கி வந்துகொண்டு இருக்கலாம்!

--மதன் கேள்வி-பதில் பகுதியில் வந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் தொடர்கதை. இதை தான் நா.முத்துக்குமார் இப்படி சொல்கிறார் .." போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை..."


Read more...

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் !?

"....அவரவர் போட்ட டெல்லிக்கணக்கு களை முடிந்த வரை ஈடுகொடுத்து, நிரவிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. ஒத்துழைக்காத காங்கிரஸூடன் போராடிய சோர்விலிருந்து மீள்வ தற்காக அவர் காத்திருப்பது தன் 86-வது பிறந்த நாளுக்கு. அன்றைய தினத்தை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடத் தன் தொண்டர்களை அவர் அனுமதிக்கிறாரோ இல்லையோ... ஸ்டாலின் ஆதரவாளர்கள் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். காரணம், அன்று அவர்கள் எதிர்பார்ப்பது ஸ்டாலி னுக்குத் துணை முதல்வர் பதவியை!.."

நாம் இப்போது பிளாஷ் நியூஸ் ஆக பார்ப்பதை ஒரு பத்திரிகை மேற்கண்டவாறு நான்கைந்து நாட்களுக்கு முன்னமே கொடுத்து விட்டது. புலி வரும் கதை போலாகி விடும் என்று எதிர்பார்த்த ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கடைசியில் வந்தே விட்டது. ஸ்டாலின் கட்சிக்காக உழைத்தவர் தான் அதனால் அவருக்கு முழு தகுதியும் உள்ளது என்பதை தினசரி தி.மு.கவை திட்டாமல் உறங்கப் போகாத சோ வே வக்காலத்து வாங்குவதையும், ஸ்டாலின் போல வேற யாருமே தி.மு.க வில் உழைக்க வில்லையா..? என்று எதிர் பாட்டும் கேட்கிறது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்டிருக்கிறது துணை முதல்வர் பதவி. இது எந்த அளவுக்கு நன்மை பயக்கப் போகிறது என்று பார்த்தால், ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மேலும் இது வருங் காலங்களில் பெரிய பெரிய பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்றே தோன்றுகிறது. அதிகார பகிர்வு மூலம் தனது குடும்பத்தை வேண்டுமானால் கலைஞர் சமாதானப் படுத்தி இருக்கலாம். ஆனால் தமிழக அரசியலை அடுத்த மோசமான கட்டத்திற்கு இட்டு சென்ற பெயரை தட்டி சென்றுள்ளார் கலைஞர்.


Read more...

மந்திரி பதவி படும் பாடு ....

நாம் கீழே தந்திருப்பது ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி. தமிழகத்தின் மத்திய மந்திரிகள் எப்படி தேர்ந்தெடுக்க படுகிறார்கள் என்று பாருங்கள்.. கொடுமை. காதாலா காதலா படத்தில் ஒரு கமல் ஒரு வசனம் பேசுவார் "...கடவுள் இருக்குன்னு சொல்றவனை கூட நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள்னு சொல்றவனை நம்பவே கூடாதுன்னு...". தனது கட்சியை போல ஒரு ஜனநாயக கட்சியை பார்க்கவே முடியாதுன்னு சொல்ற தி.மு.க வில் ....

இதோ அந்த காட்சி .. மன்னிக்கவும் கட்டுரை ..

''டெல்லியிலிருந்து முதல்வர் உள்ளிட்டவர்கள் வந்ததுமே கட்சியின் செயற்குழு கூடும் என்று ஆவ லோடு கட்சியினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல்வரின் வீட்டில் 'மந்திரி ரேஸில்' இருந்தவர்களை மட்டும் அழைத்து மாறி மாறி
விவாதம் நடந்தது. முதலில் தயாநிதி தரப்பினரை அழைத்துப் பேசினார் கலைஞர். கட்சியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரே, 'தயாநிதி மாறனுக்குப் பதவி கொடுக்கக் கூடாது' என்று தன்னிடம் மறைமுகமாகச் சொல்லிவருவதை டப்பெனப் போட்டு உடைத்த அவர், 'இந்தத் தடவை இல்லாட்டிதான் என்னப்பா?...' என்றாராம். தயாநிதி மாறன் உடனே ஏதும் சொல்லாமல், 'சரி' என்று தலை யாட்டியபடி நிற்க, கட்சியின் வெற்றிக்காக தயாநிதி தரப்பு பட்ட கஷ்டங்களை மற்ற சிலர் எடுத்து வைத்து தீவிரமாக வாதாடினார்களாம். தொகுதிவாரியாக செலவு விவரங்களையும் கலைஞரிடம் கொடுத்த தயாநிதி தரப்பு, 'கடந்த முறை அமைச்சராக இருந்த போது தயாநிதியால் எள்ளளவும் கெட்ட பெயர் ஏற்படவில்லை. இருந்தும், எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வராவிட்டால், தயாநிதிக்குப் பதவி வேண்டாம்!' என்று அவர்கள் வருத்தத்தோடு சொன் னார்களாம்.
'முடிந்த மட்டும் தயாவுக்கு கேபினெட் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்... நம்பிக்கை வையுங்கள்!' என்று சொல்லி அவர்களை அனுப்பியிருக்கிறார் கலைஞர். மாறன் பிரதர்ஸ் மலர்ந்த முகத்துடன் வீட்டைவிட்டு வெளியே வர, அவர்களுக்கு எதிராக தூபம் போடும் புள்ளிகள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்!'' என்று சொன்ன அந்த முக்கியஸ்தர்கள்... மேற்கொண்டு நடந்த காட்சிகளையும் ஸீன் பை ஸீனாகச் சொல்லத் தொடங்கினார்கள்..

இது தான் ஹைலைட் ...
''மகள் கனிமொழியையும் ராசாத்தி அம்மாளையும் அழைத்துப் பேசியபோது, 'மூன்று கேபினெட் பதவிகள் எப்படியும் வாங்கிவிட முடியும்' என்பதை உறுதியாகச் சொன்னதோடு, 'அந்த மூன்றில் யாருக்கெல்லாம் இடம்' என்று சொன்னாராம். 'நீ என்னம்மா நினைக் கிறே?' என்றும் கேட்டாராம். ராசாத்தி அம்மாள், 'வேண்டியவங்க வேண்டாதவங்களுக்குக் கொடுக்கிறது ஒருபக்கம் இருந்தாலும், கனிக்கும் இந்த முறை பதவி கட்டாயம் தரணும்...' என்று வேண்டினாராம். அதற்குள் அப்பாவின் தவிப்பு பொறுக்காமல் கண் கலங்கிய கனிமொழி, அடுத்தடுத்த சந்திப்புகளிலும் தனக்கு இடம் கிடைக்காதபடி வலுவான கரங்கள் காய் நகர்த்துவதை உணர்ந்து, 'உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதையே செய்யுங்க...' என்று ஒரு கட்டத்தில் ஒதுங்கிவிட்டாராம். ராசாத்தி அம்மாள் இதை ஜீரணிக்க முடியாமல் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
அழகிரியைப் பொறுத்தவரை கேபினெட் அந்தஸ்துக் கான பரிசீலனையில் முதல் ரவுண்டின்போது தான் இல்லை என்பதே பெரும் ஷாக்காக இருந்தது. அதோடு 'மந்திரியாகத்தான் திரும்பிவருவேன்' என்று தன் மதுரைக் கண்மணிகளிடம் உற்சாகமாகச் சொல்லிவிட்டு வந்த நிலையில், மே 23ம் தேதி 'முதல் தவணை பதவியேற்பிலும்' தான் பங்கேற்க முடியாமல் போனதில் ஏக அப்செட்தான். பதவியேற்பு ஒத்திப்போன கோபமும் அவருக்கு சேர்ந்து கொண்டது. 'அடைந்தால் கேபினெட் பதவி... இல்லையேல் அதிரடிப் பாய்ச்சல்' என்பதே அவருடைய அணுகு முறையாக இருந்தது. டெல்லியில் தந்தையிடம் கர்ஜித்தது போலவே சென்னையிலும், 'மொழிப் புலமையெல்லாம் வைத்துதான் மந்திரி பதவி என்பது அர்த்தமில்லாத பேச்சு. வேண்டுமானால் நான் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் மதுரையில் யாரை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக் கிறேன். அதேநேரம், தமிழகத்தில் மறுபடி சட்டமன்றத் தேர்தல் வரட்டும். காங்கிரஸ் உதவியில்லாமல் நீங்கள் இங்கே தமிழ்நாட்டில் ஆள்கிற அளவுக்கு ஜெயித்துக் கொடுக்கிறேன். கட்சியிலும் அரசிலும் பெரிய பொறுப்பைக் கொடுங்கள்' என்று மறுபடி அவர் சீறினாராம்!'' .


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு (!) பெண் உண்டுன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்ப புரிஞ்சுது. பேசாம ஆண்கள் ஏன் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் நிற்கக்கூடாது, ஏன்னா பின்னால் நிற்பவருக்குதான் பவர் அதிகம் போலவே..





Read more...

ஒரு மரணம் ஒரு ஜனனம்

நீரின் மரணம் - கரு மேகங்களின் ஜனனம்...

கரு மேகங்களின் மரணம் - மழையின் ஜனனம்.

மழையின் மரணம் - நதியின் ஜனனம்.

நதியின் மரணம் - கடலின் ஜனனம்.

கடலின் மரணம் - கரையின் ஜனனம்.

கரையின் மரணம் - நீரின் ஜனனம்.
எனவே வாழ்க்கையில இழப்பதும் பெறுவதும் ஒன்றுமில்லை.


Read more...

வால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்


ராஜாவின் பேச்சு சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறை அல்ல ஆனால் இந்த முறை நடந்திருக்கும் தோற்றம் ராஜாவை பற்றிய தோற்றத்தை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது. ராஜா சமீபத்தில் நடந்த வால்மீகி பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது இது தான் (ஒரு இணையதளத்தில் வந்த ஒளிஒலி காட்சியை பார்த்த பிறகு இதை எழுதுகிறேன்
இயக்குனர் மிஷ்கின் பேசும் பொழுது ".. இப்பொழுதுள்ள உதவி இயக்குனர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் ஒரு படமாவது தயவு செய்து ராஜா சாருடன் பண்ணுங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை ஒரு முழுமை பெறும். நான் அவருடன் படம் பண்ணும் பொழுது பலரும் என்னை பயமுறுத்தினார்கள், அவர் சீனியர் நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் கேட்க மாட்டார். நம்புங்கள் அவர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் என்னை கலந்தாலோசித்த பிறகே பண்ணினார்..." இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், " சினிமா விழாக்களில் நான் அதிகமாகப் பங்கேற்பதில்லை. அதற்கு காரணம், ஒன்று தன்னைப் பற்றி அதிகம் புகழ்ந்துபேச வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டும். பெரும்பாலும் உண்மையைப் பேச முடிவதில்லை.
மேடைகளில் பேசும் பலரும் மனதார வாழ்த்துவதில்லை. சரி, ஏதோ நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான் வாழ்த்துகிறார்கள். உண்மை இல்லாத இடங்களைத் தவிர்ப்பதற்காகவே விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன். விகடன் நிறுவனத்துக்காக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன்.
ஒரு புதிய இயக்குநரின் படத்தில் பணியாற்றுவது குறித்து பலரும் பேசினார்கள். நான் ஏற்கெனவே பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், இளைஞர்கள் பலரும் வளர்ந்த பின், 'இமேஜ்' என்ற வளையத்துக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டாலே இப்போதுள்ள இயக்குநர்களை இமேஜ் ஆட்டிப்படைக்கிறது. வெற்றிப் படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். ஆனால் நல்ல படத்தைத் தருவதுதான் முக்கியம். பணத்தை மட்டுமே தருகிற வெற்றி முக்கியமல்ல.திறமையுள்ள புதுமுக இளைஞர்களை ஊக்குவிப்பதுதான் என் லட்சியம். நான் இப்போதுள்ள நிலைக்குக் காரணம் அன்று பஞ்சுஅருணாசலம் என்னை ஊக்குவித்து வாய்ப்பளித்ததுதான். அதனால்தான் ஷங்கரின் உதவியாளர் அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அவருடைய திறமைக்காக இசையமைத்தேன்.
வெற்றி என்றால் அர்த்தம் என்ன? வெற்றி பற்றி நாம் பேசக்கூடாது. ஓடுகிறவன், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடினால்தான் வெற்றி. நதியைப்போல, காற்றைப்போல, வானத்தைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.சப்தஸ்வரங்கள்தான் எனக்கு உறவினர்கள். வேறு யாரும் கிடையாது. இங்கே டைரக்டர் மிஷ்கின் பேசும்போது, உதவி இயக்குனர்கள் எல்லோரும் இயக்குனராகும்போது, ஒரு படத்திலாவது என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்.
இந்த மேடையில், எனக்கு உள்ள ஒரே மீடியேட்டர் மிஷ்கின்தான். எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார். எனக்கு யாரும் தேவையில்லை. நான் ராகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் என்னை, "இங்கேயே கிடடா நாயே" என்று சொல்லிவிட்டான். அந்த சப்தஸ்வரங்களுடனே நான் கிடக்கிறேன். அங்கிருந்து நான் வெளியே வரவே மாட்டேன்,'' என்றார் இளையராஜா.

இங்கே இளையராஜா சொன்னதை நான் இப்படித்தான் பார்க்கிறேன் .. "எனக்காக இங்கே பரிந்து பேச மிஷ்கின் மட்டும் தான் இருக்கிறார். அதுவும் தேவை இல்லை ஏனெனில், நான் ராகங்கள் கூடவே வாழ்ந்து கொண்டிருப்பேன். ஒருவர் வேலை கொடுத்துதான் நான் இசையை தொட வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை அது கூடவே வாழவேண்டும் என்பது இறைவன் எனககு இட்ட கட்டளை அதன் படி நான் வாழ்கிறேன்".

இங்கே எல்லாமே வியாபாரமாகி போய்விட்டதே என்ற வருத்தம் ராஜாவை ரொம்பவே வாட்டி விட்டது என்றே தோன்றுகிறது. தன்னை அறிமுகப் படுத்திய பஞ்சு அருணாச்சலத்திற்கு இன்றைய தேதி வரை இலவசமாகவும், தனது பால்ய கால நண்பரான சங்கிலிமுருகன் படத்திற்கு மிக சிறப்பான பாடல்களை தருவதுடன் தொடர்ந்து அவர் படங்களுக்கு கால்ஷீட் தருவது, பாலு மகேந்திரா,கமலகாசன் போன்றவர்களின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது, போன்றவை வியாபாரத்தையும் மீறி ராஜா எதிர்பார்க்கும் அந்த ஆதரவு அவர்களிடம் இருந்து கிடைப்பதானால்தான். இதை அனைவரும் அறிவர், ராஜா அதை மிஷ்கின் இடத்திலும் எதிர் பார்த்து ஏமாற்றத்தின் மூலமும் அப்படி பேசியிருக்கலாம்.

இது எல்லாத்தையும் விட முக்கியம் வால்மீகி பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருப்பது தான். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. குறிப்பாக "கூட வருவியா ..." நம்மையும் இசையின் கூடவே இழுத்துக்கொண்டு போவதை நீங்களும் உணர்வீர்கள்.

இதை போன்ற இசை தருகிற ராஜா போன்றவர்களை தயவு செய்து சின்ன சின்ன காரணங்களை காட்டி ஒதுக்காதீர்கள் அது நம்மை போன்றவர்களுக்கு தான் பேரிழப்பு..(நம்மை என்று நான் சொல்வது தமிழர்களை மட்டுமல்ல .. இசை ரசனை கொண்ட அனைவரையும் தான்.)


Read more...

யார் வென்றது .....?




முன்னதாக இரு தரப்புக்கும் இடையே அமைச்சர்கள் எண்ணிக்கை, துறைகள் ஆகிய விஷயத்தில் கடும் மோதல் நடந்தது.இதையடுத்து வெளியில் இருந்து ஆதரவு என்று கூறிவிட்டு டெல்லியிலிருந்து முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.இதையடுத்து திமுகவிடம் காங்கிரஸ் புதிய பார்முலாவைத் தந்தது. அதன்படி திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள் பிளஸ் 4 இணையமைச்சர் அல்லது 3 கேபினட் பிளஸ் 3 இணையமைச்சர் என்று புதிய பார்முலாவை முன் வைத்தது.ஆனால் 4 கேபினட், 4 இணையமைச்சர்களைக் கேட்ட திமுகவும் இறங்கி வந்தது. 3 கேபினட் அமைச்சர்கள், 4 இணையமைச்சர்கள் என்றால் ஓ.கே என்றது.மேலும் பாலு, ராசாவை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் தயார் என்றும் காங்கிரஸ் இறங்கி வந்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது.


இது செய்தி மேலே தரப்பட்டுள்ள படங்களில் வெளிவந்துள்ள கருத்து கணிப்பு முடிவுகள் இந்த செய்தி வருவதற்கு முன்பு அந்தந்த இணைய தளங்களின் வாசகர்கள் தீர்ப்பின் படி வந்தது. செய்தி மற்றும் அந்த கருத்து கணிப்புகளில் இருந்து புரிந்து நீங்களே கொள்ளுங்கள் யார் வென்றது என்று.


Read more...

அன்றும் இன்றும் என்றும்


அன்றும் -இன்றும்: 2004 பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை வலு கிடைக்க பல கட்சிகளை அணுகி ஆதரவைத் தேட வேண்டியிருந்தது. எனவே அப்போது தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த கருணாநிதியை சோனியா காந்தியே காரில் வந்து சந்தித்து ஆதரவு கோரினார்.
கருணாநிதி தன்னுடைய தேவைகளை ஆந்திரத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் என். ஜனார்த்தன ரெட்டியிடம் தெரிவித்து அவரும் எழுத்துபூர்வமாகவே சம்மதம் அளித்திருந்தார். ஒப்புக்கொண்டபடி இலாகாக்கள் வரவில்லை என்றதும் நிருபர்கள் கூட்டத்திலேயே அதைக் காட்டினார், இதெல்லாம் பழைய வரலாறு.
இப்போது சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியே வலுவான நிலையில் உள்ளது. அத்துடன் சிறியதும் பெரியதுமாக எல்லா கட்சிகளும் வலியச் சென்று ஆதரவைத் தருகின்றன.
இப்போதைய நிலைமைப்படி அரசுக்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டிவிட்டது. எனவே சோனியா காந்தியின் வீட்டுக்கு முதல்வர் கருணாநிதி காரில் சென்று விருப்பப் பட்டியலைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

இது தினமணியில் வந்த செய்தி, சரி அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள்தான் நடந்திருக்கிறது. ஆனால் என்றைக்கும் மாறாமல் தி.மு.க எதிர்ப்பு நிலை எடுத்த தினமணிக்கு வாழ்த்துகள்.


Read more...

யானையே வந்தது முன்னே...

காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி அமைக்கப்போகிறது, தாரளமயமாக்களை மிக தாரளாமாக ஆதரிக்கும் மன்மோகன் தலைமையில், அதுவும் வலுவான பெரும்பான்மையுடன். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில்லாமலே. சும்மாவே இன்னைக்கு அம்பானிக்கு காய்ச்சல் (பன்றி காய்ச்சல் எல்லாம் இல்லை, சும்மா காய்ச்சல் தான்) என்றாலே பங்கு சந்தை சுமார் 3000 புள்ளிகள் வரை குறையும். அதுக்கே அப்படின்னா மேற் சொன்ன மாதிரி வந்தால் பங்கு சந்தை என்ன பண்ணும்..? ஆமாம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்தது கிட்டத்தட்ட 10% உயர்வை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எட்டியதால் பங்கு சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து துவங்கிய போதும் அதே அளவு உயரத்தொடங்கியதால் திங்கள் கிழமைக்கான வர்த்தகம் மொத்தமாக நிப்பாட்டப் பட்டது.
இதுவரை உலக வரலாற்றில் எந்த ஒரு பங்கு வர்த்தகமும் இந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உயர்ந்ததில்லை எனவும், மேலும் அதன் காரணமாக பங்கு வர்த்தகம் நிப்பாட்டப் பட்டதும் இல்லை, என்கின்றன செய்திகள். உங்களுக்கு தெரிந்தால் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, என்பது பழமொழி. இங்கு யானையே முன் வந்துவிட்டது. இந்த சாதனை இந்த அரசின் வாழ் நாள் முழுவதும் தொடர வாழ்த்துகள்.


Read more...

நாயகன் ஆன "நாயகன் "

தேர்தல் முடிவுகளுக்கு முன் "அறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன் ஆவாரா..?" என்று எழுதியிருந்தேன். மக்கள் தீர்ப்பின் படி அறந்தாங்கி நாயகன் அறந்தாங்கி-க்கு மட்டும் தான் ராமநாதபுரத்திற்கு "நாயகன்" இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். (ரித்தீஷ் "நாயகன்" என்ற படத்தில் கதாநாயாகனாக நடித்து அந்த படம் ஓரளவு சுமாராக ஓடியது). திருநாவுக்கரசு இந்த முறை தோற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மக்கள் தி.மு.க வை இந்த தேர்தலில் கை விட தயாராக இல்லாத பட்சத்தில் யார் எதிர்த்து நின்றாலும் அவர்கள் அதை பார்க்க தயாராக இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
நாயகனுக்கு வாழ்த்துகள்.


Read more...

தேர்தல் சொல்லிய பாடங்கள்...

இந்த தேர்தல் முடிவுகள் பல நல்ல பாடங்களை அரசியல் கட்சிகளுக்கு கற்று கொடுத்திருக்கிறது. இதிலிருந்து பாடங்களை கற்று அடுத்த கட்டத்திற்கு செல்வது அந்தந்த கட்சி தலைவர்களின் கைகளில்தான் உள்ளது.
பாடம்-1: மக்கள் எல்லா விசயங்களையும் தெளிவாக சீர் தூக்கி பார்த்து ஓட்டளிக்க தவறவில்லை. குறிப்பாக தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்துள்ளனர்.

பாடம்-2: தேர்தலுக்கு தேர்தல் சுய லாபத்திற்காக அணி மாறிவிட்டு ஒப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லிவிட்டு செல்லும் அரசியல் கட்சிகளுக்கு இனியும் பொறுமையாக வாக்களிக்க தயாராக இல்லை .

பாடம்-3: இலங்கை பிரச்சனையில் இங்கிருந்து கொண்டு குரல் கொடுக்கும் "பின்னணி குரலார்களை" இனியும் நம்ப தயாராக இல்லை. குரல் கொடுப்பவர்கள் ஒரு உண்மை நிலையை இங்கே எடுத்து சொல்லவில்லை, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகாவே ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அந்த இடைப்பட்ட காலத்தில் ஏன் தங்களது அரசியல் ரீதியான உறவுகளை மற்ற நாடுகளுடன் வளர்த்துக்கொள்ளவில்லை..? குறிப்பாக இந்தியாவுடனான. இன்று தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தவுடன், உலக நாடுகளின் சொல்படி எல்லாம் கேட்கிறோம் என்று ஆதரவு கரம் நீட்டுவது ஏன்...? அதை செய்ய வேண்டியது ஜன நாயகத்தில் கலக்க விரும்புவர்கள் செய்யவேண்டிய ஒன்று. அதை செய்ய மறந்ததன் மூலம் அல்லது மறுத்ததன் மூலம் அவர்கள் அடைந்ததுதான் இன்றைய அவர்களது நிலை. அதை ஏன் இங்கே ஆதரிப்போர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் அதை புரிந்துகொண்டுள்ளனரா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் தங்களை மதித்து தங்களை தேடி பதவி இருக்கும் போது வராதவர்கள் பதவி போன பின்போ ஆபத்து நேரத்தில் கூப்பாடு போடுவதையோ அவர்கள் கேட்க தயாராக இல்லை. பாலசிங்கம் உயிரோடிருந்திருந்தால் அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க பட்டிருந்தால் நிச்சயம் அவர் இதை நடத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். தனி ஈழமோ, ஒன்றினைந்த உறவோ அதை உலக நாடுகளின் தலைவர்களை நேரடியாக சந்திப்பதன் மூலமாக நிறைவேற்றியிருக்க வேண்டியது அவர்களின் கடமை. அதை அவர்கள் விடுத்து. இன்று சோனியா வரவில்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..?

பாடம்-4: இயக்குனர் சீமான் போன்றோரின் நிலை மாறிய நிலை கண்டு மக்கள் சற்றே குழம்பியும் போனார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும், வேலு நாச்சியாருக்கே வாக்களியுங்கள்... போன்ற வசனங்கள் நன்றாக இருந்தாலும் காட்சியுடன் ஒட்டவில்லை. அப்படி என்ன சீமான் அவர்களே உங்களுக்கு நம்பிக்கை தந்தது ஜெ.வின் பேச்சு? மக்களுக்கு புரிந்தது அதாவது "உங்கள் சொந்தங்களுக்கு" புரிந்தது. இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

பாடம் 5: அ.தி.மு.க தலைமைக்கு தேர்தல் நெருங்க நெருங்க தான் மக்கள் பிரச்சனைகள் நினைவுக்கு வந்து அது சம்மந்தமாக அறிக்கை விடுவதும், அதன் முழு வீரியம் தெரியாமல் அதை பற்றி பேசுவதும், மாற்று கட்சி தலைவர்களை வரைமுறையின்றி விமர்சனம் செய்வதும்தான் ஒரு "வெற்றி வீராங்கணை"க்கு அழகா...?

பாடம் 6: இலவசம் நடுத்தரத்திற்கு வேண்டுமானால் எரிச்சலைத்தரலாம் ஒரு நாளுக்கு வெறும் 20 ரூ சம்பளம் வாங்கும் ஏழைகளுக்கு அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் அவை தங்களை வந்தடைந்ததா என்பதை பற்றி மட்டுமே. நலத்திட்டங்களை அறிவித்து விட்டு அதைப் பற்றி பேச்செடுக்காமலே காலம் கடத்துவது என்பதெல்லாம் மலையேறி போன காலமாகிவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாங்கள் சொன்னதை நிறைவேற்றியவர்களை மக்கள் வரவேற்கவே செய்வார்கள்.

இப்படி பல பாடங்களை சொல்லியிருக்கிறது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல். தயவு செய்து மக்களை புரிந்து கொள்ளுங்கள் அரசியல் வாதிகளே, ஏனெனில் நீங்கள் அவர்களுக்காகத்தான்.


Read more...

உங்களுக்கு தெரியுமா ...?

உலகிலேயே பெரிய மலைப் பாம்பான 'அனகோண்டா'வின் பெயர் தமிழில் இருந்து போனது என்பது பலருக்குத் தெரியாது. 'ஆனை-கொல்றா' என்பதுதான் மருவி அனகோண்டா ஆனது. (ஆதாரம் - என்சைக்ளோபீடியா ஆஃப் அனிமல்ஸ்)!

-நமக்கு ஆதாராம் "மதன் கேள்வி-பதில்"


Read more...

அறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன்.?

அரசியல் சதுரங்கத்தில் எப்பொழுதுமே வெட்டுப்பட்ட காய்களாக சிலர் ஆகிவிடுவதுண்டு. அதாவது திறமை இருந்தும் வெற்றியை கூட்டணி கொள்ளத் தெரியாதவர்களாக. உலக அரசியலில் அப்படி யார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நிச்சயம் ஒருவராவது இருப்பார் என்று நம்புகிறேன். தமிழக அரசியலில் இதற்கு முன் சிலர் இருந்திருக்கலாம், ஆனால் எனக்கு தெரிந்த ஒருவர் தற்பொழுதைய இராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் திருநாவுக்கரசர். இவர் எனக்கு பரிச்சயமானதுக்கு காரணம் எங்கள் தொகுதி வேட்பாளர் என்பது மட்டுமல்ல. அவர் கடந்து வந்த அரசியல் பாதைகளும் தான். இவர் முதல் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் துணை சபாநாயகராக ஆக்கப்பட்டார் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில். அதன் பின் தொழில் துறை அமைச்சர், வீட்டு வசதி துறை அமைச்சர் என்று பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அமைச்சர் பதவி வகித்தவர். எம்.ஜி.ஆர் ஒரு முறை கின்னஸ் சாதனை புரிவதற்காக (அப்படி சாதனை புரிய நினைப்பவர்கள் மட்டுமே செய்ய துணியும் காரியம் அது) தனது அமைச்சரவையில் இருந்த அத்தனை பேரையும் ராஜினாமா செய்ய வைத்தார், அப்பொழுது அந்த அமைச்சரைவையில் இடம் பெற்றிருந்த திருநாவுக்கரசுவை தவிர. அந்த அளவிற்கு புகழ் பெற்ற திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர மறைவுக்கு பிறகு எப்படி அரசியல் வாழ்க்கையை தொடரப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், ஜெயலலிதாவை முன் நிறுத்தி அதிமுகவை கைபற்ற நினைத்தார், ஆனால் அது நடக்காமல் போகவே அதிமுகவை ஜெ அணி என்று பிரிக்கும் அளவிற்கு அந்த கட்சியின் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போட்டு தனது அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர். எங்க ஊர் காரர் என்பதை நான் நினைத்து பெருமை அடைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் என்னுடைய நண்பர்கள் இப்படி கூறுவதுண்டு .."பரவாயில்லை உங்க ஊர்ல படிச்சவுங்க நிறைய பேர் இருக்குறாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா திருநாவுக்கரசு பல முறை பல சின்னத்துல நின்னுட்டார். எல்லா முறையும் வெற்றியும் பெற்றிருக்கிறார். காரணம் உங்க ஊர் மக்கள் வேட்பாளரின் சின்னத்தைப் பார்த்து ஒட்டு போடாமல் அவரது பெயரை படிச்சு பார்த்து குத்திருக்காங்க.." . இது ஒரு காரணமா இருந்தாலும் இன்னொரு விசயமும் எனககு தோனுது தான் எந்த சின்னத்துல நின்னாலும் அந்த சின்னத்தை மக்களின் மனதில் தெளிவாக பதிவு செய்யும் விதமாக தனது பிரச்சாரத்தை அவர் மேற்கொள்ளும் விதம். சரி அவரை நான் ஆதரிக்க காரணம் அவர் என் தொகுதியை சேர்ந்தவர் என்ற ஒரு காரணம் மட்டுமல்ல. ரொம்ப அலட்டிக்காமல் அதே சமயம் கடுமையான உழைப்பாளி, தனியாக கட்சி நடத்தி முதல் தேர்தலிலேயே மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றார் , தாமரைகனியும் சாத்தூர் ராமச்சந்திரனும் அவர்களது சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் திருநாவுக்கரசின் தலைமையிலான எம்.ஜி.ஆர அதி.மு.க சின்னத்துலையே போட்டி இட்டனர். ஆஸ்டின் என்பவரை கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற செய்தார். அதற்கப்புறம் இவர் எம்.பி ஆவதற்காக தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அரசன் என்ற புது முகத்தை நிற்கவைத்து வெற்றி பெற செய்தவர். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாஜாகாவுடன் கூட்டணி வைத்தவுடன் போட்ட முதல் கண்டிஷன் "திருநாவுக்கரசுக்கு சீட் கொடுக்க கூடாது" என்பது தான் விளைவு 40 தொகுதிகளிலும் தோல்வி என்ற வரலாற்று சாதனை தான். இவருக்கு சீட் கொடுத்திருந்தாலாவது 39:1 என்ற அளவிலாவது வெற்றி பெற்றிருக்கலாம் என்பது பல பத்திரிகைகளில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய கணிப்பாயிருந்தது. அது மட்டுமல்ல இவரது திறனை கண்ட வெங்கையா நாயுடு இவரை அதே கால கட்டத்தில் தங்களது கச்சிக்கான உ.பி. மாநில மாநிலங்களவை எம்.பி. பதவியை இவருக்கு கொடுத்தது இவரது முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இப்பொழுது இருப்பவர்களுடன் ஒப்பிடும் பொது மிகவும் நேர்மையாகவே செயல்படக் கூடியவர். தனது தொகுதி மக்களின் செல்வாக்கை தனது வாக்குறுதி நிறைவேற்றல் மூலமாகவே பெற்றவர். அறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன் ஆவாரா ..? தனது வெற்றி பயணத்தை தக்க வைத்துக் கொள்வாரா ..? என்பது சனி அன்று தெரிந்து விடும்.

இன்று வெளிவந்த ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் நாற்பது தொகுதி நிலவரத்தில் இவரே வெற்றி பெறுவார் என சொல்லப்பட்டுள்ளது, அந்த வாக்கு மெய்யாகும் என்று நம்புவோமாக.


Read more...

உங்களுக்கு புரியுதா..?

கேள்வி:- தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் கவிதை எழுதிய போது எதிர்ப்பு தெரிவித்தவர் தான் ஜெயலலிதா என்றும், இப்போது தமிழ் ஈழம் வேண்டும் என்றும் நீங்கள் கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறாரே? இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- நான் இப்போது தமிழ் ஈழம் வேண்டும் என்று கோருவதற்கும், தமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கல் கவிதை பாடியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. கருணாநிதி ஏதோ சம்பந்தம் இல்லாததை பற்றி பேசுகிறார்.
எங்களுக்கு இப்போ ஒண்ணுமே புரியலை போங்க. உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்க.


Read more...

வித்தியாசத்திலும் ஒரு வித்தியாசம்

ஹிந்து ஆங்கில பத்திரிக்கையில் வாராவாரம் "பிடித்தது -- பிடிக்காதது" என்ற தலைப்பில் பிடித்த படத்தை பற்றியும் பிடிக்காத படத்தை பற்றியும் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் சொல்வது வழக்கம். இது ஒரு வித்தியாசமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரி சிலர் சொல்லி வருவர் இந்த வாரம் "பார்த்திபன் கனவு" பட இயக்குனர் கரு.பழனியப்பன் சொல்லி இருந்தார் வித்தியாசமாக அதே சமயம் சுவாரஸ்யமாக இப்படி....
எனக்கு "வாரணம் ஆயிரம்" படம் பிடிக்கும் ஏன்னா ஒரு தந்தை - மகனுக்கு இடையேயான உறவை இந்த அளவுக்கு கேவலமாக யாரும் சொன்னதில்லை. அதுவுமில்லாமால் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் போது இன்னும் நிறைய மெனக்கிட வேண்டும் என்று இந்த படம் சொல்லித்தந்தது. அது மட்டுமில்லாமல் கெளதம் மேனன் என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு வெறும் காட்சிகளின் கோர்வை மட்டும் இந்த மாதிரி படத்திற்கு போதாது நல்ல களமும் அவசியம் என்று சொன்னதற்காக இந்த படம் எனக்கு பிடிக்கும்.

எனக்கு பிடிக்காத படம் "அவள் அப்படிதான்" படம். இந்த படத்தை ருத்ரையா இயக்கி இருந்தார், இந்த படம் வெளி வந்த ஆண்டும் நான் பிறந்த ஆண்டும் ஒண்ணுதான். இந்த படத்தை எனது பதினைந்தாவது வயதில் பார்த்தேன், அப்பொழுதும் இதில் வரும் பாத்திரங்களின் படைப்பு புதிதாக உணர முடிந்தது.
இப்பொழுது பார்த்தாலும் அப்படிதான். இந்த படத்தை எந்த படத்துடனும் ஒப்பிட முடியாத இதன் உயர்ந்த தரம் என்ற உண்மை எனக்கு பிடிக்கவில்லை (??!!)
மேலும் இந்த படத்தில் இரண்டே அற்புதமான பாடல்கள் அவற்றை கூட நாம் ரசிக்கவில்லை என்ற உண்மை எனக்கு பிடிக்கவில்லை(???!!!).

இப்படியாக வித்தியாசாமான இந்த பகுதியை மேலும் வித்தியாச படுத்தி இருந்தார் கரு. பழனியப்பன். எல்லாரும் தனக்கு மணிரத்தினம் பிடிக்கும் பாலச்சந்தர் பிடிக்கும், பாரதிராஜா பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, எனக்கு மணிவண்ணன் பிடிக்கும் என்று சொன்னார் இவர் . ஏன்னா மணிவண்ணன் தான் "நூறாவது நாள்" மாதிரியான த்ரில்லர் கொடுப்பார் "கோபுரங்கள் சாய்வதில்லை" மாதிரி குடும்ப படமும் கொடுப்பார், "அமைதி படை" மாதிரி அரசியல் நையாண்டி படம் கொடுப்பார், "பாலைவன ரோஜாக்கள்" மாதிரியான எழுச்சி படமும் கொடுப்பார், "முதல் வசந்தம்" மாதிரியான கிராமத்து கதைகளையும் கொடுப்பார். ஒரு இயக்குனர் என்பவர் எல்லா மாதிரியான படங்களையும் கொடுக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் அந்த வகையில் அவரை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். அதை நான் வழி மொழிகிறேன்.


Read more...

எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?

இந்த அரசியல்வாதிகள் பொதுவாவே பொதுமக்களை வைத்து நிறைய காமெடி பண்ணுவார்கள் அதுவும் தேர்தல் நேரத்துல கேட்கனுமா..? கவுண்டமணி பாணில சொன்னா இவங்க கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதுதான். அது மாதிரி நம் கண்ணில் பட்ட சில தேர்தல் காமெடிகள்...

"நாப்பதுக்கு நாப்பது அம்மாதான் ஜெயிப்பாங்க, அவங்களோட ஆளுமைத்திறனுக்கு நிச்சயம் பிரதமரா வரணும்னு என் ஆசை. அது நடக்கும் காலம் வந்துவிட்டது" -- நடிகை விந்தியா சொன்னது . அது !!!

"கலைஞர், சோனியா கையில் இலங்கை பிரச்னை இருந்திருந்தால் ஏன் இவ் வளவு காலம் விட்டு வைக்கிறார்கள். மூன்று மாதத்திற்கு முன்பே போர் நிறுத்தம் செய்ய வழி செய்து எதிர்க்கட்சியின் விமர்சனத்திலிருந்து தப்பித்திருப்பார்கள்" -- நடிகர் பாக்கியராஜ் சொன்னது. பாஸ் இது கொஞ்சம் ஓவர் சப்பைக்கட்டு.

"தனது குடும்பத்திற்கு சொத்து சேர்கிற கருணாநிதிக்கு உங்கள் ஆதரவா இல்லை குடும்பமே இல்லாமல் உங்களுக்காக உழைக்கும் எனக்கு உங்கள் ஆதரவா ..?" அதெல்லாம் சரி அந்த கூட்டத்திற்கு சசிகலா வந்திருந்தாங்களா..?




Read more...

தொலைந்து போன என் சொந்தங்களே...

என் சொந்தங்களே அங்கே என் இனம் தாக்கப்படுகிறது இங்கே இவர்களுக்கு கொண்டாட்டம் கேட்குதா...? அப்படின்னு பேசி நமக்கு பேச்சாளரா அறிமுகமான இயக்குனர் சீமான் அவர்களின் சமீபத்திய தேர்தல் பேச்சு நம்மை சற்றே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அவர் சொன்னது இது தான் ".. நமக்கு ஆதரவாக தமிழ் ஈழம் பெற்று தர விரும்புகிற ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரியுங்கள்."
சீமானின் கோணம் மாறிப்போக என்ன காரணம்..? சீமானின் பாண்டிச்சேரி பேச்சு தான் அப்படி என்னதான் பேசினார் ..." அங்கே எனது இனம் செத்துக் கொண்டிருக்கிறது இங்கே இருக்கும் வேசி மகன்கள் கிரிக்கெட் பாத்துக்கிட்டு இருக்காங்க. (அப்பொழுது இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்தது). " நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம் யாரும் எதுவும் கேட்க கூடாது ஏன்னா நீங்க உணர்ச்சி வசப் பட்டு பேசிட்டேன்னு சொல்லிடுவீங்க. சரிங்க அதே மாதிரி ஏன் சோனியாவும் கணவனை இழந்த துயரத்தில் உணர்ச்சிவசப்பட்டு இலங்கை தமிழர் பிரச்சனையில் அமைதியா இருந்திருக்க கூடாது..? தமிழன் மட்டும் தான் உணர்ச்சி வசப் படனுமா ...?
வழக்கறிஞர் அருள்மொழி சொல்கிறார் இதற்கு முன் வரை சுப்பிரமணியசுவாமி, சோ இந்த இருவரின் கருத்தைத்தான் தனது ஈழக்கொள்கையாக ஜெயலலிதா அறிவித்து வந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் அவர் எடுத்திருக்கும் ஈழ ஆதரவு என்கிற நிலைப்பாடு தேர்தல் முடிந்தபிறகு அல்லது இவர் ஆட்சிக்கு வந்த பிறகு இப்படியே இருக்குமா என்று நம்புவதற்கு இல்லை. அப்படி தொடர்ந்தால் நல்லது. எந்த சர்வதேச சட்டமும் ஈராக் மீதும், தாலிபான்கள் மீதும் தாக்குதல் நடத்தும்படி அமெரிக்காவுக்கு அனுமதி கொடுக்க வில்லை. ஏற்கெனவே ஜெ.வி.பி. என்கிற இடதுசாரி சிங்களப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிறீமாவோ பண்டார நாயகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திராகாந்தி இந்தியப் படையை அனுப்பி அப்போராட்டத்தை ஒடுக்கிக் கொடுத்தார். அவரே கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியது என்று எல்லாவற்றிற்கும் உதாரணங்கள் வரலாற்றில் இருக்கின்றன. அதைபோல தனி ஈழத்தையும் உருவாக்க நினைத்தால் அதுவும் முடியும்''
கவிஞர் தாமரை சொல்கிறார் ..வீடு பற்றி எரிகிறது. உடனே அணைக்க தண்ணீர் வேண்டும். அது நல்ல தண்ணீரா? சாக்கடையா? என்பதல்ல பிரச்னை. ஆகவே, இந்த நேரத்தில் ஈழமக்களுக்குத் துணையாக ஒலிக்கின்ற ஜெயலலிதாவின் கருத்தை வரவேற்கிறேன் என்று.
தாமரை தண்ணீரா சாக்கடையா என்று கவலை படமால் இருக்கலாம் அதற்காக தண்ணீரும் சாக்கடையும் ஒன்றாகி விட முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.


Read more...

மக்களை ஏன் சந்திக்கணும்...?

''மக்களை நேரடியாகச் சந்திக்காமல் கொல்லைப்புறம் வழியாக, அதாவது ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஸ்டாலின் சொல்லியிருக் கிறாரே?''
''என்னைப் பார்த்து இதைக் கேட்கிற ஸ்டாலின், தன் தங்கை கனிமொழியிடம் இதைக் கேட்க வேண்டியதுதானே? அமைச்சர் ஜி.கே.வாசனைப் பார்த்துக் கேட்பாரா? முரசொலி மாறன் 30 ஆண்டுகள் இப்படித்தானே பதவியில் இருந்தார்? ஸ்டாலினுக்குத் தைரியம் இருந் தால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியதுதானே? அரசியல்ரீதியாக விமர் சனம் செய்யலாம். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் என்ற பதவியைக் கொச்சைப்படுத்தலாமா? அவையின் அடுத்த கூட்டத் தில் இந்தச் சிக்கலை எழுப்புவேன். ஸ்டாலின் இதற் குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!''

அதெல்லாம் சரி நீங்க தேர்தல்ல போட்டியே போடப் போறதில்லையா ...? அதுசரி பூசாரி எப்பவாது தன்னை பலி கொடுக்கணும்னு சொல்லுவாரா ...? நீங்கதான் பூசாரி ஆச்சே...


Read more...

எது கவிதை..?

ஆரம்பிச்சுட்டன்யா இவன் அப்படின்னு நீங்க திட்டுறது கேட்குது. இது இப்ப எழுதின கவிதை இல்லை ஆமாம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. இப்ப நீங்க நினைக்கிறதும் சரிதான், ஆமாம் கல்யாணத்துக்கு முன்னால் எழுதியது...
"எது கவிதை..?"
மழை எழுதிய கவிதை நதி என்றால்
மொழி எழுதிய கவிதை தமிழ் என்றால்
தமிழ் எழுதிய கவிதை பாரதி என்றால்
கடவுள் எழுதிய கவிதை பெண் என்றால்
பெண் எழுதிய கவிதை குழந்தை என்றால்
என் விரல் பிரசவித்த இதுவும் கவிதையே



Read more...

மே-1 தோன்றிய வரலாறு

மே மாதம் முதல் தேதி, தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பொன்னாள். உலகம் எங்குமுள்ள பாட்டாளி மக்கள் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தினம் 12 மணி நேர வேலையை 8 மணியாகக் குறைக்கத் தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்றது, மே முதல் தேதியன்றுதான்.
1837-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வான்ப்யூரன், 14 மணி நேர மாக இருந்த வேலைத் திட்டத்தை மாற்றி, அரசாங்க அலுவலகங்களில் வேலை செய்வோர் 10 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். 'இந்தப் பத்து மணி நேரம் கூட அதிகம்; எட்டு மணி நேர வேலையே நிர்ணயிக்க வேண்டும்' என்று தொழி லாளர்கள் போராட்டம் தொடங் கினர்.
இதனால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடக்க முதலாளிகள் முயன்றனர். துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதில் ஆறு தொழிலாளிகள் மாண்டனர். ஏராளமான பேர் காயம் அடைந்தனர். இதைக் கண் டிக்க 'ஹேய் மார்க்கெட்' என்ற இடத் தில் 30,000 தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இக்கூட்டத்தினர் மீதும் அடக்குமுறை கையாளப்பட்டது. இப் போராட்டத்தில் கைதான பலர் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
1888-ல் அமெரிக்காவில் கூடிய தொழில் கூட்டு மகாநாடு, 8 மணி நேர வேலைத் திட்டத்தை வற்புறுத்தி யது. இப்போராட்டங்கள், மே மாதம் நடைபெற்றதால் இவை 'மே தினப் போராட்டம்' என்று பிரசித்தி பெற்றன. எவ்வளவோ இன்னல்களுக்குப் பின் இப்போராட்டம் வெற்றியடைந்தது.
1904-ல் ஆம்ஸ்டர்டாமில் கூடிய தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ் வொரு மே 1-ம் தேதியன்றும் இவ் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இன்று கம்யுனிசத்தை மிக தீவிரமாக எதிர்த்து வரும் அமெரிக்காவில் தான் உழைப்பாளர் தினம் ஆரம்பிக்கப்பட்டது என்று படித்தவுடன் ஆச்சர்யம். அது மட்டுமல்ல இன்று உழைப்பாளர் தினம் என்பது அமெரிக்காவில் சுத்தமாக மறந்து விட்ட ஒன்றாகிவிட்டது.


Read more...

அமீர் கலைஞர் உண்ணாவிரதம் பற்றி சொல்லியது...

ஈழத் தமிழர் பிரச்னையில் கலைஞரோட அணுகுமுறை எப்படியிருக்கிறது?``பாராளுமன்றத் தேர்தலுக்காக ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செஞ்சுட்டார்னு நான் கலைஞரை சுலபமா விமர்சனம் செஞ்சுடலாம். ஆனால், கலைஞரின் இடத்துல நான் இருந்து பார்த்தால்தான் அவரோட கஷ்டங்கள் என்னனு தெரியும். கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய நினைப்பவர்தான். அந்த உணர்வு இல்லாமலா ஏற்கெனவே இருமுறை ஆட்சியை இங்கே இழந்தார்? `தமிழினத் தலைவர்'ங்கிற முறையில் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பில் பெரும்பங்கு கலைஞருக்குத்தான் இருக்கு. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கூட்டணியால்தான் அவர் நினைச்சதை செய்வதில் தாமதம் ஏற்பட்டுருச்சு.'' முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி என்ன நினைக்கிறீங்க?``ஈழத்தமிழர் பிரச்னைக்காக நம் முதல்வர் போராடுறது பாராட்ட வேண்டிய விஷயம். அவரது உண்ணாவிரதத்தால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதா சொல்றாங்க. அப்படி நடந்திருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்.''


Read more...

ஹேய் கலக்கிட்டோம்ல...

மே-1 உழைப்பாளிகளின் தினம், வழக்கம் போல் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தொலை காட்சியில் வரும் அனைத்துமே குப்பையாக இருப்பதில்லை என்பதற்கு இன்று சன் தொலைக்காட்சியில் வந்த சாலமன் பாப்பயாவிடம் பட்டி மன்ற பேச்சாளர் ராஜா உரையாடினதை சொல்லலாம். சாலமன் பாப்பையாவின் அந்த மதுரை தமிழில் உள்ள நெருக்கம் நம்மை மேலும் மயக்கியது. அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும்....
கேள்வி: உங்களின் எதிர்கால லட்சியம் என்ன ...?
பதில்: ஹேய..எழுபது வயசுல என்னங்க லட்சியம்..எனது கனவு மேகங்கள் எல்லாம் கலைந்து தெளிவா இருக்கு. மூட்டையெல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு உக்காந்திருகோம் எப்ப கூபிடுறாரோ அப்ப கிளம்ப தயாரா உக்காந்திருக்கேன்.. இதுல போய் லட்சியம் அது இதுன்னு..,. ஹா ஹா ..
கேள்வி: நீங்கள் எல்லா மதத்தின் கடவுளையும் கும்பிடுறிங்க எப்படி உங்களால முடியுது...?
பதில்: நான் இந்து மத இலக்கியங்களை படித்திருக்கிறேன், பைபிளை அக்கு அக்கா படிச்சிருக்கேன், இஸ்லாமிய குரானையும் படித்திருக்கிறேன், பாராதியாரையும் படித்திருக்கிறேன் .. இது எல்லாமே பரம் பொருள் ஒன்றே என்பதை தெளிவா சொல்லுது அதனால எந்த மதத்தை சேர்ந்த கடவுளையும் என்னால ஏத்துக்க முடியுது.
கேள்வி: நீங்கள்தான் பட்டி மன்றத்தின் தரத்தினை குறைத்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே ..?
பதில்: அப்படியா ... நான் குற்றச்சாட்டு என்று அதை பாக்கலை... அதை ஏத்துக்கறேன்.
கேள்வி: நீங்க சிரிக்க சிரிக்க மேடைல பேசுறிங்க நிஜ வாழ்க்கைல நீங்க யாரிடமாவது கோபப்படுவீங்களா ...?
பதில்: நான் எங்க வீட்டுகாரம்மாவிடம் கோபப் படுவேன் ஏன்னா அவுங்கதான் நான் எவ்வளவு தூரம் நடக்குறேனோ அந்த தூரம் வரக்கூடியவங்க. அதுமட்டுமில்லாம மத்தவங்களிடம் கோபப் பட நமக்கு உரிமையில்லை.
கேள்வி: உங்களுக்கு பிடிச்ச இசை அமைப்பாளர் யார் ....?
பதில்: பி.யு .சின்னப்பா காலத்திலிருந்து பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன், ரகுமான் நம்மோளோட புகழை எங்கோயோ கொண்டு போய் இருக்கிறார் அவருடைய இசைல மேல் நாட்டு தாக்கம் அதிகமிருக்கும் .. இளையராஜா இசை மனசுக்கு நெருக்கமா இருக்கும் அந்த இசை மேல எனக்கு ஒரு கிறுக்கே உண்டு.
கேள்வி: நீங்க அழுவீங்களா ...?
பதில்: எங்க அம்மாவை பத்தி நினைத்தால் அழுகை வரும் (குரல் கம்முகிறது), ஏன் எனில் அவுங்களுக்கு நான் எதுவுமே செயலை ...அதில்லாம மிகவும் கஷ்ட்டதில இருக்கிற ஏழையை பார்த்தால் அழுகை வரும் ஏன் எனில் நானும் அந்த நிலைலிருந்து தான் வந்திருக்கிறேன்.
கேள்வி: இளமையில் வறுமை வரமா கொடுமையா ...?
பதில்: என்னை பொறுத்த வரைக்கும் வரம்தான். ஏன்னா அந்த வறுமை தான் எனக்குள்ளிருந்த இந்த திறமையெல்லாம் வெளி கொண்டு வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல பெரிய கவிஞர்கள் எல்லாம் வறுமையை முழுமையாக கடந்து வந்ததுனாலையே அவுங்க இன்றைய நிலையை அடைந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.
கேள்வி: இளைய சமுதாயம் இலக்கிய தமிழை அவ்வளவாக புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லையே...?
பதில்: அவுங்க தொல்காப்பியம் போன்றவற்றை படிக்காவிட்டால் கூட பரவாயில்லை, பாரதியை படிக்கலாம் இல்லை கண்ணதாசனாவது படிக்கலாம் இப்ப அதுவும் இல்லை அது தான் பிரச்சனை. நம்ம அரசியல் வாதிகள் தான் இதற்கெல்லாம் காரணம்.

நிஜமான சமுதாய அக்கறை, தெளிந்த வாழ்க்கை பார்வை,மண்ணின் மனம் மாறாத பேச்சு இப்படி எல்லா விதத்துலயும் சாலமன் பாப்பையாவின் அனுபவம் பேசியது நிச்சயம் எல்லோருக்கும் உபயோகமாக இருந்திருக்கும்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP