எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?

இந்த அரசியல்வாதிகள் பொதுவாவே பொதுமக்களை வைத்து நிறைய காமெடி பண்ணுவார்கள் அதுவும் தேர்தல் நேரத்துல கேட்கனுமா..? கவுண்டமணி பாணில சொன்னா இவங்க கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதுதான். அது மாதிரி நம் கண்ணில் பட்ட சில தேர்தல் காமெடிகள்...

"நாப்பதுக்கு நாப்பது அம்மாதான் ஜெயிப்பாங்க, அவங்களோட ஆளுமைத்திறனுக்கு நிச்சயம் பிரதமரா வரணும்னு என் ஆசை. அது நடக்கும் காலம் வந்துவிட்டது" -- நடிகை விந்தியா சொன்னது . அது !!!

"கலைஞர், சோனியா கையில் இலங்கை பிரச்னை இருந்திருந்தால் ஏன் இவ் வளவு காலம் விட்டு வைக்கிறார்கள். மூன்று மாதத்திற்கு முன்பே போர் நிறுத்தம் செய்ய வழி செய்து எதிர்க்கட்சியின் விமர்சனத்திலிருந்து தப்பித்திருப்பார்கள்" -- நடிகர் பாக்கியராஜ் சொன்னது. பாஸ் இது கொஞ்சம் ஓவர் சப்பைக்கட்டு.

"தனது குடும்பத்திற்கு சொத்து சேர்கிற கருணாநிதிக்கு உங்கள் ஆதரவா இல்லை குடும்பமே இல்லாமல் உங்களுக்காக உழைக்கும் எனக்கு உங்கள் ஆதரவா ..?" அதெல்லாம் சரி அந்த கூட்டத்திற்கு சசிகலா வந்திருந்தாங்களா..?




0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP