அமீர் கலைஞர் உண்ணாவிரதம் பற்றி சொல்லியது...

ஈழத் தமிழர் பிரச்னையில் கலைஞரோட அணுகுமுறை எப்படியிருக்கிறது?``பாராளுமன்றத் தேர்தலுக்காக ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செஞ்சுட்டார்னு நான் கலைஞரை சுலபமா விமர்சனம் செஞ்சுடலாம். ஆனால், கலைஞரின் இடத்துல நான் இருந்து பார்த்தால்தான் அவரோட கஷ்டங்கள் என்னனு தெரியும். கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய நினைப்பவர்தான். அந்த உணர்வு இல்லாமலா ஏற்கெனவே இருமுறை ஆட்சியை இங்கே இழந்தார்? `தமிழினத் தலைவர்'ங்கிற முறையில் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பில் பெரும்பங்கு கலைஞருக்குத்தான் இருக்கு. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கூட்டணியால்தான் அவர் நினைச்சதை செய்வதில் தாமதம் ஏற்பட்டுருச்சு.'' முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி என்ன நினைக்கிறீங்க?``ஈழத்தமிழர் பிரச்னைக்காக நம் முதல்வர் போராடுறது பாராட்ட வேண்டிய விஷயம். அவரது உண்ணாவிரதத்தால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதா சொல்றாங்க. அப்படி நடந்திருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்.''


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP