முதலாளித்துவம் தோற்றுப்போன தத்துவம்...?!


மைக்கேல் மூர் (MICHAEL MOORE) ஒரு மிக சிறந்த ஆவண பட இயக்குனர்,தயாரிப்பாளர். இவரது செப்டம்பர்-11, பற்றிய திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், நிறைய விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறது. இவர் சென்ற வாரம் ஒரு ஆவண படத்தை வெளியிட்டிருக்கிறார் படத்தின் பெயர் CAPITALISM - A LOVE STORY. இந்த படத்தை பற்றியும் அதில் தான் சொல்லியுள்ள கருத்துக்களை பற்றியும் ஒரு விவாதம் CNN-LARRY KING LIVE என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது, அதை பற்றிதான் இங்கே சொல்ல போகிறோம். அதற்கு முன் முதலாளித்துவம் எப்படி, ஏன் தோற்றுபோனது என்பதை பார்ப்போம்.

இந்த படம் நம்ம நாட்டிற்கும் தேவையான ஒன்றாக நான் நினைக்கிறேன், ஏனெனில் அமெரிக்காவின் சுவடுகளை ஒற்றி நமது பொருளாதாரம நடை போட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட நாம் அதை முழுவதுமாக அடைவதற்குள் தடுத்துவிட வேண்டும். சின்ன வயதில் என்னுடைய உறவினர் ஒருவர் சொல்வார் "அழ அழ சொல்பவர்கள் நல்லா இருக்க சொல்றவங்க, சிரிக்க சிரிக்க சொல்றவங்க, நீ கெட்டுபோக சொல்பவர்கள்" அப்படின்னு. கிட்டத்தட்ட இந்த முதலாளித்துவ கொள்கையில் அமைந்ததுதான் அமெரிக்காவின் பொருளாதாரம். எப்படி..? அள்ளி அள்ளி கொடுத்தது சம்பளத்தை எப்படி ...? ரொம்ப சுலபம், மகாநதி படத்தில் வி.எம்.சி. ஹனீபா சொல்வார், "பெரிய அளவு முதலீடு செய்யனும்னா ஏன் கை காசை போடணும், OPM (Other People Money) இருக்கே " அப்படின்னு, அதாவது Finance Company நடத்தி அதில் வரும் காசை மற்ற தொழிலில் முதலீடு பண்ணுவது. அதேமாதிரியான விஷயத்தை ஒரு நாடு கையிலெடுத்தால் அதுதான் இந்த முதலாளித்துவம் (CAPITALISM) . நீங்க நினைக்கிறது முற்றிலும் சரி கமலுக்கு அந்த படத்தில் ஏற்படும் நிலை தான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படீன்னா யாரு வி.எம்.சி. ஹனீபா ..? வேற யாரு நம்ப பணக்கார முதலாளிகள் தான்.

எப்படி இந்த முதலாளிகள் கைகளில் அரசாங்கம் சிக்கிகொண்டது அப்படின்னு நீங்க கேட்கலாம், அரசாங்கங்களை வழி நடத்துவதில் பணக்காரர்கள் தங்களது பங்கை செவ்வனே (!!) ஆற்றி கொண்டுள்ளார்கள். அதை நாம் நன்கறிவோம், சரி இது எப்படி சாத்தியம், தனது நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தையில் வெளியிட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ அவை ஒரு ஐந்தாறு பக்கங்களில் மிகவும் நுண்ணிய எழுத்துக்களில் கொடுத்திருப்பார்கள், (நியாயமா செயல்படுபவர்கள் அல்லவா), நடுத்தர மக்களே நீங்களும் பணக்காரர் ஆகா வேண்டுமா எங்க நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ஆகுங்கள், ஆமா நீங்களும் முதலாளிதான். எல்லாருமே முதலாளீ தான் அப்படீன்னா யாரு வேலை பார்க்கிறது ..? முதலாளியாவும் தொழிலாளியாவும் யார் வேலை செய்கிறார்களோ அவுங்கதான். யார் அவுங்க வேற யார் நம்ம நடுத்தர வர்க்கம்தான். சரி இப்படி எல்லா நடுத்தர மக்களின் பணத்தை எல்லாம் பங்கு வர்த்தகம்கிற பேர்ல சுருட்டியாச்சு அடுத்து என்ன ஓட்டம் தானே, அது தான் கொஞ்சம் வித்தியாசமா நிறுவனத்தை "திவால்" ஆக்கிவிடுவது. அப்படி பண்ணினா என்ன பாதிப்பு ஒன்னும் இல்லை இதுவரை எந்த பேர்ல இந்த தொழில் பண்ணாங்களோ அது இனிமேல் பண்ண முடியாது. பணம் தான் கைக்கு வந்தாச்சே இனிமே தொழில் பண்ணா என்ன பண்ணாட்டி என்ன..? அப்படியே தேவை பட்டால் சொந்தங்களின் வழி பண்ணி கொள்ளவேண்டியதுதான். இப்ப பொருளாதாரம் போற போக்கு அப்படிதான். பங்கு சந்தையை ஒரு பங்காக வைக்காமல் மொத்தமும் அதுதான்னு நம்புவதுதான் முதாலாளித்துவம். இப்ப புரிஞ்சுதா ஏன் இது இந்தியாவிற்கும் பொருந்தும்னு நாம சொல்றதுன்னு ...?

சரி மூர் நேர்காணலை பற்றி பார்ப்போம்...

கேள்வி: நீங்கள் CAPITALISM ஒரு தோற்றுப்போன விஷயமா நினைக்கிறீங்களா..?

பதில்: நிச்சயமா... 2008 ஆம் ஆண்டு தெளிவா நமக்கு இதை தானே சொல்கிறது. இங்கே என்ன நடந்தது நம்முடைய பணத்தை போட்டு தொழில் செய்தவர்கள் தங்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவுடன் நம்முடைய வரி பணத்தை bail-out என்ற முறையில் அரசாங்கத்திடம் பெற்றார்களே..? அது எப்படி நியாயம் ஆகும் ..? ஒரு நிறுவனம் தோற்பது அதை வழி நடத்துபவர்களின் கைகளில் உள்ளது. அதற்கு எப்படி அரசாங்கம் பொறுப்பேற்று பணம் கொடுக்க முடியும்...?

சொல்லப்போனால் ஒரு சூதாட்டம் நடந்திருக்கிறது, அதில் வெற்றி பெற்றவர் பணத்தை கொண்டு போயி விட்டார். இவர்கள் என்ன செய்தார்கள் பந்தயத்தின் மேல் இன்னொரு பந்தயம் கட்டினார்கள், அது காணாமல் போனது. ஒரு காப்பீடு அதற்கு இன்னொரு காப்பீடு இப்படி தானே மொத்த பணமும் காணாமல் போனது.

கேள்வி: இந்த படம் எடுக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலாகவில்லை, ஆனால் எடுக்க ஆரம்பித்தவுடன் சிலவை நடந்தன அவை இந்த படத்திற்கு எப்படி உதவியாக இருந்தது. ..?

பதில்: உதவி என்றால் .. நான் சொல்ல வந்த கருத்தை மேலும் வலுவுடன் சொல்வதற்கு உதவி கரமாக இருந்தது. நம்முடைய பொருளாதாரத்தில் கொஞ்சம் கூட மக்களுக்கான வசதிகள் இல்லை, இது சாதாரண மக்களுக்கான பொருளாதாரம் கிடையாது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் கொள்ளவும் தான் இந்த பொருளாதாரம் உதவுகிறது. பங்கு சந்தையில் உள்ளவர்கள் தொழிலாளர்களை பற்றி கவலை படுவதில்லை.

கேள்வி: அப்படீன்னா முதலீட்டாளர்கள் தான் முக்கியம் தொழிலாளர்கள் இல்லை என பங்கு சந்தையில் ஈடு பட்டிருப்பவர்கள் நினைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா..?

பதில்: நிச்சயமா..! இப்ப பாருங்க வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே போகிறது, ஆனால் பங்கு சந்தையின் புள்ளிகள் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. எப்படி..? தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டு அதன் மூலம் மிச்சமாகும் பணத்தை கொண்டே இந்த லாபம் காட்டப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த கால கட்டத்தில் நிறைய லாபம் ஈட்டும் போக்கை கடை பிடிப்பதாலேயே இது நிகழ்கிறது. சொல்லப்போனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிக அதிக அளவிற்கு சீரழிந்துள்ளது.

கேள்வி: வீடுகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் அந்த வீட்டின் முதலாளி தவணைகளை ஒழுங்காக செலுத்தாத பட்சத்தில் பாதிக்க படப்போவது அந்த குறிப்பிட்ட வங்கிகள் தானே, அவர்கள் அந்த வீட்டை ஜப்தி செய்து மட்டும் என்ன அடைந்து விட போகிறார்கள். ..?

பதில்: நீங்கள் சொல்வது சரி தான் அதனால் அவர்களுக்கு ஒன்றும் பெரிய லாபம் இல்லை தான். இதில் இன்னொரு விஷயம் வங்கிகள் சொல்கின்றன நிறைய மக்கள் பணம் கட்டாததால் ஜப்தி செய்கிறோம், பணம் திரும்ப வராததால் எங்களுக்கு நஷ்டம் அப்படின்னு சொல்றாங்க. அது தவறு நான் ஆய்வு செய்த விதத்தில் அப்படி நடந்ததை விட வங்கிகளின் தவறான முதலீடுகளே அதன் சரிவிற்கு காரணம். FBI-தான் இதை நன்கு விசாரித்து உண்மைகளை கொண்டுவரவேண்டும்.

கேள்வி: FBI விசாரிக்கனும்னா அங்கே (வங்கிகளில்) குற்றம் நடந்திருககும்னு நீங்க நம்புறீங்களா...?

பதில்: நிச்சயமா..மக்களின் பணம் தவறான முறையில் முதலீடு செய்யப்பட்டு காணாமல் போயிருக்கிறது. எங்கே போனது அந்த பணம்..? எப்படி போனது...? இது ஒரு குற்றம்தானே அதை விசாரித்து மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசு.

(இது அந்த பேட்டியின் சாரம்சமே. இதில் சொல்லி இருக்கும் விஷயங்கள் வரிக்கு வரி அப்படியே பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அதே நேரம் அவர் சொல்லிய கருத்துக்களில் இருந்து மாறுபடவும் இல்லை என்பதை உறுதியுடன் சொல்லி கொள்கிறேன்.)


Read more...

ஒரு தவறு ஒரு திருத்தம் ...


இது எப்படி சாத்தியம்...? என்ற தலைப்பில் எழுதியதில் ஒரு சின்ன திருத்தம்... சன் குழுமத்திலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" அப்படின்னு குறிப்பிட்டிருந்தேன், அது "தமிழ் முரசு" அல்ல பதிலாக சன் குழுமத்திலிருந்து வெளிவரும் "தினகரன்" பத்திரிகை. உங்கள் பார்வைக்காக அந்த விளம்பரத்தையும் சேர்த்திருக்கிறேன். ..


Read more...

இது எப்படி சாத்தியம்...?

இன்றுதான் பார்த்தேன் விஜய தசமியை முன்னிட்டு சன் டி.வி.யில் "சுப்ரமணியபுரம்" படம் திரையிடுவதாக பார்த்தேன், சற்றே திகைப்புற்றேன் ஏனெனில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை "ஜி-டி.வி." (Zee TV-Tamil) வாங்கி இருப்பதாக சில மாதங்களுக்கு முன் படித்தேன். ஆனால் இப்ப எப்படி...? சரி அதுதான் போகிறதென்று பார்த்தால், சன் குழுமத்திலிருந்து வெளிவரும் "தமிழ் முரசு" என்ற பத்திரிகையில் வந்த விளம்பரத்தை பார்த்து முழுவதுமாக அதிர்ந்தேன்.. அது "ஜி-டி.வி" அதே "சுப்ரமணியபுரம்" படத்தை அதே விஜயதசமி அன்று ஒளிபரப்புதவாக "ஜி-டி.வி" கொடுத்த அந்த விளம்பரம் தான். ஒண்ணுமே புரியலை...இது எப்படி சாத்தியம் ..? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


Read more...

இந்த பாட்டை கேளுங்க...யாரோடு யாரோ (யோகி)


ரெண்டு வாரங்களுக்கு முன்பே இந்த பாட்டை பத்தி எழுதாலாம்னு நினச்சேன் ஆனால் முடியல (வழக்கம் போல சோம்பேறித்தனம்தான்). சமீபத்தில் வெளியான யோகி படத்தில் இடம்பெற்ற "யாரோடு யாரோ.." எனத்தொடங்கும் பாடல், சாரங்கி என்ற இசை கருவியை பயன்படுத்தி இந்த பாடலின் சுவையை மேலும் கூட்டியுள்ளார் யுவன். இந்த பாடலில் எல்லாமே சிறப்பாக, அதாவது பாடல் வரிகள் (சினேகன்) , குரல் (யுவன்) , இசை என எல்லாமே அற்புதமாக இருக்கிறது.



Read more...

ஹிட்லரை காந்தியால் வெல்ல முடியுமா.?

எனககு பிடித்த எழுத்துக்களில் ஜெயமோகன் எழுத்துக்களும் உள்ளது. சிவாஜி நடிப்பை பற்றி அவர் எழுதியதை சரி என்றே நான் அந்த கட்டுரையை படிக்கும் முன்பே எனககு தெரிந்த நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். அந்த வகையில் நான் ஒரு காலகட்டத்தில் காந்தியின் போராட்டம் குறித்தும் அவரது வெற்றி குறித்தும் சந்தேகமும், மறுப்புடமை கொண்டவர்களின் பேச்சை அடிக்கடி கேட்க நேர்ந்தது. அந்த கால கட்டத்தில் எனக்கும் காந்தியின் கொள்கைகள் தான் நம் நாட்டை மிகவும் பின் நோக்கி அழைத்து சென்றுள்ளதோ என்ற எண்ணம் இருந்தது. அதை இப்பொழுது யோசித்து பார்க்கும் பொழுது காந்தி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை, அதுவும் அது உலகளாவியது என்பதை கேட்கும் பொழுது எனக்குள் இது எப்படி சாத்தியம் ... நான் வணங்கும் முருகனுக்கும், பிள்ளையாருக்கும், கிருஷ்ணருக்கும் கிடைக்காத உலகளாவிய அங்கீகாரம் எனககு இரண்டு தலை முறைகள் முன்னாள் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைத்தது என்று எண்ணும் பொழுது இன்னும் அதிகரித்தது அந்த சந்தேகம். இதை பொறாமை அப்படின்னு கூட சொல்லலாம் அது மிகை படுத்தலாக இருந்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. அவரது சுய சரிதையை பார்க்கும் பொழுது (நான் இதை முழுமையாக படித்ததில்லை) ஒரு சாதாரண மனிதன் எப்படி மகாத்மா ஆக முடிந்தது என்பதை சொன்னதன் மூலம் இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா ஜீவன்களுமே தங்களை மகாத்மாவாக உயர்த்திக்கொள்ள தகுதி படித்தவை என்றும் அது அந்த மனிதன் தனது ஏதாவது ஒரு காலகட்டத்தில் தன்னை அஹிம்சா மற்றும் உண்மை வழி திருப்பி கொண்டு அதற்காகவே வாழ்ந்து மடிவது. நான் சொல்ல வந்தது இதுதான் அதாவது ஒரு வாசகர் ஜெயமோகன் வலைப்பதிவில் கேட்டிருந்தார்
"நீங்கள் இட்லர் போன்றவர்களிடம் கூட காந்திய அணுகுமுறை வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா? உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து இட்லரை கொன்றிருக்காவிட்டால் அவனை வென்றிருக்க முடியுமா?
மேலும் காந்தி மக்களை ஒன்று திரட்டினார் என்பது சரி. ஆனால் விடுதலையை அவரா வாங்கி தந்தார்? அப்பொ்ழுது இருந்த ஆங்கில அரசு காலனியாக்க கொள்கையை கைவிட்டது தானே அதற்கு காரணம்."

இதற்கு பதிலாக ஜெய மோகன் சொன்னது இது ....

நீங்கள் படித்த அரசியல் எது என்பதில் ஐயமில்லை, நம்முடைய முதிரா மார்க்ஸியர்களின் ஒன்றரையணா வரலாறு. தயவுசெய்து அதை மறுபரிசீலனைசெய்யுங்கள். இல்லையேல் நீங்கள் மெல்லமெல்ல ஒரு அறிவாளராக [elite] உங்களைக் கருதிக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். கோடிக்கணக்கான மக்களை, அவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் வரலாற்றையும் பண்பாட்டையும், நிராகரித்து அவர்களுக்கு மேல் ஒரு உன்னத இடத்தில் உங்களை நிறுவிக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். மக்களை விடுதலைசெய்பவராகவும், மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு கொண்டவராகவும் உங்களை எண்ணிக்கொள்வீர்கள். ஒரு சிந்தனையாளன் சென்று சேரக்கூடிய ஆக அசிங்கமான இடம் அதுவே.அந்த இடத்தில் நின்றுகொண்டால் உங்களுக்கு அலாதியான அதிகாரம் ஒன்று கைவருகிறது. நீங்கள் அப்போது மக்களில் ஒருவர் அல்ல. ‘நம்ம மக்களுக்கு அறிவே கெடையாது’ என்று சலித்துக்கொள்ளும் மேம்பட்ட உயிரினம், அறிவுஜீவி. சோற்றாலடித்த பிண்டங்கள் என்றும் காசுக்கு விலைபோகும் விபச்சாரக்கும்பல் என்றும் கோடிக்கணக்கான மக்களை நீங்கள் வசைபாடலாம். வாய்ப்பு கிடைத்தால் அம்மக்களை துப்பாக்கி முனையில் நீங்கள் விரும்பியபடி கொண்டுசெல்லலாம். அவர்களின் நலனுக்காக அவர்களை எந்தப் போரிலும் ஈடுபடுத்தலாம். அவர்களின் எதிர்காலத்துக்காக அவர்களைக் கொன்றொழிக்கலாம். ஹிட்லரும், ஸ்டாலினும், மாவோவும், போல்பாட்டும், கிம் இல் சுங்கும் செய்ததுபோல.
அதன்பின் நீங்கள் கட்டளையிடுவதைச் செய்து, உங்கள் கோட்பாடுகளுக்கு நிரூபணங்களாக அமைந்து, உங்கள் சோதனைகளுக்கு எலிகளாக மாறி வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் மக்கள். இல்லாவிட்டால் மடியத்தக்கவர்கள்.. பல வருடங்களுக்கு முன் படித்த இக்கவிதை நினைவுக்கு வருகிறது–
தீர்வு
பெர்டோல்ட் பிரெஹ்ட்
ஜூன் பதினேழு கிளர்ச்சிக்குப்பின்னர்எழுத்தாளர் சங்கச் செயலாளர்ஸ்டாலின்கிராடில் வினியோகிக்கப்பட்டதுண்டுப்பிரசுரத்தில் சொன்னார்,மக்கள் அரசாங்கத்தின்நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.இரட்டை முயற்சி செய்தால் மட்டுமேஇனி அதை மீட்டெடுக்க முடியும்.இந்த நிலையில்அரசாங்கமேமக்களைக் கலைத்துவிட்டுவேறு மக்களை தேர்வுசெய்வதல்லவா எளிது?
நீங்கள் சொல்லும் வரலாற்றில் உள்ள மாபெரும் பிழையை உணர்த்தவே இதை எழுதினேன். வரலாறு என்று சொல்வது மக்கள். கோடானுகோடி மக்கள். அவர்களின் ஒடுமொத்த ஆசைகளும் கனவுகளும் பலங்களும் பலவீனங்களும்தான் வரலாற்றை முன்னகரச்செய்கின்றன. அந்த மக்களை தொகுத்து முன்னெடுப்பவனே வரலாற்றை முன்னெடுக்கிறான். காந்தி மக்களை திரட்டினார், ஆனால் வரலாறு தானாகவே நிகழ்ந்தது என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள அன்றைய இந்திய சமூக சித்திரத்தை ஓரளவேனும் புரிந்துகொண்டிருக்கவேண்டும். இந்தியாவில் நேரடியாக மக்கள் அரசியலில் பங்கேற்கும் மரபு இருக்கவில்லை. எனென்றால் இங்கே இருந்தது மன்னர் ஆட்சி. இந்தியாவில் மன்னர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாக இருந்தது மரபு மட்டுமே. அம்மரபை நிலைநிறுத்துபவர்கள் என்ற முறையில் மன்னர் மேல் மக்களுக்கு மறைமுக அதிகாரம் இருந்தது அவ்வளவுதான்.மக்களாட்சி என்பது இருநூறு வருடச் சிந்தனைக் கொந்தளிப்பினால் ஐரோப்பாவில் உருவானது.
பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவில் வலுவான அரசுகள் இல்லாமல் படையெடுப்புகளில் தேசம் சிதைந்து கிடந்த போது வெள்ளையர் வந்தனர். நிலையான அரசையும் சட்டம் ஒழுங்கையும், மேலான நீதி நிர்வாகத்தையும் அளித்தனர். ஆகவே இந்திய மக்களில் பெரும்பாலானவரக்ள் பிரிட்டிஷ் அரசை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் ஒரு பெரும்பகுதியினர் தங்கள் மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள். அம்மன்னர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தார்கள். இந்தியாவை பிரிட்ட்ஷார் ஆண்டது இந்த மாபெரும் நாடு அவர்களை முழுக்க ஏற்றுக்கொண்டிருந்தது என்பதனாலேயே.
ஆரம்பத்தில் சிலரே பிரிட்டிஷ் அரசின் மறைமுகச் சுரண்டல் நாட்டை ஓட்டாண்டியாக்குவதை உணர்ந்தார்கள். இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு எதிராக எழுந்த ஆரம்பகால கிளர்ச்சிகள் அனைத்துமே மிகையான வரிவசூல்முறைகளுக்கு எதிராக எழுந்தவை. கட்டபொம்மன், பழசிராஜா, வேலுத்தம்பி தளவாய், அல்லூரி சீதாராம ராஜு…அவையெல்லாமே அடக்கப்பட்டன.
பின்னர் படித்த வற்கம் ஒன்று இந்தியாவில் உருவாகி அவர்கள் அறிவுபூர்வமாக பிரிட்டிஷ் சுரண்டலை உணர்ந்தார்கள். மாபெரும் வங்கப்பஞ்சம் போன்றவை அதற்கான கண்கூடான ஆதாரங்களாக அமைந்தன. சுதந்திரம் குறித்தும் சுயாட்சி குறித்தும் கருத்துக்கள் உருவாயின. ஆனால் அவையெல்லாம் மிகச்சில நடுத்தரவற்க படிப்பாளிகள் மத்தியிலேயே இருந்தன.
அந்த எண்ணங்களை கோடானுகோடி இந்தியர் நடுவே கொண்டுசென்றவர் காந்தி. பிரிட்டிஷாரின் மறைமுகச் சுரண்டலை அப்பட்டமாக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன அவரது போராட்டங்கள். அன்னியத்துணி புறக்கணிப்பு, உப்பு காய்ச்சுதல் என எல்லா போராடன்களும் உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சியின் மேலோடமான நியாயத்தன்மைக்குள் இருக்கும் பொருளாதாரச் சுரண்டலை வெளிக்காட்டக்கூடியவை. அப்போராட்டங்களில் கோடிக்கணக்கான மக்களைப் பங்குபெறச்செய்தார். அந்த நோக்கத்துக்காகவே அவற்றை அவர் மிக எளிமையானவையாக அமைத்தார்.’நம்ம கடல், நம்ம தீ, நான் ஏன் உப்பு காய்ச்சக்கூடாது?’ என்ற எளிய கேள்வி ஒரு புதிய சமூக உருவாக்கத்துக்கான அடிப்படை.
அப்படி கோடிக்கணக்கான மக்கள் அரசியலுணர்வு பெற்றபின் அம்மக்களை சமூக மாற்றத்துக்கான செயல்களில் ஈடுபடச்செய்தார். கிராமப்பொருளாதாரத்தை மறு அமைப்புசெய்தல், சுகாதார உணர்வை உருவாக்குதல், கிராப்புறக்கல்வியை பரவலாக்குதல் என அதன் படிகள் பல. காந்திய இயக்கத்தால்தான் சாதியின் தனியறைகளுக்குள் வாழ்ந்த நம் சமூகம் ஒரு பொதுவெளிக்கு வந்தது. அங்கே அது மோதல்கள் முரண்பாடுகள் வழியாக ஒரு சமரசத்தளத்தைக் கண்டடைந்தது.
காந்தியை பத்தொன்பதாம் நூற்ராண்டு மார்க்ஸியத்தை வைத்து புரிந்துகொள்ள முடியாது. நம் கட்சி மார்க்ஸியர் அதையெ செய்கிறார்கள். அதற்கு ஓரளவாவது அண்டோனியோ கிராம்ஷியை அறிந்திருக்கவேண்டும். மேலைமார்க்ஸியத்தின் அடிப்படைகளை பரிச்சயம்செய்துகொண்டிருக்கவேண்டும். மார்க்ஸிய மத நம்பிக்கையாளர்களிடம் அதை எதிர்பார்க்க இயலாது
அதாவது, கிராம்ஷியின் மார்க்ஸியக் கலைச்சொல்லால் சொல்வதாக இருந்தால், காந்தி இந்தியாவில் ஒரு நவீன சிவில்சமூகத்தை [Civil society ] அமைத்தார். அந்த சிவில் சமூகம் பிரிட்டிஷாரை புறக்கணிக்க ஆரம்பித்தது. அந்தப்புறக்கணிப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் பிரிட்டிஷாருக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்திய சமூகம் கொடுத்த அனுமதியின் பேரில் இந்தியாவை ஆண்டவர்கள்.
எந்த ஒரு அரசும் அந்த சமூகம் அளிக்கும் கருத்தியல் அங்கீகாரம் மூலமே அதிகாரத்தில் இருக்கிறது. அதாவது அரசாங்கத்துக்கு அந்த சமூகம் மீது ஒரு கருத்தியல் ஆதிக்கம் இருக்கிறது. அதையே அது நேரடி அதிகாரமாகச் செயலாக்குகிறது. இந்தக் கருத்தியல் அதிகாரத்தை மார்க்ஸியக் கலைச்சொல்லால் ‘கருத்ததிகாரம்’ [Hegimony] என்று சொல்லலாம். அந்த ஆதிக்கத்தை மெல்ல மெல்ல பிரிட்ட்டிஷ் அரசு இழந்தது.
சிவில்சமூக உருவாக்கத்துக்கு நிகராகவே மெல்லமெல்ல ஓர் அரசியல் சமூகத்தையும் [Political society]காந்தியப்போராட்டம் உருவாக்கி எடுத்தது. தன் போராட்டங்களில் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தார் காந்தி. அதை மீண்டும் மார்க்ஸியக் கலைச்சொல்லால் சொல்லவேண்டுமானல் நிலையுத்தம் [Static war] எனலாம். பேச்சுவார்த்தையில் அடைவனவற்றை முழுமையாகச் சொந்தமாக்கிக் கொண்டார். வரலாற்றைப் பார்த்தால் 1920 முதல் படிப்படியாக பிரிட்டிஷார் இறங்கி வந்திருப்பதை காணலாம். ஏனென்றால் அவர்கள் மக்கள் சக்தியை அஞ்சினார்கள்.
அதன்படி முதலில் இந்தியாவெங்கும் மாகாண அரசுகள் அமைந்தன. அந்த அரசில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்றது. ஆட்சியமைத்தது. சட்டங்கள் இயற்றியது. அதே சமயம் மைய அதிகாரத்துடன் போராடியது. அவ்வாறாக ஜனநாயகத்துக்கு நாம் பழகினோம். இன்று ஐரோப்பா அல்லாத நாடுகளில் வலிமையான ஜனநாயகம் வேருன்றியிருக்கும் நாடாக இந்தியா இருக்கிறதென்றால் அதற்கான காரணம் அந்த ஜன்நாயகப் பயிற்சிதான். ஒரு கட்டத்தில் அந்த அதிகாரத்தை உதறி மேலும் உரிமைக்காக முன்னகர்ந்தது காந்தியின் இயக்கம்.
இதன் கடைசி விளைவே நாம் பெற்ற சுதந்திரம். அந்தச் சுதந்திரம் வெள்ளையர் தட்டில் வைத்து கொடுத்துச் சென்றதல்ல. பல ஆப்ரிக்க நாடுகளில் மேலும் முப்பது வருடம் ஆங்கில ஆதிக்கம் நீடித்தது. ஏன், தென்னாப்ரிக்காவில் தொண்ணூறுகள் வரைகூட நீடித்தது அது. உங்கள் கோட்பாட்டின் படி பார்த்தால் தென்னாப்ரிக்க விடுதலையும் மண்டேலாவின் போராட்டத்தின் விளைவு அல்ல. ஆங்கிலேயர் மனமுவந்து அளித்தது.
மண்டேலா பேச்சுவார்த்தைகள்தானே செய்துகொண்டிருந்தார் என்று சொல்லலாமே? வெள்ளையருடன் பேசி சம்மதிக்க வைத்து அவர் விடுதலை பெற்றார் எனலாமே? அது போராட்டமே அல்ல சமரசம்தான் எனலாமே? ஆனால் அவரது வழியும் காந்தியம்தான். ஒருபக்கம் அவர் தென்னாப்ரிக்க பழங்குடிச் சமூகத்தை ஒரு நவீன ஜனநாயகச் சிவில்சமூகமாக உருவாக்கிக் கொண்டிருந்தார். மறுபக்கம் வெள்ளையர்களின் கருத்தியல்மேலாத்திக்கத்தை தகர்த்தார். அதுவே விடுதலையை சாத்தியமாக்கியது.
கடைசியாக, ஹிட்லரிடம் செல்லுபடியாகுமா சத்யாக்ரகம் என்னும் கேள்வி. காந்தியப்போராடம் என்பது ஒருவகை மன்றாடல் என்ற அளவில் புரிந்துகொண்ட மூடத்தனத்தின் விளைவு இது. டொமினிக் லாப்பியர்- லாரி காலின்ஸ¤க்கு அது புரியாததில் வியப்பும் இல்லை. அவர்களின் மனமே இயந்திரத்தன்மை கொண்டது. மேலும் அவர்களின் வெள்ளைய மேட்டிமையுணர்வு என்பது அந்நூலிலிலும் வலுவாகவே உள்ளது. காந்திக்கு நிகரான வரலாற்று நாயகனாக அவர்கள் மௌண்ட் பாட்டனை நிலைநாட்டுகிறார்கள். இந்தியாவுக்கு வெள்ளையர் விடுதலை ‘கொடுத்ததாகச்’ சொல்ல முனைகிறார்கள்.
ஹிட்லரின் வலிமை அவர் ஆயுதங்களில் இருக்கவில்லை. அவர் தன் சமூகத்தின் அங்கீகாரத்தை வென்றதில் இருக்கிறது. அந்தச் சமூகம் அவருடன் உறுதியாக நின்றது. ஹிட்லரை ஆதரித்த ஜெர்மனிய மக்கள் அனைவருமே பாவத்தில் ஊறிய குரூரமான மிருகங்கள் அல்ல. அவர் செய்தவையும் செய்யபோனவையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. போருக்குப்பின் தெரிந்த போது அவர்கள் வெட்கி தலைகுனிந்தார்கள். தேசியவெறியால் இனவெறியால் இட்டுச்செல்லப்பட்டார்கள் அவர்கள்.
அம்மக்களில் இருந்து உருவான ஒரு மாபெரும் சத்யாக்ரகப்போராட்டம் அம்மக்களின் மனசாட்சியுடன் பேசியிருக்க முடியும். அவர்களுக்கு உண்மையைச் சொல்லியிருக்க முடியும். போருக்குப்பின் அவர்களில் எழுந்த மனசாட்சியை போருக்கு முன்னரே கண்விழிக்கச் செய்திருக்கமுடியும். அதைச்செய்யும் வாய்ப்பிருந்தவர்கள் அங்கிருந்த இடதுசாரிகள். ஆனால் அவர்கள் வன்முறைப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதற்கான உதவிகளுக்காக சோவியத் ருஷ்யாவை நம்பியிருந்தார்கள். தேசியவெறி இயக்கமான நாசி இயக்கம் மிக எளிதாக இதைப்பயன்படுத்தியே அவர்களை ஓரம் கட்டியது.
ஹிட்லரை ஆதரித்த மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் அந்த அரசு மீது போர்தொடுத்தது ஐரோப்பிய உலகம். தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதனால் அம்மக்கள் அவ்வரசுக்கு உறுதியான ஆதரவளித்து கூடவே நின்றார்கள். உலகப்போர் அத்தனை நீண்டமைக்கும் பேரழிவுகள் இரு தரப்பிலும் உருவானமைக்கும் காரணம் அதுவே. இன்று ஹிட்லர் தோற்றமையால் அவ்வழி சரியே என்று பேசுகிறோம். வென்றிருந்தாரென்றால்? அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன என்பதை உலகப்போரை கூர்ந்து வாசித்த எவரும் அறிவார்கள். வென்றிருந்தாரென்றால் உலகமும் ஜெர்மனியும் மேலும் பேரழிவுக்குச் சென்றிருக்கும்.
ஹிட்லரிடம் அல்லது அதேபோன்ற சர்வாதிகாரியிடம் ஒரு சத்யாக்ரகப்போராட்டம் என்ன செய்யும்? அவரது அதிகாரத்தை அளிக்கும் சிவில்சமூகத்தின் மனத்தை மாற்றி அவரை தனிமைப்படுத்தும். ஒருவேளை அதற்கு சற்று காலம் தேவைப்படலாம். ஆனால் வன்முறை உருவாக்கும் அழிவுகளுடன் ஒப்பிடும்போது அதன் இழப்புகள் குறைவு, வெற்றி அனேகமாக உறுதிப்பட்ட ஒன்று.
சத்யாக்ரகம் போன்ற ஒரு போர்முறையை நாம் கற்பனாவாதம் சார்ந்து மிகைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அது அறவுணர்வுகொண்டவர்களின் மனசாட்சியுடன் பேசும் என்பது உண்மை. அதைவிட முக்கியமான உண்மை என்பது அது கோடிக்கணக்கான மக்களின் யதார்த்த உணர்வுடன் பேசும் என்பது. எளிய மக்கள் வாழ விரும்புகிறார்கள். போரிடுவதற்கும் சாவதற்கும் அல்ல. எப்படியாவது தங்கள் லௌகீக அவலத்தை வென்று சற்று மேலான ஒரு வாழ்க்கையை நோக்கி நகரவே ஆசைப்படுகிறார்கள்.
உதாரணமாக இன்று போர்வெறியர்களாகச் சித்தரிக்கப்படும் சிங்கள மக்களேகூட இரண்டு முறை போரை நிறுத்திவிட்டு சமாதானத்துக்கு செல்வோம் என்ற உறுதிமொழியுடன் தேர்தலில் நின்ற இரு தலைவர்களை -சந்திரிகா குமாரதுங்கவையும் ரனில் விக்ரமசிஙவையும்– பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெறச்செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். தமிழ் மக்களை ஒழிக்க அவர்கள் எண்ணுகிறார்கள் என நான் நினைக்கவில்லை. பட்டினியிலும் புறக்கணிப்பிலும் வாழும் மக்கள் எங்குமே ஒன்றுதான். அவர்கள் தேடுவது எப்படியாவது வாழ்ந்து விடமுடியாதா என்ற நம்பிக்கையை மட்டுமே..
காந்தியம் என்பது கோட்பாடு கொள்கை ஆகிய அனைத்துக்கும் மேலாக எளிய மக்களை முன்வைத்து நடத்தப்படும் உரிமைப்போராட்டம். தன் கனவுகளுக்காக அம்மக்களைப் பலியிடுவதில் நியாயமில்லை என உணர்ந்த ஒரு ஞானியின் வழிமுறை அது. மக்களை கலைத்துவிட்டு தங்களுக்குரிய மக்களை தேர்வு செய்ய விரும்பும் மேட்டிமையாளர்கள் அதை எதிர்ப்பது என்பது தீமை நன்மைக்கு எதிராக கொள்ளும் வெறி மட்டுமே.
--நான் சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்தது. நான் முன்னமே சொன்னது போல் எனது கருத்துக்களுடன் மிகவும் ஒத்துபோக இருந்ததால் இந்த கட்டுரை உங்கள் பார்வைக்காக.


Read more...

சோக்கா சொன்னபா..

சின்ன வீட்டை 'துணை மனைவி' என்று கூறலாமா?
அப்ப 'பெரிய வீடு' துணைக்கு வராத மனைவியா? 'சின்ன வீட்'டிடம் போய், 'என் அருமைத் துணைமனைவியே!' என்று அழைத்துப் பாருங்கள். செம டோஸ் கிடைக்கும் (நான் உங்களைச்சொல்லவில்லை)!
(மதன் கேள்வி-பதிலில் இந்த வாரம் வந்தது)

நடிகை ஸ்ரீவித்யா நடிகர் நாகேஷை பற்றி முன்வைத்த கேள்விகளும் அதற்கு நாகேஷின் பதில்களும் (1976-ல் வந்தது).
ஸ்ரீவித்யா:நாகேஷ் நன்றி கெட்டவர் என்று இவருடைய நண்பர் களே சொல்லக் கேள்விப்பட் டிருக்கிறேன். அவர்கள் அப்படிச் சொல்லுமாறு இவர் ஏன் நடந்து கொள்கிறார்?
நாகேஷ்: என்னை நன்றி இல்லாதவன் என்று சில நண்பர்கள் கூறுகி றார்களாம். நன்றியை எவ்வளவு செலுத்தினாலும், மனித ஜென் மத்துக்கு அது எடுபடவே படாது! நன்றிக்குப் பெயர் போனது நாய்தானே! நான், மனிதனாகவே இருக்க விரும்பு கிறேன்.

''புரியாத புதிர்..?''
''விஜய், ராகுல் காந்தியைச் சந்தித்தைப்பற்றி பேட்டியில் கூறுகிறார், 'நான் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது சினிமா பற்றித்தான் பேசினேன்' என்று. ராகுல், விஜய்யின் 'வில்லு' படத்தைப்பற்றி பேசினார் என்பதைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை!''
- பா.ரங்கன், சென்னை-16. (நானே கேள்வி-நானே பதில் பகுதியில் வந்தது)


திருநாவுக்கரசரிடம்...
''நீங்கள் காங்கிரஸில் சேரப் போவதாகக் கூறுகிறார்களே?''
''நான் டெல்லி செல்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்!'' (இதுக்கு பேசாம ஆமாம் சேரப் போறேண்ணே சொல்லி இருக்கலாம்)


Read more...

வறுமையின் நிறம் சிவப்பு -- ஒரு பார்வை

கமலும் பாலசந்தரும் இணைந்து கிட்டத்தட்ட 36 படங்களுக்கு மேல் பணி புரிந்து இருக்கிறார்களாம் அதில் 30 படங்களுக்கும் மேல் கமல் கதாநாயகனாக அல்லது அதற்கு சமமான வேடத்தில் நடித்திருக்கிறாராம். அதில் நிச்சயம் "வறுமையின் நிறம் சிவப்பு" சிறந்த ஒன்றாக இருக்கும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கமலின் நம்பிக்கைகளை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட பாலசந்தர் படம் என்று கூட சொல்லலாம். அதாவது இடம் பெறும் காட்சிகள் பேசும் வசனங்கள் எல்லாமே கமலின் கொள்கைகளை பறை சாற்றுவதாகவே உள்ளது ஆனால் அவை வடிவைக்கமைக்கப்பட்ட விதம் பாலசந்தரின் பாணியிலேயே இருக்கிறது.
இந்த படத்தில் சிறப்பு அம்சம்கள் சிலவை உங்களுக்காக...
1. கமலின் நடிப்பு (எல்லா காட்சிகளிலும்).
2. ஸ்ரீதேவியின் நடிப்பு (எல்லா காட்சிகளிலும்).
3. தனக்கு லிப்ட் கொடுக்கும் பெண்ணிடம் திலீப் சொல்கிறார் "லைப்-ல லிப்ட் ரொம்ப முக்கியம், நாளைக்கும் லிப்ட் கிடைக்குமா..." அந்த பெண் சொல்கிறார் "MENU- வோ MEN- ஒ எனககு தினமும் மாறிக்கிட்டே இருக்கணும் ". இங்கே ஒரு விஷயம் சொல்லணும் பாலசந்தர் பல விஷயங்களில் முன்னோடியாக செயல் படுபவர் (தமிழ் திரையுலகை பொறுத்தவரையில்) என்ற பெயர் உண்டு, மேற்சொன்ன இந்த காட்சியின் மூலம் தற்பொழுது பரபரப்பாக பேச பட்டு வரும் "ஆண் விபசாரம்" பற்றி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே தனது படத்தில் சொல்லி இருக்கிறார்.
4. பசி காரணமாக தனது புத்தகங்களை எல்லாம் எடைக்கு போட்டுவிட்டு கமல் பேசும் வசனங்கள் நச் "ஏன்பா இந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடைக்கு எடுக்கவில்லை..." எடைக்கு எடுப்பவர் "சார் இது படிக்க நல்லா இருக்கும் ஆனா மடிக்க வராது. நல்ல ஆயில் பிரிண்ட்ல வர்ற ஸ்டார் டஸ்ட் மாதிரியான புஸ்தகம் இருந்தா கொடுங்க அவைதான் நல்ல விலைக்கு போகும்.." இதில் பாரதியார் போன்ற கொள்கைவாதிகள் எழுதிய கவிதைகள் கூட எளிதில் "மடங்குவதில்லை" என்பதை சொல்லி இருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது. மேலும் கமல் சொல்வார் ."பாரதியார் பெரிய கவிஞர்தான் ஆனால் பசி அவரை விட பெரியது. இந்த உலகில் மிகவும் பலம வாய்ந்ததும் அதுதான்.." "பசி அதிகமானால் மானத்தை கூட விற்க தூண்டுமாம் ஆனால் நான் 'மகாகவி' யைத்தானே வித்தேன் .." அப்படின்னு பேசும் வசனங்கள் எல்லாம் சூபெர்ப்.
5. கமலின் கொள்கைபிடிப்பு நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஸ்ரீதேவி பேசும் வசனம் "வாசப்படி குட்டையா இருந்தா நாமதானே தலையை குனிஞ்சு போகணும் நான் குனியாமத்தான் போவேன்னா யாருக்கு அது பாதிப்பு ..." இதில் கூட 'குட்டையானது' என்பது இந்த 'குட்டையான உலகத்தை' குறிப்பதாக தான் நான் நினைக்கிறேன்.
6. பிறப்பால் முற்பட்ட வகுப்பினரான கமல் கடைசியில் நேர்மையாக வாழ ஒரு தொழிலும் வழி செய்யாத பட்சத்தில் முடிதிருத்தும் வேலைக்கு வருவதும் அங்கு அவரது (ஆச்சாரத்தில் மிகவும் நம்பிக்கையுள்ள) அப்பாவை பார்த்தவுடன் .."என் தன் மானத்தை இழந்து எந்த வேலையையும் பார்க்க முடியாது அதனால்தான் இந்த வேலைக்கு வந்தேன். மேலும் நாலாம் தலை முறையை பார் நாவிதனும் சித்தப்பா ஆவான் .. அப்படின்னு சொல்லி இருக்காங்க.." அதாவது சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாரதி சொன்ன விஷயத்தை அழகா சொல்லி இருக்கும் விதம்.
7. நேர்மைவாதியாக இருந்தாலும் கதாநாயகன் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் கூட தங்க முடியாமல் இருப்பது எதார்த்த சினிமாவை நோக்கி தமிழ் சினிமா அப்பவே நடை போட்டிருக்கிறதை தான் இது காண்பிக்கிறது.
சரி இதில் குறையே இல்லையா அப்படின்னு நீங்க கேட்கலாம்.. இருக்குது எனககு தெரிஞ்சு இது தான...
எல்லா நேர்மை வாதிகளும் போராடிகிட்டே இருக்கத்தான் வேண்டும், விடிவே வராது என்பதை போல வரும் காட்சிகள். அதுக்காக அவர் கோடானு கோடி சம்பாதிப்பதாக காமிக் கலைன்னாலும், ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட நினைக்கும் அந்த வேலை இல்லா பட்ட தாரிகள் தங்களுக்கு ஒருவர் அதற்காக ஏற்பாடு செய்யப்பட அதையும் சாப்பிட முடியாதபடி அவுங்க வீட்டில் ரொம்ப நாளா மரணத்துடன் போராடிக்கிட்டிருந்த ஒரு நபர் மரணமுருவதும அதன் காரணமாக அவர்கள் சாப்பிட முடியாமல் போவதும்.. ஒரே சோகம்...
இதை கூட குறையாய் சொல்லணுமின்னு தான் சொல்ல வேண்டியிருக்கிறது அதுதான் இந்த படத்தின் வெற்றின்னு நான் நினைக்கிறேன்.


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் -- 3 (சிரிக்க மட்டும்)

செய்தி: நயன்தாரா பிரபுதேவா விரைவில் திருமணம் ..?
கமெண்ட்: பிரபுதேவா உன் பையன் இறந்து ஒரு வருடம் கூட ஆகலை. அதற்குள் உனக்கு இன்னொருத்தி கேக்குதா. ஒழுங்காக பொண்டாடியுடன் குடும்பம் நடத்து. இல்லையென்றால் அந்த அல்லா உன்னை மன்னிக்க மாட்டார்.
(இந்த கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட்)
இதுல அல்லா என்கிருந்துரா வெந்தார்.?....சம்பந்தமில்லாம அந்த ஆளை இழுக்கிறே.

செய்தி:குத்து பாடல்களை விட, நல்ல பாடல்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசை. குத்து பாட்டும் தேவைதான். நான் கூட, ''கட்டிப்புடி...கட்டிப்புடிடா'' பாடலை எழுதியிருக்கிறேன். பத்து பாடல்களில், ஒரு பாட்டு குத்து பாட்டாக இருந்தால், பரவாயில்லை. பத்துமே குத்து பாட்டாக இருந்தால், அவை வெத்துப்பாட்டாகி விடும் என்றார் வைரமுத்து.

கமெண்ட்:ஆம்மாங்கோ.. நீங்க சொல்ற மாதிரி எல்லாரும் குத்து பாட்டு எழுதறத விட்டுட்டு முதல்வருக்கு வாழ்த்து பா எழுதுங்கோ. கல்லா ஆவது கட்டலாம்.

செய்தி: சரத்குமார் நடித்து வெளிவரவுள்ள "ஜக்குபாய்" படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில்.
கமெண்ட்:இதுக்கு முன்னால ஏதோ ஒரு வருசத்தையே தலைப்பா வச்சி ஒரு படம் எடுத்தார்....ஆங்... 1977 தானே அது. அது release ஆச்சா இல்லையா?
(இதற்கு பதில் கமெண்ட்)
ஆச்சு ஆனா ஆகல...!

செய்தி:தமிழக மாவட்டங்களில் உள்ள வாழ்நிலை நிலவரம் மற்றும் வர்த்தகம், தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கமெண்ட்:உடனே டிவி நிறுவனங்களிடையே ஒரு ஆய்வு நடத்தி இந்த பிரபஞ்சத்திலேயே சிறந்த டிவி நிறுவனமாக கலைஞர் டிவி-க்கு முதல் ஸ்தானமும் அப்படியே கையோடு ஜெயா டிவிக்கு கடைசி ஸ்தானமும் கொடுத்து ஒரு அறிக்கை விட்டு விடுங்கள்.அய்யா இன்கிலாந்துகாரர்களே முட்டாள் நம்பர்-1 என்ற பட்டத்தையும் தமிழனுக்கு தந்துவிடுங்கள்.எனென்றால் இங்கேதான் முதலமைச்சர்கல் கூட டிவி ஸ்தாபனம் நடத்தி மக்களுக்கு கூத்து, தமாஷ் எல்லாம் காட்டிகொண்டிருக்கிறார்கள்.


Read more...

முரண்பாடுகளும்.. சமன்பாடுகளும்..

சமீபத்தில் நடந்த கலைஞர் பற்றிய ஒரு கருத்தரங்கத்தை தொலைக்காட்சி வழி பார்க்க நேர்ந்தது. வழக்கம் போல் அவரவர் தங்களது ஜால்ரா வேலையை செவ்வனே செய்த மாதிரி தான் தோன்றியது. கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களும் கலந்தாய்வு செய்யப்பட தலைப்பும்...
கலைஞருக்கு அண்ணா விருது கிடைக்க காரணம்..
பேச்சு ஆற்றலே -- ஜெகத்ரட்சகன் (மத்திய அமைச்சர் )
பகுத்தறிவே -- ஆ.ராசா(மத்திய அமைச்சர்)
ஏழையின் சிரிப்பில் இறைவனை(!?) கண்டவர் -- பொன்முடி (தமிழக அமைச்சர்)
அரசியல் நாகரீகம் -- சுப.வீரபாண்டியன்
எழுத்தாற்றல் -- வைரமுத்து
நடுவராக -- கவிஞர் வாலி
சிறப்பு விருந்தினர் - ரஜினிகாந்த்
ஆ.ராசா பேசிய தலைப்பில் பகுத்தறிவிற்கும் நாத்திகத்திற்கும் வேறுபாடு இருப்பதாக சொன்னார். ஆனால் கடைசியில் இரண்டும் ஒன்று என்பது போலவே பேசிவிட்டு அமர்ந்தார். அது சரி அப்படிப்பட்ட பகுத்தறிவாளர் எப்படி ஏழையின் சிரிப்பில் "இறைவனை" காணமுடியும் ? நமக்கெதுக்கு வம்பு அப்புறம் இதுக்கொரு கவியரங்கமோ வழக்காடு மன்றமோ நடக்கும். வருடந்தோறும் இமயமலை சென்றுவரும் ரஜினிகாந்த் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார்..? அது சரி "அதிகார மைய" அழைப்பை எப்படி அவரால் தட்ட முடியும். எந்திரன் வேறு தாயாராகி கொண்டிருக்கிறது.
இந்த முரண்பாடு முடிச்சுகளில் சிலவை இங்கே
1. வைரமுத்து பேசும் போது சொன்னார் "கிணறு வெட்ட பூதம்" என்று ஒரு பழமொழி சொல்வார்கள், அதில் 'பூதம்' என்பது பேயையோ பூதத்தையோ குறிப்பன அல்ல என்றும். கிணறு வெட்டும் போது "குவியும் மண்" ஐம்பூதங்களில் முதல் பூதம் என்றும், கிணறு வெட்டும் போது தோன்றும் "வாயு" இரண்டாம் பூதம் என்றும், கிணறு வெட்டியவுடன் வரும் "நீர்" மூன்றாம் பூதம் என்றும், அந்த நீரில் தெரியும் "வானம்" நான்காம் பூதம் என்றும், தோண்டப்படும் "நிலம்" ஐந்தாம் பூதம் என்றும் சொன்னார். இதில் அவர் நாத்திகத்தையும் இணைத்து பேசினார். புரியுது, புரியுது நீங்க கேட்பீங்க இந்த ஐம்பூதங்களை சொன்னதே ஆன்மிகம் தான்னு?
இதுல குறிப்பிட்டு சொல்றது என்னன்னா "ரஜினிகாந்த் அவர்களே நன்றாக கவனியுங்கள் இதை" அப்படின்னு சொல்லிட்டு இதை சொன்னார் வைரமுத்து. ரஜினியால் என்னத்தை சொல்லமுடியும்..?
2. அதே வைரமுத்து திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் போது சொன்னார் தனது ஐந்து புலன்களையும் அடக்க தெரிந்த ஒருவனது வாழ்க்கை ஏழேழு ஜென்மத்திற்கும் பாது காப்பதாக இருக்கும் என்ற பொருள் பட வந்த திருக்குறளுக்கான விளக்கத்தில் கலைஞர் தனது விளக்க உரையில் "தனது வாழ் நாள் " முழுமைக்கும் என்று சொல்லி இருப்பார், என்று சொன்னார். அப்படி என்றால் ஒரு மனிதனின் வாழ்நாள் ஏழேழு பிறப்பும் என்று கொள்ளலாமா...? அப்படி சொன்னாலே அவர் பகுத்தறிவு "நெறி"இலிருந்து விலகியதாகிவிடுமே ...?
இதற்கு முன்பு ஒரு இடுகையில் சோ திருக்குறளையும் இந்து மதத்தையும் தொடர்பு படுத்தி சொல்லும் போது இதே திருக்குறளை தான் சொல்வார். அதை மீண்டும் ஒரு முறை பாருங்கள். வைரமுத்து பாணியில் சொல்வதென்றால் "திருக்குறளுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள நெருக்கம் தூரம் குறைந்தது, திருக்குறளுக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள நெருக்கம் துவாரம் கொண்டது".

முரண்பாடுகள் மட்டும் நம் கண்ணுக்கு தெரியவில்லை அதில் சில சங்கதிகளும் இருந்தன அவை...
.....> "நம்மை பிரித்தாளும் 'சதி"க்கு கால் முளைத்து தான் 'சாதி' ஆனது " என்று கலைஞர் எழுதிஇருந்ததாக சொன்னார் வைரமுத்து. கலைஞரின் மொழி ஆளுமைக்கு இதுவும் ஒரு உதாரணம்.
......>"கலைஞர் சிறையிலிருந்து சட்டசபைக்கு திரும்ப வருகிறார் அப்பொழுது காங்கிரசை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் கேட்டார் "மாமியார் வீடு எப்படி இருந்தது..?" கலைஞர் பதிலாக "உங்க வீடு நன்றாகவே இருந்தது" என்று" ஜெகத்ரட்சகன் சொன்னது. இதுவும் கலைஞரின் சமயோசித திறனுக்கு இதுவும் ஒரு சான்று.
.......>"உலக உவமைகளில் கலைஞரின் உவமை ஒப்பிட முடியாதது. என்னுடைய சுயநலத்திலும் பொதுநலம கலந்திருக்கிறது என்பதை சொல்ல "அழுக்கை தின்று மீன் எப்படி தடாகத்தை சுத்தப் படுத்துகிறதோ" என்ற உவமை." இதை எழுதிய போது கலைஞர்களுக்கு 23-வயதுதானாம். அறிவியல் ரீதியாகவும் இதில் உண்மை உண்டு அதே போல் உவமையும் சால பொருந்துகிறது. கலைஞரின் சொல்வன்மைக்கு இதுவும் ஒரு சான்று.


Read more...

அலட்சியம் அள்ளிய உயிர்கள்

சில தினங்களுக்கு முன் ஒரு வீடியோ கடையில் குறைந்த விலையில் விற்கப்பட்ட பழைய டி.வி.டி இல் நான் மூன்று டி.வி.டி வாங்கினேன் அதில் ஒன்று "சொந்த மண்ணில்" (ON NATIVE SOIL). இந்த டி.வி.டி ஒரு ஆவணப் படம் அதாவது செப்டம்பர்-11-2001 தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அந்த கமிஷனின் ரிப்போர்ட் தாக்கல் பற்றியது தான் இந்த ஆவணப் படம்.
படம் ஆப்கனிஸ்தான் நாட்டிலுள்ள காபூலில் இருந்து ஆரம்பிக்கிறது. அங்குள்ள ஒரு மலைப்பகுதியில் ஒசாமா பின்லேடனை சந்திக்கிறார் ஒரு நிருபர். அவர் சொல்கிறார், ஒசாமா பார்ப்பதற்கு சாதரணமாகவும், அவனிடம் கேள்வி நிறைய கேள்விகள் வைக்கப்படுகின்றன ஏன் அமெரிக்காவை தாக்க நினைக்கிறீர்கள் என்ற ஒன்று, அதற்கு பதிலாக அவர் சொல்வது "தெற்காசிய நாடுகளில் அமெரிக்கா தனது தலையீட்டினை குறைத்து கொள்ளவேண்டும்". மற்றொன்று எப்பொழுது, எப்படி தாக்குவீர்கள் என்ற கேள்விக்கு "அதை நீங்கள் ஊடகங்களின் மூலமாக அவ்வப்பொழுது அறிந்து கொள்வீர்கள்" என்ற பதிலும் ஒன்று.
செப்டம்பர் -11 (09/11) , அமெரிக்காவை தீவிர வாதத்தின் கரங்கள் "இறுக" தீண்டிய நாள். ஏன் இறுக என்று சொல்கிறேன் என்றால் இதற்கு முன்னும் தீவிரவாத தாக்குதல்கள் அமெரிக்காவில் நடந்திருக்கின்றன, ஏன் செப்டம்பர் -11 தாக்குதலில் பல உயிர்களுடன் தன்னையும் மறித்துக்கொண்ட, உலக வர்த்தக மைய கட்டிடமே ஒரு முறை தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பொழுது அதன் அடிப்பாகம் மட்டுமே பாதிக்கப்பட்டது.
சுதந்திரத்தின் நிலம் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா தொழில் நுட்பத்திலும், வளர்ச்சியிலும் மற்ற நாடுகள் பார்த்து பொறாமை படும் அளவுக்குத்தான் இருந்தது. அப்படி தொழில் நுட்பத்தில் சேர்ந்து விளங்கிய அமெரிக்காவை தாக்குதலுக்கு உள்ளாக்க யாருக்குத்தான் தைரியம் வரும் ?
வந்தது ஒசாமாவுக்கு.
மிகவும் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன அமெரிக்கா தனது தொழில் நுட்ப வசதிகளை மறு பரீசிலனை பண்ண ஆரம்பித்தது. உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்து இருந்ததினால் உலக நாடுகள் பெரும் பன்மையானவை இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டன.
சரி இதற்கு யார்தான் காரணம் அப்படிங்கிறதை பற்றியதுதான் இந்த ஆவணப்படம். முதலில் அந்த தீவிரவாதிகள் பயணம் செய்த விமான நிலையங்களில் நடந்த பாதுக்காப்பு குளறுபடிகள் என்று கூறப்பட்டது, அதாவது இரண்டு தீவிரவாதிகள் பரிசோதனை கருவியை கடக்கும் முன்பும் எச்சரிக்கை மணி சத்தம் எழுப்புகிறது, சோதனை அதிகாரிகளின் கையிலிருக்கும் பரிசோதனை கருவியும் ஒலி எழுப்புகிறது, இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் அது அங்குள்ள கண்காணிப்பு கருவியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, அதுவும் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள் அரசாங்கத்திடம் (FBI, CIA உள்ளிட்ட) இருந்து எந்த விதமான உறுதியான எச்சரிக்கைகளும் எங்களிடம் வரவில்லை. FBI சொல்கிறது தனக்கு கிடைத்த அனைத்து விஷயங்களையும் அரசாங்கத்திடம் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதற்கு சாட்சியாக தொலை-நகல் (FAX) அனுப்பியதற்கான சாட்சியையும் காண்பிக்கிறது. அரசாங்கம் சார்பில் பேசும் வெளியுறவுத்துறை செயலர் சொல்கிறார், உளவுத்துறை கொடுத்த தகவலில் தாக்கப்படலாம் என்று இருந்ததே அன்றி எப்பொழுது எப்படி என்ற விவரங்கள் அதில் இல்லை. இந்த மாதிரியான தகவல்கள் அடிக்கடி எங்களுக்கு கிடைத்து வருவதால் அதை சொல்லி நாட்டு மக்களை பீதி அடைய செய்ய வேண்டாம் என்ற நோக்கத்துடனும் தான் நாங்கள் விமான நிலையங்களுக்கு உரிய விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நாங்கள் எதை காரணமாக நினைக்கிறோம் என்றால் இந்த தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த அந்த பயிற்சி விமான உரிமையாளர்களையே. பயிற்சி விமான கூட்டமைப்பின் தலைவர் சொல்கிறார் எங்களிடம் 65,000 பேர்களின் பட்டியல் இருக்கிறது இதில் யாரை என்று நாங்கள் சொல்வது என்று. உடன் தீர்ப்பு குழுவில் (நீதிபதி..?) இருந்தவர் கேட்கிறார்.. " ஒரு சின்ன விஷயம் 65,000 பேரில் 10 அல்லது 15 பேர் அடிக்கடி பயிற்சி விமானங்களை இயக்கி பயின்றிருக்கிறார்கள், அதை வைத்து அந்த பத்து பேர்களையும் பற்றி விசாரணை செய்திருக்கலாமே." ஆனால் அந்த விமான கூட்டமைப்பின் தலைவரிடம் அதற்கான பதில் இல்லை.
இப்படியாக அவனை கேட்டால் இவன், இவனை கேட்டால் இன்னொருத்தன் என்று சொல்லியே தங்களது கடமை தவறலை எல்லோருமே நியாய படுத்த முயலுகின்றனர். இது எல்லா நாடுகளிலும் நடப்பதுதான், ஆனால் இதை தைரியமாக படம் பிடித்து மக்களிடம் காட்டுகிற அந்த சுதந்திரம் வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறாதா என்றால் ஒரு கேள்வி குறி ஒன்றே மிச்சம்.


Read more...

கொஞ்சம் இளைப்பாற...(சிரிக்க மட்டும்)

இதை பார்த்தும் சிரிப்பு வரலையா...? நீங்க நிச்சயம் ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரை பார்ப்பது நல்லது.






Read more...

வெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை

ஜனநாதன் தமிழ் திரை உலகின் சமீபத்திய நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர். முதல் படமான இயற்கை ஒரு புது உலகத்தை, கப்பல்களில் மாலுமிகளாக வேலை செய்பவர்களின் களத்தில் ஒரு காதல் கதையை சொல்லியிருந்தார். இதில் வரும் கதாபாத்திரங்களில் ஒரு சிறு ஈர்ப்பு வர காரணம் அது பயணித்த களம் புதிது. அதற்கு பிறகு ஜீவா நடித்து வந்த "ஈ" உயிர்கொல்லி கிருமிகளை பரப்பி அதனால் உலகிற்கு வரும் ஆபத்தை ஒரு சென்னை சேரி பகுதியில்லுள்ள இளைஞனின் துணையோடு தடுப்பதை பற்றியும் நன்றாக சொல்லி இருந்தார். இந்த இரண்டு படங்களும் ஓரளவு வரவேற்பினை பெற்றதாகத்தான் நான் படித்திருக்கிறேன் அதை நம்புகிறேன். அந்த அளவில் இவரது மூன்றாவது படைப்பான "பேராண்மை" படம் வெளியாக இருக்கிறது. அதன் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிப்பு பார்த்தேன். நிச்சயம் இந்த படம் ஒரு நல்ல படமாக அமைய நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்த படத்தில் காடுகளின் இன்றியமையான்மை பற்றி சொல்லி இருப்பதாக படித்தேன். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜனநாதனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் வித்யாசாகர் தான் இந்த படத்திற்கும் இசை, நிச்சயம் "இயற்கை" அளவிற்கு நல்ல பாடலை கொடுப்பார் என்று நம்புவோமாக. இந்த படம் ஒரு நல்ல படமாக அமைந்து ஒரு நல்ல வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்.


Read more...

திருக்குறளும் இந்து மதமும்..

சோ வின் அரசியல் பார்வை பற்றியும் அவரது சாதீய பற்றும் எனககு முற்றிலும் ஒத்து வராத ஒன்று, ஆனால் இங்கே அவரது "எங்கே பிராமணன்" தொடரில் திருக்குறளுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவதாக இருந்தது ஒ இப்படியும் ஒன்று இருக்கோன்னு நினைக்க தோன்றியது. அதனால் இந்த ஒலி ஒளி உங்களுக்காக..


Read more...

தமிழ் போதும் இந்தியா வேண்டாம் கோஷம்.

"தமிழ் போதும் இந்தியா வேண்டாம்" என்ற கோஷம் வலையில் மிக பிரசித்தம். நான் சொன்னது இன்டர்நெட் வலையை நீங்க பாட்டுக்கும் பழக்க தோஷத்துல மீனவர் வலைனு நினைச்சுக்காதீங்க. ஆனா அதிலிருந்து ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு வலைப்பதிவில் பார்த்தேன் "இந்தியா ஆசியோடு தமிழர்களை கொல்லும் சிங்கள அரசு" - என்ற தலைப்பை பார்த்தவுடன் எனககு ஒன்று தோன்றியது. அப்படி தமிழர்களை கொல்ல ஏன் இந்திய அரசு முயல வேண்டும்..? அப்படின்னு கேட்டா இப்படி சொல்லலாம் "இந்த தி.மு.க தொந்தரவு தாங்க முடியலை, அப்படி அவுங்களை அடக்கனும்ணா என்ன பண்ணலாம், அவுங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களை கொடுமை படுத்தலாம். சரி அதை நாமலே செய்தால் நல்லா இருக்காது. அதுனால சிங்களவங்ககிட்ட சொல்லி பண்ண சொல்லலாம் (!!!???)" அப்படின்னு இந்திய அரசாங்கம் அதாவது காங்கிரஸ் கட்சி நினைத்திருக்கலாம். இல்லன்னா "என் புருஷனை கொன்னது தமிழ் பேசும் விடுதலைப்புலிகள்தான் அதனால் தமிழ் பேசும் தமிழர்களை கொல்லலாம் " என்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருக்கலாம்.
என்னங்க ரொம்ப குழப்பமா இருக்கா, எனக்கும் இப்படிதாங்க இருக்குது. தமிழர்களுக்கு சரியான முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது ஓரளவு உண்மைதான் அதற்காக தமிழர்களை (தமிழ்நாட்டில் வாழும்) கொன்று (அதிலும் குறிப்பாக மீனவர்களை) காங்கிரஸ், வாழும் என்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அப்படியே காங்கிரஸ் செய்தாலும் அதற்காக காங்கிரசை தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டுமே தவிர, இந்தியாவை துண்டாட நினைப்பது அபத்தத்திலும் அபத்தம். தமிழர்களுக்கான உரிமையை ஜனநாயக ரீதியிலேயே போராடி பெற்று விடும் அளவிற்கு தான் நிலைமை உள்ளது. இதை ஏன் சில துண்டாடும் சக்திகள் அதிக அளவில் ஊதி பெரிசாக்கி விடுகின்றன என்று தெரியவில்லை. எனககு தெரிந்த ஒருவர் தனது கணவனை பறிகொடுத்த சோகத்தில், தெருவில் போகும் தன் கணவர் வயதொத்தவர்களை எல்லாம் காட்டி "இவரெல்லாம் உயிரோடிருக்கிறார் என் கணவர் இறந்து விட்டாரே " என்று வருத்தப்படுவார்(!!!??). இத்தனைக்கும் இவரது கணவர் எழுபது வயதுக்கு மேல் கடந்து நோய்வாய் பட்டுதான் இறந்தார். இதிலிருக்கும் நியாயம் தான் இப்பொழுது நீலி கண்ணீர் வடிப்பவர்களின் பக்கம் இருக்கும் நியாயமும்.
இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களிலும் இந்த துண்டாடும் சக்திகள் தங்களது நாக்கினை நுழைக்க தவறுவதில்லை. குறிப்பாக சீன அரசின் ஊடுருவலை பற்றி விவாதிக்கும் பொது கூட இந்தியாவிற்கு இது தேவை தான், இதை விட கொடுமையான விஷயங்கள் நடந்தால் கூட நான் சந்தோஷ படுவேன் , என்ற தொனியில் கூட பதிவுகள் வலையில் இடப்படுகின்றன. உஷாராக இருக்க வேண்டிய நேரம்.
மத்திய அரசு தாமதமாக செயல் படுகிறது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எல்லாம் காரணம் வைத்து இவ்வாறு பேசுவது, சரியான முறையாக தெரியவில்லை. துண்டாடுவது என்பது மற்றவர்களுக்கு எப்படியோ அதற்கு பலியாகி விடாமல் இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.


Read more...

வேண்டாம் வெளிநாட்டினர் அமெரிக்கா

செப்டம்பர்-18 தேதியில் வெளிவந்த INDIA IN NEWYORK என்ற பத்திரிகையில் வந்த ஒரு பேட்டி தான் இந்த கட்டுரையின் சாராம்சம். நாட்டமை படத்தில் வர்ற மாதிரி (வேற உதாரணமே உனக்கு தெரியலையான்னு நீங்க சொல்றது கேட்குது, அடுத்த முறை நிச்சயம் வேற நல்ல உதாரணமா சொல்றேன்) இந்த பேட்டியில் "குற்றவாளிகள்" என்று சுட்டிகட்டப்படும் கும்பலில் நானும் இருப்பதால் என்னுடைய "சாட்சி(!?)" இங்கே செல்லுபடி ஆகாது, இருப்பினும் இது பலருக்கும் பொருந்துவதால், நீங்களே நீதிபதியாகி தீர்ப்பு சொல்லிக்கொள்ளுங்கள். சரி இதோ அந்த பேட்டி.
Norman Matloff, (Professor of Computer Science in University of California). என்பவரை பி.ராஜேந்திரன் என்பவர் கண்டது இந்த பேட்டி. நோர்மன் முழுக்க முழுக்க H1-B விசாவை ஒழிக்க வேண்டும் அல்லது இப்பொழுதுள்ள நடைமுறையை மாற்றவேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்க கூடியவர். இவரது மனைவி சீனாவை சேர்ந்தவர், இவரது தந்தை லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மனதில் கொண்டு கீழ் வரும் பேட்டியை படியுங்கள்.
கேள்வி: நீங்கள் அடிக்கடி H1-B விசாக்களை சரியானவை அல்ல என்று கூறுவது ஏன்?
பதில்: நான் இந்த H1-B அறவே வேண்டாம் என்று சொல்லவே இல்லை.
கேள்வி: சரி அதில் உள்ள குறைபாடுகள் தான் என்ன, மேலும் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் அதை பற்றி பேசுவது ஏன்..?
பதில்: நான் எந்த காலகட்டத்திலும் சொல்லுவேன் இது நல்ல முறை அல்ல, இதில் ஏமாற்றுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று. சரி இந்த விசாவை அறிமுகபடுத்தியதன் நோக்கம் தான் என்ன..? மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே பணிக்கு அமர்த்துவதுதான். ஆனால் இப்பொழுது இது எதற்கு பயன்படுத்தபடுகிறது? குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை பணி அமர்த்து வதற்கான ஒரு வழியாக போயி விட்டது. இது முற்றிலும் ஒரு சட்ட மீறலாகாவே நான் கருதுகிறேன். நான் இன்னும் சொல்கிறேன் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே கொண்டுவர செய்வதை வரவேற்கிறேன்.
கேள்வி: சரி மிகச்சிறந்த அப்படி என்றால் உங்கள் அளவு கோல் என்ன..?
பதில்: இங்கே கிரீன் கார்டு விஷயத்தில் EB-1(Employment Based). அப்படி என்று ஒரு பிரிவு இருக்கிறது அதில் பின் பற்றப்படும் நடை முறைகள், H1-B விசாவிற்கான நடை முறைகள் போல் அல்ல. குறைந்த பட்சம் அந்த விதிமுறைகளை H1-B விசாவிற்கும் கொண்டுவரவேண்டும்.
கேள்வி:இதற்கு பேசாமல் நேரடியா EB-1 கிரீன் கார்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா..?
பதில்: நிச்சயமா. என்ன இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னா ஒரு h1-b விசா பெற்றவர் வேலை நீக்கம் செய்யப் படுகிறார் என்றால் அவர் பத்து நாட்களுக்குள் நாட்டை விட்டு (எனககு தெரிந்து இது பத்து அல்ல முப்பது நாட்கள்) வெளியேற வேண்டும். அதாவது அதற்குள் வேலை கிடைக்காத பட்சத்தில். ஆனால் இங்கே நடை முறை என்ன. யாருமே வெளியேறுவதில்லை. மேலும் அமெரிக்கர்களுக்கு வேறு நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மீது கோபம் வருகிறது. மேலும் இப்பொழுதெல்லாம் அமெரிக்காவின் மீதிருந்த அந்த கவர்ச்சி குறைய ஆரம்பித்து விட்டது. சீனர்கள் அவர்கள் நாடே அமெரிக்காவை விட மேலானது என்ற எண்ணம் சமீப காலமாக மேலோங்கி விட்டது. எனவே அவர்களில் சிலர் தங்களது நாட்டை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டார்கள் அதே மாதிரியான ஒரு சூழல் இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது.
கேள்வி: H1-B விசா பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஏற்கனவே பெற்றவர்கள் வர மறுக்கின்றனர். அப்படி இருந்தும் இந்த விஷயம் அவ்வளவு முக்கியமானதாக கருதுகிறீர்களா...?
பதில்: பின்ன, முக்கியம்தான். இங்கிருக்கும் H1-B விசா பெற்றவர்களால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் இடம் குறைகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
கேள்வி: அதே மாதிரி நீங்கள் வயது ஒரு முக்கியமான அம்சமாக சொல்கிறீர்கள். அதாவது 30 அல்லது 40 வயதில் உள்ள H1-B விசாக்காரர்கள் தேவை இல்லை என்பது போல் சொல்லி இருந்தீர்களே...?
பதில்: ஆமாம் 35 வயதானவர்கள் பெரும்பாலும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்கள் தொழில் நுட்ப ரீதியாக தங்களை வளர்த்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் துறையை பொறுத்தவரையில் வயது முக்கியம் அதுவும் 35 இ தொட்டவர்கள் வயதானவர்களாகவே கருதப்படுகிறார்கள். இங்கே தேவை இளைய தலை முறையினர் மட்டுமே.
இப்படியாக செல்கிறது இந்த பேட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


Read more...

சொல்லத்தான் நினைத்தேன்..

சென்ற வாரம் வெளியான "ஈரம்" திரை படம் பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான விஷயம். இந்த விஷயத்தை படம் வெளியாவதற்கு முன்பே என் மனதிற்கு பட்டது அதை பகிர்ந்து கொள்ளவும் எண்ணினேன். எண்ணம் எழுத்தாகாமல் போனதற்கு காரணம் சோம்பேறித்தனம் ஒன்றே காரணம். இனிமேலாவது இந்த சோம்பேறித்தனத்தை உதறவேண்டும், இப்படி சொல்லி சொல்லியே முப்பத்தேழு வயதாகி விட்டது. சரி மனதில் பட என்ன காரணம் என்று கேட்டால், இந்த படத்தை பற்றி அவ்வப்பொழுது வெளிவந்த புகை படங்களும், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் (இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ்) தொடர்ந்து கொடுத்து வரும் நல்ல படங்களும், குறிப்பாக இந்த படத்தின் லோகோ புதிதாகவும் பார்த்தவுடன் மனதை கவரும் வண்ணமும் வடிவமைக்கப் பட்டிருந்த விதம். என்று அனைத்தும் தான்.
இந்த படத்தை நான் முழுமையாக இதுவரை பார்க்கவில்லை (டி.வி.டி வரை காத்திருக்கும் கும்பலை சார்ந்தவன் நான்). ஆனால் இந்த படம் சமந்தமாக வந்த திரை விமர்சனம், அவ்வப்பொழுது ஒளிபரப்பாகி வரும் காட்சிகளை பார்த்தேன் (நல்ல வேளை சன் டி.வி. இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையினை பெற்றதோ எங்களால் பார்க்க முடிந்தது). படம் மிக அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் த்ரில்லர் வகையை சார்ந்ததால் கதை தெரியாமல் பார்த்தால் தான் சுவாரஸ்யம். எனினும் தண்ணியில் ஆவி புகுந்து பழி வாங்குவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் துல்லியமான இசையும் நம்மை படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறது.
இந்த படத்தை ஷங்கர் தாயரித்து இருக்கிறார், அறிவழகன் என்ற அவரது முன்னாள் உதவி இயக்குனரை இயக்குனராக்கி இருக்கிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமகாம்சா என்பவர் கையாண்டிருக்கிறார். தமன் (பாய்ஸ் படத்தில் குண்டாக ஒருத்தர் வருவாரே அவர்தான்). அறிவழகனின் முதல் படம், வழக்கம் போல முதல் படத்தில் முத்திரை பதித்து விட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேராமலிருக்க வாழ்த்துக்கள்.
நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து இந்த படத்தை திருட்டு வி.சி.டி இல் பார்க்காமல் பாருங்கள்.


Read more...

பன்ச் பதில்கள்

'''திருமணங்கள் தோல்வி அடைவதால் திருமணங்களே தேவை இல்லை!' என்கிறாரே கமல்ஹாசன்?''
''நிறைய திரைப்படங்கள்கூட தோல்வி அடைகின்றன. அதற்காகத் திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிடலாமா?
- அதிபன், ஈரோடு. (எழுதியவர்)

இந்த வார விகடனில் நானே கேள்வி நானே பதிலில் வந்த கேள்வி-பதில்.



புத்திசாலிப் பெண்கள் காதல் வலையில் விழுவார்களா, மாட்டார்களா?
நிச்சயம் விழுவார்கள். காதல் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை. அதாவது, நடப்பதை Cerebral Cortex (பகுத்தறிவு மூளை!) வெறுமனே வேடிக்கைதான் பார்க்கும்! காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு வேதியப் பொருட்களே (Chemical Substances)! அவை ஈர்க்கப் படும்போது நிகழும் வேதிய மாற்றங்களை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்த நிலை ஏற்பட்டுவிட்டால், புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்துவிடும்!

--அதே விகடனில் மதன் கேள்வி-பதில் பகுதியில் வந்தது.


Read more...

நாமே நீதிபதியாகி அதிகாரத்திற்கு தண்டனை தரவேண்டும்

சொன்னால் மட்டுமல்ல நினைத்தாலே கோபம் வரும் விஷயங்களில் இன்றைய சூழலில் எனககு சொல்ல தோணுவது. சன் டி.வி.இன் வியாபர பேயாட்டம் தான். அவுங்க விக்கிற SUN DTH க்காக போடப்படும் விளம்பரப் படமும் சரி அவர்கள் விநியோகம் என்ற பெயரில் வெளியிடும் குப்பை படங்களுக்குமான விளம்பர படமும் சரி, நம்மை எரிச்சலின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. இதை ஏற்கனவே ஒருமுறை பேசிவிட்டோம், இருந்தாலும் இந்த முறை எனககு தோன்றியது காசு கொடுத்து பார்க்கும் எங்களைப் போன்ற வெளிநாட்டு தமிழர்களையும், இம்சிக்கும் இவர்களது தொல்லையை என்னவென்று சொல்வது. அனேகமாக இந்தியாவில் DTH தொழில் நுட்பத்தில் டி.வி. பார்ப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். இதை நெறி முறை படுத்த ஒரு சட்ட திட்டம் போட மாட்டங்காளா..? என்று ஏங்கும் பல லட்சம் பேர்களில் நானும் ஒருவன். இதுல இவுங்க பட விநியோகம் செய்ய வாங்க சொல்லி திரை உலக தயாரிப்பாளர்கள் தவமிருப்பதாய் கூட சொல்கிறார்கள். படம் பூஜை போடும் போதே இவர்கள் உத்திரவாதம் கொடுத்துவிடுவதுடன், எந்தெந்த தொழில்நுட்ப கலைஞர்களை போட வேண்டும், குறிப்பாக யாரை எல்லாம் போட கூடாது என்று இவர்கள் சொல்வதாக (கட்டளை) இந்த டி.வி.இன் நிர்வாகியான சரத் சக்சேனாவே ஒரு மேடை பேச்சில் சொல்லி இருக்கிறார். இவர்கள் எப்படி இந்த விநியோகத்துறைக்கு வந்தார்கள் தெரியுமா..? ஆட்சி கட்டிலில் இருப்பவர்களை பகைக்கும் பட்சத்தில் இவர்களுக்கு புது படங்களின் விநியோக உரிமை கிடைப்பதில் சிக்கலாகி விடுவதால், இவர்களே உள்ளே இறங்கி படத்தை வாங்கி விநியோகம் பண்ணுவதோடு தொலைக்காட்சிக்கானா உரிமையையும் வாங்கி விடுகிறார்கள் எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலை படாமல் நிம்மதியா இருக்கலாம்ல..? ஆனா நாமதான் அப்படி இருக்க முடியாது போல.

இதை பற்றி சன் டி.வி. தரப்பில் முதலில் சொல்லப்பட்டது தயாரிப்பு பிரச்சனைகளால் மாட்டிக்கொண்டு வர வழியில்லாமல் தவிக்கும் படங்களை தாங்கள் வாங்கி வெளியிட்டு அந்த தயாரிப்பளருக்கு உதவி செய்வதாக சொல்லிகொண்டது. ஆனால் அவர்கள் உண்மையிலேயே பண்ணுகிறார்கள் தெரியுமா, தங்களது தொலைக்காட்சிக்கு படம் தர மறுத்தவர்களின் படங்களை அவர்கள் எக்காரணத்தை கொண்டும் வாங்குவதில்லை. இன்னொன்று படம் என்பது வியாபர தந்திரங்களை கொண்டிருக்க வேண்டும் ஒரு குத்துப்பாட்டு, லாஜிக் இல்லாமால் வரும் சண்டை காட்சிகள், இதை எல்லாத்தையும் விட முக்கியமா சம்மந்த பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் சன் டி.வி.இன் நிகழ்ச்சிகளில் எந்த மறுப்பின்றி கலந்து கொள்ள வேண்டும். இது ஒரு விதமானா "ராவடி" தனம்தான். இதை யார் தடுத்து நிறுத்துவது..? நாம் தான் வேற யார்..? ஊழலையே அறிவியல் ரீதியான முறையில் செய்தால் அதாவது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட "ராவடி" தனம் செய்தால் அது "திறமை" என்ற போர்வை போர்த்தப்பட்டு வியாபார தந்திரம் என்று மகுடமும் சூட்டப்படும். எனவே எந்த ஆட்சியாளர் வந்தாலும் அவர்கள் அதை செய்ய தயங்க மாட்டார்கள். எனவே ரசிகர்களாகிய நாம்தான் அதை செய்ய வேண்டும்.


Read more...

பத்மஸ்ரீ தகுதி என்ன..?

இசைஞானி இளையராஜாவுக்கு இன்னும் பத்மஷ்ரீ விருது எதுவும் வழங்கப்படவில்லை. அது குறித்து தமிழக அரசு ஏதாவது செய்யுமா?
`பரிந்துரைதான் செய்ய முடியும் -அவருக்கு `இசைஞானி' பட்டம் கொடுத்ததே நான்தான்.''

இந்த வார குமுதத்தில் வந்த கலைஞரின் பேட்டியில் வந்தது தான் இந்த கேள்வி பதில். அது சரி ராஜா தினமும் காலையில் எழுந்தவுடன் கலைஞருக்கு போன் பண்ணுவாரா..? இல்லை வேண்டாம் குளிச்சு முடிச்சவுடனாவது போய் பார்ப்பாரா..? இல்லை கூட்டணி குழப்பம் வரும் போது சம்மந்தப்பட்ட கூட்டணி தலைவர்களுடனாவது பேச்சு வார்த்தையில் தன்னை ஈடு படுத்திக்கொண்டாரா..? இப்படி எந்த தகுதியும் (!?) இல்லாதவருக்கு எப்படிங்க பத்மஸ்ரீ கொடுக்க சொல்லி "வலியுறுத்த"முடியும்? வெறும் "பரிந்துரை" தான் செய்ய முடியும்.

இதை சொல்லும் போது கஷ்டமாத்தான் இருக்கு. அப்படி என்ன ராஜா கம்மியா சாதிச்சுட்டார்..? இல்லை அப்படி என்ன குறையை அவரது திறமையில் கண்டுவிட்டார்கள் இந்த "பரிந்துரை" குழு..? இதுவரை தமிழ் திரை உலகில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் திறனுக்கு ராஜாவின் திறமை கொஞ்சமும் சளைத்ததல்ல. இருந்தாலும் ....? சரிங்க இந்த பத்மஸ்ரீ விருதுக்கு தகுதிதான் என்ன ..? அதையாவது சொல்லுங்க.


Read more...

யார் சிவாஜி..?

நடிகர் விக்ரம் இயக்குநர் ஷ்ரீதர் படத்தில் கதாநாயகனாவதற்கும் முன்னரே டி.வி.தொடரிலும், சிகரெட்டுக்கெதிரான முழு நீளத் தமிழ்ப் படத்திலும் கதாநாயகனாக நடித்தபோதிலிருந்தே அவரது நடிப்பைக் கூர்மையாக கவனித்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் தன்னை சிவாஜியின் வாரிசாக வார்த்துக் கொள்ள எப்போதும் கமல்ஹாசன் முயற்சித்து வந்துள்ள போதிலும், அவரை விட அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அதிக தகுதிகள் உடையவர் விக்ரம்தான்.
ஞானி என்ற ஞானசூன்யம் தான் இப்படி சொல்லி உள்ளது. விக்ரம் தான் சிவாஜி இடத்தை பிடிப்பார் என்றால் அதுவும் சரி தான் ஏன்னா கமல் அடைந்திருக்கும் உயரத்தை இப்பொழுதுள்ள யாரும் எட்டி பிடிக்க முடியாது. ஏறகனவே சொன்ன மாதிரி கமல் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் சிறந்த இயக்குனர், இதை எல்லாம் சிவாஜியை நோக்கி சொல்ல முடியாது. எனவேதான் சொல்றோம் சிவாஜியை கடந்து தனக்கென ஒரு தனி இருக்கை போட்டுக்கொண்டவர் கமல் என்று. இதை நீங்கள் எப்படி மறுத்தாலும் இதுதான் உண்மை.
இதை எழுதி முடித்தவுடன் நண்பர் கோபி என்னிடம் ஞானி நடிப்பை பற்றிதானே சொல்லியுள்ளார் நீ ஏன் கதை திரைகதை பற்றி சொல்கிறாய் என்றார். அவர் சொன்னதிலும் ஒரு உண்மை இருந்தது எனவே அதற்காக கீழ் காணும் விளக்கம்.
அபூர்வ சகோதரர்கள் பட வெற்றி விழாவில் அதே சிவாஜி "எங்களை எல்லாம் விட சிறந்த நடிகர் கமல் என்று இந்த படத்தில் நிரூபித்து விட்டார் .." என்று சொன்னாரே (சிவாஜி பாணியிலேயே படியுங்கள்) அதை எப்படி எடுத்துக் கொள்வது. அபூர்வ சகோதரர்கள் ஒன்றும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப உதவியால் எடுக்க வில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்காக அவர் எவ்வாறெல்லாம் கஷ்ட்டப்பட்டார் என்பதை அப்படத்திலேயே கமலுடன் நடித்த மூத்த நடிகை மனோரமா சொல்ல கேட்டிருக்கிறோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தை சொல்லி அவர் தொழில்நுட்பம் வளராத அந்த காலத்திலேயே அப்படி நடித்தார் இப்படி நடித்தார் என்று வாதிடும் கூட்டத்திற்குத்தான் . கமல் தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொள்ள நாயகன் ஒன்றே போது மானது. மகாநதி,ஹேராம்,அன்பேசிவம், இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இவை அனைத்திலுமே கமல் எந்த வித கம்ப்யூட்டர் வித்தைகளை காட்டாமலேயே நடிப்பில் அசத்தி இருப்பார். நாயகனில் நடிக்கும் பொழுது கமலுக்கு 35 வயதுதானாம், அதில் அவர் நடித்திருக்கும் அளவிற்கு நண்பர் விக்ரம் நடித்த ஒரு படத்தை கூற முடியுமா, நண்பர் ஞானியால்..? மூன்றாம் பிறையில் நடிக்கும் பொழுது கமலுக்கு வயது நிச்சயம் இருபதுகளின் இறுதியில் இருந்திருக்கலாம் ஆனால் அந்த அளவிற்கு நடித்த விக்ரமின் படத்தை கூற முடியுமா..? நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், இப்பொழுது நடித்த படத்தை பற்றி பேசினால் கமலுக்கு இப்போ என்ன வயசு அவர் வயசுக்கு விக்ரம் வர்றப்ப நிச்சயம் அவர் அப்படி நடிப்பார்னு ஒரு (நொண்டி) சாக்கு சொல்லிட கூடாது பாருங்க. இதுக்கு கூட வேற ஒரு காரணம் சொல்வார்கள். ஒரு படத்துல விவேக் நேர்முகத் தேர்வில் ஒரு மேனேஜர் கேள்வி கேட்பார் "திடீர்னு இந்த பில்டிங் தீ பிடித்தால் என்ன பண்ணுவீங்கன்னு..?" விவேக் சொல்வர் "போன் பண்ணி தீ அணைப்பு துறையை கூப்பிடுவேன்", "இல்லை போன் வொர்க் ஆகலை இப்ப என்ன பண்ணுவீங்க?" விவேக் "வாசல்ல இருக்குற கூர்காவை கூப்பிடுவேன் " "கூர்காவிற்கு காது கேட்காது இப்ப என்ன பண்ணுவீங்க?" விவேக் "அதோ அந்த வாளியில் உள்ள மண்ணை அள்ளி போடுவேன் " மேனேஜர் "அதுல மண் இல்லை இப்ப என்ன பண்ணுவீங்க..?" இப்படி போய்க்கிட்டே இருக்கும் கடைசில பேசாம நீயே எரிஞ்சு போ அப்படின்னுட்டு விவேக் கொளுத்திட்டு போய்டுவார். அந்த மேனேஜர் மாதிரி எப்படி பேசினாலும் கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாங்க இந்த ஞானி மாதிரியான ஆட்கள். இங்கே ஒரு பழக்கம் இருக்கிறது எனககு அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை என்றால் அவனை பற்றி நான் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதே மாதிரிதான் இதுவும். இத்தனைக்கும் ஞானி எல்லாம் இப்பொழுது பேசுவதை என்றோ கமல் செய்ய ஆரம்பித்து விட்டார். இதை எல்லாம் விட ஒரு கொடுமை அடிக்கடி கமலை அடுத்த சிவாஜி என்று கூறுவதுதான், திருப்பியும் சொல்கிறேன் கமல் சிவாஜி செய்ததை எல்லாம் என்றோ கடந்து விட்டார். அவர் அதற்கும் மேலே, குனாவில் கமல் சொல்வதை போல் அதையும் தாண்டி உயர்ந்தது அவர் இன்று அடைந்திருக்கும் இடம்.
கமலின் நடிப்பை விக்ரம் நடிப்போடு ஒப்பிட்டு பேசியது தவறு என்றால் அவரை விட ஒரு படி மேலே என்று பேசியது அநியாயத்திலும் அநியாயம். சுதந்திர இந்தியாவில் இப்படி எழுத கூட ஒருவனுக்கு உரிமை இல்லையா என்று கேட்கலாம், உண்மையை மறைத்து எழுதுவது என்பது சுதந்திரமா என்பதை நீங்களே சுதந்திரமா சிந்தித்து முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.


Read more...

நீங்க நல்லவரா கெட்டவரா..?


''ஜெயலலிதா... கும்பகர்ணத் தூக்கத் திலேயே இருக்கிறாரா?''


''அவர் தமிழ்நாட்டு அரசியல்தானே செய்கிறார்... அவர் தமிழ்நாட்டில் எங்கே இருந்தால் என்ன? இந்த மாநிலத்தின் எல்லாப் பிரச்னைகளைப் பற்றியும் அவர் கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். தன் கட்சிக்காரர்களை விட்டுப் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவர் சென்னையில் இருந்திருந்தால் இப்போது செய்யாத வேறு எந்த விஷயத்தை செய்திருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' -

ஜெயலலிதா குறித்த கேள்விக்கு பத்திரிக்கையாளர் சோ சொன்ன பதில்தான் மேற்கண்டது. ஜெயலலிதா பார்வையில் இவர் நல்லவரா கெட்டவரா..? நமக்கு இந்த குழப்பம் வெகுநாட்களாகவே உண்டு, ஆனால் அவர் மாஞ்சு மாஞ்சு ஆதரிக்கிற ஜெயலலிதாவிற்கும் இந்த குழப்பம் இதுவரை இல்லை என்றால் இந்த பதிலை பார்த்தபிறகாவது வந்திருக்கும் என்று நம்புவோமாக.


Read more...

மறுபதிப்பும் ஒரு மறுதலிப்பும்

சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த மின்அஞ்சலில் தமிழ் திரைப்படங்கள் சிலவை ஆங்கில திரைபடங்களில் இருந்து அப்படியே சுட்டவை என்றும் அதற்காக வருத்தப்பட்டிருந்தும் எழுதியிருந்தார். அதில் பெரும்பாலானவை கமல்ஹாசனின் படங்கள். அது கமலின் திறமையை கேள்வி குரியாதாக்கியதை போல நான் உணர்ந்தேன் அதன் காரணமாக வந்த மறுதலிப்பு தான் இது. கமல் பாணியில் சொல்வதென்றால் அவருடைய உண்மையான தொழில் பக்தியை கேலி செய்தது போலிருந்தது அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான்..
சினிமா ஒரு கற்பனைக்கான களம் என்பதில் மாறுபட்ட கருத்தே கிடையாது. ஒரு கற்பனை என்பதே நிஜத்தின் நிழலாக இருப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். INSPIRATION என்பது எந்த ஒரு கற்பனைக்கும் ஆதாரமாக இருப்பதை நாம் அறிவோம். INSPIRATION இல்லாத ஒரு படைப்பை நாம் கூற முடியுமா..? தாக்கத்திற்கும், அதை அப்படியே எடுப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நாகரிகம் முதற்கொண்டு நாம் பேசும் மொழி,உடை என அனைத்துமே பாதிப்பில் நம்முள் பதிந்து போனவையே. இங்கே எதுவும் சுயம்பு கிடையாது. அப்படி இயற்கையின் படைப்புகளே இருக்கும் போது கலைக்கு எப்படி இல்லாமல் போகும். அதை எப்படி செய்திருக்கிறார்கள் என்றே நாம் பார்க்க வேண்டும்.

அந்த பட்டியலில் கமலின் "தெனாலி" படமும் இருந்தது. சமீபத்தில் அப்துல் ஹமீது அவர்களின் பேட்டி ஒன்றில் கமல் தெனாலி படம் பண்ணுவதற்கு சில தினங்கள் முன்பு அழைத்து இலங்கை தமிழை எப்படி பேசுவது என்பது குறித்த விஷயங்களை கேட்டறிந்ததாகவும், அது குறித்த ஒரு ஒலி பேழையை முதல் நாள் மாலை வாங்கி கேட்டுவிட்டு அதை அப்படியே அடுத்தநாள் படப்பிடிப்பில் பேசியதாக சொன்னார். ஒரு சாதரண கலைஞனால் அப்படியே பேச முடியுமா..?
அவர் காப்பி அடிப்பது என்று முடிவு செய்த பிறகு எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும், அதை அப்படியே தமிழாக்கம் பண்ணிவிட்டு போயி இருக்கலாமே. இன்னொரு விஷயத்தையும் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார், அந்த படத்தில் இலங்கையில் நடைபெறும் விஷயங்களையும் இடம் பெறுமாறு பார்த்து கொண்டாராம் ஏனெனில் இது காமெடி படம் எனவே எல்லா தரப்பினரும் பார்ப்பார்கள், எனவே அனைவரையும்k இந்த விஷயம் சென்றடையும் என்றும் சொன்னாராம். அதே மாதிரி "அவ்வை சண்முகி" என்ற படத்திற்கு ஒப்பனை செய்து கொள்ள மட்டுமே கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஆகுமாம் அப்பொழுதெல்லாம் அவரால் திரவ உணவை மட்டும் உட்கொள்ளமுடியுமாம், அது மட்டுமின்றி அந்த வேடமிட்டு சென்னையின் மிகவும் பரபரப்பான பாண்டி பஜாரில் ஒரு நண்பகல் வேளையில் நடந்து சென்று தன்னை யாரும் கண்டு பிடிக்கவில்லை என்றவுடன்தான் அந்த ஒப்பனையை தேர்வு செய்தாரம். ஒரு காப்பி அடிப்பவன் செய்யும் வேலையா இது ..? கமலின் எல்லா படங்களும் இப்படித்தான் எடுக்க படுவதை போல ஒரு பரவலான பேச்சும்உண்டு. இவ்வளவு சொல்பவர்கள் எல்லாரும் சொல்லத் துணியாத கருத்தை வலியுறுத்தி "ஹே ராம்" என்ற அற்புதமான படத்தை எடுத்தாரே அப்பொழுது எங்கு போனார்கள். இந்த படம் நல்ல படம்தான் ஆனால் ஓடாது அப்படின்னு சொல்லிட்டு பக்கத்து திரை அரங்கத்தில் ஓடும் "நல்ல"படம் பார்க்க போயிருந்த அவர்களுக்காக சில உதாரணங்களை சொல்ல வேண்டியிருக்கிறது .

நான் முதல் முறையாக இளையராஜாவின் இசையில் வந்த "கனவு காணும் வாழ்க்கை யாவும்..." என்ற நீங்கள் கேட்டவை திரைப்பட பாடல், பழைய ஹிந்தி பட பாடலின் மெட்டு என்பதை கேட்டு அதிர்ந்து போனேன். அந்த பாடலையும் கேட்டேன். ஆனால் அது பாலு மகேந்திராவின் கட்டாயத்தில் போடப்பட்டதுஎன்பதை பாலு மகேந்திராவின் வாயாலேயே கேட்க நேர்ந்தது, ஆனாலும் இளையராஜாவை காப்பி அடிப்பவர் பட்டியலில் நாம் சேர்ப்பதில்லை. கவுண்டமணியின் காமெடியில் நாமெல்லாம் மிகவும் ரசிக்கும் சின்னத்தம்பி காமெடி காட்சிகள் அப்படியே ஒரு பழைய படத்தில் சுருளிராஜன் பண்ணியது ஆனால் அது கவுண்டமணி சொல்லும் "டேய் அப்பா உன்னால ஒன்னு மிச்சம்டா, கரண்ட் பில்லே நான் கட்டினது இல்லைடா ..." அப்படின்னு சொல்றதை போல வருமான்னு தான் தோணும். தமிழ் திரையுலகின் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் அந்த காலத்தில் வெளிவந்த ஆங்கில நாவல்களை தழுவியாதாகவும், திரைப்படங்களை தழுவியதாகவும் இருந்ததை கமல் மேல் குற்றம் சொல்பவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் . இதை பாலச்சந்டருடன் பணிபுரிந்த ஒருவரே என்னிடம் நேரடியாக சொன்னார், அவர் அந்த ஆங்கில படங்களின்,நாவல்களின் பெயர்களையும் சொன்னார்.

கமல் சொன்னமாதிரி கம்பராமாயனமே ஒரு தழுவல் தான்.

இன்னொரு விஷயம் இங்கு ஆங்கில படத்தை பார்த்து எடுப்பவர்கள் அனைவரின் சார்பாகவும் நான் சொல்லவில்லை, உண்மையான கலைஞனை அந்த கும்பலோடு சேர்க்கும் "நாகரீகம்" தான் கண்டிக்கத்தக்கது. அதற்கான மறுப்புதான் இது.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP