யார் சிவாஜி..?

நடிகர் விக்ரம் இயக்குநர் ஷ்ரீதர் படத்தில் கதாநாயகனாவதற்கும் முன்னரே டி.வி.தொடரிலும், சிகரெட்டுக்கெதிரான முழு நீளத் தமிழ்ப் படத்திலும் கதாநாயகனாக நடித்தபோதிலிருந்தே அவரது நடிப்பைக் கூர்மையாக கவனித்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் தன்னை சிவாஜியின் வாரிசாக வார்த்துக் கொள்ள எப்போதும் கமல்ஹாசன் முயற்சித்து வந்துள்ள போதிலும், அவரை விட அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அதிக தகுதிகள் உடையவர் விக்ரம்தான்.
ஞானி என்ற ஞானசூன்யம் தான் இப்படி சொல்லி உள்ளது. விக்ரம் தான் சிவாஜி இடத்தை பிடிப்பார் என்றால் அதுவும் சரி தான் ஏன்னா கமல் அடைந்திருக்கும் உயரத்தை இப்பொழுதுள்ள யாரும் எட்டி பிடிக்க முடியாது. ஏறகனவே சொன்ன மாதிரி கமல் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் சிறந்த இயக்குனர், இதை எல்லாம் சிவாஜியை நோக்கி சொல்ல முடியாது. எனவேதான் சொல்றோம் சிவாஜியை கடந்து தனக்கென ஒரு தனி இருக்கை போட்டுக்கொண்டவர் கமல் என்று. இதை நீங்கள் எப்படி மறுத்தாலும் இதுதான் உண்மை.
இதை எழுதி முடித்தவுடன் நண்பர் கோபி என்னிடம் ஞானி நடிப்பை பற்றிதானே சொல்லியுள்ளார் நீ ஏன் கதை திரைகதை பற்றி சொல்கிறாய் என்றார். அவர் சொன்னதிலும் ஒரு உண்மை இருந்தது எனவே அதற்காக கீழ் காணும் விளக்கம்.
அபூர்வ சகோதரர்கள் பட வெற்றி விழாவில் அதே சிவாஜி "எங்களை எல்லாம் விட சிறந்த நடிகர் கமல் என்று இந்த படத்தில் நிரூபித்து விட்டார் .." என்று சொன்னாரே (சிவாஜி பாணியிலேயே படியுங்கள்) அதை எப்படி எடுத்துக் கொள்வது. அபூர்வ சகோதரர்கள் ஒன்றும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப உதவியால் எடுக்க வில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்காக அவர் எவ்வாறெல்லாம் கஷ்ட்டப்பட்டார் என்பதை அப்படத்திலேயே கமலுடன் நடித்த மூத்த நடிகை மனோரமா சொல்ல கேட்டிருக்கிறோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தை சொல்லி அவர் தொழில்நுட்பம் வளராத அந்த காலத்திலேயே அப்படி நடித்தார் இப்படி நடித்தார் என்று வாதிடும் கூட்டத்திற்குத்தான் . கமல் தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொள்ள நாயகன் ஒன்றே போது மானது. மகாநதி,ஹேராம்,அன்பேசிவம், இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இவை அனைத்திலுமே கமல் எந்த வித கம்ப்யூட்டர் வித்தைகளை காட்டாமலேயே நடிப்பில் அசத்தி இருப்பார். நாயகனில் நடிக்கும் பொழுது கமலுக்கு 35 வயதுதானாம், அதில் அவர் நடித்திருக்கும் அளவிற்கு நண்பர் விக்ரம் நடித்த ஒரு படத்தை கூற முடியுமா, நண்பர் ஞானியால்..? மூன்றாம் பிறையில் நடிக்கும் பொழுது கமலுக்கு வயது நிச்சயம் இருபதுகளின் இறுதியில் இருந்திருக்கலாம் ஆனால் அந்த அளவிற்கு நடித்த விக்ரமின் படத்தை கூற முடியுமா..? நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், இப்பொழுது நடித்த படத்தை பற்றி பேசினால் கமலுக்கு இப்போ என்ன வயசு அவர் வயசுக்கு விக்ரம் வர்றப்ப நிச்சயம் அவர் அப்படி நடிப்பார்னு ஒரு (நொண்டி) சாக்கு சொல்லிட கூடாது பாருங்க. இதுக்கு கூட வேற ஒரு காரணம் சொல்வார்கள். ஒரு படத்துல விவேக் நேர்முகத் தேர்வில் ஒரு மேனேஜர் கேள்வி கேட்பார் "திடீர்னு இந்த பில்டிங் தீ பிடித்தால் என்ன பண்ணுவீங்கன்னு..?" விவேக் சொல்வர் "போன் பண்ணி தீ அணைப்பு துறையை கூப்பிடுவேன்", "இல்லை போன் வொர்க் ஆகலை இப்ப என்ன பண்ணுவீங்க?" விவேக் "வாசல்ல இருக்குற கூர்காவை கூப்பிடுவேன் " "கூர்காவிற்கு காது கேட்காது இப்ப என்ன பண்ணுவீங்க?" விவேக் "அதோ அந்த வாளியில் உள்ள மண்ணை அள்ளி போடுவேன் " மேனேஜர் "அதுல மண் இல்லை இப்ப என்ன பண்ணுவீங்க..?" இப்படி போய்க்கிட்டே இருக்கும் கடைசில பேசாம நீயே எரிஞ்சு போ அப்படின்னுட்டு விவேக் கொளுத்திட்டு போய்டுவார். அந்த மேனேஜர் மாதிரி எப்படி பேசினாலும் கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாங்க இந்த ஞானி மாதிரியான ஆட்கள். இங்கே ஒரு பழக்கம் இருக்கிறது எனககு அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை என்றால் அவனை பற்றி நான் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதே மாதிரிதான் இதுவும். இத்தனைக்கும் ஞானி எல்லாம் இப்பொழுது பேசுவதை என்றோ கமல் செய்ய ஆரம்பித்து விட்டார். இதை எல்லாம் விட ஒரு கொடுமை அடிக்கடி கமலை அடுத்த சிவாஜி என்று கூறுவதுதான், திருப்பியும் சொல்கிறேன் கமல் சிவாஜி செய்ததை எல்லாம் என்றோ கடந்து விட்டார். அவர் அதற்கும் மேலே, குனாவில் கமல் சொல்வதை போல் அதையும் தாண்டி உயர்ந்தது அவர் இன்று அடைந்திருக்கும் இடம்.
கமலின் நடிப்பை விக்ரம் நடிப்போடு ஒப்பிட்டு பேசியது தவறு என்றால் அவரை விட ஒரு படி மேலே என்று பேசியது அநியாயத்திலும் அநியாயம். சுதந்திர இந்தியாவில் இப்படி எழுத கூட ஒருவனுக்கு உரிமை இல்லையா என்று கேட்கலாம், உண்மையை மறைத்து எழுதுவது என்பது சுதந்திரமா என்பதை நீங்களே சுதந்திரமா சிந்தித்து முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP