நாமே நீதிபதியாகி அதிகாரத்திற்கு தண்டனை தரவேண்டும்

சொன்னால் மட்டுமல்ல நினைத்தாலே கோபம் வரும் விஷயங்களில் இன்றைய சூழலில் எனககு சொல்ல தோணுவது. சன் டி.வி.இன் வியாபர பேயாட்டம் தான். அவுங்க விக்கிற SUN DTH க்காக போடப்படும் விளம்பரப் படமும் சரி அவர்கள் விநியோகம் என்ற பெயரில் வெளியிடும் குப்பை படங்களுக்குமான விளம்பர படமும் சரி, நம்மை எரிச்சலின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. இதை ஏற்கனவே ஒருமுறை பேசிவிட்டோம், இருந்தாலும் இந்த முறை எனககு தோன்றியது காசு கொடுத்து பார்க்கும் எங்களைப் போன்ற வெளிநாட்டு தமிழர்களையும், இம்சிக்கும் இவர்களது தொல்லையை என்னவென்று சொல்வது. அனேகமாக இந்தியாவில் DTH தொழில் நுட்பத்தில் டி.வி. பார்ப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். இதை நெறி முறை படுத்த ஒரு சட்ட திட்டம் போட மாட்டங்காளா..? என்று ஏங்கும் பல லட்சம் பேர்களில் நானும் ஒருவன். இதுல இவுங்க பட விநியோகம் செய்ய வாங்க சொல்லி திரை உலக தயாரிப்பாளர்கள் தவமிருப்பதாய் கூட சொல்கிறார்கள். படம் பூஜை போடும் போதே இவர்கள் உத்திரவாதம் கொடுத்துவிடுவதுடன், எந்தெந்த தொழில்நுட்ப கலைஞர்களை போட வேண்டும், குறிப்பாக யாரை எல்லாம் போட கூடாது என்று இவர்கள் சொல்வதாக (கட்டளை) இந்த டி.வி.இன் நிர்வாகியான சரத் சக்சேனாவே ஒரு மேடை பேச்சில் சொல்லி இருக்கிறார். இவர்கள் எப்படி இந்த விநியோகத்துறைக்கு வந்தார்கள் தெரியுமா..? ஆட்சி கட்டிலில் இருப்பவர்களை பகைக்கும் பட்சத்தில் இவர்களுக்கு புது படங்களின் விநியோக உரிமை கிடைப்பதில் சிக்கலாகி விடுவதால், இவர்களே உள்ளே இறங்கி படத்தை வாங்கி விநியோகம் பண்ணுவதோடு தொலைக்காட்சிக்கானா உரிமையையும் வாங்கி விடுகிறார்கள் எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலை படாமல் நிம்மதியா இருக்கலாம்ல..? ஆனா நாமதான் அப்படி இருக்க முடியாது போல.

இதை பற்றி சன் டி.வி. தரப்பில் முதலில் சொல்லப்பட்டது தயாரிப்பு பிரச்சனைகளால் மாட்டிக்கொண்டு வர வழியில்லாமல் தவிக்கும் படங்களை தாங்கள் வாங்கி வெளியிட்டு அந்த தயாரிப்பளருக்கு உதவி செய்வதாக சொல்லிகொண்டது. ஆனால் அவர்கள் உண்மையிலேயே பண்ணுகிறார்கள் தெரியுமா, தங்களது தொலைக்காட்சிக்கு படம் தர மறுத்தவர்களின் படங்களை அவர்கள் எக்காரணத்தை கொண்டும் வாங்குவதில்லை. இன்னொன்று படம் என்பது வியாபர தந்திரங்களை கொண்டிருக்க வேண்டும் ஒரு குத்துப்பாட்டு, லாஜிக் இல்லாமால் வரும் சண்டை காட்சிகள், இதை எல்லாத்தையும் விட முக்கியமா சம்மந்த பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் சன் டி.வி.இன் நிகழ்ச்சிகளில் எந்த மறுப்பின்றி கலந்து கொள்ள வேண்டும். இது ஒரு விதமானா "ராவடி" தனம்தான். இதை யார் தடுத்து நிறுத்துவது..? நாம் தான் வேற யார்..? ஊழலையே அறிவியல் ரீதியான முறையில் செய்தால் அதாவது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட "ராவடி" தனம் செய்தால் அது "திறமை" என்ற போர்வை போர்த்தப்பட்டு வியாபார தந்திரம் என்று மகுடமும் சூட்டப்படும். எனவே எந்த ஆட்சியாளர் வந்தாலும் அவர்கள் அதை செய்ய தயங்க மாட்டார்கள். எனவே ரசிகர்களாகிய நாம்தான் அதை செய்ய வேண்டும்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP