தமிழ் போதும் இந்தியா வேண்டாம் கோஷம்.

"தமிழ் போதும் இந்தியா வேண்டாம்" என்ற கோஷம் வலையில் மிக பிரசித்தம். நான் சொன்னது இன்டர்நெட் வலையை நீங்க பாட்டுக்கும் பழக்க தோஷத்துல மீனவர் வலைனு நினைச்சுக்காதீங்க. ஆனா அதிலிருந்து ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு வலைப்பதிவில் பார்த்தேன் "இந்தியா ஆசியோடு தமிழர்களை கொல்லும் சிங்கள அரசு" - என்ற தலைப்பை பார்த்தவுடன் எனககு ஒன்று தோன்றியது. அப்படி தமிழர்களை கொல்ல ஏன் இந்திய அரசு முயல வேண்டும்..? அப்படின்னு கேட்டா இப்படி சொல்லலாம் "இந்த தி.மு.க தொந்தரவு தாங்க முடியலை, அப்படி அவுங்களை அடக்கனும்ணா என்ன பண்ணலாம், அவுங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களை கொடுமை படுத்தலாம். சரி அதை நாமலே செய்தால் நல்லா இருக்காது. அதுனால சிங்களவங்ககிட்ட சொல்லி பண்ண சொல்லலாம் (!!!???)" அப்படின்னு இந்திய அரசாங்கம் அதாவது காங்கிரஸ் கட்சி நினைத்திருக்கலாம். இல்லன்னா "என் புருஷனை கொன்னது தமிழ் பேசும் விடுதலைப்புலிகள்தான் அதனால் தமிழ் பேசும் தமிழர்களை கொல்லலாம் " என்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நினைத்திருக்கலாம்.
என்னங்க ரொம்ப குழப்பமா இருக்கா, எனக்கும் இப்படிதாங்க இருக்குது. தமிழர்களுக்கு சரியான முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது ஓரளவு உண்மைதான் அதற்காக தமிழர்களை (தமிழ்நாட்டில் வாழும்) கொன்று (அதிலும் குறிப்பாக மீனவர்களை) காங்கிரஸ், வாழும் என்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அப்படியே காங்கிரஸ் செய்தாலும் அதற்காக காங்கிரசை தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டுமே தவிர, இந்தியாவை துண்டாட நினைப்பது அபத்தத்திலும் அபத்தம். தமிழர்களுக்கான உரிமையை ஜனநாயக ரீதியிலேயே போராடி பெற்று விடும் அளவிற்கு தான் நிலைமை உள்ளது. இதை ஏன் சில துண்டாடும் சக்திகள் அதிக அளவில் ஊதி பெரிசாக்கி விடுகின்றன என்று தெரியவில்லை. எனககு தெரிந்த ஒருவர் தனது கணவனை பறிகொடுத்த சோகத்தில், தெருவில் போகும் தன் கணவர் வயதொத்தவர்களை எல்லாம் காட்டி "இவரெல்லாம் உயிரோடிருக்கிறார் என் கணவர் இறந்து விட்டாரே " என்று வருத்தப்படுவார்(!!!??). இத்தனைக்கும் இவரது கணவர் எழுபது வயதுக்கு மேல் கடந்து நோய்வாய் பட்டுதான் இறந்தார். இதிலிருக்கும் நியாயம் தான் இப்பொழுது நீலி கண்ணீர் வடிப்பவர்களின் பக்கம் இருக்கும் நியாயமும்.
இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களிலும் இந்த துண்டாடும் சக்திகள் தங்களது நாக்கினை நுழைக்க தவறுவதில்லை. குறிப்பாக சீன அரசின் ஊடுருவலை பற்றி விவாதிக்கும் பொது கூட இந்தியாவிற்கு இது தேவை தான், இதை விட கொடுமையான விஷயங்கள் நடந்தால் கூட நான் சந்தோஷ படுவேன் , என்ற தொனியில் கூட பதிவுகள் வலையில் இடப்படுகின்றன. உஷாராக இருக்க வேண்டிய நேரம்.
மத்திய அரசு தாமதமாக செயல் படுகிறது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எல்லாம் காரணம் வைத்து இவ்வாறு பேசுவது, சரியான முறையாக தெரியவில்லை. துண்டாடுவது என்பது மற்றவர்களுக்கு எப்படியோ அதற்கு பலியாகி விடாமல் இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP