சோக்கா சொன்னபா..

சின்ன வீட்டை 'துணை மனைவி' என்று கூறலாமா?
அப்ப 'பெரிய வீடு' துணைக்கு வராத மனைவியா? 'சின்ன வீட்'டிடம் போய், 'என் அருமைத் துணைமனைவியே!' என்று அழைத்துப் பாருங்கள். செம டோஸ் கிடைக்கும் (நான் உங்களைச்சொல்லவில்லை)!
(மதன் கேள்வி-பதிலில் இந்த வாரம் வந்தது)

நடிகை ஸ்ரீவித்யா நடிகர் நாகேஷை பற்றி முன்வைத்த கேள்விகளும் அதற்கு நாகேஷின் பதில்களும் (1976-ல் வந்தது).
ஸ்ரீவித்யா:நாகேஷ் நன்றி கெட்டவர் என்று இவருடைய நண்பர் களே சொல்லக் கேள்விப்பட் டிருக்கிறேன். அவர்கள் அப்படிச் சொல்லுமாறு இவர் ஏன் நடந்து கொள்கிறார்?
நாகேஷ்: என்னை நன்றி இல்லாதவன் என்று சில நண்பர்கள் கூறுகி றார்களாம். நன்றியை எவ்வளவு செலுத்தினாலும், மனித ஜென் மத்துக்கு அது எடுபடவே படாது! நன்றிக்குப் பெயர் போனது நாய்தானே! நான், மனிதனாகவே இருக்க விரும்பு கிறேன்.

''புரியாத புதிர்..?''
''விஜய், ராகுல் காந்தியைச் சந்தித்தைப்பற்றி பேட்டியில் கூறுகிறார், 'நான் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது சினிமா பற்றித்தான் பேசினேன்' என்று. ராகுல், விஜய்யின் 'வில்லு' படத்தைப்பற்றி பேசினார் என்பதைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை!''
- பா.ரங்கன், சென்னை-16. (நானே கேள்வி-நானே பதில் பகுதியில் வந்தது)


திருநாவுக்கரசரிடம்...
''நீங்கள் காங்கிரஸில் சேரப் போவதாகக் கூறுகிறார்களே?''
''நான் டெல்லி செல்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்!'' (இதுக்கு பேசாம ஆமாம் சேரப் போறேண்ணே சொல்லி இருக்கலாம்)


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP