முதலாளித்துவம் தோற்றுப்போன தத்துவம்...?!


மைக்கேல் மூர் (MICHAEL MOORE) ஒரு மிக சிறந்த ஆவண பட இயக்குனர்,தயாரிப்பாளர். இவரது செப்டம்பர்-11, பற்றிய திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், நிறைய விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறது. இவர் சென்ற வாரம் ஒரு ஆவண படத்தை வெளியிட்டிருக்கிறார் படத்தின் பெயர் CAPITALISM - A LOVE STORY. இந்த படத்தை பற்றியும் அதில் தான் சொல்லியுள்ள கருத்துக்களை பற்றியும் ஒரு விவாதம் CNN-LARRY KING LIVE என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது, அதை பற்றிதான் இங்கே சொல்ல போகிறோம். அதற்கு முன் முதலாளித்துவம் எப்படி, ஏன் தோற்றுபோனது என்பதை பார்ப்போம்.

இந்த படம் நம்ம நாட்டிற்கும் தேவையான ஒன்றாக நான் நினைக்கிறேன், ஏனெனில் அமெரிக்காவின் சுவடுகளை ஒற்றி நமது பொருளாதாரம நடை போட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட நாம் அதை முழுவதுமாக அடைவதற்குள் தடுத்துவிட வேண்டும். சின்ன வயதில் என்னுடைய உறவினர் ஒருவர் சொல்வார் "அழ அழ சொல்பவர்கள் நல்லா இருக்க சொல்றவங்க, சிரிக்க சிரிக்க சொல்றவங்க, நீ கெட்டுபோக சொல்பவர்கள்" அப்படின்னு. கிட்டத்தட்ட இந்த முதலாளித்துவ கொள்கையில் அமைந்ததுதான் அமெரிக்காவின் பொருளாதாரம். எப்படி..? அள்ளி அள்ளி கொடுத்தது சம்பளத்தை எப்படி ...? ரொம்ப சுலபம், மகாநதி படத்தில் வி.எம்.சி. ஹனீபா சொல்வார், "பெரிய அளவு முதலீடு செய்யனும்னா ஏன் கை காசை போடணும், OPM (Other People Money) இருக்கே " அப்படின்னு, அதாவது Finance Company நடத்தி அதில் வரும் காசை மற்ற தொழிலில் முதலீடு பண்ணுவது. அதேமாதிரியான விஷயத்தை ஒரு நாடு கையிலெடுத்தால் அதுதான் இந்த முதலாளித்துவம் (CAPITALISM) . நீங்க நினைக்கிறது முற்றிலும் சரி கமலுக்கு அந்த படத்தில் ஏற்படும் நிலை தான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படீன்னா யாரு வி.எம்.சி. ஹனீபா ..? வேற யாரு நம்ப பணக்கார முதலாளிகள் தான்.

எப்படி இந்த முதலாளிகள் கைகளில் அரசாங்கம் சிக்கிகொண்டது அப்படின்னு நீங்க கேட்கலாம், அரசாங்கங்களை வழி நடத்துவதில் பணக்காரர்கள் தங்களது பங்கை செவ்வனே (!!) ஆற்றி கொண்டுள்ளார்கள். அதை நாம் நன்கறிவோம், சரி இது எப்படி சாத்தியம், தனது நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தையில் வெளியிட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ அவை ஒரு ஐந்தாறு பக்கங்களில் மிகவும் நுண்ணிய எழுத்துக்களில் கொடுத்திருப்பார்கள், (நியாயமா செயல்படுபவர்கள் அல்லவா), நடுத்தர மக்களே நீங்களும் பணக்காரர் ஆகா வேண்டுமா எங்க நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ஆகுங்கள், ஆமா நீங்களும் முதலாளிதான். எல்லாருமே முதலாளீ தான் அப்படீன்னா யாரு வேலை பார்க்கிறது ..? முதலாளியாவும் தொழிலாளியாவும் யார் வேலை செய்கிறார்களோ அவுங்கதான். யார் அவுங்க வேற யார் நம்ம நடுத்தர வர்க்கம்தான். சரி இப்படி எல்லா நடுத்தர மக்களின் பணத்தை எல்லாம் பங்கு வர்த்தகம்கிற பேர்ல சுருட்டியாச்சு அடுத்து என்ன ஓட்டம் தானே, அது தான் கொஞ்சம் வித்தியாசமா நிறுவனத்தை "திவால்" ஆக்கிவிடுவது. அப்படி பண்ணினா என்ன பாதிப்பு ஒன்னும் இல்லை இதுவரை எந்த பேர்ல இந்த தொழில் பண்ணாங்களோ அது இனிமேல் பண்ண முடியாது. பணம் தான் கைக்கு வந்தாச்சே இனிமே தொழில் பண்ணா என்ன பண்ணாட்டி என்ன..? அப்படியே தேவை பட்டால் சொந்தங்களின் வழி பண்ணி கொள்ளவேண்டியதுதான். இப்ப பொருளாதாரம் போற போக்கு அப்படிதான். பங்கு சந்தையை ஒரு பங்காக வைக்காமல் மொத்தமும் அதுதான்னு நம்புவதுதான் முதாலாளித்துவம். இப்ப புரிஞ்சுதா ஏன் இது இந்தியாவிற்கும் பொருந்தும்னு நாம சொல்றதுன்னு ...?

சரி மூர் நேர்காணலை பற்றி பார்ப்போம்...

கேள்வி: நீங்கள் CAPITALISM ஒரு தோற்றுப்போன விஷயமா நினைக்கிறீங்களா..?

பதில்: நிச்சயமா... 2008 ஆம் ஆண்டு தெளிவா நமக்கு இதை தானே சொல்கிறது. இங்கே என்ன நடந்தது நம்முடைய பணத்தை போட்டு தொழில் செய்தவர்கள் தங்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவுடன் நம்முடைய வரி பணத்தை bail-out என்ற முறையில் அரசாங்கத்திடம் பெற்றார்களே..? அது எப்படி நியாயம் ஆகும் ..? ஒரு நிறுவனம் தோற்பது அதை வழி நடத்துபவர்களின் கைகளில் உள்ளது. அதற்கு எப்படி அரசாங்கம் பொறுப்பேற்று பணம் கொடுக்க முடியும்...?

சொல்லப்போனால் ஒரு சூதாட்டம் நடந்திருக்கிறது, அதில் வெற்றி பெற்றவர் பணத்தை கொண்டு போயி விட்டார். இவர்கள் என்ன செய்தார்கள் பந்தயத்தின் மேல் இன்னொரு பந்தயம் கட்டினார்கள், அது காணாமல் போனது. ஒரு காப்பீடு அதற்கு இன்னொரு காப்பீடு இப்படி தானே மொத்த பணமும் காணாமல் போனது.

கேள்வி: இந்த படம் எடுக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலாகவில்லை, ஆனால் எடுக்க ஆரம்பித்தவுடன் சிலவை நடந்தன அவை இந்த படத்திற்கு எப்படி உதவியாக இருந்தது. ..?

பதில்: உதவி என்றால் .. நான் சொல்ல வந்த கருத்தை மேலும் வலுவுடன் சொல்வதற்கு உதவி கரமாக இருந்தது. நம்முடைய பொருளாதாரத்தில் கொஞ்சம் கூட மக்களுக்கான வசதிகள் இல்லை, இது சாதாரண மக்களுக்கான பொருளாதாரம் கிடையாது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் கொள்ளவும் தான் இந்த பொருளாதாரம் உதவுகிறது. பங்கு சந்தையில் உள்ளவர்கள் தொழிலாளர்களை பற்றி கவலை படுவதில்லை.

கேள்வி: அப்படீன்னா முதலீட்டாளர்கள் தான் முக்கியம் தொழிலாளர்கள் இல்லை என பங்கு சந்தையில் ஈடு பட்டிருப்பவர்கள் நினைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா..?

பதில்: நிச்சயமா..! இப்ப பாருங்க வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே போகிறது, ஆனால் பங்கு சந்தையின் புள்ளிகள் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. எப்படி..? தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டு அதன் மூலம் மிச்சமாகும் பணத்தை கொண்டே இந்த லாபம் காட்டப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த கால கட்டத்தில் நிறைய லாபம் ஈட்டும் போக்கை கடை பிடிப்பதாலேயே இது நிகழ்கிறது. சொல்லப்போனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிக அதிக அளவிற்கு சீரழிந்துள்ளது.

கேள்வி: வீடுகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் அந்த வீட்டின் முதலாளி தவணைகளை ஒழுங்காக செலுத்தாத பட்சத்தில் பாதிக்க படப்போவது அந்த குறிப்பிட்ட வங்கிகள் தானே, அவர்கள் அந்த வீட்டை ஜப்தி செய்து மட்டும் என்ன அடைந்து விட போகிறார்கள். ..?

பதில்: நீங்கள் சொல்வது சரி தான் அதனால் அவர்களுக்கு ஒன்றும் பெரிய லாபம் இல்லை தான். இதில் இன்னொரு விஷயம் வங்கிகள் சொல்கின்றன நிறைய மக்கள் பணம் கட்டாததால் ஜப்தி செய்கிறோம், பணம் திரும்ப வராததால் எங்களுக்கு நஷ்டம் அப்படின்னு சொல்றாங்க. அது தவறு நான் ஆய்வு செய்த விதத்தில் அப்படி நடந்ததை விட வங்கிகளின் தவறான முதலீடுகளே அதன் சரிவிற்கு காரணம். FBI-தான் இதை நன்கு விசாரித்து உண்மைகளை கொண்டுவரவேண்டும்.

கேள்வி: FBI விசாரிக்கனும்னா அங்கே (வங்கிகளில்) குற்றம் நடந்திருககும்னு நீங்க நம்புறீங்களா...?

பதில்: நிச்சயமா..மக்களின் பணம் தவறான முறையில் முதலீடு செய்யப்பட்டு காணாமல் போயிருக்கிறது. எங்கே போனது அந்த பணம்..? எப்படி போனது...? இது ஒரு குற்றம்தானே அதை விசாரித்து மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசு.

(இது அந்த பேட்டியின் சாரம்சமே. இதில் சொல்லி இருக்கும் விஷயங்கள் வரிக்கு வரி அப்படியே பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அதே நேரம் அவர் சொல்லிய கருத்துக்களில் இருந்து மாறுபடவும் இல்லை என்பதை உறுதியுடன் சொல்லி கொள்கிறேன்.)


4 comments:

tamilmullai September 29, 2009 at 3:07 PM  

சரியான கருத்துக்கள், தொடருட்டும் உங்கள் பனி....

APSARAVANAN September 29, 2009 at 8:30 PM  

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மு. மயூரன் September 29, 2009 at 9:14 PM  

இந்தப்படம் வந்த தகவலையே உங்கள் பதிவின் மூலம் தான் அறிந்துகொண்டேன் நன்றி. பார்த்துவிட்டு உரையாடுகிறேன்.

APSARAVANAN September 30, 2009 at 3:59 AM  

நன்றி மயூரான் அவர்களே.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP