பிடித்த கேள்விகள் - பிடித்த பதில்கள்

 எந்த பத்திரிகை ஆனாலும் அதில் வரும் கேள்வி- பதில் பகுதியை படிக்க தவறுவதில்லை அப்படி படித்த கேள்வி-பதில்களில் என்னை கவர்ந்த வற்றை இங்கே தந்துள்ளேன். இவை உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையோடு..

லஞ்சம், மாமூல்... என்னங்க வித்தியாசம்?
சம்பளம் மாதிரி, குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து ஒழுக்கமாக(!) லஞ்சம் கொடுத்து வந்தால் - அதுதான் மாமூல்!

கம்ப ராமாயணம் எழுதிய கம்பரும், அமராவதியின் காதலனான அம்பிகாபதியின் தகப்பனார் கம்பரும் ஒரே நபர்தானா?

அம்பிகாபதி-அமராவதி கதையே ஒரு கதை தான்! கவிச்சக்ரவர்த்தி கம்பர் இருந்தது உண்மை; அவர் ராமாயணம் எழுதியது உண்மை. அவ்வளவே!
(மதன் கேள்வி - பதில்)

கேள்வி : தமிழக அரசு, கலைஞர் சிறந்த கதை வசனகர்த்தா என விருது தருகிறது. அண்ணா விருதை தி.மு.க. கலைஞருக்கு அளிக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?
பதில் : இவற்றை மறுக்கும் பெருந்தன்மை கலைஞருக்கு வேண்டும் என்று தெரிகிறது!
(கல்கண்டு கேள்வி-பதில்)

ஊழல் எதிர்ப்பாளரான சோ, ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?


சோவின் பிரச்சனை ஊழல் அல்ல, உள்ளத்தில் ஊறியிருக்கும் உணர்வு..

சமீபத்தில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தில் நடிகர் விவேக் பத்திரிகை யாளர்களை ஆபாசமாய்த் திட்டிப் பேசினாராமே..?


விவேக் பாவம். சினிமாவில் சீன் காட்டி பார்த்தார், வடிவேலு வின் அமர்க்களத்துக்கு முன் காணாமல் போய்விட்டார். இப் போது மேடையில் சீன் காட்டுகிறார் பரிதாபப் படுவோம்.
(அரசு கேள்வி-பதில்)


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP