கமெண்ட் கற்கண்டுகள் -- 5


எந்திரனுக்கு பிறகு நடிப்புக்கு ரஜினி குட்-பை
>> ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க. அடுத்த படத்துக்கு கதை தயார் ஆகிற வரையிலும் இதுதான் கதை.

வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது.
>>எப்படி நாங்களெல்லாம் ஆடி காத்துலயே அவுள் சாபிட்ரவங்க. எங்க கிட்டயேவா ..?

சி.பி.ஐ ரெய்ட் வழக்கமான ஒன்றுதான். (மத்திய அமைச்சர் ஆ.ராசா)
>>காங்கிரசுக்கு எங்க மீது கோபம் வரும் பொழுது அவுங்க எங்க ஆபிஸ்ல ரெய்ட் விடுவதும். எங்களுக்கு அவுங்க மீது கோபம் வர்றப்ப தமிழ்நாட்டுல போராட்டம் பண்ணுவதும் வழக்கமான ஒண்ணுதான். இதை நாங்க ஒரு விளையாட்டவே வச்சிருக்கோம். மத்தபடி ஒண்ணுமில்லை.

பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கப் போகிறோம் என்று அழைப்பு இல்லாததால் தான் அந்தக் குழுவில் இடம் பெறவில்லை. (திருமாவளவன்)
>> ஐ ஆச தோச அப்பள வடை. நீங்க சந்திப்பின் போது பிரதமரையும் சோனியாவையும் ஆதரிப்பீங்க. வெளில வந்து அவுங்க செய்யுறது எல்லாம் சரியில்லைனு சொல்லிவீங்க. இது கூட எங்களுக்கு தெரியாதா..?

என் மனைவி தமிழச்சி, எனவே நான் பாதி தமிழன், நான் தமிழர்களுக்கு துரோகம் செய்வேனா..? (மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ்)
>>பாஸ் நீங்க ரொம்ப லேட். இங்க முழு தமிழர்களே தமிழர்களுக்கு துரோகம் செய்வதை மக்கள் உணர ஆராம்பிச்சுட்டாங்க. இப்ப வந்து...போயி பிள்ளைங்களை படிக்கவைங்க.

நம்ப தமிழர்களுக்கு ரசனை குறைவு. (தங்கர்பச்சான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில்).
>>கரீட்டா சொன்னீங்க. அதுல (தமிழர்) நீங்களும் ஒருத்தருங்கிரத மறந்துராதீங்க.

முல்லை பெரியாறு அணை விஷயத்தில் மத்திய அரசு கருணாநிதியை ஏமாற்றி விட்டது. எனவே மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும். (ஜெயலலிதா)
>>ஹி ஹி ஸ்கூல் போற குழந்தைக்கு கூட தெரியும் நீங்க ஏன் இதை சொல்றீங்கன்னு. ஆமாம் உங்களுக்கு இவ்வளவு மொக்கையா அறிக்கை எழுதி தரவங்க யாருங்க...?




    


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP