ஒரு பயணமும் ஒட்டு மொத்த தோல்வியும்.

அனைத்து எம்.பி-க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள்' எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், 'நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம்' என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா?' எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.

சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, 'இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...' என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், 'நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். 'ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே' என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, 'அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.''


--  மேலே நீங்கள் கண்டது சமீபத்திய இலங்கை விஜயம் குறித்த திருமாவளவன் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.  இவர் ஏன் அங்கே போனார்..? ஏன் ராஜபச்சேவை சந்தித்தார்...? அப்படிங்கிற கேள்வி எல்லாம் ஒரு பக்கம்  இருக்கட்டும்.  ஆனால் மேற்கண்ட பதிலிலிருந்து ஒரு விஷயம் விளங்குது,  ராஜபக்ஷே நடந்துகொண்டது மிக மிக மிக (இப்படி எத்தனை மிக வேணுமினாலும் போட்டுக்குங்க) கேவலமான ஒரு செயல். ஒரு அரசு முறை பயணத்தில் வந்தவரிடம் ஒரு நாட்டின் அதிபர் பேசும் பேச்சா இது..? என்ன ஆச்சர்யம் என்றால்  இது பற்றி யாரும் மிகவும் உரத்து குரல் கொடுக்காதது. சரிங்க விடுதலை புலிகளை ஒடுக்கியது உங்களுக்கு பெருமிதம் தருவதாக இருக்கலாம்..ஆனால் அதுக்காக எப்படி நீங்கள் வேறொரு நாட்டு அரசு பிரதிநிதியை இவ்வாறு பேசலாம்...?  கேட்டால் அரசு பிரதிநிதியாய் அவர்கள் செல்லவில்லை அந்ததந்த கட்சிகளின் பிரதிநிதிகளாகவே சென்றார்கள் என்றொரு குரல் கேட்கலாம், சென்றவர்கள் அனைவருமே இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள். இதுவே அவர்களை அரசு பிரதிநிதிகளாக பார்க்க உதவுமே.சரிங்க அதுவும் வேணாம் குறைந்த பட்சம் ஒரு விருந்தாளியிடம் இப்படியா விஷம் கக்குவது..? கொஞ்சம் கூட ஒரு சபை நாகரீகம் அன்றி பேசிய ராஜபக்சேயை அங்கேயே  யாரும் கண்டிக்காமல் நின்றதன் மூலம்  , அவர்கள் நம் நாட்டு மானத்தை எப்படி வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தவிதத்தில் இந்த பயணம் வெற்றியோ ஆனால் இந்த ஒரு விஷயத்தில் ஒட்டுமொத்த தோல்வியையும் தனதாக்கி கொண்டது இந்த பயணம்.


3 comments:

ttpian October 17, 2009 at 9:36 PM  

Thiruma deserves this treatment:for having interested in MP seat, he need to receive INSULT of this kind!

ரோஸ்விக் October 18, 2009 at 5:39 AM  

மிக மிக கேவலமானவன் என்பதை ராஜபக்ஷே நிரூபித்துக்கொண்டிருக்கிறான்... அவனைவிட கேவலமாக நமது அரசியல் வியாதிகள் செயல்படுவதுதான் வருத்தமாக இருக்கிறது....

http://thisaikaati.blogspot.com

Anonymous,  October 19, 2009 at 6:03 AM  

அதுதான், சாகடிக்க வேண்டியவர்களை எல்லாம் சாகடிச்சிடிங இல்ல. அப்புறம் ஏன் அங்க போனிங்க?

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP