நிசமாவே நல்லவங்களா இவிங்க..?


"முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்" -- என்ற பழமொழி எந்த விதத்தில் உண்மையோ இல்லையோ தெரியாது, ஆனால் தீவிரவாதம் விஷயத்தில் உண்மையாக நிறைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி போனதை சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கே நடக்கும் அனைத்திற்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இடம் மாறிய தாலிபான்களே. அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "பாகிஸ்தானை கைபற்றியவுடன் எங்கள் முதல் இலக்கு இந்தியாதான்." என்பதாகும். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியாவில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் இயக்கம் "இந்தியாவை தாலிபான்கள் தாக்கினால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்" என்று தெரிவித்திருந்தார்கள். ஒரு வேளை  வடிவேலு காமெடி-ல சொல்ற மாதிரி "இந்தியா எங்கள் சொத்து அதை கொள்ளையடிக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு". என்று சொல்லாமல் சொல்கின்றனரா..?  தெரியவில்லை. ஆனால் நமக்கோ  "எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே" அப்படின்னு கேட்கதான்  தோணுது.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP