வாழ்க்கை படம் -- முள்ளும் மலரும்

சில திரை படங்கள் வெறும் படங்களாக மட்டுமின்றி மனித வாழ்க்கைக்கான பாடங்களாகவும் இருப்பதுண்டு. அதை விடவும் மேலே போய் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே, அதாவது அதுவும் ஒரு வாழ்க்கையாகவே ஆகி போவதுமுண்டு. அப்படி வாழ்க்கையான படங்களில் முள்ளும் மலரும் முதன்மையானது.
இந்த படத்தை பற்றி நான் இதுவரை கேட்டிராத , படித்திராத சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
--- கதாநாயகன் காளி சிவப்பு சிந்தனை கொண்டவர் என்பதை காண்பிப்பதற்காக காட்டப்படும் ஆரம்ப காட்சியில் சிவப்பு வண்ணம் கொண்ட காரை காண்பிப்பது.
--- படத்தின் முக்கிய கதா பாத்திரங்களான காளியும் அவரது தங்கை வள்ளியையும் காண்பிக்கும் போதுவரும் பின்னணி இசை, அவர்களுக்கு இடையே அவ்வப்பொழுது நிகழும் பாச பரிவர்த்தனைகளின் போதும் ஒலிப்பது எவ்வளவோ விஷயங்களை சொல்லி விடும் அதிசயம், பின்னணி இசையின் முக்கியத்துவத்தை தமிழ் திரையுலகம் உணர ஆரம்பித்த பொழுது என்பதுகளின் ஆரம்பம் தான் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக காளி தன்னுடைய நண்பர்களிடம் தான் தனது தங்கையை சரி வர கவனிக்காதவன் என்று தன்னைப் பற்றி தனது மேலதிகாரியிடம் போட்டுக் கொடுத்ததால்தான் தன்னுடன் வேலை பார்த்தவரை அடிக்க நேர்ந்தது என்பதை விவரிக்கும் போது அதை மறைந்திருந்து கேட்கும் தங்கை முகத்தை க்ளோசப்பில் காண்பிக்கும் பொழுது எழுப்பப்படும் பின்னணி அவளும் அதை புரிந்து கொண்டுவிட்டால் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
--- காளி தனது தங்கையை தனது மேலதிகாரிக்கு கட்டித்தர சம்மதிக்கும் அந்த வேளையிலும் மற்ற படங்களில் இருப்பதைப் போல் அல்லாமால் "எனக்கு உங்களை பிடிக்காது ஆனால் என் தங்கைக்கு உங்களை பிடித்திருப்பதால் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்.." என்று சொல்வது, தங்கைக்காக சம்மதித்திருந்தாலும் அவரைப்பற்றிய தனது எண்ணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை சொல்வது, அது சாதாரண திரை கதா பாத்திரமல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது.
--- இவ்வளவு அருமையாக நடிக்கக் கூடிய அந்த ரஜினி எப்பொழுது திரும்பவும் இந்த தமிழ் திரையுலகிற்கு கிடைப்பார்..?
--- கிட்டத்தட்ட 50 முறையாவது இந்த படத்தை முழுதாக பார்த்திருக்கிறேன், இத்தனை முறையில் ஒரு முறை கூட சலிப்பே ஏற்படாது இருப்பது யாரால் .. சிறந்த முறையில் இயக்கிய மகேந்திரனலா...? மிக சிறந்த முறையில் நடித்த ரஜினி,ஷோபா மற்றும் சரத்பாபுவினாலா ..? மிக சிறந்த ஒளிப்பதிவை தந்த பாலுமகேந்திராவினாலா ..? மிக சிறந்த பாடல்கள் மட்டுமில்லாது மிக சிறந்த இசை வழங்கிய இளையராஜாவினாலா ..? இப்படி எல்லோரும் தங்களது பங்கினை மிகச்சிறந்த முறையில் வழங்கியதால்தான். ஆம் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சியே. அப்படி அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய எந்த படமும் மேலே சொன்ன மாதிரி நம் வாழ்க்கை படம் ஆகியே தீரும்.


Read more...

அம்மன் பெயரும் ... தமிழ் பெயரும்

நேற்று நடந்த கலைஞர் பேத்தி திருமணத்தில் பேசிய கலைஞர் , தன்னுடைய பேத்திக்கு பூங்குழலி என்று பெயர் வைக்க காரணம் அவரது சொந்த ஊரான திருக்குவளையில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மனின் பெயர் வண்டமரும் பூங்குழலி என்னும் அம்மனின் பெயர் ஞாமபகத்திற்கு வந்ததாகவும் அதனாலேயே அந்த பெயரை வைத்ததாகவும் கூறினார். அதில் குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் ...
1. கலைஞர் அம்மன் பெயர் என்பதால் அந்த பெயரை தான் வைக்கவில்லை என்பதாகவும் அதில் உள்ள தமிழ் வளமையின் காரணமாகவே வைத்ததாகவே சொன்னது. அவருக்கு ஏன் அம்மன் பெயர் ஞாமபகத்திற்கு வந்தது என்று நமக்கு கேட்க தோன்றினாலும் அவர் உண்மையை சொன்னதற்காக நாம் மனதார பாராட்டலாம்.
2. ஒரு முறை ஒரு விழாவில் பேசும் போது "கடவுளை நான் நினைக்கிறேனோ இல்லையோ கடவுள் வாழும் வண்ணம் என் மனதை தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும். " அப்படின்னு சொன்னார். அது போல தமிழ் வாழ்கிறதோ இல்லை சமஸ்கிருதம் வாழ்கிறதோ எந்த பெயரிலோ கடவுளின் பெயரை சொல்பவருக்கும் பலன் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது அந்த விதத்தில் கலைஞரும் பலன் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


Read more...

A WEDENSDAY -- ஒரு பார்வை

ஒருவழியா வார கடைசியும் முடிவுக்கு வந்தது.. இந்த வாரம் A WEDNESDAY என்ற ஹிந்தி திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது (உபயம்: டி.வி.டி). மிகவும் நல்ல படம் தயவு செய்து தேடி கண்டுபிடிச்சு பாருங்க. ஒரு பொது ஜனத்தின் சமுதாய கோபம் தான் இந்த படம். கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் மணி நேரம் மட்டுமே ஓடிய இந்த படத்தில் குறைகள் இருந்தாலும் படத்தை பாராட்ட ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதால் அவை மட்டும் இங்கே ...
1. படத்தில் பாடல்களே இல்லை. எனவே படத்தின் ஓட்டம் எங்குமே தடை படாமல் நம்மால் நிம்மதியாக ரசிக்க முடிகிறது.
2. உலக தரத்தில் ஒரு படம் என்று தாராளமாக இந்த படத்தை சொல்லலாம். அனைவரின் இயல்பு மீறாத நடிப்பும். குறிப்பாக படத்தின் முதன்மை கதா பாத்திரத்தில் நடித்துள்ள ஓம்புரி மற்றும் அனுபம்கேர் நடிப்பு. கதை சொல்லும் விதமும் பாத்திரங்களின் படைப்பும் நிச்சயம் இந்திய சினிமாவிற்கும் நான் இதுவரை பார்த்த ஹாலிவுட் படங்களிலும் மிகவும் புதுமையான ஒன்று.
3. பிரமாண்டம் என்ற பெயரில் தயாரிப்பாளரின் சொத்தை புடுங்காத, அதே சமயத்தில் ஒரு நொடி கூட நிக்காமல் ஓடும் பரபரப்பான திரைக்கதை அமைத்திருந்த விதமும் மிகவும் பாராட்டுக்குரியது.
4. படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் மிகவும் கவனத்திற்குரிய வகையிலும் அதே சமயம் கேட்பவர்களின் நெஞ்சில் சரக்கென பாயும் விதம் அமைத்திருக்கிருக்கிறார்கள். குறிப்பாக "... அந்த நபரின் பெயரை நான் சொல்ல மாட்டேன் ஏனெனில் அவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அதை வைத்து நீங்கள் யூகிக்க நான் விட மாட்டேன்.. " என்று அந்த போலீஸ் ஆபிசர் பேசும் வசனம்.
5. இயக்கம் அற்புதம் சில விஷயங்களை மிகவும் நுணுக்கமாக கையாண்டுள்ளதால் ஆளுயர மாலையே போடலாம். குறிப்பாக தீவிரவாதிகளை விடுவிக்கும் படையில் (இரண்டே நபர்தான் அனுமதி) ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் உள்ளதாக என்பது புறப்படும் முன் அந்த இந்து அதிகாரியிடம் மட்டும் அனுபம் கேர் (காவல் துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள) அழைத்து "எல்லாம் முடிந்தவுடன் போன் பண்ணு.. " என்று சொல்வதும் அதற்கு முன்னர் வரும் காட்சிகளில் அந்த முஸ்லீம் அதிகாரியை மிகவும் கோபக் காரராக காண்பிப்பதும் இந்து அதிகாரியை சற்றே முதிர்ந்த மன நிலையுடன் காண்பிப்பது என பல விஷயங்களை நாமே யூகிக்க விட்டிருக்கிறார் இயக்குனர்.

6. படத்தை ஒன்னே முக்கால் மணி நேரத்திலேயே முடித்திருப்பது.

குறிப்பு: இந்த படத்தின் கதையை நீங்கள் படம் பார்க்கும் பொழுது புதிதாக (Fresh) உணரும் விதமாக படத்தின் கதையை பற்றி விரிவாக விவரிக்கவில்லை.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP