ஏன் இந்த வலைப்பதிவு..?
இந்த கேள்வி தோன்ற காரணம் சமீபத்தில் ஒரு நண்பருக்கு இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் கேட்டார் எதுக்காக இந்த வலைப் பதிவை ஆரம்பித்தீர்கள்..? என்று கேட்டார். (நல்ல வேளையாக ஏன் இதை படிக்க வேண்டும் என்று கேட்க வில்லை). அதற்கப்புறம் தான் எனக்கு தோன்றியது ஆஹா இதை ஏன் முன்னமே யோசிக்கவில்லை என்று. சரி இப்பொழுதாவது தோன்றியதே.
வாழ்க்கை காலையில் தூங்கி எழுந்து அலுவலகம் சென்று இரவு வீடு திரும்பி மீண்டும் காலையை நோக்கி நேரத்தை விரட்டும் சாதரண வாழ்கையை அனுபவித்து வந்தாலும் என்னுடைய மனசாட்சிக்கும் பதில் சொல்ல எனக்கு நேரமிருக்கிறது. அந்த இடைவெளியில் தோன்றியதுதான் இந்த வலைப்பதிவு "எண்ணங்கள்". சில பேர் நாட்குறிப்பு (டைரி) எழுதும் பழக்கத்தை விவரம் அறிந்த நாள் முதல் கடைசி வரை கொண்டிருப்பார்கள், அவர்கள் நிச்சயம் மனசாட்சிக்கு பதில் சொல்பவர்களாவே இருப்பார்கள். நாட்குறிப்பை வைத்தே பல பேர் வழக்கில் மாட்டிக்கொண்ட விஷயங்கள் நாம் அறிந்ததே. இதில் தன்னை எந்த விதத்திலும் வெளியில் காட்டிக் கொள்ளாத சில தீவிரவாதிகளும் அடக்கம்.
இதுவும் ஒரு விதமான மன இறுக்கத்தினை விரட்டும் வழி தான். மேலும் இந்த வலைப்பதிவு மற்ற வலைப்பதிவுகளிலிருந்து எப்படி வித்தியாசப் பட்டிருக்கிறது ? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். நீங்கள் இந்த வலைப் பதிவில் செலவிடும் நேரங்கள் உபயோகரமாக இருக்க வேண்டும் அதே சமயம் ரசிக்கும் படியாகவும் இருக்க வேண்டும் என்பதே எண்ணங்களின் முக்கியமான நோக்கம்.
0 comments:
Post a Comment