இதுதான் தருணம்...

மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மீதான பார்வை ரொம்பவே மாறித்தான் போய் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா இந்தியாவை இந்த முறை ரொம்பவே ஆதரிப்பதையும் பாக். கை கண்டிப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தியா தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இதை விட பெரிய பெரிய சேதங்களை எல்லாம் பார்த்துள்ளது. அப்பொழுதெல்லாம் பெரிய அக்கறை காட்டாத அமெரிக்கா, இந்த முறை காட்டும் அக்கறை நம்மை வியக்க வைக்கிறது. அது மட்டுமல்ல பாகிஸ்தானை கண்டிக்கவும் அமெரிக்கா முயன்றதில்லை. ஆனால் இந்த முறை அமெரிக்கா இந்தியாவை ஆதரிப்பதோடு , தன்னை காத்துக்கொள்ள பாகிஸ்தானை தாக்கவும் இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளதாக குரல் கொடுத்துள்ளது பலரின் புருவங்களையும் உயர வைத்துள்ளது.
இதற்கு பின்னால் அமெரிக்காவின் சுயநலம் மட்டுமல்ல அதன் முதலாளித்துவ பார்வையும் உள்ளதாகவே தோன்றுகிறது. இன்றைய பொருளாதார பின்னடைவை சரி செய்து கொள்ள அமெரிக்காவின் "குல" தொழிலான ஆயுத வியாபரத்தை நடத்த இதுவே தக்க தருணமாவும் அமெரிக்கா கருத நிறையவே வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் இந்த "பாச" உணர்வு நம்மை சந்தேக பட வைக்கிறது. தயவு செய்து இந்தியா இதை புரிந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானை நாம் கண்டிக்கவும் பாடம் புகட்டவும் போர் சரியான முறை அல்ல. அதற்கான தருணமும் இதுவல்ல. இரண்டுமே அணு ஆயுத நாடாக இருப்பது தான் இதன் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. இதை இரு நாடுகளும் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க தயாராக வேண்டும். அதற்கான தருணமும் இதுதான்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP