என்னடா நடக்குது இங்கே..?

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் வரவிருக்கும் அல்லது வரமாலே போகக்கூடிய வாய்ப்புள்ள ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் முதல் வரி (படம்: கெட்டவன்). இந்த செய்திக்கும் இந்த வரிக்கும் மட்டுமே தொடர்பு உண்டு.

செய்தி இதுதான், நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலில் கம்பம் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட தேர்வாகியிருந்த சசிகுமார் தி.மு.க வில் ஆகஸ்ட்-10 அதாவது இன்று சேர்ந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் "தி.மு.க அரசின் சாதனை, அழகிரியின் 'செயல்பாடு' ஆகியவற்றை கண்டு சேர்ந்தேன்" என்று கூறியுள்ளார். என்ன கொடுமைங்க இது அது இப்போது தான் இவருக்கு தெரிந்ததா, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னால் தெரியவில்லையா..? இல்லை வேட்பு மனு திரும்ப பெறும் அன்றாவது தெரியவில்லையா..? தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த தருணத்திலா இவருக்கு தெரிந்தது ..? இல்லை அழகிரியின் "செயல்பாடு" அப்படியா..?
இப்ப படிங்க தலைப்பை...


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP