ராஜா இன்னும் "இளைய"ராஜாதான்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒலி ஒளி காட்சி "அழகர்மலை" என்ற திரைபடத்தில் வரும் பாடல். இந்த பாடலை ராஜாவின் ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. பாடலில் ராஜாவின் ஆளுமை நன்கு தெரிகிறது, ராஜாவின் இசை இன்னும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்னவோ...?
சமீபத்தில் கார்த்திக் ராஜாவின் பேட்டி ஒன்றை இணைய தளத்தில் பார்த்தேன், அதில் தனது தந்தையை பற்றி குறிப்பிடும் போது "எல்லாரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பார், அவருக்கு அண்ணன் தம்பிகள் மீது மிகவும் பாசம். தாயை மிகவும் நேசிப்பவர்.." என்று சொன்னார் அந்த வார்த்தைகளை மனதில் வைத்து இந்த பாட்டை பார்க்கும் போது, அவை எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று உணரமுடிகிறது.
பின் குறிப்பு: "அழகர்மலை" படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ராஜாவின் "பாண்டி நாட்டுதங்கம்" , "எங்க ஊரு பாட்டுக்காரன்", "எங்க ஊரு காவல் காரன்" போன்ற பாடல்களின் வரிசையில் இடம் பிடிக்கும் முழு தகுதியும் இருப்பதாகவே எனககு தோன்றுகிறது. நீங்களும் கேட்டு விட்டு சொல்லுங்கள்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP