பத்மஸ்ரீ தகுதி என்ன..?

இசைஞானி இளையராஜாவுக்கு இன்னும் பத்மஷ்ரீ விருது எதுவும் வழங்கப்படவில்லை. அது குறித்து தமிழக அரசு ஏதாவது செய்யுமா?
`பரிந்துரைதான் செய்ய முடியும் -அவருக்கு `இசைஞானி' பட்டம் கொடுத்ததே நான்தான்.''

இந்த வார குமுதத்தில் வந்த கலைஞரின் பேட்டியில் வந்தது தான் இந்த கேள்வி பதில். அது சரி ராஜா தினமும் காலையில் எழுந்தவுடன் கலைஞருக்கு போன் பண்ணுவாரா..? இல்லை வேண்டாம் குளிச்சு முடிச்சவுடனாவது போய் பார்ப்பாரா..? இல்லை கூட்டணி குழப்பம் வரும் போது சம்மந்தப்பட்ட கூட்டணி தலைவர்களுடனாவது பேச்சு வார்த்தையில் தன்னை ஈடு படுத்திக்கொண்டாரா..? இப்படி எந்த தகுதியும் (!?) இல்லாதவருக்கு எப்படிங்க பத்மஸ்ரீ கொடுக்க சொல்லி "வலியுறுத்த"முடியும்? வெறும் "பரிந்துரை" தான் செய்ய முடியும்.

இதை சொல்லும் போது கஷ்டமாத்தான் இருக்கு. அப்படி என்ன ராஜா கம்மியா சாதிச்சுட்டார்..? இல்லை அப்படி என்ன குறையை அவரது திறமையில் கண்டுவிட்டார்கள் இந்த "பரிந்துரை" குழு..? இதுவரை தமிழ் திரை உலகில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் திறனுக்கு ராஜாவின் திறமை கொஞ்சமும் சளைத்ததல்ல. இருந்தாலும் ....? சரிங்க இந்த பத்மஸ்ரீ விருதுக்கு தகுதிதான் என்ன ..? அதையாவது சொல்லுங்க.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP