ஆங்கிலம் பேசினாலே நடு நிலையா...?

சமீபத்தில் குமுதத்தில் வந்த அரசு கேள்வி பதில் பகுதியில் வடமாநில ஊடகங்கள் எப்படி தமிழகத்தை பற்றிய தங்களது பார்வையை வைத்துள்ளன, போன்ற கேள்விக்கு அளித்த பதிலில் "...பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழக மக்கள் வரவேற்கின்றனர்..." என்ற பொருள் படும்படியாக ஒளிபரப்பியதை சுட்டிக்காட்டி "ஆங்கில அறிவை மட்டுமே வளர்த்துக்கொண்டுள்ள ஒரு ஊடகம்.." என்று சொன்னதை படித்தேன்.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் வட இந்திய ஊடகங்கள் எப்படி தங்களது தமிழக தேர்தல் முன்னோட்டத்தை இந்த நாட்டிற்கு தந்துள்ளது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒலி ஓளி காட்சி மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக இந்த முன்னோட்டத்தை சம்மந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு தொகுத்து கொடுத்த யோகேந்திர யாதவ் என்பவர் தனது அம்மா பாசத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதை பார்க்கும் போது சமீபத்தில் கருணாநிதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பற்றி குறிப்பிடும் போது ".. சில பேர் வட இந்தியாவிற்கு சென்று அங்குள்ள ஊடகங்கள் அனைத்திலும் தி.மு.க கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்பது மாதிரியான செய்தி வரும் படி பார்த்துக்கொண்டனர், அவர்கள் யார் என்பதை நான் சொல்ல மாட்டேன் ஆனால் இதன் மூலம் ஆரிய திராவிட சண்டை இன்னும் நடப்பதாகவே எனககு தோன்றுகிறது..." என்று சொன்னது உண்மையோ என நினைக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது இந்த ஒளித்தொகுப்பு.
மேலும் நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் உண்டு அதாவது ஆங்கிலத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டாலே அது சரியாகத்தான் இருக்கும் என்ற தவறான கண்ணோட்டம். அதை நாமும் திருத்திக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.


Part-3


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP