புத்தகங்களில் புதையல் -- நிலமெல்லாம் ரத்தம்

நண்பர் புகழ் ஒளி சமீபத்தில் அளித்த அன்பளிப்பு "நிலமெல்லாம் ரத்தம்" என்ற புத்தகம். நானும் படிப்பதில் சோம்பேறி தான் ஆனால் உலகில் தற்போது உள்ள சில பிரச்சினைகளின் வேர் தேடலில் ஒரு வித சுகம் இருக்கிறது. அமெரிக்கா வந்த பிறகு அப்படி அறிந்து கொள்ள விரும்பிய பல விஷயங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை முக்கியமானது. இங்கு நியுயார்க்கில் ஏகப்பட்ட யூதர்களின் வழிபாட்டு தளங்களை காணமுடியும். அந்த அளவுக்கு யூதர்கள் நியுயார்க்கில் பரவி உள்ளனர். அதாவது இங்குதான் உலகின் பலம் வாய்ந்த பல தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் உள்ளன அவற்றின் முக்கியமானவற்றின் தலைமை மற்றும் துறை சார்ந்த பொறுப்புகளில் யூதர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதன் காரணமாகவே அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பு நிலை பாட்டினை எடுத்துள்ளதாகவும் கேள்வி பட்டுள்ளேன். எனவே அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேட ஆரம்பித்ததுதான் இந்த தேடல். ஏற்கனவே இது சம்மந்தமாக "யூதர்கள்" என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன், அதற்கிடையில் இந்த புத்தகம் கிடைத்ததால் இதை படிக்க ஆரம்பித்துள்ளேன்.
இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயம் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த முதல் அத்தியாயம் முழுவதுமே அவரின் அருமை பெருமைகளை சொல்வதாகவே உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைவு பற்றி "எண்ணங்களில்" குறிப்பிடுகையில், அவரது நிலைப்பாடு ஒரு கட்டத்துக்கு பிறகாவது மற்ற நாடுகளுடன் நல்லுறவை பேணும் படி அமைந்திருந்தால் இந்த மாதிரியான ஒரு இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தோம். கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டினை எடுத்ததன் மூலமாகத்தான் யாசர் அராபத் என்ற போராளி இயற்கை மரணத்தை இந்த நூற்றாண்டிலும் எய்த முடிந்துள்ளது என்றே நம்ப தோன்றுகிறது.
பாலஸ்தீனை இந்தியா போன்ற நாடுகள் அங்கீகரித்து அந்த நாட்டுக்கான தூதுவர்களை எல்லாம் நியமித்துள்ளது. அராபத்தும் இந்தியாவுடன் நல்லுறவு பேணி வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றே அதே மாதிரி காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவை ஆதரித்த ஒரே முஸ்லீம் நாடு பாலஸ்தீன்தான். காரணம் கிட்டத்தட்ட அதே தலைவலியை அவர்களும் இஸ்ரேல் என்ற ரூபத்தில் அனுபவித்து வருவதால். சில நாடுகள் இன்னும் பாலஸ்தீன் என்பதை ஒரு நாடாகவே அங்கீகரிக்காமல் உள்ள நாடுகளும் இருக்கின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.

இஸ்ரேல் எவ்வாறு தனது கரத்தை அடுத்த நாட்டிற்குள் நுழைத்து நர்த்தனம் ஆடுகின்றது என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளிக்காட்சி இந்த கட்டுரையுடன் தொடர்புடையதே தயவுசெய்து ஒலியுடன் ரசிக்கவும்..



0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP