நிஜ சகலகலா வல்லவன்

கமல் தமிழ் திரை உலகின் மிகப் பெரிய சொத்து, கமல் இந்திய திரை உலகின் பெருமை. கமல் நடிப்பில் மட்டுமல்ல திரைக்கதை,வசனம்,இயக்கம் எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர். இதை வெறும் வாசகமாக சொல்லவில்லை, அனுபவ பூர்வமாக சொல்கிறேன். இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு நிறைய விஷயங்களை சொல்ல முடியும் இருப்பினும் சிலவை மட்டும் இங்கே. ஹேராம் கமல் இயக்கிய முதல் படம் (அதாவது இயக்குனர் என்ற பொறுப்பில் அவர் பெயர் வந்தது என்ற அளவில்). இந்த படத்தில் ஒரு காட்சி இந்து முஸ்லீம் கலவரத்தை ஒட்டி வரும் காட்சியில் இயற்கையாக மதம் பிடிக்கும் தன்மை கொண்ட யானை ஒரு சங்கிலியால் கட்டப்பட்டு அமைதியாக இருக்கும் ஆனால் செயற்கையாக "மதம்" கொண்ட மனிதர்களால் யானையின் காலடியில் கோரமாக கொல்லப்பட்டு கிடக்கும் காட்சியில் யானை அமைதியாக வாலாட்டிய படி நிற்பது. மனிதனுக்கு மதவெறி தேவை இல்லை என்பதை பத்துபக்க வசனங்களில் நீட்டி முழக்காமல், காட்சியிலேயே காண்பித்திருப்பது. அதே படத்தில் மற்றுமொரு காட்சி முதல் முறையாக மத துவேஷம் கொண்டவர்களின் கூட்டணியில் சேரும் போது சகதியில் கால் வைத்து நடந்து செல்வது மற்றும் முதல் முறையாக போதை உண்டா மயக்கத்தில் நடந்து செல்வது . என்று குறிப்பாலேயே பல செய்திகளை அனாசயமாக சொல்லி செல்கிற இவரை மிக சிறந்த இயக்குனர் என்று பார்க்காமல் எப்படி பார்ப்பது ..?
வசனம் கேட்கவே வேண்டாம் தேவர்மகனில் வரும் ... "நேத்து வரை வேல் கம்பையும் ஈட்டியையும் தூக்கிகிட்டு இருந்தவனை விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான் அவன் பையத்தான் வருவான்." என்று கிராமத்து படிப்பறிவற்ற மக்களை பற்றி சிவாஜி சொல்லும் போது "..எவ்வளவு பைய அய்யா அதுக்குள்ளே நான் செத்துருவேன்.." என்று கமல் சொன்னவுடன் " செத்து போ எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தான் ஆனால் அதுக்குள்ளே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இன்னைக்கு விதை போட்டவுடன் நாளைக்கே பழம் சாப்பிடனும்னு நினைச்சா எப்படி..? இன்னைக்கு நான் விதை போடுறேன் உன் பையன் காயை பார்ப்பான் அவன் பையன் பழம் சாப்பிடலாம் ஆனால் அதை எல்லாம் இருந்து பார்க்க நான் இருக்க மாட்டேன் இதெல்லாம் பெருமையா..கடமை". என்ன ஒரு வசனம், எனககு கோபம் வரும் போதெல்லாம் இந்த வசனத்தைதான் நினைத்துக் கொள்வேன். அதாவது ஒரு நாளில் பல முறை. அதே மாதிரி குருதிப்புனலில் வரும் "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Breaking Point உண்டு அது இயற்கையின் நியதி..". இப்படி பல.
திரைக்கதை கேட்கவே வேண்டாம் "விருமாண்டி" திரைக்கதை ஒன்று போதும்.
சரி இப்படி பட்ட கமல் இன்னும் பல படி உயர்ந்திருக்கிறார் இப்படியாக விஜய் TV சமீபத்தில் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் கமலுக்கு சிறந்த திரைக்கதையசிரியருக்கான விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது,சிறந்த வில்லனுக்கான விருது, பெரும்பான்மையான மக்களை கவர்ந்தவர் என்கிற விருது என்று மொத்தம் நான்கு விருதுகளை அள்ளியிருக்கிறார். எனககு தெரிந்து இதுவரை யாருமே இவ்வளவு விருதுகளை ஒரே ஆளாக வாங்கியிருக்கிரார்களா ..? என்றால் எனககு தெரிஞ்சு இல்லை. (உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க).
தளபதி அடைமொழி இல்லாமால் இப்பவெல்லாம் யாரும் தமிழ் திரை உலகில் நுழைவதில்லை. அப்படி பட்ட இந்த தமிழ் திரையுலகில் சகலகலா வல்லவன் என புகழ பட்டாலும் அந்த புகழுக்குரியவராக தன்னை மாற்றி காண்பித்தவர் கமல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒளி காட்சியை பாருங்கள் சிறந்த நடிகர் பட்டம் வென்ற சூர்யா கமலுக்கு செய்யும் மரியாதையை. நிச்சயம் கமல் இதுக்குரியவர் தான் .



0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP