உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.. (ஆரியர்-திராவிடர்)

ஆரியர் முன்னேற்றக் கழகம், (AMK) அல்லது அனைத்து இந்திய ஆரியர் முன்னேற்றக் கழகம் (AIAMK) என்றும், மூவர்ண தேசியக் கொடியின் நடுவில் இந்திய வரைபடம், அதில் நேதாஜி, ராஜாஜி, வாஞ்சிநாதன் ஆகியோர் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது போல் கொடி தயாரித்து ஆகஸ்ட் 15-ல் கட்சி தொடங்க வேண்டும் என்றும் எனது கூட்டமைப்பினர் கூறியுள்ளனர். நான் கொடியை அறிமுகப்படுத்தி கட்சி தொடங்கினால் எனது பதவியை முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் அதற்கான நேரம் வரவேண்டும். முதலில் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

--இது எஸ்.வி.சேகர் தான் ஆரம்பிக்கப் போகும் புது கட்சி பற்றி சொல்லியிருப்பது. இங்கே இது வரை திராவிடர்கள் நாங்கள் என்று குரல் கொடுத்த பொழுதெல்லாம் "அதெல்லாம் வெறும் மாயை ஆரியர் திராவிடர் என்ற பாகு பாடே கிடையாது இவர்களாகவே இது மாதிரியெல்லாம் பேசி மக்களிடையே பிரிவினை வாதத்தை தோற்று விக்க பார்க்கிறார்கள்.." என்று ஒரு வாதத்தை எஸ்.வி.சேகர் கட்சி ஆரம்பிக்க இப்பொழுது யோசனை சொல்பவர்கள் முன் வைப்பதுண்டு. ஆனால் அவர்கள் எப்படி இப்பொழுது ஆரியர்கள் என்ற பெயரிலேயே கட்சி ஆரம்பிக்க வழி சொல்லியிருக்கிறார்கள்..? நமக்கும் ஒரு வேளை வரட்டும் என்று காத்திருந்தார்களா...? இல்லை உண்மையிலேயே ஆரியர் திராவிடர் பாகு பாடு உண்டா..? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP