பட்டவுடன் தொட்டது - - நந்தலாலா

நந்தலாலா பாடல்கள் பற்றி விகடனில் வந்த விமர்சனம் ....
இளையராஜா எனும் இசை யானை, மலை மேல் ஏறி துதிக்கை உயர்த்திப் பிளிறி, தன் ஆளுமையைப் பறைசாற்றி இருக்கிறது, 'நந்தலாலா'வின் ஒவ்வொரு ஒலிக்குறிப்பிலும்! ஒரு சுற்றுலாவின் குதூகலத்தோடு புறப்படும் 'மெள்ள ஊர்ந்து ஊர்ந்து...' பாடல் ஊர்வல உற்சாகம். 'ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே...' என்று ஆரம்பிக்கும் ஜேசுதாஸ், 'அன்பு ஒண்ணுதான் அநாதையா?' என்று கேட்கும்போது ஆரம்பிக்கும் மனப்பிசைவு பாட்டின் இறுதிவரை தொடர்கிறது. 'தாலாட்டு கேட்க நானும்...' ராஜாவின் டிபிக்கல் அம்மா கேவல். உற்சாகமான, குடும்ப மெலடி 'கைவீசி நடக்கிற காற்றே'. (இதையும், இளையராஜா குழந்தையாகவே குதூகலப்படுத்தும் 'ஒரு வாண்டுக் கூட்டமே' பாடலையும் படத்தில் நீக்கியிருப்பதாகச் சொல்கிறது குறிப்பு. வாண்டு பாட்டுக்கு கபிலனின் வாத்சல்யமான வரிகளும் அழகு!) அப்புறம் 'எலிலே... எலிலே..!' என்கிற அந்தக் குறவர் பாடல்... என்ன சொல்வது! சரோஜா அம்மாள் என்பவர் உடுக்கு அடித்துப் பாடியிருப்பது உலுக்கி எடுக்கிறது!


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP