சொல்லிட்டார்பா..

கடந்த வெள்ளிக்கிழமை (01/09/09) அன்று சென்னையில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் சொன்ன ஒரு விஷயம்தான் நம்மை சொல்லிட்டார்பா..இவரு அப்படின்னு நினைக்கத் தோணியது.. அவர் சொன்னது இதுதான்..."யாரும் தகவல் தொழில் நுட்ப துறையில் முதலீடு செய்யாதீர்கள், அதற்கு பதிலாக செங்கல் தொழில் முதலீடு செய்தால் நீங்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும் .." ஆற்காட்டாருக்கு தகவல் தொழில் நுட்பம் மேல் அப்படி என்ன கோபம். வரும் நாடளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ தி.மு.க தோற்பதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கி கொடுத்த மின்வெட்டு ஏற்பட காரணமாய் இருந்தவர் ஆயிற்றே, வராமல் இருக்குமா..? சரி விடுங்க ஆற்காட்டாரே தகவல் தொழில் நுட்ப துறையில் முதலீடு செய்றதை விட பேசாம உங்க கட்சி வளர்ச்சி நிதிக்கு கொடுப்பதன் மூலமா, தி.மு.க வில் முதலீடு செய்யலாமான்னு சொல்லுங்க அதை விட்டுட்டு செங்கல் தொழில் அது இது-ன்னு சொல்லி ஏன் குழப்புறீங்க.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP