பாட்டு பார்வை -- கடலோரம் .. மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி

சில பாடல்கள் கேட்டவுடன் நெஞ்சை கட்டிப் போட்டுவிடுவதுண்டு சில ஒட்ட மறுப்பவை. அப்படி சமீபத்தில் வந்த பாடல்கள் இரண்டு ரொம்பவே எனது மனசை கட்டிப் போட்டுவிட்டது.

1. குங்கும பூவும் கொஞ்சு புறாவும் -- என்ற படத்தில் வரும் "கடலோரம் ..." என்ற பாடல். இந்த பாடலை எஸ்.பி.சரண் பாடி இருக்கிறார், இந்த படத்தின் இசை அமைப்பாளரான யுவனும் பாடி இருக்கிறார்கள். இரண்டுமே தனி தனி பாடல்களாக வந்துள்ளது. எஸ்.பி.சரண் பாடிய பாடல் குரலில் அப்படியே அவுங்க அப்பா சாயல். யுவனும் அனுபவித்து பாடியுள்ளார். அந்த மெட்டில் ஒரு வித மயக்கம் இருக்கிறது. மிகவும் அருமையான பாடல். வாய்ப்பு கிடைத்தால் கேட்கலாம் என்று இருக்காமல் தேடி கேட்க வேண்டிய பாடல்.

2. சிவா மனசுல சக்தி -- படத்தில் வரும் "ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்..." என்ற பாடல். இந்த பாடலை இசை அமைப்பாளர் யுவனும், ஆண்டான் சாமி என்ற பாடகரும் பாடி உள்ளனர். இருவர் பாடியதும் தனித்தனியே வந்துள்ளது. இந்த பாடலை எழுதிய நா.முத்துக்குமார் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. இந்த பாடலில் எல்லா வரிகளுமே பிடித்திருந்தாலும் குறிப்பாக "ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் காதல் ..." என்ற வரியும், "உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை .." என்ற வரியும் அருமை. அதாவது காதலை மிகவும் சிக்கலான விஷயம் என்பதை தெளிவு படுத்த எழுதப்பட்ட பாடலாக இது இருக்க வேண்டும், அப்படி இருக்கும் பட்சத்தில் இதை விட சிறந்த வார்த்தைகள் கிடைப்பது அரிது. இந்த பாடலின் மெட்டும் மனசுக்குள் வட்டமடித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த இரண்டு பாடல்களுமே நிச்சயம் மிகப் பெரிய வெற்றி பெரும் என்று நம்புகிறேன். நம்ம தமிழ் திரை பாடல்களுக்கு ஒரு வித சாபம் உண்டு அதாவது அந்த பாடல் எவ்வளவுதான் நல்ல பாடலாக இருந்தாலும் அது சார்ந்து இருக்கும் படத்தின் வெற்றியை பொறுத்தே அதன் வெற்றியும் தீர்மானிக்கப் படுகிறது. இந்த பாடல்கள் அப்படியெல்லாம் கவனிக்கப் பாடாமல் மிகச்சிறந்த பாடல்களாகவே காலம் கடந்து நிற்கும் என்பது எண்ணங்களின் திண்ணம்.

குறிப்பு: நான் கடவுள்,நந்தலாலா பாடல்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. இரண்டு படத்தின் எல்லா பாடல்களுமே நிச்சயம் காலம் கடந்தவையாக நிற்கப் போவது அந்த படங்களின் சமந்தப் பட்ட கலைஞர்களின் தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை பேட்டியிலிருந்தே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP