காதலர் தினம் தேவையா..?

காதலர் தினம் என்ற பெயரில் நம்மவர்கள் அடிக்கும் கொட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை சொன்னால் நம்மை முதியவர்கள் (பெருசுங்க) என்றோ, பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என்றோ முத்திரை குத்திவிடுவார்கள். சரி அதானாலென்ன, சொல்ல வேண்டியது நம் கடமை என்றே இந்த விஷயம் சொல்லப் படுகிறது . இந்தியாவை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாகத்தான் இந்த அளவுக்கு காதலர் தினம் கொண்டாடப் படுவாதாக ஒரு நினைவு. அதாவது தொழில் நுட்ப துறை இந்த அளவுக்கு வளர்ந்த பின் தான் இந்த கூத்தும் கொண்டாட்டமும். மேலை நாட்டினரால் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப் படும் இந்த காதலர் தின கொண்டாட்டங்கள் நம்ம ஊரில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கொண்டாடப் படுவதிலெயே தெரிகிறது இதன் முக்கியத்துவம். நம்ம ஊரில் ஒரு விநோதப் பழக்கம் உண்டு மேலை நாட்டினர் எதை செய்தாலும் அதன் உள்நோக்கம் அறியாமலேயே அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பதுண்டு. எல்லாரும் அல்ல தன்னை ஒரு நவநாகரீக ஆளாக காட்டிக்கொள்ள முனைபவர்களே. இவர்களுக்கு ஒரு கேள்வி உங்கள் காதலை வெளிப்படுத்த காதலர் தினம் தான் சரியென்று எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள் ..? தயவு செய்து உணருங்கள்.
இதில் இன்னொரு நகைச்சுவை என்னவென்றால் ஒரு வார இதழில் வந்த பேட்டியில் ஒரு நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி "நீங்கள் காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவீர்கள் ?" என்ற கேள்விக்கு அந்த நடிகை "நான் எங்க அம்மா அப்பாவுடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடுவேன் " என்று . இதுக்கும் கவுண்டமணியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது "அட்ரா சக்கை அட்ரா சக்கை ...அது எப்படி டா கொஞ்சம் கூட வெட்கப்படாம பேசுறீங்க ..." இந்த நாள் அன்பு பரிமாறப் படுவதற்கான நாள் என்றால் இதை "அன்பு தினம் " என்றே கூறலாமே..?

பின் குறிப்பு: இப்படி சொல்வதால் காதலை நாம் எதிர்ப்பதாக என்ன வேண்டும்


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP