தலைக்கனமா ..? தன்னம்பிக்கையா ...?

ஒரு வழியா இந்த வாரம் ரஹ்மான் பாராட்டு விழா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பற்றி நான் பேசி கொண்டிருக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார் இளையராஜா எல்லா விஷயத்திலும் சரிதான் ஆனால் அவர் கொஞ்சம் தலைகனம் பிடித்தவர் போல் தெரிகிறார் என்றார். பாலச்சந்தர் படத்தில் வருவது போல் ஒரு காட்சி என் கண் முன் தோன்றி மறைந்தது "ஆமாம் அவர் அப்படி இருப்பதனால் உனக்கென்ன அவர் நல்ல இசை தருகிறாரா இல்லையா என்று தான் நாம் பார்க்க வேண்டும் ." என்று கூறுவது போல். இதை பலமுறை சம்மந்த பட்டவரிடம் கூறி விட்டதால் பொறுமையுடன் சரி இந்த பாராட்டு விழாவின் மேடையில் அமர்ந்திருக்கும் மிகப்பெரிய இசை ஜாம்பவான் என்று அனைவராலும் பாராட்டப்படும் பாலமுரளிகிருஷ்ணா என்ன பண்ணினார் தெரியுமா பல வருடங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு கச்சேரியில் சரியான முறையில் தன்னுடையை பாடல்கள் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை என்ற காரணத்தால் இனிமேல் இந்த ஆந்திராவில் கச்சேரியே பண்ண மாட்டேன் என்று சபதம் செய்து அதை ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்தான் முடித்தார். அதே போல் எனக்கு ஒரு நேரடி அனுபவம் இருந்தது ஜேசுதாஸ் அவர்கள் 1998 வருடம் சென்னை ஐயப்பன் கோவிலில் (அண்ணா நகரில் உள்ள) ஒரு கச்சேரி அதில் அவர் முழு கர்நாடக ஆலாபனைகளை பாடி வந்ததால் ஒரே சல சலப்பு அவர் சொன்னார் இப்ப நீங்க கத்துறதை நிறுத்தாவிடில் கச்சேரியை நிறுத்தி விட்டு நான் போய்கிட்டே இருப்பேன் . மக்கள் சற்றே உணர்ச்சி வசப்பட்டவர்களாய் எங்களுக்கு அந்த ஐயப்பன் பாடலை பாடுங்கள் என்று கேட்டனர் அவர் சொன்னார் முடியாது இந்த ஆலாபனைகள் இன்னும் சில பாடி விட்டுதான் மற்ற பக்தி பாடல்களை பாடுவேன் என்று.

மேற்சொன்ன இரு சம்பவங்களும் சம்மந்த பட்டவர்களின் தலைகனமாகவோ அல்லது கலை கர்வமாகவோ பார்க்கப்படுவதில்லை. அதே மாதிரி என்னுடன் பேசிக் கொண்டிருந்த நபரும் அதையே வழி மொழிந்தார். ஆனால் அதே மாதிரி இளையராஜா பேசியதை கர்வம் என்று வாதிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு தெரிஞ்சு பாலமுரளிகிருஷ்னாவோ ஜேசுதாஸ் அவர்களோ அப்படி பண்ணியதாக நான் அடிக்கடி பத்திரிக்கைகளிலோ மற்ற ஊடகங்களிலோ பார்த்ததில்லை அதனால் அப்படி தோன்றவில்லை என்று. இதில் நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நான் தெளிவு பெறவும் அது உதவும்.

அப்புறம் வலைதளத்தில் கண்ட ஒரு விஷயத்தை கீழே கொடுத்துள்ளேன் இதை பற்றி நாம் அப்புறம் பேசலாம் ..

See these inspirations of ARR and Ilayaraja:http://www.youtube.com/watch?v=1qRnMOe2F4s&feature=relatedhttp://www.youtube.com/watch?v=531WthsZaBY&feature=relatedhttp://www.youtube.com/watch?v=sYXtNqgL4xE&feature=relatedhttp://www.youtube.com/watch?v=1nHyuwKK01I&feature=relatedhttp://www.youtube.com/watch?v=CDjdJ3T0qJM&feature=related


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP