இரட்டை குடியுரிமை இந்தியாவில் பெறுவது எப்படி..?

இந்தியா டூயல் சிட்டிசன்ஷிப் வழங்குகிறது. இதற்கும் பி.ஐ.ஓ.வுக்கும் என்ன வித்தியாசம்?
ஃபெமா சட்டம் 1999ன் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு விதிகள், பி.ஐ.ஓ.க்களை (persons of indian origin) வெவ்வேறு விதமாக விளக்கியுள்ளது. ரூபாயில் கடன் பெறுதல் மற்றும் கடன் வழங்குதல் தொடர்பான 2000ம் ஆண்டு விதிகள் (ஃபெமா சட்டம்), வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல் தொடர்பான 2000ம் ஆண்டு விதிகள் ஆகியவை பி.ஐ.ஓ.க்களுக்கு கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றன.
1. வங்கதேசம், பாகிஸ்தான் தவிர வேறுநாட்டைச் சேர்ந்தவராக இருந்து அவர் இந்திய பாஸ்போர்ட்டை கடந்த காலத்தில் வைத்திருந்தவர் என்றாலும், அவர் அல்லது அவரது பெற்றோர் அல்லது பெற்றோரது பெற்றோர் 1955ம் வருட குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற்றிருந்தாலோ, அல்லது மேற்கூறிய ஒருவரது மனைவி அல்லது கணவர் இந்தியக்குடியுரிமை பெற்றிருந்தாலோ அவர் ஒரு பி.ஐ.ஓ ஆவார்.
2. இந்திய Firm அல்லது Proprietorship நிறுவனத்தில் முதலீடு செய்தல் தொடர்பான 2000ம் ஆண்டு (ஃபெம் சட்டம்) விதிகளின்படி பாகிஸ்தான், வங்கதேசம் தவிர இலங்கையும் விலக்கப்பட்டுள்ளது.
3. அசையாச் சொத்துக்கள் வாங்கும் விதிமுறைகளின்படி (2000ஆண்டு) பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை தவிர ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் வாழ்பவர்களையும் பி.ஐ.ஓ.களாக ஏற்க முடியாது.
பி.ஐ.ஓ.களின் உரிமைகள்:
அவர்கள் வேறுஒரு நாட்டின் பிரஜைகளாக இருப்பவர்கள் என்பதால் அவர்கள் சாதாரணமாக வெளிநாடுகளில் வாழ்பவர்கள். எனினும் அவர்கள் இந்தியாவில் வந்து தங்கும்போது அவர்கள் உள்நாட்டு இந்தியர்களாகவே கருதப்படுகிறார்கள்.
- இந்தியாவில் அவர்கள் வேலை செய்யலாம்.- இந்தியாவில் அவர்கள் வியாபாரம் மற்றும் தொழிலில் ஈடுபடலாம்.- முதலீடுகள் செய்யலாம்.- அசையாச் சொத்துகள் வாங்கலாம்.- எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இந்தியாவில் தங்கலாம்.
ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா (இரட்டைக் குடியுரிமை):
ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல், சைப்ரஸ், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 16நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கீழ்க்காணும் உரிமைகள் உள்ளன.
1. இந்தியாவுக்கு ஆயுள்முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வருவதற்கு ஒரு நிரந்தர விசா வழங்கப்படுகிறது.
2. இந்தியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம். இதற்காக உள்ளூர் காவல்நிலையத்தில் பதிவுசெய்து கொள்ளத் தேவையில்லை.
3. பொருளாதாரம், நிதி மற்றும் கல்வி ஆகிய விஷயங்களில் என்.ஆர்.ஐ.களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் ஓ.சி.ஐ.களுக்கும் உண்டு.
ஆனால் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவோ, வாக்காளராக பதிவு செய்து கொள்ளவோ உரிமை இல்லை.

குமுதம் இதழில் வந்த விஷயம் நமக்கும் உபயோகரமாக இருக்கும் என்பதால் இங்கே தரப்பட்டுள்ளது.


1 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP