ரஹ்மான் ரசிகர்களின் கவனத்திற்கு...

ரோஜா படமும், தேவர் மகன் படமும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருது கமிட்டிக்கு வந்தது. எந்த இசையமைப்பாளரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம். விருது குழுவின் தலைவர் பாலுமகேந்திராவேதான். என்ன செய்தார்? ஒரு சினிமா போல சுவாரஸ்யமாக விளக்கினார் பாலுமகேந்திரா.
'நான் ஓட்டுப் போடாமல் ஒதுங்கிக் கொண்டு உறுப்பினர்களை போட சொன்னேன். ஆனால், இருவருக்கும் ஏழு ஏழு ஓட்டுகள் சரி சமமாக கிடைக்க, மறுபடியும் சிக்கல். வேறு வழியில்லாமல் நான் ஓட்டு போட வேண்டிய நிர்பந்தம். ஒரு பக்கம் நண்பர் இளையராஜா. மறுபக்கம் இருபது வயதே நிரம்பிய இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான். என்ன செய்வது? ஆனாலும், இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன். தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கு போட்டு ஜெயிக்க வைத்தேன்' என்றார் பலத்த கரவொலிக்கிடையில்!

இது ஏன் இங்கு குறிப்பிடப்படுகிறது என்றால், ரஹ்மான் ரசிகர்கள் அடிக்கடி சொல்லும் சில விஷயங்களில் முக்கியமானது, ரஹ்மான் முதல் படத்திலேயே விருது வென்றவர் . இன்னொன்று ரஹ்மான் அளவுக்கு தேசிய விருது வென்றவர் எவரும் இங்கே இல்லை என்பது. மேற்சொன்ன விஷயத்திலிருந்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP