அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 1

இந்த கட்சி ஊழல் கட்சி அதனால் அந்த கட்சிக்கு ஒட்டு போடலாம், அப்புறம் அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு அந்த கட்சியே மேல் என்ற எண்ணம் தோன்றி அந்த கட்சிக்கே மீண்டும் வாக்களிப்பது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் வாக்காளர் எண்ண ஓட்டம் இப்படியாகத்தான் இருக்கிறது.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கைகளை முன்னிறுத்தியே தேர்தலில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற வேண்டும். ஆனால் இப்பொழுது அதுவா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..? சரி அப்படியே கொள்கைகளை மட்டுமே வைத்து ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியுமா..? அவ்வளவு ஏன் கொள்கைகளை மட்டுமே மூலதனமாக கொண்ட கட்சிகள் மக்கள் மத்தியில் எப்படி செல்வாக்கு பெற்றிருக்கிறது ..? பத்தோடு பதினொன்றாக தானே இருக்க முடிகிறது. சரி அப்படி பத்தோடு பதினொன்றாக இருந்தால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ..? அவர்கள் பொழைப்பு ஓட்ட வேண்டாமா..? இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டின் தற்பொழுதைய அரசியல் நிலவரத்தோடு ஒப்பிட்டு சொன்னால் நமக்கு தெளிவுற விளங்கும்.
திராவிடர் கழகம் என்றொரு கட்சி அது ஆரம்பித்த பொழுது இந்த கட்சி தேர்தலில் நின்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாது என்று சொல்லியது, அந்த கட்சி கொண்ட கொள்கைக்காக இன்று வரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறாமல் தனியாகத்தான் நிற்கிறது ஆனால் ஒரு துணையுடன், அதாவது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் காலைப் பற்றி பொழப்பு நடத்தும் அவலம் தான் இருக்கும்.
இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சி ஆரம்பித்து, தாய் கட்சியின் கொள்கைக்கு எதிராக அதாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே முழு முயற்சியாக கொண்டு அந்த இலக்கை அடைந்தது. ஆனால் அது பிரபலமாவதற்கு காரணமான காங்கிரஸ் எதிர்ப்பு, தனி தமிழ் நாடு கோஷம் போன்றவை என்ன ஆனது ...? கொள்கைகளை காற்றில் விட்டால்தான் ஆட்சி அதிகாரத்தை கை பற்ற முடியும் என்பதற்கு இந்த கட்சியே மிகச்சிறந்த சான்று.
சரி இந்த கழக அரசியல் தான் இப்படி என்றால் தேசிய கட்சி காங்கிரஸ் என்ன கொள்கையோடவா வாழ்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க என்றால் அடுத்த தேர்தலில் தி.மு.க இதை ஒரு சூத்திரக் (formula) கணக்காகவே கொண்டுள்ளது . இங்கேயும் ஒரு கொள்கை கொலை தான் நடக்கிறது.
பா.ஜ.க கேட்கவே வேண்டாம் சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டே கொல்லைப் புறம் அமெரிக்காவிற்கு நேச கரம் நீட்டும் சாதுர்யம். என்று இங்கேயும் ஒரு வித கொள்கை கொலை தான் நடக்கிறது .
ம.தி.மு.க மற்றும் பா.ம.க பற்றி கேட்கவே வேண்டாம். ம.தி.மு.க இந்த பாரளுமன்ற தேர்தலில் எங்களுக்கு பதவி வேண்டாம் என்று சொல்லி விட்டு அதே மாதிரி பதவியேற்கவில்லை அப்பாடா ஒரு கொள்கை சிங்கம் கிடைச்கிட்டாருடா அப்படின்னு நினைத்த தமிழக மக்களுக்கு கொடுத்தார்கள் இப்படி, விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்துக் கொண்டு அதை அதி தீவிரமாக எதிர்க்கிற அ.தி. மு. க -வுடன் கூட்டணி வைத்து கொண்டது கொள்கை சிங்கம், எதற்காக ..? கொண்ட கொள்கைக்காகவா ..?
பா.ம.க இது ஒரு குறிப்பிட்ட சாதிக்காக ஆரம்பித்த கட்சியாக இருந்தாலும் சற்றே கொள்கை சிகரமாக தன்னை காட்டிக்கொண்டது இந்த கட்சி. தீவிர மது ஒழிப்பு பிரச்சாரம், தனது தொலைக்காட்சியில் திரை படங்கள் சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளை ஒழித்து அதனால் வருமானம் இல்லையென்ற போதும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத கட்சி போல் காண்பித்தாலும், சறுக்கியது தன் மகனுக்கு மத்திய அமைச்சரவை பதவியை கொல்லைப் புற வழியாக வாங்கியது மட்டுமல்ல எந்த காலத்திலும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் கட்சியில் எந்த பதவிக்கும் வர மாட்டார்கள் என்று மக்கள் மத்தியில் அறிவித்து அதையும் கொல்லைப் புறத்திலே விட்டு வந்த கொள்கை குன்று , ஆமாம் சிகரம் தேய்ந்து குன்று ஆகியுள்ளது ...


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP