எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....






தமிழ் திரையுலகின் உண்ணாவிரதம் பற்றி கருத்து சொல்ற சிலர் சத்யராஜின் பேச்சிற்கும் கலைஞருக்கும் தொடர்பு என்பது போல் பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சத்யராஜ் பல முறை ரஜினியின் வெற்றியினை நிராகரித்திருக்கிறார் நேரடியாக இப்பொழுதுதான் சொல்லியிருக்கிறார் அதனால் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது. அதே போல் ரஜினியின் பேச்சுக்கும் கலைஞருக்கும் முடிச்சு போடுவதும் தேவையில்லாத ஒன்று. ரஜினியோ கலைஞரோ அப்படி ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் இதுவும் தேவையற்றது. கலைஞர் சொல்லி ரஜினி பேசியிருப்பாரா என்பது ரஜினியின் பேச்சைக் கேட்டாலே தெரிகிறது. கலைஞர் திட்டத்தை ஒத்தி வைத்தது சரி என்று வைத்துக்கொண்டாலும் ஆனால் அதை அறிவித்த முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கலைஞர் எத்தனையோ முறை அறிவாலயத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்திடுக்கிறார் குறிப்பாக விடுமுறை தினமானஞாயிற்று கிழமைகளில்.. அதே மாதிரி ஒரு அனைத்துக் கட்சியின் கூட்டத்தை அறிவாலயத்தில் கூட்டி இந்த முடிவை எடுத்து பிறகு அறிவித்திருக்கலாம். நடிகர் ராஜேஷ் தான் முதலில் சொன்னார் ஒக்கனேக்கல் என்பது கன்னடப் பெயர் குடகுகல் என்பதுதான் அந்த இடத்தின் பழமையான பெயரும் தமிழாக்கமும் ஆகும் என்று. அவர் என்ன சூப்பர் ஸ்டாரா அவர் பேச்சையெல்லாம் யாருங்க கணக்குல எடுத்துக்குவாங்க. குறைந்த பட்சம் அவர் சூப்பர் ஸ்டாரையாவது தாக்கி பேசினாரா..? அப்படி பேசினாதானே இங்க மதிப்பு. அதே மாதிரி மிகவும் விஷயபூர்வமாக பேசிய வைரமுத்துவின் பேச்சைப்பற்றி யாருமே குறிப்பிடவில்லை. பத்திரிகைகளில் கூட இடம் பெறவில்லை. தயவு செய்து யார் பேசுறாங்க என்பதை விட என்ன பேசுறாங்க அதன் பயன் என்ன என்று அறிந்து குறிப்பிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை தான் வள்ளுவர் சொன்னார் "எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" .


2 comments:

Unknown April 12, 2008 at 10:38 AM  

Hi Saravana, Good, Keep it up. Ur thoughts are Ok. All the best. Ur writing style looks like a gud writer.

All the Best.

Regards
Raja. S

APSARAVANAN April 13, 2008 at 2:13 AM  

Raja Thanks and appreciate your comment and time.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP