தண்ணீர் பிரச்சனையில் தமிழ் திரை உலகம்

தன்னோட பிரச்சனைக்காக மட்டுமே கோட்டை வாசல் கண்ட கோடம்பாக்க கனவான்கள் இந்த முறை தமிழக தண்ணீர் பிரச்சனைக்காக தமிழக முதல்வரை சந்திப்பதோடு மக்களையும் சந்திக்க துணிந்திருப்பது வரவேற்க தக்கதே. ஆனால் அதில் மனதை வருடும் ஒரு விஷயமும் தென் பட்டது அதாவது இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நடிகர் சங்கம் எதிர் காலத்தில் எந்தவித ஒத்துழைப்பும் தராது என்று பயமுறுத்தி (?!) அவர்களை அழைத்திருப்பது வருந்த தக்க ஒன்று. தமிழனை வழி நடத்தி செல்லும் ஒரு ஊடகத்துறை தமிழனின் (தண்ணீர்) பிரச்சனைக்காக குரல் கொடுக்க தானாக முன் வராமல் மிரட்டலுக்காக பின் வருவது வருந்ததக்கதே.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP