அம்மாவசையும் பாபாவும்

எது எப்படியோ உண்ணாவிரதத்தில் நடிகர்கள் சிலர் தங்களுக்கான அடையாளங்களை தெளிவாக காட்டிவிட்டு போனார்கள் என்றே சொல்ல வேண்டும். அதில் குறிப்பாக சத்யராஜ் அவர்களின் பேச்சை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். சத்யராஜ் தனக்கு முன் பேசிய சிலர் தெளிவாக ரஜினியை குறிப்பிட்டு அவர் அரசியலுக்கு வர வேண்டும், வருவார் என்ற ரீதியாக பேச சத்யராஜ் சற்றே உணர்ச்சி வசப்பட்டவராக ஒலி வாங்கியை பிடித்தார், "யார் பெயரைச் சொன்னால் கை தட்டுவீர்கள் என்று எனக்கு தெரியும் அப்படி கைதட்டு வாங்குவதற்கு பதில் நாக்கை புடுங்கிகிட்டு சாவேன். நாம இங்க கர்நாடகம் தண்ணீர் தருவதை பற்றி பேச வந்துள்ளோம் அதை பத்தி மட்டும் தான் பேசுவேன். " என்றும் ... மேலும் "தமிழ் நாட்டில் உள்ளவர்கள் முருகனையும் சுடலைமாட சாமியையும் கும்பிடுங்கள் ஏன் ஐயப்பனையும், ராகவேந்திரரையும், ராமரையும் கும்புடுகிறீர்கள் ..?" என்று கேட்டுவிட்டு போனார். அவர் ரஜினியை தான் சாடினார் என்று ஒரு சாரரும் இல்லை சரியாகத்தான் பேசினார் யாரையும் சாடவில்லை, பதிலாக போராட்டத்தின் நோக்கத்தை உணர்த்தினார் என்றும் கூறப்பட்டது. சரி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே ஏன் இவ்வளவு வேகமாக பேசினார் ..? அவர் யாரையோ தாக்குவதாக நினைத்துக் கொண்டு பேசினாலும் அது ரஜினியையே குறிக்கும் விதமாகத்தான் இருந்தது என்பது கண்கூடான உண்மை. ரஜினியை மற்றவர்கள் குறிப்பிட்டு பேசியது தவறு என்று தெரிந்தால் சத்யராஜ் என்ன சொல்லியிருக்க வேண்டும் "தயவு செய்து யாரும் தனிப்பட்ட நபரை குறிப்பிட்டு பேசாதீர்கள்" என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் அதல்லவா உண்மையான (பகுத்தறிவு ) பண்பாடு. பண்பாடு மிக்கவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா யாரை அவர்கள் விரும்பவில்லையோ அவர் குறித்த விஷயங்களை தவிர்த்து விடுவார்கள், அதை ஏன் இவர் செய்ய தவறினார்..? மேலும் இவருக்கு ரஜினி மேல் எதாவது தனிப்பட்ட விரோதம் இருந்தால் அதை காட்டும் மேடை இதுவல்லவே?

அடுத்தது முருகனைப் பற்றி பேசியது , பகுத்தறிவாளிகள் கடவுளைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை, ஏன் சாமி மன்னிக்கவும் ஏன் அய்யா அவுங்க எந்த சாமியை கும்பிட்டால் நமக்கென்னன்னு இருக்கவேண்டியது தானே ? நீ அந்த சாமியை கும்பிடாதே இந்த சாமியை கும்பிடு என்றெல்லாம் சொன்னால் அவுங்க திருப்பி அப்போ தமிழ் சாமியயை நீங்க நம்பு குறிர்களானு கேட்குறாங்க என்ன பதில் சொல்லப் போறீங்க ..? சரி விடுங்க பேசாம "நாக்கு பிறழ் ந்துடுச்சுனு" சொல்லிடுங்க.

எப்படியோ அம்மாவாசை மன்னிக்கவும் அம்மாவசை பாபாவை பதம் பார்த்திருக்கிறது, ஆனால் அது அவருக்கே பிரச்சனையாய் முடிந்திருப்பது புரட்சி தமிழனுக்கு புதிராய்தான் இருந்திருக்கும்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP