ஏன் இறை நம்பிக்கை ..?
அன்பே சிவம் படத்தில் ஒரு காட்சி வரும் கதை படி நல்ல சிவத்திற்கு(கமல்) மனைவி, குழந்தைகள் என்று யாரும் இருக்க மாட்டார்கள் ஆனால் அவர் மனைவி,குழந்தைகள் இருப்பதாக அன்பரசு(மாதவன்)-விடம் சொல்லி இருப்பார், அன்பரசு நல்லசிவத்தின் இருப்பிடத்திற்கே வந்து அதை கண்டு பிடித்த பிறகு கேட்பார் "ஏன் இப்படி பொய் சொன்னீர்கள் என்று..?" கமல் அதற்கு விளக்கம் கொடுப்பார் அதாவது "எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லாதது ஒரு குறையாகவே இருந்தது அந்த குறையை மறைப்பதற்காகவே பொய் சொன்னேன், என்னுடைய ஒரு கால் மற்றொரு காலுடன் சற்று குறைவான உயரம் கொண்டது அதனால் நொண்டி நொண்டி தான் நடக்க முடியும் அதற்கு எப்படி இந்த ஸ்டிக் (கைத்தடி) உள்ளதோ அப்படி மனசில் உள்ள குறையால் மனசு நொண்டி அடிக்காமல் இருக்கனுமே அதற்காகத்தான் பொய் சொன்னேன்." என்பார் . அதை போல நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை, துன்பங்களை, துரோகங்களை இறக்கி வைப்பதற்கு ஒரு உற்ற நண்பன் தேவை அதை நான் கடவுளாக பார்க்கிறேன் அவருக்கு என்னுடைய துன்பங்களையும், துயரங்களையும் அழிக்க வல்ல சக்தி உண்டு என நம்புகிறேன். கடவுளை நம்பாதவர்களே உங்கள் இலக்கணப்படி கடவுள் கற்பனை பாத்திரமாக இருந்தாலும் அது மக்களின் மனது நொண்டி அடிக்காமல் இருக்க உதவுமானால் அதை வணங்குவதில் தவறில்லை என்று நினைத்து அதை தீண்டாமல் இருந்து விடலாமே ?
0 comments:
Post a Comment