கர்நாடகா தலைமை செயலாளரின் பொறுப்பற்ற பேச்சு

"இதற்கிடையில், பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ்,ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை புதிய திட்டமாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். கடந்த 1998ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும், மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் இந்தத் திட்டம் தொடர்பாக மாநில அரசு புதிய நிலையை மேற்கொண்டுள்ளது என்றார்.கடந்த 1998ம் ஆண்டில், ஓகேனக்கல் திட்டத்துக்கு கர்நாடக அரசு தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறுவது பற்றி கேட்டபோது,10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையடுத்து இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மத்திய அரசும் ஓகேனக்கல் திட்டத்தை புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் .." -- ஒரு கேள்வி கர்நாடக மாநில செயலாளர் அவர்களே . ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் போது அந்தத் திட்டம் பத்து வருடத்திற்கு அப்பால் என்ன மாதிரியான விளைவுகளை உண்டுபண்ணும் என்று கூட தெரியாமலா ஒப்புதல் வழங்குவீர்கள். ஒரு ஐ.எ.எஸ் அதிகாரி பேசுவது போலவா பேசுகுறீர்கள் . இதிலிருந்தே தெரிகிறது கர்நாடக அரசு எந்த சூழ்நிலையில் உள்ளது என்று.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP